புதன், 25 மார்ச், 2020

இருமலுக்கு மூலிகை !

இருமலுக்கு மூலிகை !

வள்ளல் பெருமான் அவர்கள்.சென்னையில் உள்ள தன் நெருங்கிய அன்பர் திரு இரத்தினமுதலியார் அவர்களுக்கு
20-09-1864 ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதி அனுப்புகின்றார்.

அந்த கடித்த்தில் உள்ள செய்தியை நாம் அனைவரும் படித்து தெரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

அன்பு.அறிவு.ஒழுக்கம் முதலிய நற்குணங்கள் வாய்ந்து நம்மிடத்து உள்ளன்பு வைத்த சிரஞ்சீவி இரத்தினம் முதலியார்க்கு சிவகடாக்ஷத்தினால் தீர்க்க ஆயுளும் திடதேகமும்.சகல சம்பத்தும் மேன் மேலுண்டாவனாக.

தங்கள் சுப சரித்திரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்.தங்களுக்கு *இருமலால்* தேகம் அபக்குவமாக இருக்கிறதாகத் தபாலில் எனக்குத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே இருக்கிறது.நித்திரை பிடிக்கிறதுமில்லை.

நான் தொடங்கிய காரியங்கள் ஒன்றும் நடக்கிறதுமில்லை.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.உடனே புறப்படுவேன்.இவ்விடத்தில் ஒரு பெரிய தடை நேரிட்டிருக்கின்றது. அது இன்னும் பதினைந்து தினத்தில் விடும்.அதற்கு மேல்  பிரயானப்படுகிறேன்  என்றும்.

எவ்விதத்தினும் ஐப்பசி மாதம் 12 நாளில் பிரயாணப்பட்டு வருகிறேன் .தாங்கள் நமது சாமி அவர்களைக் கொண்டு உபசாந்தி செய்து கொண்டு அதிக உழைப்பு எடுத்துக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக வரவேண்டும் கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம் என்று கடித்த்தில் எழுதுகின்றார்.

*நாம் கவனிக்க வேண்டியது*!

இரத்தினமுதலியாருக்கு கொரோனோ வைரஸ்போல் தாக்கி இருமல் வந்துள்ளது.அதனால் எந்த வேலையையும் செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும்.வேலை போனால் போகட்டும் உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளல்பெருமான் கடிதத்தில் எழுதுகிறார்.

மேலும் அந்த இருமலுக்கு மூலிகை மருந்தை சொல்லி எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றார்.

முசுமுசுக்கை சமூலம் கொண்டு வந்து.பசும்பாலில் ஊறவைத்து.உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத் தண்ணீர் காச்சி சாப்பிடுவதுபோல சலத்தில் போட்டு சுண்ட வைத்து.

பசும்பால் நாட்டுசக்கரை.மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வரவேண்டும்.

இதை சாமிகளுக்குத் தெரிவித்து அவாளைக்கொண்டு செய்வித்து சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும்.

உத்தியோகம் தடை இருந்தால் அதை விடுத்து தெகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பின்பு சிவானுக்கிரகத்தால் உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

அது பரியந்தம் கடன் பட்டாவது ஜீவனம் செய்யலாம்.அது குறித்து அஞ்ச
வேண்டாம். என்று வள்ளலார் கடித்த்தில் எழுதி உள்ளார்.

*இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது*.!

இருமல் கொரோனோ போன்ற கொடூரமான வியாதி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.நுறையீரலை பாதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.உடனே கவனிக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லியதோடு அல்லாமல்.

அதற்குண்டான மூலிகை மருத்துவத்தை தெளிவாக சொல்லி உள்ளார்.
வள்ளலார் சாதாரண மனிதர் அல்ல. முற்றும் அறிந்த தெரிந்த.உணர்ந்த  அருளாளர்.

அவர்சொல்லிய மருத்துவத்தை அசட்டை செய்யாமல் செய்து சாப்பிட்டு வாருங்கள்.கொரோனோ போன்ற இருமல் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் மறைந்துவிடும்.

மருந்தை சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலே ஓய்வு எடுத்தால் போதுமானது.

இதுநல்ல தருணம் அருள் செய்ய இதுநல்ல தருணம்..

வள்ளலார் எழுதிய இந்த கட்டுரையை ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்குத் தெரியப்படுத்தவும்.

எல்லா வியாதிகளுக்கும் நம் தமிழ்நாட்டில் வாழ்த்த அருள் ஞான சித்தர்கள் மூலிகை கண்டுபிடித்து வெளியிட்டு உள்ளார்கள். நாம் கடைபிடிக்க தவறி விட்டோம்.அதனால் துன்பப்படுகின்றோம்.

வரும் முன் காப்பதே சித்தர்கள் கண்டுபிடித்த  சித்த மருத்துவம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு