செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

இறைவன் படைப்பில் என்ன வினோதம் !

இறைவன் படைப்பில் என்ன வினோதம் !

ஆண் பெண் இரு பாலருக்கும் ஒன்பது துவாரங்கள் வைத்து படைத்துள்ளான் இறைவன்.

இதில் என்ன வித்தியாசம் என்றால் ஆண் பெண் என்ற உறுப்புகள் வித்தியாசப்படுகின்றன.
 ஆணுக்கு உடம்பின் உள்ளே ஒருபை அது இரை பை என்பதாகும்.உண்ணும் உணவை தாங்கும் பை.அதுதான் இரைப்பை என்பதாகும்.

பெண்ணுக்கு உடம்பின் உள்ளே இரண்டு பை உள்ளது.ஒன்று இரை பை.ஒன்று கரு பை.
நாம் உண்ணும் உணவை சுமக்க ஒருபை..கருவை (குழந்தை) சுமக்க ஒரு பை என இரண்டு பை படைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது துவாரங்களில் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் உணவை உள்ளே அனுப்பமுடியும்.மற்ற எட்டு துவாரங்களும் கழிவுப்பொருளை வெளியேத் தள்ளவும்.மற்ற வேலைகளை பயன படுத்தவும் மட்டுமே பயன் படுகின்றது.

பெண்களுக்கு உள்ளே வாங்குவதற்கு இரண்டு துவாரங்கள் பயன் படுகின்றது. ஒன்று உணவை உள்ளே வாங்க வாயும்.ஒன்று சுக்கிலம் என்னும் விந்துவை உள்ளே வாங்க பெண்ணின் சுரோணிதம் என்னும் துவாரம்..பெண்ணின் கீழ் உறுப்பாகும்.

பெண்ணானவள் ஆணின் விந்துவை உள்ளே வாங்கவில்லை என்றால் கருதரிக்காது.குழந்தை பிறக்காது.மனிதர்கள் தோற்றம் நடைபெறாது..

ஆண் உருவத்தில் உள்ள விந்துவில் ஆன்மா வந்து தங்கி இரண்டு மாதத்தில் உயிரை உறுவாக்கி ஆன்மாவையும் உயிரையும்  பெண்ணிடம் அனுப்பப் பயன் படுகின்றது.

பெண் கருவறையில் ஆன்மாவும் உயிரும் உள்ளே சென்று தங்கள் வாழ்க்கைக்காக  உடம்பையும் அவைகளுக்கு தேவையான. பயன்படும் கருவி கரணங்களையும். உறுப்புக்களையும் படைத்துக் கொள்கிறது

அந்த மனித தேகம் என்னும் வீட்டை பயங்கரமான  இருட்டு அறையில் தான் கட்டிக்கொள்கிறது.

இந்த உலகத்திற்கு ஆன்மா வந்து வாழ்வதற்கு.உயிர் உடம்பு கருவி கரணங்கள் அவசியம் தேவைப்படுகின்றது பயன் படுகின்றது..

இங்கு வந்து ஆன்மா தனக்கு தேவையான உயிரையும்  உடம்பையும்.பஞ்ச பூத ஆணுக்களால்  கட்டிக்கொள்வதால்  .
அதற்கு வாடகை வீடு என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

இந்த வாடகை வீட்டிற்கு.தினமும் மூன்று வேளையும் உணவு கொடுப்பதுதான்  வாடகை என்பதாகும்.

அதே நேரத்தில் ஆண் பெண் உறவு இல்லாமல் எந்த உயிரும் உடம்பும் படைக்க முடியாது.மேலும் ஆன்மா இல்லாமல் ஆணும் இல்லை.பெண்ணும் இல்லை.அலியும் இல்லை..

ஆன்மா வாழும் வாடகை வீட்டை.அழிக்காமல் (மரணம் அடையாமல்) சொந்த வீடாக மாற்ற வேண்டும் . சொந்த வீடாக மாற்றம் செய்யாமல் வாழும் வரை இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆன்மாவானது மீண்டும் மீண்டும் ஆண் பெண் உடல் உறவில் சிக்கி பிறப்பு எடுக்கக் கூடாது என்பதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

அணுக்களால் பின்னப்பட்ட ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்வதுதான் சொந்த வீடு கட்டிக் கொள்வதாகும்.

அதனால் தான் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்...

பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தேஎண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

என்னும் பாடலில் கண்டுள்ளபடி ஆன்மா உயிர் உடம்பு வந்த வழியைத் தெரிந்து கொண்டால் தான் அவற்றை  மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ள முடியும்..

சொந்த வீடாக மாற்றிக் கொள்ளும் வழியை கண்டுபிடித்து சொந்த வீட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டு.உலகில் உள்ள அனைவருக்கும் வழிகாட்ட வந்தவர்தான் வள்ளலார்.

சொந்த வீடாக மாற்றம் செய்ய  நிதி வேண்டும் .என்ன நிதி ? அருள் என்னும் அழியாத நன்நிதி வேண்டும் .அவற்றை எங்கே பெற வேண்டும் ?

எல்லாவற்றுக்கும் காரணமாகவும் காரியமாகவும்.காரணகாரியமாகவும் இருப்பவர்தான் கடவுள்.

அந்தக் கடவுள் சமய மதங்களில் சொல்லிய கடவுள்கள் அல்ல.

எல்லாம் வல்லவர்.
இயற்கை உண்மையானவர்.
இயற்கை விளக்கமானவர்.
இயற்கை இன்பமானவர். 
அவர்தான்
அருட்பெருஞ்ஜோதியர்
என்னும் உண்மைக் கடவுளாகும்.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருள் என்னும் நன் நிதியை வழங்க முடியும். நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் உண்மையான தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்.

வள்ளலார் பாடல் !

1. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்!

என்ற பாடல்கள் வாயிலாக எளிய நடையில் எளிய தமிழில்  பதிவு செய்துள்ளார்..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி எப்படி வேண்ட வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறார் நம் வள்ளலார்..

பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

என்னும் பாடல் வாயிலாக இறைவனின் அற்புதப் படைப்பையும் .அவரால் கிடைக்கும் அருள் அற்புத பேரின்ப லாபத்தையும் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து வாழ்ந்து வழி காட்டுகின்றார்...

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி .உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யத்தையும்.சத்விசாரம் என்னும் வாயிலாக கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழ்வோம்...

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

1 கருத்துகள்:

4 மே, 2020 அன்று PM 7:10 க்கு, Blogger J. Udhaya Shankar கூறியது…

Brother இந்த கட்டுரையில்
(அதே நேரத்தில் ஆண் பெண் உறவு இல்லாமல் எந்த உயிரும் உடம்பும் படைக்க முடியாது.மேலும் ஆன்மா இல்லாமல் ஆணும் இல்லை.பெண்ணும் இல்லை.அலியும் இல்லை)

ஆண் பெண் சேராமல் உடலும் உயிரும் படைக்க முடியாது என்று கூறியுள்ளீர்கள், வள்ளலார் பிறப்பின் ரகசியம் கட்டுரையில் தாய் தந்தை சேராமலே பிறந்தவர் வள்ளலார் என்று குறிப்பிட்டிருந்திர்கள் மற்றும் இறைவனுடைய சொல்லால் குழந்தை பிறக்கும் என்றும் மற்றும் சில முறைகளில் ஆண் பெண் இணையாமலே பிள்ளை பிறக்குமென்றும் கூறியுள்ளீர்கள், ஏன் இந்த மாறுப்பட்ட கருத்து?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு