வெள்ளி, 22 ஜூன், 2018

ஜீவகாருண்யத்தை கடைப்பிடிப்பவர்கள் கவனித்திற்கு !

ஜீவ காருண்யத்தை கடைபிடிப்பவர்கள் கவனத்திற்கு !

ஜீவ காருண்யத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்துக் கொண்டு பசியாற்றுவிப்பதால் எந்த பயனும் கிடைக்காது.அருளும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !.

உலகில்
சாதி ஆச்சாரம்.
குல ஆச்சாரம்
ஆசிரம ஆச்சாரம்
லோக ஆச்சாரம்
தேச ஆச்சாரம்
கிரியா ஆச்சாரம்
சமய ஆசாரம்
மத ஆசாரம்
மரபு ஆசாரம்
கலா ஆசாரம்.
சாதனா ஆசாரம்
அந்த ஆசாரம்.
சாஸ்திர ஆசாரம்.

முதலிய ஆசாரங்கள் உள்ளன.

ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து.

சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆச்சாரத்தை கடைபிடித்து பொது நோக்கம் வந்தால் தான்.

மேற்படி காருண்யம் விருத்தியாகும்.அப்படி விருத்தியானால் தான் கடவுள் அருளைப் பெற முடியும்.சித்தி முத்திகளைப் பெற முடியுமே அல்லது அப்படி இல்லாவிடில் எந்த பயனும் கிடைக்காது.

எனவே சன்மார்க்க அன்பர்கள் மேலே கண்ட உலக ஆச்சார சங்கற்பங்களை முழுதும்  பற்று அற விட்டுவிட்டு.ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் மட்டுமே இறைவன் அருளைப்பெறும் தகுதி உடையவர்கள் ஆவோம்..

இனிமேல் ஜீவகாருண்யம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கை யோடு பொது நோக்கத்தோடு தங்கள் ஜீவகாருண்யப் பணியை செய்ய வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு