புதன், 26 மே, 2021

கொரோனோ இயற்கையா ? செயற்கையா?

 *கொரோனோ தொற்று இயற்கையா ? செயற்கையா?* 


*பொருமையாக படிக்கவும்*.


உலக அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள்.அணு ஆராய்ச்சி நிபுணர்கள்.

மருத்துவ சுகாதரத்துறை அணு ஆராய்ச்சி நிபுணர்கள்.மற்றும் ஆன்மீகம் சார்ந்த அருளாளர்கள்.

மற்றும்

பொதுநலம் சார்ந்த சமூக பாது காப்பாளர்கள் போன்ற வல்லுனர்கள் அனைவரும் அவரவர்கள் அறிந்ததை தெரிந்ததை கண்டுபிடித்துள்ளதை வைத்து கொண்டு வெவ்வேறு விதமான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் கருத்துக்களையும் ஆராய்ந்து புதிய புதிய மருந்துகளையும் கண்டுபிடித்து அவற்றை

ஊசியின் மூலமாகவும் பவுடர் மூலமாகவும் உடலுக்குள் செலுத்தி கொரோனோ வைரஸ் தொற்றை போக்க வழிகாட்டுகிறார்கள்.மகிழ்ச்சியான சேவைகள்  செய்திகள்தான்


கொரோனோ வைரஸ் என்ற தொற்று எதனால் பரவி வருகிறது.

மனிதர்களை மட்டும் ஏன் தாக்குகிறது.

மனிதர்கள் மட்டுமே. மரணம் அடைய என்ன காரணம்  என்னும் உண்மையை அறிந்து கொண்டால்.  உடம்பிற்கும் உயிருக்கும். ஆபத்துக்களை உண்டாக்கும்  வைரஸ் தொற்று சக்தியில் இருந்து மக்களை எளிதில்  காப்பாற்றிக்கொள்ளலாம்.


*முதலில் கொரோனோ வைரஸ் தொற்று இயற்கையா ? செயற்கையா ?  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்* 


உலகில் காற்றின் பிரிவுகள் அதன் வகைகள் பிரிவினைகள்.

காற்றின் கலவைகள் யாவும் உயிர்களின் வாழ்க்கைக்கு தகுந்தவாறு *நான்கு வகையான காற்று* இயற்கையால் படைக்கப் பட்டுள்ளன.அவை *1.பூதக்காற்று* *2.அமுதக்காற்று*

*3.உஷ்ணக்காற்று*

*4.விஷக்காற்று*

என்பவைகளாகும்.


இந்த நான்கு விதமான காற்றும் உயிர்களின் வாழ்க்கைகாக.உயிர்களின் வாழ்க்கை முறைகளுக்கு தகுந்தவாறு.

அதனதன் சுற்றுபுற சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடம்பின் வசதிக்கு ஏற்ப  மூக்கின் வழியாக சுவாசிக்கவும் பயன் படுகிறது.


*உலகில் காற்று இல்லாமல் எதுவும் நகர முடியாது*


அதேபோல் இவ்வுலகில் உரு பொருள்களை படைக்க. உருவாக்க அவைகளை அறிந்து  தெரிந்துகொள்ள *ஏழுவகையான அணுக்களின்* கூட்டுறவு முயற்சியால் பின்னப்படுகின்ற தாவரம் முதல் மனிதர்கள்வரை அதன் தோற்றம் செயல்கள் வேறு வேறு விதமான உருவங்களின் தோற்றங்கள்  இயற்கையால் படைக்கப்பட்டு உள்ளன.


அந்த ஏழுவிதமான அணுக்களின் தமிழ் பெயர்..

1.வாலணு

2.திரவவணு

3.குருவணு

4.லகுவணு

5.அணு

6.பரமாணு

7.விபுவணு

என்பவைகளாகும் மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் நிறைந்து இருக்கும்.

இவற்றில் காரியவணு.

காரணவணு.

காரிய காரணவணு என மூன்று வகையாய் உருவங்கள் தோன்றுவதற்கு காரணமாகவும் காரியமாகவும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன. *இது ஒரு அறிவியல் வேதியல் சார்ந்த அதிசய செயல்களாகும்*


*உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது*  


உடம்பில் உள்ள *கண்.காது.மூக்கு வாய்.சிறுநீர்துவாரம்..மலத்துவாரம் ஆகிய  *ஒன்பது துவாரங்களில்* வாய்  மூக்கு  என  மூன்று துவாரங்கள் மிகவும் முக்கியமானதாகும். .


இவ்வுலகில் ஆன்மா வாழ்வதற்கு  உயிர் உடம்பு மிகவும் அவசியம். *பஞ்ச பூத அணுக்களால்  பின்னப்பட்டதே அணுதேகமாகும் அதற்கு ஊன் உடம்பு என்றும் மலதேகம் என்றும் பெயர். *உடம்பும் உயிரும் இயங்குவதற்கு  காற்றும் உணவும்.தண்ணீரும் மிகவும் அவசியம் தேவைப்படுகிறது.* காற்று மூக்கு வழியாகவும் உணவு.தண்ணீர் வாய் வழியாகவும் மட்டுமே அனுப்ப முடியும்.  


உடம்பை பாதிக்காத அளவு சுத்தமான சாத்வீக உணவை அதாவது துர்நாற்றம் இல்லாத பாதுகாப்பான தாவர உணவை காலை மதியம் இரவு என மூன்று வேலையும் வாயின் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். *தாவர உணவு உண்டு வாழ்வதற்கு தகுந்தாற்போல் மனித உடம்பு படைக்கப் பட்டுள்ளது*


சுத்தமான காற்றை அதாவது *பிராணவாயுவை* மூக்கின் வழியாக இடைவிடாது சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். 


*நாம் தினமும் உண்ணும் உணவும் தண்ணீரும்*

*சுவாசிக்கும் காற்றும்* *உடம்பையும் உயிரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்*.


உலகம் முழுவதும் உள்ள மக்கள் உட்கொள்ளும் உணவு முறைகள் யாவும் உடம்பையும் உயிரையும் அழிக்கும் துர்நாற்றமுள்ள *அசுத்த* உணவாகவே இருக்கிறது. *அதாவது இயற்கைக்கு விரோதமான மாசுபடிந்த கலவை  உணவாகவே இருக்கிறது* ஆதனால்தான் எதிர்பாராத புதிய புதிய வியாதிகள் மற்றும் கொரோனோ போன்ற வைரஸ் தொற்றுக்கள் யாவும் சாதாரணமாக உடம்பை பற்றிக்கொள்கிறது.அதனால் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.


உலகம் முழுவதும் இயற்கைக்கு விரோதமான செயற்கையால் உண்டாகும் அசுத்த (காற்று) வாயுக்கள் புகை மண்டலங்களாக சூழ்ந்து வெட்டவெளியில் காற்றுடன் கலந்து நிறைந்து உள்ளது. அந்த செயற்கையான  அசுத்தக் காற்றை சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.


உலக உயிர் இனங்களுக்காக இயற்கையால் படைக்கப்பட்ட *பிராணவாயுவுடன்* அதாவது சுத்தகாற்றுடன் அசுத்த காற்று கலந்து பிரிக்க முடியாதவாறு  நிறைந்து மாசு படிந்துவிட்டது. 


தற்போது நாம் சுவாசிக்கும் காற்று *அசுத்த காற்று.* 

*உஷ்ண காற்று*.

*பூதக்காற்று* என மூவையான காற்றுடன் *இயற்கையில் *செயற்கை காற்றான அசுத்த காற்றும் கலந்து கலந்து சுவாசிப்பதால் கொரோனோ போன்ற அசுத்த செயற்கை வைரஸ் மூக்கின் வழியாக உள்ளே சென்று நுரைஈரலையும் மற்ற உறுப்புகளையும் பாதிப்பு அடைய செய்விக்கின்றது* பிராணவாயு *குறைவதால் மூச்சு திணறல் உண்டாகி உடம்பைவிட்டு உயிர் பிரியும் சூழல்நிலை உண்டாகிறது*. 


*அமுதக்காற்று!*


(*பரிசுத்தமான *அமுதக்காற்றை சுவாசிக்க வழி தெரியாமல் அழிந்து கொண்டே உள்ளோம்*  பிறகு தெரிந்து கொள்வோம்.)


 *மக்கள் கூடும் இடங்களில் சுத்த காற்றான பிராணவாயு குறைந்து அசுத்த காற்றை அதிகம் சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.* *எனவேதான் வாயையும் மூக்கையும் மறைக்க முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.*


அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ உலக மருத்துவ ஆராய்ச்சி கழகம் மருத்துவ சுகாதரத்துறை அறிவுறுத்தலின் வாயிலாகவும் மருத்துவர்களின் ஆலோசனைபடியும் ஊரடங்கு கட்டாயம் தேவை என ஆணையிட்டு உள்ளது. 


*மக்கள் வெளியே செல்லக்கூடாது* *தனிமனித இடைவெளி வேண்டும்*. *வீட்டிலே தனமையில் இருக்க வேண்டும்.*

*வாகனங்களினால் உண்டாகும் செயற்கை காற்றான அசுத்த காற்றை குறைக்க வாகனங்கள் வெளியே செல்லக்கூடாது*.

*என்பதால் கட்டாய ஊரடங்கு அறிவித்துள்ளது.* 


*செயற்கையால் உண்டாகும் அசுத்த காற்றாலும்*.

*செயற்கையால் உட்கொள்ளும் அசுத்த உணவினாலும் கொரோனோ வைரஸ் போன்ற தொற்று உடனே மக்களைப் பற்றிக் கொள்கிறது*.  


*கொரோனோ தொற்று என்பது இயற்கையானது அல்ல..இயற்கையில் செயற்கையானது என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்* 


இதில் இருந்து மக்களை காப்பாற்றுவது எவ்வாறு என்பதை *வள்ளலார்* தெளிவாக சொல்லுகிறார். 


*தனிமனித ஒழுக்கம் மிக மிக அவசியமாகும்.* *ஒழுக்கம் மட்டுமே உயிரைக் காப்பாற்றும் கருவியாகும்.*


கண். காது. மூக்கு.வாய்.கை.

கால். உடம்பு என்னும் புறப்புற உறுப்புக்களை  தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தேவை இல்லாததை செய்யாமல் இருப்பதே *இந்திரிய ஒழுக்கம்*.என்பதாகும்.


மனம்.புத்தி.சித்தம்.

அகங்காரம்.உள்ளம் எனும் உருவம் இல்லாத புறக்கருவிகளை உயிர் உடம்பை காப்பாற்ற மட்டுமே பயன் படுத்திக்கொள்வதே *கரண ஒழுக்கம்* என்பதாகும். இவற்றை ஒவ்வொருவரும் அவசியம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 


*இயற்கையுடன் செயற்கை  சேரும்போது துன்பம் துயரம்.அச்சம்.பயம்.மரணம் போன்ற ஆபத்துக்கள் எல்லாம் உடம்பையும் உயிரையும் பாதிக்கிறது.*


*இயற்கையில் செயற்கையான உலகில்.செயற்கை யான வாயு மண்டலங்களில் விஷத் தன்மையுள்ள  வாயுக்கள் அணுக்கள் மூலமாக காற்றிலும் வெளியிலும் கலந்துள்ளதால் நாம் சுவாசிக்கும் காற்றில்  கொரோனோ வைரஸ் போன்ற பலவிதமான தொற்று உடம்பின் உள்ளே சென்று நுரையீரலைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது*  

இந்த ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழிதான் உள்ளது.


*இந்த உலகத்தில் செயற்கையால் உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் போன்ற எல்லா வகையான  ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே மருந்து ஞான மருந்து என்னும் அருள் மருந்தாகும்* 


*அருள் மருந்து பெறும் வழி !*


*இவ்வுலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் அருள் மட்டுமே !* 


அருளைப் பெற வேண்டுமானால் *கலப்படம் இல்லாத அமுதக்காற்றை சுவாசிக்க வேண்டும்*.. 


பலகோடி மைல்களுக்கு மேல் பிரமாண்டத்தில் அமுதக்காற்று பூரணமாக நிறைந்து இருக்கிறது. 


*உயிர்களின் நன்மைக்காக தினமும் காலை வேலை 4-30 மணிக்கு  தொடங்கி 6-00 மணி வரை அதாவது சூரியஉதயம் வரை பூமியை நோக்கி அமுதக்காற்று வீசும்* *அவற்றை அமுதகாலம் என்றும் அமிர்தயோகம் என்றும் சொல்லுவார்கள்.* 

மேலும் *ஆலயங்களில் கடவுளை எழுப்புவதாக திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப்பாடி கடவுளை எழுப்பும் பழக்கமாக  வைத்துள்ளார்கள்*


*கடவுளை எழுப்புவது  அல்ல.கடவுள் தூங்கவும் மாட்டார்* அந்த நேரத்தில் மக்கள் எழுந்து விழிப்புடன் இருந்தால்  அமுதக்காற்று சுவாசிக்கலாம் என்பதற்காக அந்த வழக்கம் ஆலயங்களில் உள்ளது. அதன் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.


*எனவே நாம் ஒவ்வொருவரும் காலையில்  எழுந்து விழிப்புடன் அமுதக்காற்றை அவசியம் சுவாசிக்க வேண்டும்.*

*அமுதக்காற்றை தினமும் இடைவிடாது சுவாசிக்கும் போது நம் சிரநடுவில் உள்ள ஆன்மாவின் உள் இருந்து அமுதம் சுரக்கும்* *அந்த அமுதமே சிறந்த ஞானமருந்தாகும்.* 


*வள்ளலார் பாடல்*! 


திருஅருட்பாவில் நிறைய பாடல்கள் உள்ளன அதில் ஒரு சிலபாடல்கள் 


*உடற்பிணி யனைத்தையும்*  *உயிர்ப்பிணி யனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே*! 


*எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை*

*கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே* !


*காற்றிடை உயிர்பல கதிபல கலைபல*

*ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி*! 


மேலும் 


*காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன்* சன்மார்க்கச்

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்


*சாகா வரம்பெற்றேன்* தத்துவத்தின் மேல்நடிக்கும்

ஏகா நினக்கடிமை ஏற்று.!  ....மேலும்


*காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே*

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே* *தவத்தால்*

*மேவுகின்ற* *பெரும்பயனாம் விளைவைஎலாம்* தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே

சமரசசன் மார்க்க சங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும்ஏற் றருளே.!  


 *அமுதக்காற்றை சுவாசித்தால் சிற்சபையில் உள்ள ஆன்மாவின் உள் இருந்து அருள் சுரக்கும். அருளையே ஞான மருந்து என்கிறார் வள்ளலார்*


*ஞான மருந்திம் மருந்து* - 

 *சுகம்*

*நல்கிய சிற்சபா நாத மருந்து*.*! என்னும் அகவல் வரிகளிலும் தெரியப்படுத்துகின்றார்.


மேலே கண்ட பாடல்களின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளல்பெருமான். 


எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நாம்  உண்மை அறிந்து உடம்பையும்  உயிரையும் காப்பாற்ற வள்ளலார் காட்டிய அருள்நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஒழுக்க நெறியை கடைபிடித்து காலையில் எழுந்து அமுதக்காற்றை சுவாசித்து மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வோம். 


*அதிகாலையில் எழுவோம். அமைதியாக அமர்ந்து அமுதக்காற்றை சுவாசிப்போம்.உயிரையும் உடம்பையும் காப்பாற்றுவோம். கொரோனோ வைரஸ் தொற்றான விஷக்காற்றை விரட்டி அகற்றுவோம்* என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு