செவ்வாய், 18 மே, 2021

உண்மையை நம்புங்கள் !

 *உண்மையை நம்புங்கள்* ! 


*மலர்மிசை யேகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்...திருவள்ளுவர்*.


உடல்நிலை சரியில்லை என்றால் என்ன வியாதி என்று  கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்து சாப்பிட்டால் தான் குணமடையும்.


அதேபோல் நமக்கு உண்டாகும் துன்பம் துயரம் அச்சம் பயம் போன்றவற்றை போக்க வேண்டுமானால்  பல கடவுள்களிடம் சென்று முறையிடுகிறோம் பிரார்த்தனை செய்கிறோம்.


நாம் வணங்கும் கடவுள்கள் நம் வேண்டுதல்களை ஏற்று நன்மை செய்யும் ஆற்றல் உள்ளதா என்பதை தெரிந்து முறையீடு பிரார்த்தனை செய்ய வேண்டும். 


*வள்ளலார் சொல்லும் உண்மைக்கடவுள்* !


*இயற்கை உண்மைக் கடவுள்*


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

*சோதி தன்னையே* நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


*நீதி கொண்டுரைத்தேன்* இது நீவீர் மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி. !


என்னும் பாடல் வாயிலாக  ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் *இயற்கை உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி* தன்னையே பிரார்த்தனை செய்யுங்கள் சுகம் கிடைக்கும் எனவும். நீதி கொண்டு உரைத்தேன் (சத்தியமாக சொல்கிறேன்) நம்புங்கள் என்று   அன்புடன் ஆன்மநேயத்துடன் தெளிவாக சொல்கிறார்.


*மேலும் ஒரு பாடலில் சொல்லுகிறார்!*


அருட்சோதித்தெய்வம்  எனைஆண்டுகொண்ட தெய்வம் 

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்


*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்*.! 


என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்னை ஆட்கொண்டார் என்றும். இருட்பாடான துன்பம் எனும் இருளை நீக்கி இன்பம் எனும் ஒளியை தந்து காப்பாற்றினார் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி யுள்ளார். 


*எங்குறு தீமையும் எனைத்  தொடராமல் இரவு பகல் பாராமல் மெய்காவல் புரிந்த தெய்வம்தான் அருட்பெருஞ்ஜோதி தெய்வம் என்பதாகும்.*


அந்த உண்மையான கடவுள் ஒவ்வொருவரின் *சிரநடு சிற்சபை சிற்றம்பலத்தில்* அதாவது தலைப்பாகத்தின் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கு மேலே மத்தியில் *ஆன்மா* எனும் உள் ஒளியாக  இயங்கிக் கொண்டு  உள்ளவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளியாகும்.


ஆதலால் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடும் என்கிறார்.


எனவே நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் தகுதிக்கு தக்கவாறு தகரக்கண்ணாடி கூண்டில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிறிய திரி போட்டு தீபம்  ஏற்றி வைத்து அதன்முன் அமர்ந்து 

*அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி*

*தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!*


எனும் மகாமந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெல்லென சொல்லி துதித்து தோத்திரம் செய்து வழிபாடு செய்யுங்கள்.


அப்படியே செய்து வாருங்கள் துன்பம் துயரம் அச்சம் பயம் யாவும். இருக்கும் இடம் தெரியாமல் விலகிவிடும்.


குறிப்பாக தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் *கொரோனோ என்னும் கொடூரமான வைரஸ்* தொற்றில் இருந்து குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் *அருள் மருந்தே* இதுவாகும். 


நம்பிக்கையுடன் உண்மை உணர்ந்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுங்கள் .


*ஒரு முக்கிய செய்தி எக்காரணம் கொண்டும் புலால் ( மாமிசம்) உண்ணவே கூடாது* 


*செயற்கையை இயற்கை எனும் அருளால் மட்டுமே வெல்ல முடியும்*


*எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து*!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு