புதன், 7 பிப்ரவரி, 2018

உயர்ந்த சாதி ! தாழ்ந்த சாதி !

உயர்ந்த சாதி ! தாழ்ந்த சாதி !

உயர்ந்த சாதிகார்ர்களுக்கு பசி எடுக்காது.தூக்கம் வராது.உணவு தேவை இல்லை .உழைப்பு தேவை இல்லை.மனைவி மக்கள் தேவை இல்லை். மலம் வராது.வீடு தேவை இல்லை .அவர்கள் உடம்பில் இரத்தம் வெள்ளையா இருக்குமா?.கடினமான வேலை எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மணி ஆட்டிக் கொண்டே இருந்தால் போதும் கடவுள் அவர்கள் முன்னே தோன்றி நிர்ப்பார்.
அவர்களுக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும்.கடவுளே கொடுப்பார். கடவுள் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்..கடவுளை விலை கொடுத்து வாங்கி விட்டார்களா ? என்ற வினா நெடுங்காலமாக மக்களிடம் புகைந்து கொண்டே உள்ளது.
தாழ்ந்த சாதி !
தாழ்ந்த சாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே.பசி எடுக்கும்.உணவு வேண்டும்.தூக்கம் வரும்.இடைவிடாது உழைக்கனும்.மனைவி மக்கள் வேண்டும்.ஊருக்கெல்லாம் உழைக்கனும்.மலம் வரும். மலம் வந்தால் வாரிபோடனும்.ஊருக்கு வெளியே வாழனும்.மிருகம் போல் உழைக்கனும்.ஓய்வு எடுக்கக் கூடாது.மேல் ஆடை அணியக் கூடாது.
உயர்ந்த சாதிக்காரன் வீட்டின் உள்ளே போக்க் கூடாது.தெருவிலே செருப்பு போட்டு நடக்க் கூடாது.
சாமி கும்படக்கூடாது.கோயிலுக்குள் போக்க் கூடாது.சாமியை நினைக்க் கூடாது.உயர்ந்த சாதிக்காரனை தொடக் கூடாது.
சாகும் வரையில் ஏழ்மையாகவே வாழ்ந்து சாகனும். பசி.பட்டினி்.வறுமை.அவனை விட்டுப் போக்க்கூடாது.தாழ்ந்த சாதி காரணுக்கு மட்டுமே இரத்தம் சிகப்பாகவே இருக்குமா?..
இன்னும் நிறைய அளவற்ற வேறுபாடுகளை வைத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்..
உயர்ந்த குலம் என்றாலும் தாழ்ந்த குலம் என்றாலும் இறைவனின் இறுதி தீர்ப்பு ஒரே தீர்ப்பு மரணம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மரணம் வந்து உடலை புதைத்தால் இரு குலத்து உடம்பிலும் புழுக்கள் புழுத்து புழுக் குலமாக மாறிவிடுகின்றன.
இவற்றை எல்லாம் பார்த்த வள்ளலார்.வேதனைப் படுகின்றார் ..
மனித குலத்தை ஒரே இறைவன் மாறுபாடு இல்லாமல் படைத்து இருந்தும் .உயர்ந்த சாதி என்றும்.தாழ்ந்த சாதி என்றும்.மக்களைப் பிரித்து வைத்து விட்டார்கள் என்று வேதனைப் படுகின்றார்.
வேதனையோடு கோபமாக பாடிய பாடல் !
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் இது
வரையில்
உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் 
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே 
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!
என்னும் பாடலில் வேதனையுடன் தெரிவிக்கின்றார். மேலும்
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. !
சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற வேறுபாடு இல்லாத ஒரு பொது நெறியை.மனித இனத்தின் நல்வாழ்விற்காக   .வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்.அதற்குப் பெயர் தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.
அதுதான் பொதுநெறி.தனிநெறி.திருநெறி .அறிவுநெறி.அருள்நெறி.உண்மை நெறி என்பதாகும்.உண்மைக் கடவுளை காணும்நெறியாகும்.நல்வழிகாட்டும் நெறியாகும்.
வள்ளலார் காட்டியுள்ள பொதுநெறியில் சேர்ந்து புனித குலம் பெற்று பயன் பெறுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு