ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆசைகள் உண்டாக காரணம் !

 *ஆசைகள் உண்டாக காரணம் !* 


*காரணம் இல்லாமல் காரியம் இல்லை.காரியத்திற்காக காரணம் தேவைப்ப டுகின்றது*.

காரணம். காரியம்.காரணகாரியம் எதற்காக என்ற உண்மைத் தெரிந்து கொண்டால் மனிதன் புனிதனாக மாறலாம்.


நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நல்வினை தீவினை என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மனம் மகிழ்ச்சி அடைந்தால் நல்வினை என்றும்.மனம் துக்கத்தில் இருந்தால் தீவினை என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்.


மனம் மகிழ்ச்சி அடைவதோ.துன்பம் அடைவதோ பெரிய விஷயமே அல்ல.

*ஆன்மா மகிழ்ச்சி அடைவதே முக்கிய காரண காரியமாக இருக்க வேண்டும்*.


ஆன்மா வந்த காரணத்தையும் காரியத்தையும் ஆன்மா வாழ்வதற்காக உயிர் உடம்பு கொடுத்த  காரண காரியத்தையும்.

ஆன்மா அடைய வேண்டிய லாபத்தையும் அறிந்து கொள்ளவே ஆன்மாவிற்கு உயர்ந்த அறிவை இறைவன் வழங்கி உள்ளார். 


*மனித தேகம் எடுத்த ஆன்மாவிற்கு* *மண்ணாசை*

*பொன்னாசை பெண்ணாசை உண்டாகக் காரணம் என்ன* ? 


*ஒரு ஆன்மாவிற்கு ஆசை என்பது தானே வருவதில்லை.*

*ஆன்மாவின் இயற்கை குணம் தயவு.ஆன்மாவின் செயற்கை குணத்தால் இயற்கை குணம் மறைந்து கொண்டுள்ளது*


ஆன்மாவானது உயிர் உடம்புடன் தோற்றம் கொண்டு  உலகியலில் வாழத் தொடங்குகிறது. உலகியல் வாழ்க்கையின் *பழைய பழக்க வழக்கத்தினால்* கட்டுண்டு பின்பற்றி  இன்பமும் துன்பமும் மாறி மாறி அடைந்து  வாழ்ந்து முதுமைப்பெற்று பிணி உண்டாகி உயிர் உடம்பு செயல்படமுடியாமல் இறுதியில் மரணம் அடைந்து ஆன்மா வெளியேறி விடுகின்றது. 


*ஆன்ம லாபம்பெறுவதே ஆன்மாவின் இயற்கை குணமாகும்*


ஆன்மாவானது இவ்வுலகத்தில் மனிதபிறப்பைப் பெற்றுக் கொண்டதின் நோக்கம்.இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தை காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.அதுவே ஆன்மாவிற்கு இயற்கை உண்மைத் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த கட்டளையாகும்.

ஆணையாகும்.


*இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கமாகிய அருளைப்பெற்று இயற்கை இன்பமாகிய பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வதே ஆன்மாவின் இயற்கை குணமாகும்*.


உயிர் உடம்பு எடுத்த ஆன்மா இயற்கை குணத்தில் வாழாமல் செயற்கை குணங்களைப் பின்பற்றி வாழ்வதால் இறந்து இறந்து.பிறந்து பிறந்து வெவ்வேறு பிறவிகள் எடுத்துக் கொண்டே உள்ளது.


*மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை*


மேலே கண்ட மூவகையான ஆசைகளையும் ஆன்மா இயற்கையாக பற்றிக் கொள்ளவில்லை.

செயற்கையால் விதிக்கப்பட்ட காரண காரியங்களால் பின்பற்றிக் கொண்டன. 


*சாதி சமய மதங்கள்*


மனித தேக வாழ்க்கைகாக தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் கொள்கைகளால்  ஆன்மா சிக்குண்டு.இயற்கை குணங்களை இழந்து செயற்கை குணங்களைப் பற்றிக் கொண்டு வாழ்வதால் மண்ணாசை.

பொன்னாச.

பெண்ணாசை யில் ஆன்மா மாட்டிக் கொண்டது. 


ஆன்மா இந்த மூன்று ஆசைகளை விலக்கினால் பேரின்ப லாபத்தை பெறலாம் என்று எல்லா சமய மதங்களும் சொல்லுகின்றது.

சன்மார்க்கிகளும் சொல்லுகிறார்கள்.


*சாதி சமய மதங்களை இறைவன் படைக்கவில்லை*

*உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் பெற்ற  அருளாளர்கள் படைத்துள்ளார்கள்* 

*இறைவனால் படைக்காத எந்த கொள்கைகளாக இருந்தாலும் அது பொய்தான் என்று வள்ளல்பெருமான் தெளிவாக அழுத்தமாக பதிவு செய்கிறார்*.


*சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி!*


*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*

*ஆதிய நாதியாம்* *அருட்பெருஞ் ஜோதி* ! 


சாதியும் சமயமும் மதமும் அவைகளின் கொள்கைகளுமே.

 இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும். அருள்  பெறமுடியாமல்  மரணம் அடைவதற்கும் காரணகாரியமாக உள்ளன என்று வள்ளலார் நூற்றுக்கணக்கான பாடல்களிலும்.உரைநடைப்பகுதிகளிலும் தெளிவாக பதிவு செய்துள்ளார்.


வள்ளலார் பாடல் ! 


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனி நடராஜ என் சற்குரு மணியே.! 


பழைய சாதி சமய மதங்களான பொய்நெறியைக் கடைபிடித்து அருள் பெறமுடியாமல் இருள் அடைந்து வாழ்கின்ற மக்களைக் காப்பாற்றி. அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்வதற்காகவே உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற தனிநெறியை 1872 ஆம் ஆண்டு தோற்றுவிக்கிறார் வள்ளல்பெருமான்*


மனித குலத்தை மேம்படுத்தவும்.சாதி சமயம் மதம் அற்ற  இயற்கை உண்மையான கடவுளை அறிந்து கொள்வதற்கும். என்றும் அழியாத அருளைப் பெறுவதற்கும்.மரணத்தை வெல்லுவதற்கும்.

அவற்றைப் பெறுவதற்கு உண்டான வழிகளைக் காட்டவும் தோற்றுவிக்கப்பட்டதுதான் சுத்த சன்மார்க்க தனி நெறியாகும்.


*வள்ளலார் பாடல் !*

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


என்ற உண்மையை அறிந்து சுத்த சன்மார்க்க தனிநெறியைப் பின்பற்றி ஆன்மலாபம் பெற வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார்.


*ஆசைகளை உண்டாக்கியது*!


மனித குலத்திற்கு வழிகாட்டிய அருளாளர்கள்.இந்தியாவில்தான் அதிகம் தோன்றினார்கள்.  உடம்பின்

தத்துவ கலைகளைக் கொண்டு கற்பனைக் கதைகளைப் படைத்து மக்களை படுகுழியில் தள்ளிவிட்டார்கள். இவற்றை பின்பற்றிதான் மற்ற நாடுகளில் உள்ள அருளாளர்களும்.

வெவ்வேறு விதமான கற்பனைக் கதைகளைச் சொல்லி சமய மதங்களைத் தோற்று வித்துள்ளார்கள்.

எந்த சமய மதங்களும் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். ஆன்மநேயம் மனிதநேயம்  இல்லாமல் மனிதகுலத்தை பிரித்துவிட்டார்கள்


*வள்ளலார் பாடல்*!


வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - 


சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


மக்களுக்கு பயன் இல்லாத வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் என்று வீண்வாதம் ஆடுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளலார். 


*பேருபதேசத்தில் வள்ளலார் தெளிவாகச் சொல்லுகின்றார்*.


இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, *அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.* சுத்தமாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை.


சன்மார்க்கம் இருந்து இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்*..


மேலும்..இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*. ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, *இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து,* உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

 *தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?* என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே *முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்*. 


, *ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.* இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் *பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.* (வள்ளலார் வந்து உடைத்துவிட்டார்) அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.! என்பதை வெளிப்படையாக  சொல்லுகின்றார் வள்ளலார்.


*உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் என்று  சொல்லுகின்றார்*


அவர்யார் ? அவர்தான் மகாபாரதம் எழுதிய *வேதவியாசர்* என்பவராகும்.அவருக்கு போட்டியாக வந்தவர் இராமாயணம் எழுதிய *வால்மீகிமுனிவராகும்* அவர்களுக்கு போட்டியாக தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்கள் மற்றும் சேக்கிழார் போன்ற ஞானிகளும் மற்றும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் போன்றவரும்


அடுத்து வந்த 

உண்மைத் தெரிந்தவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தோன்றினார்கள்.


அவர்களுக்குபோட்டியாக புத்தமதம்.கிருத்துவமதம்.இஸ்லாம் மதம் போன்ற பெரிய மதங்களைத் தோற்றிவித்த அருளாளர்களாகும்.உண்மையை மறைத்து.

கலையுரைத்த கற்பனையான மூடநம்பிக்கைகளை நாட்டிலே விதைத்து விட்டார்கள்.


கடவுளின் பெயரால் வெளிப்படுத்திய. கற்பனை கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் மூடநம்பிக்கை மூலமாகத்தான் மனிதர்களுக்கு மண்ணாசை.

பொன்னாசை.

பெண்ணாசை 

தோன்றியது. ஆசையை விதைத்துவிட்டு ஆசையை விடு என்பது எவ்வளவு கொடுமையான கொள்கையாகும்.


*அரசாங்கம் மதுபான கடைகளைத்திறந்து வைத்துவிட்டு மது அருந்தாதே மது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் என்பது போலாகும்*


*இறைவனால்  வருவிக்க உற்ற வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் வெட்ட வெளிச்சமாக போட்டு உடைக்கின்றார்*


எனவே ஆசை என்பது தானாக வருவதில்லை.

மக்களுக்கு கற்பித்த *சாதி சமய மதக் கொள்கையாலும்.

உணர்ச்சியைத் தூண்டும் உணவு முறை பழக்க வழக்கத்தாலும் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகள் மக்களின் ஆன்மாவில்  பதிவாகிவிட்டது*


*வள்ளலார் பாடல்!*


ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ! 


உணவினால் உண்டாகும் *ஊரமுது* உண்டு ஒழிந்து போகாமல்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு *அருள்அமுதம்* பெற்று அழியாமல் வாழலாம் என்பதை மேலேகண்ட பாடல்வாயிலாக பதிவு செய்கின்றார்.


*அழியும் பொருள் ஆசையான* *மண்ணாசை*

*பொன்னாசை*

*பெண்ணாசை*

யை *விட வேண்டுமானால்* *என்றும் அழியாத அருள் ஆசையை பற்றிக் கொள்ள வேண்டும்*.


*வள்ளலார் அழைக்கின்றார்!*


ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்


ஏசற நீத் தெனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள் இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 


மேலே கண்ட  பாடலின் வாயிலாக தெளிவுப்படுத்தி அன்புடன் அழைக்கின்றார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

3 கருத்துகள்:

4 நவம்பர், 2020 அன்று 2:01 PM க்கு, Blogger Madhava Bharathi கூறியது…

ஆன்மா எதற்காக உடல் எடுக்கிறது?

 
4 நவம்பர், 2020 அன்று 2:02 PM க்கு, Blogger Madhava Bharathi கூறியது…

ஆன்மா உடலெடுக்க வேண்டிய அவசியம் யாது?

 
4 நவம்பர், 2020 அன்று 2:07 PM க்கு, Blogger Madhava Bharathi கூறியது…

ஏற்கனவே முழு நிறைவான ஆனந்தமயமான ஆன்மாவானது மீண்டும் உடலேடுத்து அடைய வேண்டிய இன்பம் எது?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு