புதன், 18 மார்ச், 2020

கடவுள் மனித வடிவில் உள்ளார்!

*கடவுள் மனித வடிவில் உள்ளார்*

உலகம் முழுவதும் மக்களை பயத்தில் நடுங்க வைத்துக் கொண்டு இருப்பது கொரோனோ வைரஸ் தொற்று நோயாகும்.

மனிதர்களை காப்பாற்ற  பல சமயங்கள் மதங்கள் தோன்றி உள்ளன.பல கடவுள்கள் படைக்கப்பட்டுள்ளன.

கடவுள்கள் வாழும் இடமாக.வழிபடும் இடமாக ஆலயங்கள்.
கோயில்கள்.சர்ச்சுகள்.மசூதிகள்.பிரமிட்டுக்கள்.புத்தகயாக்கள் போன்ற பல்வேறு வழிப்பாட்டு தலங்கள் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

கொரோனா வைரஸ் கொடூர தாக்குதலை தடுக்க எந்த கடவுளும் முன்வரவில்லை.

இவ்வளவு காலமாக கடவுளை வணங்கி வேண்டி என்ன பயன்.காலமும் நேரமும் பணமும் பொருளும் தான்  விரையமானது.

மனிதனை காப்பாற்ற மனிதனால் தான் முடிகிறது. எந்த கடவுளாலும் முடியவில்லை.

கொரோனோ வைரஸ் அழிக்க மனிதன் தான் மருந்தை கண்டு பிடிக்கிறான்.

மனிதன்தான் மனிதனை பாதுகாக்கிறான்.

இங்கே சமயங்கள் மதங்கள் தோற்றுவித்த கடவுள்களுக்கு வேலை இல்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.
ஆன்ம ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் எந்த வைரஸும் தாக்காமல் மகிழ்ச்சி யோடு வாழலாம்.

ஒவ்வொரு மனிதனையும் அவன் கடைபிடிக்கும் ஒழுக்கம் தான் காப்பாற்றும்.மற்றபடி எந்த கடவுளும் காப்பாற்ற முடியாது.

மனிதன் துன்ப்படும்போது மனிதன்தான் காப்பாற்ற முன்வருகிறான்.நாம் வணங்கும் கடவுள்கள் முன் வருவதில்லை.

எனவே மனிதநேயம் ஆன்மநேயம்  ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை கொண்டு வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு