வியாழன், 6 மே, 2021

வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் !

 *வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம்* ! 


தமிழக முதல்வர் மாண்புமிகு 

உயர்திரு 

மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் *வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேசமையம்* அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  சொல்லியவாறு நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு

சன்மார்க்க சான்றோர்கள் எதிர்பார்க்கிறோம்.


*உலகம் எல்லாம் போற்றும் தருணம்!*

இக்காலம் சன்மார்க்க காலம் இவற்றிற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது என்பது வள்ளலார் வாக்குமூலம்.


வள்ளலார் கொள்கையான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையானது* உலகம் எல்லாம் போற்றும் வகையில்  ஏற்று கொள்ளக் கூடியது.சாதி சமயம் மதம் அற்ற பொது நோக்கம் உடையது.


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பதாகும். *ஒன்றே குலம் ஒருவனே தேவன்* என்ற உண்மையை கண்டு அறிந்து தெரிந்து தகுந்த *அறிவியல்* ஆதாரத்துடன் வெளிப்படுத்தி காட்டியுள்ளவர்


*பொது சமுதாயம்*!


*ஆன்மீகத்தில் அருள் புரட்சி செய்தவர்* 


*ஆன்மீகம் என்பது  உலகம் முழுவதும் ஒரேத் தன்மை ஒரே கொள்கை உள்ளதாக இருக்க வேண்டும்.* *இன்று ஆன்மீகம் என்பது கேலி கூத்தாக உள்ளது*. 


ஏற்ற தாழ்வு அற்ற பொது சமுதாயத்தையும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பாகுபாடு அற்ற. உயர்ந்த நிலையில் ஒற்றுமையுடன் வாழும் சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் என்பதே வள்ளாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். 


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பதே வள்ளலாரின் உயர்ந்த நோக்கமாகும்*.


தகுந்த ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு உலகம் முழுவதும் ஒரே கொள்கையை கொண்டு செல்வதே ஆன்மீகம் என்பதாகும். 


பொய்யான கற்பனை கடவுள்களையும்.

கற்பனை கதைகளையும் உலகம் முழுவதும் விதைத்து விட்டார்கள். ஆகையால் மக்கள் உண்மை அறியாமல்  ஆன்ம அறிவு வெளிப்படாமல் அறியாமையால் தவித்துக் கொண்டுள்ளார்கள். 


*தமிழக முதல்வர் அறிவிப்பு*


அதற்கு தகுந்தவாறு தற்போது தமிழக முதல்வராகும் திரு ஸ்டாலின் வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் *அருள்* செயலாகும்.


*வள்ளலார் பாடல்* !


அத்தா நான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்*

*ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்*


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.! 


மேலே கண்ட பாடலிலே எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கியுள்ளார். 


எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய லட்சியமாகும்.


*பசி பட்டினி வறுமை*  எனும் கொடூரமான இல்லாமை எனும் நிலைமையை உலக சமுதாயத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வள்ளலாரின் அடிப்படைக் கொள்கையாகும்.  


மெய்ப்பொருள் என்னும் இயற்கை உண்மை கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் வகுத்து தந்த பொது நோக்கமுள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் உண்மையை உலகம் முழுவதும் உள்ள மனிதர்களிடம் கொண்டு செல்ல  வேண்டும்  என்பதே வள்ளலாரின் அருள் நோக்கமாகும்.


*அழியாத சாகாக்கல்வி*


*உயர்ந்த அறிவுள்ள மனிதகுலத்தில் பிறந்தவர்கள் அழியும் கல்வியை தவிர்த்து அழியாச் சாகாக்கல்வியைக் கற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே ஆன்மீகத்தின் முடிந்த முடிவாகும் என்பதை கற்று தந்தவர். சொல்லியவாறு கற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார்* 


*உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்* ! 


ஆட்சி அதிகாரத்துடன் சட்டதிட்டத்தின் வழியாக வள்ளலாரின் கொள்கையை எவ்வித தந்திரமாவது செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 


மக்களுக்கு உயிர் இரக்கமான ஜீவ காருண்யத்தையும். தனிமனித ஒழுக்கத்தையும்.

சத்விசாரத்தின் வழியாக உண்மை கடவுளின் ஆன்மீகத்தையும்  போதித்து  நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


*வள்ளலார் பாடல் !*

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 


திலகன்என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


*உலக வரலாற்றில் இறைவனுடைய தலைமையில் நேரடி கண்காணிப்பில்  செயல்படும் ஒரே மார்க்கம் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*  எனும் அருள்நிறைந்த புனித மார்க்கமாகும்*  


*வள்ளலார் பாடல்!*


திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லப சத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண்டு அருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!  


*உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய திருநெறி என்பது ஒன்றே. அதுதான் இயற்கை உண்மையான கடவுளைத் தொடர்பு கொள்ளும் இயற்கை உண்மையான  ஆன்ம ஒளி நெறியாகும்* 


இந்த நெறியை தோற்றுவித்தவர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் *வடலூர் வள்ளலார்*   *வாடியப்பயிரைக் கண்டு வாடியவர்*.


*வடலூரில் தோற்றுவித்த அமைப்புகள்* 


*வள்ளலார் பிறந்த ஊர் மருதூர்*. 


*வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை*.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*. 


*மற்றும் தண்ணீரில் விளக்கு எரித்த கருங்குழி*.


*வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம்*. 


*வள்ளலார் அருள் ஆற்றலால் உண்டான வற்றாத தீஞ்சுவை நீரோடை*


இவைகள் யாவும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மேற்பார்வையில் இயங்கி கொண்டு வருகிறது. 


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள அமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை  உரைநடையை எளிய தமிழில் எழுத்துவடிவிலும் திருஅருட்பா பாடல்களின் வாயிலாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். *இருந்தும் வள்ளலார் சொல்லிய வண்ணம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் செயல்படவில்லை*


*தமிழக முதல்வர்*  


*வள்ளலார் கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்.  *திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையில்*

*நாங்கள் வருகின்ற சட்டசபை தேர்தலில்  வெற்றி பெற்றால் வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும் பான்மையுடன்  அமோக வெற்றி பெற்று தமிழக  ஆட்சியை கைபற்றி உள்ளது.  


*தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்  சார்பாக வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*  


தேர்தல் அறிக்கையில் வள்ளலார் பெயரில் சரவதேச மையம் அமைக்கப்படும் என்ற செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் எங்கள் வாக்குகளை மனப்பூர்வமாக அளித்து வெற்றி பெற வைத்துள்ளோம்.


தாங்கள் வடலூருக்கு நேரில் வந்து பார்த்து    வள்ளலாரின் கொள்கைகளை சன்மார்க்க சான்றோர்களின் கருத்துக்களை அறிந்து தெரிந்து தாங்கள் சொல்லியவாறு  வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆவணச்செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடைபெறவும் நிலைபெறவும் வேணுமாய் எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி விண்ணப்பம் செய்து கொள்கிறோம். 


நல்லோர் நினைத்த நலம் பெறுக எல்லோரும் வாழ்க இசைந்து.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு