புதன், 20 ஜூன், 2018

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கட்டளைகள் !

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கட்டளைகள். !

1.கடவுள் ஒருவரே. அவரே
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உணர்ந்து பின் பற்ற வேண்டும் !

2.சிறு தெய்வ வழிபாடு கூடாது.என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.!

3.தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும் !.

4. புலால் ( மாமிசம்) எக்காரணத்தைக் கொண்டும் உண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் !

5.சாதி.சமயம்.மதம் போன்ற வேறுபாடுகள் மனத்தில் பற்றாவண்ணம் கடைபிடிக்க வேண்டும்!

6.எல்லா உயிர்களையும் தம் உயிர் போல்.எக்காலத்திலும் எண்ணுதல் வேண்டும்.!

7.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை இடைவிடாது கவனித்து கடைபிடிக்க வேண்டும்!.

8.புராணங்களும்.வேதங்கள்.ஆகமங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள் போன்றவைகளால் உண்மையான கடவுளை தெரிந்து கொள்ள முடியாது.என்பதில் அறிவு சார்ந்து அகற்ற வேண்டும் !

9. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது.என்பதில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் !

10.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.என்பதிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!

10.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.என்பதை செயல் படுத்த வேண்டும்!

11.கருமாதி.திதி முதலிய சடங்குகள் .எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் !

12. ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை உண்மையுடன் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.!

13.இந்திரியங்கள்.கரணங்கள்.ஜீவன்.ஆனம ஒழுக்கங்களை இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.!

14. சமய மத உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் மனதில் பற்றாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

15.எதிலும் எப்போதும் எக்காலத்தும்.எவ்விடத்தும் பொது நோக்கம் தவறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

மேலே கண்ட 15. கட்டளைகளை. சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வள்ளலார் திருஅருட்பா வில் பதிவு செய்துள்ளார்.

மேலே கண்ட ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்களே.
**சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நடத்த தகுதி உடையவர்கள்* ஆவார்கள்..பின்பற்ற தகுதி உடையவர்கள்.

*மேலே கண்ட ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்கள் மட்டுமே.***
சாகாக்கல்வி கற்பதற்கு இறைவனால் தேர்வு செய்யப்படுவார்கள்***

மற்றவர்கள் எல்லாம் வீண் காலம் களித்து மரணம் அடைவார்கள்..

சன்மார்க்க அன்பர்கள்.சமய மத வாதிகள் போல் .
உள் ஒன்று வைத்து.புறம் ஒன்று பேசி. வெளிவேஷம் போட்டுக்கொண்டு. அலைவதால் எந்த பயனும் எக்காலத்திலும் கிடைக்காது....

காலம் உள்ளபோதே தங்களைத் திருத்திக் கொண்டு வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகளை பின்பற்றி .சாகாக்கல்வியைக் கற்று மரணத்தை வென்று .பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதற்கு. **வள்ளல்பெருமான்**.ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்....

வள்ளலார் சொல்லிய உண்மை ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவோம்.சாகாக்கல்வி யின்
தேர்வில் வெற்றி பெறுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு