புதன், 18 மார்ச், 2020

கொரோனோவில் தப்பித்து கொள்ள ஒரே வழி !

கொரோனோவில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி !

வள்ளலார் சொல்லியதை கடைபிடிக்க வேண்டும்.

200 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

நமக்கு எப்போது ஆபத்து வரும் என்பது தெரியாது.தன் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பிற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் அழுத்தமான கொள்கை.

அதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம் என்றும்.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

அதில் முக்கியமானது.உயிர்க்கொலை செய்யக் கூடாது.அதன் புலாலை உண்ணக்கூடாது என்பதாகும்.

இன்று உலகம் முழுவதும் கடவுளால் படைத்த உயிர்களை கொன்று உணவாக உட்கொள்வதே  பழக்கமாகி விட்டது.

அதற்கு சமய மதங்களே துணையாக இருந்துள்ளன.

ஒரு உயிரைக் கொல்வதோ அதன் புலாலை உண்பதோ கடவுளுக்கு சம்மதமா என்றால் சம்மதம் கிடையாது.

கடவுள் பெயரைச் சொல்லியே உயிர்களை கொன்று குவித்துள்ளார்கள்.

அதன் விளைவுதான் கொரோனோ வைரஸ்.உலகம் முழுவதும் பரவுதற்கு காரண காரியமாக உள்ளது.

உயிர்க்கொலை செய்யாத ஜீவகாருண்ய முள்ள சமுசாரிகளுக்கு எந்த ஆபத்துக்களும் அவர்களை அனுகாது என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார் வள்ளலார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள கருத்தை ஊன்றி படியுங்கள்!

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது, 

மண்ணும் சூடு செய்யாது - பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா - 

*விடூசிகை*  *விஷக்காற்று* *விஷசுரம்* முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா - 

அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - 

அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் - 

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - 

வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - 

சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - 

துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - 

சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.!

மேலே கண்ட விபரங்களை முன் கூட்டியே சொல்லி மக்களை நல்வழியில் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிகாட்டி உள்ளார்.

உலகில் எந்த ஆன்மீக அருளாளார்களும் சொல்லாத.சொல்ல முடியாத உண்மைகளை மக்களுக்காக  தெளிவாக சொல்லி உள்ளார்.

மக்கள் செவிமடுத்து கேட்கவில்லை.

இன்று மிகப்பெரிய கொரோனோ வைரஸ் தொற்று நோயில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.மருந்து இல்லாத வியாதியாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான உயிர்களை கொன்று தின்றார்கள் அதன் பாவச்செயல் தான் கொரோனோ வைரஸாக உலகம் முழுவதும் பரவி உள்ளது.

இப்போதும் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.! 

இனிமேல் எந்த உயிரையும் கொல்ல மாட்டேன் அதன் புலாலை உண்ண மாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டு வாழ்ந்தால்.கொரோனோ வைரஸ் பிணியில் இருந்து உலகம் முழுவதும் தப்பித்துக் கொள்ளலாம்.

இதுதான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை.

பின் பற்றுங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதைவிட்டால் வேறு வழியில்லை.இவை வள்ளலாரின் அருள்வாக்கு உண்மை ! 

நம்பினோர் கெடுவதில்லை.

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடலின் உண்மை தெரிந்தவன் பாக்கியவான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு