வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

முன்னுரை !

முன்னுரை !

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் !

வள்ளலார் பாடல் !


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தும்.மனிதனுக்கு  அறிவு வளர்ச்சி உண்டான காலத்தில் இருந்தும். பரந்து விரிந்து சுருங்கும் தன்மையுடைய இவ்
உலகத்தைப் படைத்த மெய்ப் பொருளான கடவுள் யார் என்பது தெரியாமல் பொய்யான புன்னெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

உலகில் தோன்றிய பல ஞானிகள்.பல அருளாளர்கள்  அவரவர்களுக்கு கிடைத்த ஏகதேச அருள் ஆற்றலினால் கடவுளைத் தேடினார்கள்.உண்மையான  மெய்பொருள் எது.? அது எங்கே இருக்கின்றது. எங்கே இருந்து செயல்படுகின்றது.அது உருவமா ? அருவமா ? உருஅருவமா ? ஒளியா ? வெளியா? பஞ்ச பூதமா ? மாயையா ? அதற்கும் மேலே எந்த உருவத்தில் ஆண்டவர் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்கள். அவரவர் அறிவுக்கும் ஏகதேச அருளுக்கும் கிடைத்த. தோன்றிய தத்துவக் கலைகளை கற்று கண்டு தெரிந்து.தெளிந்து அதில் தேர்ச்சிப் பெற்று இவைதான் நிலையானது  என்பதை உணர்ந்து தெரிந்து கொள்ள முடியாமல். கலையுரைத்த கறபனைகளைக் கதைகளாகவும் கதைகளில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை கடவுள்களாகவும் உலகுக்கு காட்டினார்கள்.

அந்த தத்துவங்களை வழிபடுவதற்கு வானுயர ஆலயங்களையும்.சர்ச்சுகளையும் .மசூதிகளையும்.மிரமிடுகளையும்.
மற்றும் சிறியதெய்வம்.பெரியதெய்வம் போன்ற தெய்வங்களையும் அவரவர்கள் எண்ணத்திற்குத் தகுந்தவாறு தோற்றுவித்தார்கள்.மக்கள் அவற்றை உண்மை என நம்பி வழிப்பட்டுக் கொண்டு வந்தார்கள்.வருகின்றார்கள்.அதனால் மக்களுக்கு எந்தவிதமான ஆன்மலாபமும். அருள் லாபமும்  சித்தி வல்லப பயனும் கிடைக்காமல் துன்பத்தில் அழுந்தி மாண்டு(மரணம் ) கொண்டே இருந்தார்கள் இருக்கின்றார்கள்.

இதனால் கடவுளின் பெயரால் சாதி.சமய.மதம் போன்ற வேறுபாடுகளை உண்டாக்கி விட்டார்கள்.அதனால் மனித இனம் ஒற்றுமை இல்லாமல்.மனித நேயம் இல்லாமல்.அன்பு.தயவு.கருணை இல்லாமல் உயிர் இரக்கம் இல்லாமல். மக்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன்.தீண்டத் தகுந்தவன் தீண்டத்தகாதவன் என்று பலகோணங்களில் மக்களை வேறுபடுத்தி பிரித்து விட்டார்கள்.

ஆதலால் மனிதகுலம் உயிர்க்குலம் கடவுளின் உண்மை அறியாமல்.எம் கடவுள் பெரியது உம்கடவுள் சிறியது என்னும் போட்டி பொறாமை.வஞ்சகம்.சூது. வாது வலுத்துவிட்டது. ஆகையினால்  சாதி.சமய.மதக் கலவரங்கள் சண்டைகள் உண்டாகி பிளவு ஏற்பட்டு மனிதர்களை மனிதர்களே எதிர்த்து போரிட்டு  அழிந்து மாண்டுபோகும் சூழ்நிலை உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது இருக்கின்றது.

அந்த காலகட்ட சூழ்நிலையை உணர்ந்த .கருணையே வடிவமான மெய்ப் பொருளான கடவுளானவர் .அகம் கருத்து. புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டுள்ள இந்த உலக மக்களைத் திருத்தவும்.சாதி.சமய.மதங்களை ஒழித்து.மனித நேயத்தையும்.ஆன்மநேயத்தையும் உயிர் இரக்கத்தையும் புரிய வைக்கவும் தெரிய வைக்கவும்.தெளிவு அடைய செய்யவும்.. மக்களை ஒன்றுபடுத்தி ஒற்றுமையை நிலைநாட்டவும்.ஒரு மாபெரும் பக்குவம் உள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

அந்த ஆன்மா மனித தேகம் எடுத்து  இவ்வுலகிற்கு வருகை புரிகின்றது   அந்த ஆன்மாவிற்கு பெற்றோரால் இராமலிங்கம் என்ற பெயர் சூட்டப்படுகிறது.பின்னாளில் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று எல்லோராலும் போற்றப்படுபவராக.மரணத்தை வென்ற மகானாக. சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் முத்தேகசித்தி பெற்று அருட்பெருஞ்ஜோதி யாக வாழ்ந்து கொண்டு உள்ளவர் வள்ளலார்

அவருடைய வாழ்க்கை வரலாறுகளையும்.அவர் கடைபிடித்து வாழ்ந்து மக்களுக்கு போதித்த சுத்த சன்மார்க்க நன்னெறிக் கொள்கைகளையும். மக்கள் தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற பேராசையினால் இந்த சிறிய நூல் *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வள்ளலார் கண்ட மெய்ப்பொருளான எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வல்லபத்தாலும்.வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

 என் அறிவிற்கு உணர்த்திய வண்ணம்  உண்மைக் கருத்துக்களை.சன்மார்க்க சங்க மேடைகளிலும்.வாட்ஸ்அப்.பேஸ்புக்.மற்றும் யூடியூப்.வலைத்தளங்களில் மக்களின் பேராதரவுடன்  வெளியிட்டுள்ளேன்.. இந்நூலும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க. வெளியிடுகிறேன்.இந்நூலைப் படிக்கும் அன்புசார்ந்த.அருள்சார்ந்த சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இறைஅருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக.*வள்ளலாரின் அருள் மொழிகள்* என்ற தலைப்பிலும்.*வள்ளலார் காட்டிய வழிப்பாட்டு முறையும் ஒழுக்க நெறியும் *என்ற தலைப்பிலும். மலேசிய நாட்டில் நடைபெற்ற *வள்ளலார் அழைக்கின்றார்* என்ற மாநாட்டில் அருள் திருமதி டாக்டர் லலிதா அவர்களின் தலைமையில்
4-10-2014.ஆம் நாள் 5-10-2015 ஆம் நாள் வெளியிடப்பட்டது.அடுத்து  *சமாதி வற்புறுத்தல்* என்ற தலைப்பில் மூன்றாவது நூல் அருட்பெருஞ்ஜோதி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.

இப்போது *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்ற தலைப்பில் பிரான்ஸ் நாட்டு சன்மார்க்க அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் உதவியாலும் மற்றும்  மலேசிய நாட்டின். *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பேரவையின் நிர்வாகி அருள்திரு. இந்து பாபா அவர்களின் தலைமையில்*.
13-10- 2019 நடைபெறுகின்ற வள்ளலார் அவதார தினவிழா மாநாட்டில்  *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* நூல் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

தங்கள் கரங்களில் இந்நூல் கிடைத்து படித்து புரிந்து அறிந்து தெரிந்து கொண்டு. நிறைவு இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் .குறைபாடு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையில் .தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டும் கடைபிடித்துக்கொண்டும்.என்னை ஊக்கப்படுத்தியும்.வழிநடத்தியும் .  இந்நூல் வெளியிடுவதற்கு உற்ற துணையாக இருந்த எனது துணைவியார் *அருள்திருமதி அமுதா கதிர்வேல்* அவர்களுக்கும்.மற்றும் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூல் கணினி தட்டச்சு செய்து கொடுத்த திருமதி ரேவதி அவர்களுக்கும்.பிழை திருத்தம் செய்து கொடுத்த தினத்தந்தி நிருபர் திரு செல்வீன் அவர்களுக்கும்.இந்நூலை சிறந்த முறையில் அழகாக அச்சிட்டுத்தந்த ஈரோடு சகூராகிராபிக்ஸ் உரிமையாளர் திரு C.S ரமேஷ்குமார் அவர்களுக்கும்.அன்பான பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி அருட்பெருஞ்ஜோதி

இங்கனம் அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

வள்ளலாரின் தனிச் சிறப்பு !

வள்ளலாரின் தனிச் சிறப்பு !
*******************************

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாதனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரம்ம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கறப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை  ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர். வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

வேதம் ஆகம்ம் புராணம் .இதிகாசங்கள்.சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க்க் கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு.மலை.குகை.
குன்று களுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே ! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு பிடித்தவர் .

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சி பயிற்சி. வாசியோகம்.தியானம்.தவம் யோகம்.குண்டலனி. போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு.உருவ வழிபாடு செய்ய வேண்டாம்  என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை.ஆட்டம் .பாட்டம்.கொண்டாட்டம்  போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார்.தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே  கண்டவர்

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை  போக்குவற்காக.சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய  ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளயை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி.சமய.மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி.வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான ***திருஅருட்பா*** வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற. வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஎழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறு பட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது.

நன்றி :-ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 24 ஆகஸ்ட், 2019

திருடனுக்கும் கருணை காட்டிய வள்ளலார் !

*வள்ளலாரின் பொன்னாசை போனது எப்படி?*

வள்ளலார் ஒரு நாள் இரவு, திருவொற்றியூர் கோயிலில் உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்திருந்ததால் அவர் காதில் மாட்டியிருந்த கடுக்கன் மின்னிக் கொண்டிருந்தது.

அந்த வழியே வந்த ஒரு திருடனுக்கு அது “பளிச்” என்று தெரிந்தது. மெல்ல அவர் அருகில் அமர்ந்து அந்த கடுக்கனைக் கழற்ற ஆரம்பித்தான்.

இதனை வள்ளலார் அறிந்து கொண்டார். சத்தம் போடவோ, எதிர்ப்புக் காட்டவோ அவர் விரும்பவில்லை. அமைதியாக இருந்தார். மேலும் மனதிற்குள் அடுத்த கடுக்கனையும் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தூக்கத்தில் புரண்டு படுப்பது போல் பாவனை செய்து, மறுபக்கம் படுத்தார். திருடன் அடுத்த கடுக்கனையும் கழற்றி எடுத்துக் கொண்டான்.

இரு கடுக்கனையும் அவன் கழற்றிக் கொண்டாலும் அவருடைய முகத்தில் தெரிந்த ஒளி வட்டத்தைக் கண்டு அவனுடைய மனம் மாறியது.

அவன் வள்ளலாரை எழுப்பி, “சுவாமி என்னை மன்னித்து விடுங்கள்.என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டிதான் இந்தத் திருட்டைச் செய்தேன்.தங்கள் முகத்தைப் பார்த்ததும் என் மனம் மாறிவிட்டது” என்றான்.

வள்ளலார் அவனிடம், “நீ என்னிடம் மன்னிப்பு கேட்பதா? மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவைகளைத் துறந்த இத்துறவிக்கு எதற்கு இந்தப் பொன்னாசை? என்று எனக்கு ஞானம் போதித்தாய். அதனால் இக்கடுக்கன்களை நீயே எடுத்துக் கொள்” என்றார்.

இதைக் கேட்ட அந்தத் திருடன் திருந்தியதுடன் அவருடன் பணியாற்றத் தொடங்கினான்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அருள் அறிவே சிறந்த அறிவு !

அருள் அறிவு பெறுவதே சிறந்த அறிவு !

இன்று மனிதன் மருளான பற்பல மார்க்கங்களை  பின்பற்றி வழிமுறை தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளான்..அவர்களை திருத்த வேண்டும்.நல்வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக  அவர்களை கண்டித்து வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே !

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!

என்றும்

இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே. !

என்னும் பாடல் வரிகளிலே எளிய தமிழில் தெளிவாக விளக்கி உள்ளார்.

சுத்த சன்மார்க்கம் என்ற கொள்கைகளிலே பின்பற்றி வரும் அன்பர்கள்.சாதி.சமய.
மதக் கொள்கைகள் போல் சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தி வருகிறார்கள்.
இவர்களும் திருந்தாமல் மற்றவர்களையும் திருந்த வழிக்காட்டாமல் குழப்பிக் கொண்டே  உள்ளார்கள். 

உதாரணமாக வள்ளலார் தன் படத்தை வைத்து வழிபாடு செய்யாதீர்கள்.எல்லாம் செய்ய வல்ல நமது தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை யே வணங்குங்கள் வழிபடுங்கள் என்று சன்மார்க்கிகளுக்கு என்றே தனிப்பாடல் பதிவு செய்துள்ளார்.

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

இவ்வளவு ஆணையிட்டுச் சொல்லியும்.
வள்ளலாரின் பொய்யான கற்பனைப் படங்களை வண்ண வண்ணமாக தீட்டி வரைந்து போஸ்ட் போடுகிறார்கள்.
இவர்களை என்னவென்று சொல்வது.இவர்கள் எல்லாம் சுத்த  சன்மார்க்கிகளா.சமய மத சன்மார்க்கிகளா என்பது தெரியவில்லை....

ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இறைவனைத் தொடர்பு கொள்ள முக்கியத் தடையானது ஆதலால் அவைகள் வேண்டாம் என்று அழுத்தமாக விண்ணப்பம் வைத்துள்ளார்...

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,

 வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

என்று தினமும் சன்மார்க்க சங்கத்தில்  விண்ணப்பத்தை படித்து கொண்டே..ஆச்சார சங்கற்ப விகற்பங்களை  செய்து கொண்டே இருக்கிறோம்.இதுதான் சன்மார்க்க சங்க நிர்வாகிகள்.அன்பர்கள் செய்யும் உண்மை வழிபாடா என்பதை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும்...

புதியதாக சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து.சுத்த சன்மார்க்க உண்மை கொள்கைகளை.
அறிந்து கொள்ள வருபவர்களுக்கு எந்த வழியில் போதிப்பீர்கள்...என்பது தெரியவில்லை.

உற்சவம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியவர் வள்ளலார். வள்ளல்ஞான உற்சவம் என்றும்.தியான வகுப்புகள் என்றும்.பட்டிமன்றம் என்றும் சமயமதவாதிகள் செய்யும் காரியங்களையே சன்மார்க்கிகளும் செய்தால் சன்மார்க்கம்.சமய.மத. மூட சன்மார்க்க மாய் மாறிவிடும்...எச்சரிக்கையாய் செயல்பட வேண்டும்...

இதுபோல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைக்கு மாறாக தங்களின் மனநிலைக்குத் தகுந்தாற்போல்  நிறைய நடந்து கொண்டு உள்ளன.

எதோ ஒரு வழியில் மக்களிடம் கொண்டு செல்லலாம் என நினைத்தால் .அவை தவறான வழியாக மாறிவிடும்.

மக்களிடம் சுத்த சன்மார்க்கத்தை கொண்டு செல்ல இரண்டே வழிகள்தான் வள்ளலார் சொல்லி உள்ளார்..

ஜீவகாருண்யம் !
சத்விசாரம் !

இந்த இரண்டு வழிகளில் மட்டுமே செல்ல வேண்டும்.இதிலே எல்லாம் அடங்கிவிடுகின்றன. மக்கள் உண்மை அருள் அறிவை அறிந்து அருளைப் பெற வேண்டும்.மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான அருட் பாடல்களையும்.அருட்பெருஞ்ஜோதி அகவல்...மற்றும்
உரைநடைப் பகுதிகளையும் பதிப்பித்து நேர்வழியைக் காட்டி உள்ளார்.

அதற்கு அடையாளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
சத்திய தருமச்சாலை.
சத்திய ஞானசபை.
சித்திப்பெற்ற சித்திவளாகம் என்னும் நான்கு அமைப்புகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் அமைத்துள்ளார்..

வள்ளலார்...நான் சென்ற பாதை இவ்வளவு தான் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்..

இதைவிடுத்து நாம் நம் விருப்பம் போல் செய்வதால் எந்த பயனும் எக்காலத்தும் கண்டிப்பாக கிட்டாது..

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழுக்கு இறைத்து  கழித்தீர். என்ற நிலைமைதான் உண்டாகும்...

இப்படி நான் எழுதுவதால் சொல்வதால் யாரும் வருத்தப்பட வேண்டாம். தங்களை வள்ளலார் காட்டிய நேர் வழியில் செல்வதற்கும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆன்மநேய உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

அற்புதம் அற்புதமே அருள் அற்புதமே !

அற்புதம் அற்புதமே அருள் அற்புதமே !

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடல். உயிர்.அறிவு.ஆன்மா.
அருள் என ஐந்து ஆற்றல் மிகுந்த சக்திகள் இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது.

 பஞ்ச பூதங்களால் கட்டிக்கொண்ட உடம்பை சிவாயநம.நமசிவாய.
என்றும் சிவ பஞ்ஞாசர மந்திரத்தை கடவுள் மந்திரமாக நினைந்து.சமய மதங்கள் போற்றி வந்தார்கள்.

புறத்தில் உள்ள உடம்பு அழிந்துவிடும் என்றும் ஆன்மா மோட்சம் அடைந்து விடும் முக்தி அடைந்துவிடும் என்று நினைந்து.நிரந்தரமாக வாழமுடியாமல் மறைந்து போனார்கள்..

இவ்வுலகத்தில்  அவர்கள் துன்பங்களைத் தாங்கமுடியாமல் மீண்டும் பிறவாமை வேண்டும் என்று கேட்டார்கள்...

இறந்தாலும். மறைந்தாலும்.சமாதி அடைந்தாலும். மீண்டும் பிறப்பு உண்டு என்பதை எந்த ஞானிகளும் அறிந்து கொள்ள அருள் விளக்கம் தோன்ற வில்லை....

வள்ளலார் வந்துதான் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை பூரண அருளாலே அறிந்து கொண்டார்.

அதைவிட முக்கியமானது. உண்மையான இறைவன் யார் ? என்பதை தேடினார்.அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை கண்டு கொண்டார்..

அவர் இறவாமையும்  வேண்டும்.மீண்டும் பிறவாமையும் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டார்..

 அப்படி ஒரு அருள் வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை அறிந்து கொண்டார். வள்ளலார்

அதேபோல் அந்த தகுதியை பெற்றார் மரணத்தை வென்றார் அருள் தேகம் பெற்றார்.கடவுள் நிலை அறிந்து அதன் மயமானார்....

தான் மட்டும் அடைந்தால் போதும் என்று என்னாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என இறைவனிடம் கேட்டுக் கொண்டார்.

ஆண்டவர் வள்ளலார் எண்ணங்களைப் புரிந்து கொண்டு..நீ வந்த வழியை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்....

தான் வாழ்ந்த அருள் வாழ்க்கையை மக்களுக்குத் தெரிவிப்பதே ஆறாம் திருமுறையாகும்....

ஆறாம் திருமுறை முழுவதும் சாகாக்கலையும்.சாகாக்கல்வியையும்.மரணத்தை வெல்லும் வழியையும் போதிப்பதாகும்...

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் ஆடாமல்.அசையாமல்.வேறு ஒன்றை நாடாமல் ஆறாம் திருமுறையில் கண்டுள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

வள்ளலார் பாடல் !

 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.!

மேலும் வள்ளலார் நமக்காக இறைவனிடம் கேட்ட பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 21 ஆகஸ்ட், 2019

சன்மார்க்கத்தை மாற்றாதீர்கள் !

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
                   *மாற்றாதீர்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*இசையாமல்  போனவர் எல்லாரும் காண இறவாப் பெருவரம் நான் பெற்றுக் கொண்டேன்*
*வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு*
*நசையாதே என்னுடைய நண்பது வேண்டில் நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம் தன்னில்*
*அசையாமல் நின்று அங்கே........* அருட்காட்சி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலாக வள்ளலார் நமக்காக எழுதிய பெரிய அறிவுரை இது. சன்மார்க்கத்துக்கு இசையாமல் அதிலிருந்து கொண்டே அலைந்து திரிபவர்கட்காக சொல்லப்பட்ட வரி இது. பெருமானாரின் இளவயது முதல் ஏற்பட்ட அனுபவத்தை ஏற்காதவர்கட்கு நடுவில், அவர்கள் காணும்படியாக இறவா வரத்தை தான் பெற்றதையும், வசை(குற்றம்)யாதும் இல்லாத மேற்குதிசை உணர்த்தும் பொன்வண்ணம் (ஏமசித்தி-பொன்னுடம்பு) பெற்றதையும், நசைவு (ஈரம்) கொண்டவர்கள் என் அன்பு வேண்டில் *நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்று* தயவால் உன்னை உயர்த்திக்கொள் அவமானப்படாதே எனச் சொல்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
சன்மார்க்கம் என்பது பறவை மார்க்கம் என உரைநடையில் எழுதுகிறார். பறவை மார்க்கம் என்பது என்னவென்னில், மிருகங்களோ மனிதர்களோ ஒரே இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவை வளைந்தும், நெளிந்தும் செல்லும். தேய்ந்த பாதையில், குளம், குன்றுகள் இருந்தால் அவைகளைச் சுற்றிக் கொண்டும், சில இடங்களில் போக வேண்டிய இடம் மேற்கு திசையில் இருந்தாலும் கிழக்கிலும் தெற்கிலும் வடக்கிலும் கூட சுற்றிக்  கொண்டு போக நேரிடும். ஆனால் பறவைகளோ அடைய வேண்டிய இடத்தை ஒரு நேர்க்கோட்டில் விரைந்து, பறந்து அடைந்துவிடும். செல்ல வேண்டிய இடத்தை பார்த்துக் கொண்டே செல்லும். ஒரு கல் தூரத்திலுள்ள இடத்தை கடக்க பறவை ஒரு கல் தூரம் மட்டுமே பறந்து கடக்கும். ஆனால் மற்றவை மூன்று கற்கள் தூரம் கூட நடக்க வேண்டியிருக்கும். இது உண்மை!
==========================
ஆன்மிகத்தின் குறிக்கோளான இறைநிலையடைதல் என்பது - சன்மார்க்கத்தில் - ஜீவகாருண்யத்தின் துணை கொண்டு விரைந்து அடையலாம். மற்ற மார்க்கங்களில் நெடுந்தூரப் பயணம் (விரதம், ஜெபம், சரியை, கிரியை, இயமம், நியமம்) செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பறவைகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும் எப்படி துணை புரிந்தது யென்னில்...
நாம் உண்ணும் தானியங்கள், பழங்கள் போன்றவைகளை மனிதனுக்கு முன்னால் தோன்றிய பறவையினம் உணவாகக் கொண்டு - எவையெல்லாம் உயிர் வாழ்வதற்கு தகுதியான உணவோ அவற்றை தம் கூடுகட்குக் கொண்டு சென்றும், உண்டும், எச்சமிட்டும் மீண்டும் அத்தாவரங்கள் இப்பூமியில் முளைக்க வழி செய்தன. ஒவ்வாதவை - விஷத்தன்மை உள்ளவைகளை உண்ட பறவைகள் மரணமுற்று அத்தானியம், பழம் போன்றவைகளை முளைக்காமல் செய்து நம்மைக் காத்தன! ஒரு ஊருக்குள் செல்லும் போது நம்மை முதலில் வரவேற்பது அங்குள்ள பறவைகளின் சப்தமாகத்தான் இருக்கும். இப்படிப் பல குணங்களைக் கொண்ட  பறவைகட்கு இரண்டு சிறகுகளை இறைவன் படைத்தான். இதே நோக்கத்தில் வள்ளலாரும் பறவைமார்க்கமாம் சன்மார்க்கத்திற்கு சிறகுகள் ஜீவகாருண்யமும்,  சத்விசாரமுமே என்றார்! அதன் மூலம் நாம் பெற வேண்டியது ஆன்மநேயமும் ஆன்மலாபம் ஆகிய இரண்டு மட்டுமே என்கிறார். சன்மார்க்கத்தில் இவ்வளவே!
~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தப் பறவைகள் தத்தம் கூடுகளில் அப்படியே அமர்ந்திருந்தால் அதன் சிறகுகள் கூட மிகுந்த பாரமாகத் தெரியும். ஆனால் சிறகுகளை விரித்துப் பறக்கும் பறவைக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் இருக்கும். மனிதர்கட்கும், மிருகங்கட்கும் கைகள், கால்கள் போன்றவை வித்தியாசமான நீளம் வளைவுகளைக் கொண்டிருக்கும். ஆனால் பறவைகளின் சிறகுகள் இணையாக இருப்பதைப் போல ஜீவகாருண்யமும், சத்விசாரமும் இணையானதே. அப்படி இருக்கும் போது ஆங்காங்கே பட்டிமன்றம் என்ற ஒன்றை இறக்குமதி செய்து வள்ளலார் சொன்னதில் எது உயர்ந்தது என ஒரு கூட்டத்தார் பேச இன்னொரு சாரார் அதையே தாழ்ந்தது எனப் பேச எப்படி சன்மார்க்கத்தினர் அனுமதிக்கின்றனர்? *நீ யார்?* எனக் கேட்டால் பதில் சொல்ல எந்த மனிதனாலும் முடியாத போது வள்ளலார் எழுதிய அருட்பாவிலுள்ளதை உயர்த்தி ஒருவரும், தாழ்த்தி இன்னொருவரும் பேச எப்படி மனம் வருகிறது?  பல்வேறு மேடைகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இருப்பதால் நாமும் அதற்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவதா பட்டிமன்றம்? அவர்களில் எவருமே இறைவனை பற்றி பேசாதவர்கள். உங்களை வழிநடத்தும் பெருமானார் யாவரும் பெற்றிடாப் பேறு பெற்றவர். தன்னை வெளிக்காட்டாது மறைத்து இருந்தவர். அப்படியிருக்க அவர் வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நாம், பேசியமர்ந்தவுடன் இன்னொருவரைப் பார்த்து புன்னகையுடன் நான் வாதிட்டேன் மிக அற்புதமாயிருந்ததல்லவா எல்லோரும் கை தட்டினார்களே அது போதும் என்பர்!
==========================
உதாரணமாக:- வள்ளலார் எழுதியவைகளை இரண்டாக்கி - ஆறாம் திருமுறையே உயர்ந்தது- போன்ற தலைப்பில் வாதிட வழி செய்வதும், மேடையமைப்பதும், கூட்டம் கூட்டுவதும் நியாயமே என்பது பலரின் நினைப்பு. அப்படியானால் வள்ளலாரே பார்வையிட்டு ஒன்று முதல் நான்கு திருமுறைகளையும் பதிப்பித்தாரே அது ஏன்? அவரைவிட அதிகமாக தெரியும் என்பதாலா? இல்லை இவர்கள் வேறு IDEPLOGY யை சார்ந்தவர்கள் அவ்வப்போது பொழுதுபோக்குக்காக வந்து பேசுகிறார்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~
*பொருட்பதம் எல்லாம் புரிந்து மேலோங்கிய அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி (அகவல் 323)*
இவர்கள் ஐந்து திருமுறைகளிலுள்ள பதங்கட்கெல்லாம் பொருள் புரிந்து அருட்பதம் அடைந்து விட்டார்களா? ஐந்து திருமுறைகளைப் பிரித்து அதைப் படிக்காமல் கூடுகளில் அமர்ந்துள்ள பறவைகள் சிறகை விரித்து பறக்காமலேயே வானத்தை தொட நினைக்கின்றதா?
*எட்டிரண்டு அறிவித்து என்தனை ஏற்றி பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே (அகவல் 1132)* என்ற வரியில் கண்டபடி இவர்கட்கு எட்டிரண்டு அறிவிக்கப்பட்டு, இப்போது பட்டிமண்டபத்தில் வந்தமர்ந்துள்ளனரா? நான்கு திருமுறைகளை பதிப்பித்து ஆறு திருமுறைகளை எழுதி தீர்ப்பு வழங்கிய நீதியரசராம் வள்ளலார் புத்தகத்தை - கீழே சாதாரண எழுத்தர்கள் தீர்ப்பை விமர்சிப்பதும், மாற்றமுனைவதும் தவறு!
==========================
ஒன்றைப்புரிந்து கொண்டு செயல்பட்டால் நன்மை பயக்கும். பறவை ஒரு கிளையின் மீது அமரும்போது அந்தக்கிளை உடைந்து விழுந்து விட்டால் என்ன செய்வது என பயப்படாது. காரணம் அது கிளையை நம்பி அமரவில்லை. தன் சிறகை நம்பி அமர்கிறது. கிளை உடையும் போது அது பறந்துவிடும். ஆனால் அக்கிளையிலுள்ள அணில், குரங்கு போன்றவை கிளையுடன் கீழே விழும். பறவைகள் நானும் அணில் என்று நினைத்து கீழே விழுந்ததாக சரித்திரம் இல்லை.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*வாய்ஜாலம் காட்டும் பட்டிமன்றம் எனும் கிளையை நம்பி சன்மார்க்கம் இல்லை. ஜீவகாருண்யம், சத்விசாரம் என்னும் சிறகுகளை கொண்டதே சன்மார்க்கம். அதே மார்க்கத்தில் அசையாமல் நில்லுங்கள். மாற்றானைப் பார்த்து அதை மாற்றாதீர்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆக்கம்
*K.N.உமாபதி*
 ஆசிரியர், தீபநெறி
K.K.நகர், சென்னை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

சனி, 30 ஜூலை, 2016


ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !
உலக வரலாற்றில் ஜீவகாருண்யம் தான் கடவுள் வழிபாடு என்று சொன்னவர் வள்ளலார்.
ஜீவ காருண்யம் என்றால் என்றால் என்ன ? 
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு பசி.கொலை.தாகம்.பிணி.இச்சை.எளிமை.
பயம் என்பவைகளால் வரும் அபாயங்களை மனிதர்கள் நிவர்த்தி செய்வதே ஜீவகாருண்யம்.
ஜீவகாருண்யத்திற்கு முக்கியமான லட்சியம் எது என்னில் ?
ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும் இயற்கை விளக்கமாகிய அருள்  அறிவுக்றிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாய் அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாய் இருக்கின்றன என்றும் அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும்.ஆன்மவிளக்கம் மறைபடுவதால் அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தோன்றாமல்.மரணம் வந்து விடும்.

அந்த ஆன்மாக்களும் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்ற கருணையில் செய்வதே ஜீவகாருண்யம்.
ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?
ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சிஷ்யரை  ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அவரவர்  செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.
உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,''கடவுள் விளக்கத்தையும்'' ,''திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும்'' பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.
ஆதலால் அந்தப் புண்ணியர்கள் ''கடவுளைக் கண்டவர்கள்'' என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.

பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,... தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---
ஜீவ காருண்யத்தின் வல்லபம் யாது ? என்று அறிய வேண்டில் !
உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவதே அதன் பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.
ஜீவ காருண்யத்தின் சொரூப ரூப சுபாவம் வியாபகம் ''அருளைப் பெரும் வழியாகும் "' அதற்கு மேல் மோட்ச வீட்டின் திறவு கோல் ,ஜீவ காருண்யத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதற்கு மேல் இறைவன் மீது அசைக்க முடியாத அன்பு வேண்டும்.அந்த தெய்வம் சமய மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அல்ல என்பதை உண்மை அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த உண்மையான தெய்வம் வள்ளலார் காட்டிய ,அறிமுகப் படுத்திய  ''அருட்பெருஞ் ஜோதி '' ஆண்ட்வராகும்.
அந்த தெய்வம்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அந்த தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...அந்த தெய்வம் வெளியில் உள்ள ஆலயங்களிலோ.சர்சுகளிலோ.மசூதிகளிலோ வேறு எங்கும் இல்லை.

ஒவ்வோரு ஜீவ ஆன்மாக்களிலும்  சிரநடு சிற்றம்பலம் என்னும் சிற்சபையில் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டும் இயக்கிக் கொண்டும். விளங்குகின்ற தெய்வம் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 
கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது 
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் 
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் 
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின் 
செரித்திடு ''சிற்சபை'' நடத்தைத் தெரிந்து துதித்திடுமின் 
சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !
மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகின்றார் .ஒரே கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,அவர் சிற்சபை என்னும் ஆன்மாவில் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் அவரைத் தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கின்றார் ..
சுத்த சன்மார்க்கிகளும் ஆன்மநேய உடன் பிறப்புக்களும் உண்மையைப் புரிந்து அறிந்து தெரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தால்  எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும் ..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! 

காலையிலே நின்தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்..ஞாலமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து !

ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் இன்பத்தைக் கொடுத்து சாகா வரத்தையும் தந்தார் என்று தன் அனுபவத்தை வள்ளலார் வெளிப்படுத்துகின்றார்...
மேலும் ஒருபாடல் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே வொருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எல்லாம் தருமச்
சாலையிலே  ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத் தலையமர்த்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி  அணிந்தாடும்
மா நடத்தென் அரசே என் மாலை அணிந்தருளே !

என்னும் பாடலில் இம்மை இன்பவாழ்வு .மறுமை இன்பவாழ்வு.பேரின்பவாழ்வு என்னும் மூவகையான வாழ்க்கை முறைகளையும்..தருமச்சாலை வழியாக வந்த்தால் ஒரே நாளில் ஒரே பகலில் தந்து விட்டாய் என்றும்...நான் பாடும் அருள் பாமாலைகளை சிறந்த  மாலைகளாக ஏற்றுக் கொண்டாய் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார் வள்ளலார்..

நாமும் வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யம் என்னும் தருமச்சாலை வழியாக சென்று சத்விசாரம் செய்து இறைஅருளைப் பெற்று மரணத்தை வெல்வோம்.

இதுவே ஜீவகாருண்யத்தின் வல்லபமாகும்.

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

ஆன்மீக துறவிகளின் அடையாளம்.!

வெள்ளி, 21 மே, 2010


ஆன்மிக துறவிகளின் அடையாளம்





1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இனம் என்ற , வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.

2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.

3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க   வேண்டும்.

4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என எண்ண வேண்டும்.

5. ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை  எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.

6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.

7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.

8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.

9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.

10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.

11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.

12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம்.பணம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.

13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளைக் காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

14. தான் அணியும் ஆடை ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக் கூடாது.

15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.

16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.

17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.

18. எதிலும் பொது நோக்கம் தேவை.

19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.

21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.

22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக   ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).

மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

வள்ளல்பெருமான் காட்டிய நேர் வழி !

வள்ளல்பெருமான் காட்டிய நேர்வழி !

உத்தர ஞான சித்திபுரம் வடலூர் !

உத்தர ஞான சித்திபுரம் என்றும்.உத்தர ஞான சிதம்பரம்என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும்.

பார்வதிபுரம் என்றும். வடலூர் என்றும்உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !
திருஅருட்பா !

என்ற நான்கு மெய்ப்பொருள் கொள்கை விளக்கங்களை  இவ்வுலகிற்கு தந்துள்ளார்.

சுத்த சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து.திருஅருட்பாவில் உள்ளபடி படித்து உணர்ந்து தேர்ச்சி பெற்று..தருமச்சாலை வழியாக சென்று.சத்திய ஞானசபையில் உள்ள மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதற்காகவே இந் நான்கையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

இந்நான்கையும்  தடம் மாறாமல் கடைபிடித்து வாழ்ந்து
 பூரண அருள் பெற்று மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில்..ஸ்ரீமுக வருடம் தைத்திங்கள் 19 ஆம் நாள்.30-1-1874 நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

உயர்ந்த அறிவு பெற்ற மனிதகுலம் வள்ளலார் போல் வாழ்ந்து மரணத்தை வெல்லுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.......

உலகில் தோன்றிய ஞானிகள் சரியை.கிரியை.யோகம்.என்ற மூன்று படிகள்வரை சென்று சிலர் சுத்ததேகம் பெற்று.சமாதி நிலையில் மூழ்கி முக்தி நிலைப்பெற்று மரணம் அடைந்தார்கள்.சிலர் பிரணவதேகம் பெற்று.பஞ்சபூதங்களில் கலந்தார்கள்.

சுத்த தேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்திப்பெற்று .ஜீவதேகத்தை அருள் தேகமாக மாற்றி.பிறப்பு இறப்பு இல்லாமல்  இயங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இறைவனுடன் கலந்து கொண்டவர்தான் வள்ளலார்.எனவே தான் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் பெரும்புகழ் வாய்ந்த உயர்ந்த  பெயர் பெற்றார்.

ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்றும் நீ ஒருவன்தான் என் எண்ணப்படி வாழ்ந்து என்னுடன் கலந்து கொண்டதால் என்பிள்ளை ஆனதினாலே என்பணிகளை எல்லாம் நீயே செய் என்று ஐந்தொழில் செய்யும் வல்லபத்தை  கொடுத்து ஆட்சி பீடத்தில்  அமர வைத்து அழகு பார்த்துக் கொண்டுள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... 




ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வடலூர் சத்திய ஞானசபை விளக்கம் 1.

புதன், 23 அக்டோபர், 2013

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் --1 !



வடலூர் சத்திய ஞான சபை 

உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞான சிதம்பரம் என்றும்,
திருவருளால் ஆக்கப்பட்ட  சிறப்புப் பெயர்களும் ,பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில் ,இயற்கை உண்மை நிறைவாகிய ,திரு உருவைத் தரித்து ,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை,எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருளுகின்றவர் யார் ?

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

வடலூரில் வள்ளல் பெருமான் அவர்கள் தோற்றுவித்துள்ள, சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை'' என்று பெயர் வைத்துள்ளார் .

சபை என்பது எல்லோருக்கும் பொதுவானது.அங்கே சாதி, சமயம் ,மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாதது . ஞான சபையில், உண்மையானக் கடவுளை வரவழைத்து மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு தான்''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 'தோற்றுவித்து உள்ளார் .

சபையைத் தோற்றுவித்தது ஆண்டவர் கட்டளை. !

சத்திய ஞான சபையை கட்டுவதற்கு முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கின்றார்.அந்தக் கட்டளை யாதெனில் ;--

என்பாட்டுக் கெண்ணாததெண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் .

நான் பல தத்துவ தெய்வங்களை வணங்கியும், அந்த தெய்வங்கள் பெயரால் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப்  பாடியும் எழுதியும் வைத்துள்ளேன் .ஆனால் அவைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் அல்ல என்பதை அறிவால் அறிந்து கொண்டேன்.ஆதலால் உண்மையான இறைவன் யார் ?அவருடைய அருள் உருவத்தையும், ஆற்றலையும், செயல்களையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்,என்று இறைவனிடம் முறையிடுகின்றார் .

அதற்கு ஆண்டவர் சொல்லியதுதான் மேலே கண்ட பாடல் ...

உன்னுடைய தேடுதலைப் புரிந்து கொண்டேன் உன்னையும் உன்னுடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டேன் ,ஆனால் நீ ஒரு வேலை செய்யவேண்டும்.இந்த உலக மக்கள் பசி,பட்டினி, வறுமை போன்ற கொடுமைகளினால் துன்பப்டுகிரார்கள் ,அந்த மக்களின்  பசியைப் போக்கக் கூடிய தருமச் சாலையைத்  தோற்றுவித்து, அதன் வழியாகத்தான் வரவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கின்றார்

அப்படி தோற்றுவித்தால் நான் யார் ! என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன் என்னுடைய உண்மையான உருவத்தைக்  காட்டுகிறேன் என்று வள்ளல்பெருமானிடம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தெரிவிக்கின்றார்.

ஆண்டவர் ஆணையை ஏற்றுக் கொண்டு அவசர அவசரமாக தருமச்சாலையை கட்டி... 23-5-1967, ஆம் தேதி சத்திய தருமச்சாலையைத் தொடங்கி வைக்கின்றார்..

தொடங்கி வைத்த பின் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சுத்த சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

தருமச்சாலையைத் தோற்றுவித்த பின் எல்லாப் பயன்களையும்,தருமச் சாலையில்  ஒரே பகலில் அளித்து விட்டதாக பறை சாற்றுகின்றார்.

மேலும் ;--

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்---ஞாலமிசை
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து...

என்னும் பாடல்கள் வாயிலாகத் தெளிவுப் படுத்தி உள்ளார் .

இன்மை இன்பவாழ்வு,மறுமை இன்ப வாழ்வு,பேரின்ப வாழ்வு என்னும் முத்தேக சித்தியைப் பெற்றுக் கொண்டேன்,சாகா வரமும் பெற்றுக் கொண்டேன்.மேலும் அளவில்லாத இன்பத்தைப் பெற்றுக் கொண்டேன் .இனிமேல் என்னுடைய அருட்பாமாலை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு யார் மீதும்,எழுத மாட்டேன், பாட மாட்டேன்.பதிவு செய்ய மாட்டேன் .இனிமேல் என்னுடைய அருட் பாமாலைகள் எல்லாம்  ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முறையிடுகின்றார் .

வள்ளல்பெருமான் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .நீ எண்ணியபடி விளையாடி மகிழ்க என்று... தன்னுடைய உரிமைகள் அனைத்தும் வழங்கி மகிழ்கின்றார் ..

உத்தர ஞான சித்தி மாபுரத்தின்
ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம்
ஒளியைக் கண்டு கொண்டேனே .

என்றும் ;--சத்திய ஞான சபை என்னுட் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் .

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

மருள் எலாம் தவிர்த்து வரம் எலாங் கொடுத்தே
அருள் அமுதம் அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழி நின் பேரருள் வாழி நின் பெருஞ் சீர்
ஆழி யொன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி !

என்னும் பலப்பாடலகளில் தெரியப் படுத்தி உள்ளார் .

அருட் பெருஞ்ஜோதியைக் கண்டு கொண்டேன் ,அவர் ஒளியாக ஒலியாக உள்ளார் .அவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்த போகிறேன் .அதற்காக வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை''தோற்றுவிக்கப் போகின்றேன் அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி வழங்கிவிட்டார் என்பதை தெரியப்படுத்தி சத்திய ஞானசபையை தோற்றுவிக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள் .      

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்.

நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் .

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,

எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்

தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய
சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,

நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.

ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.

என்று வள்ளல்பெருமான் ஞான சபையைக் தோற்றுவிக்கும் முன் ,அருட்பெருஞ் ஆண்டவர் யார் ? என்பதையும்.அவர் எப்படி செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதையும்,,ஆண்டவரே ஞானசபைக்குள் வந்து அமர்ந்து செயல்படுவார் என்பதையும்,மேலே கண்ட ஞான சபை விளம்பரம் என்னும் தலைப்பில் மக்களுக்கு அறிவித்து விட்டுத்தான் ஞான சபையைத் தோற்று விக்கின்றார்.      

ஞான சபையின் அமைப்பு !

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும் .

அதனால்தான் முதன் முதலில் வடலூரில் 23--5--1867,ஆம் ஆண்டில் சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்து உள்ளார் .

ஜீவகாருண்யம் என்னும் தருமச்சாலையின் வழியாகத்தான் உண்மையான இறைவனைக் காண முடியும் என்ற நோக்கத்தில் ,தருமச்சாலையின் அருகாமையில் வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை
''25--1--1872,ஆம் ஆண்டு தொடங்கி வைத்துள்ளார் .

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்ப்ருஞ் ஜோதி .            

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்

வள்ளல்பெருமான் அவர்கள், தன்னுள் கண்ட காட்சியை வரைபடம் வரைந்து சத்திய ஞான சபையைத் தோற்று விக்கின்றார்..உலக அதிசயங்களிலே வடலூரில் உள்ள சத்திய ஞானசபை முதன்மையானதாகும் .இதை அரசாங்கமும்,உலக மக்களும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனைத் தரும் விஷயமாகும்.. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.                                                                                                                                                                                                            உடம்பின் தலைபகுதி !                                                                                                                                                                      
உயிர் உள்ள ஒவ்வொரு ஜீவன்களின் உடம்பே உண்மையான தெய்வம் குடிகொண்டு இருக்கும் இடமாகும்,அதுவே கடவுள் விளங்கும் ஆலயமாகும்..அதிலும் முக்கியமாக ''இயற்கை விளக்கமாக'' மனித உடல்களின் தலைப் பாகத்தில்,உச்சிக்கும் கீழே, உள் நாக்கிற்கும் மேலே சிரசின் நடுவில் துரிய பீடத்தில் ஆன்மா என்னும் ஒளி,  உள் ஒளியாக இருந்து உயிர் மற்றும் மனம் முதலான அந்தக் கரணத்தின் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து  இயங்கிக் கொண்டு இருப்பது அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.அதுவே ஆன்மாவாகும்.

எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தைப் பெற்றவர்கள் மட்டுமே ,இறைவனின் உண்மையான அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வல்லமை பெற்றவர்கள். மனிதர்களுக்கு மட்டுமே அறிவு விளக்கம்,ஆன்ம விளக்கம்,அருள் விளக்கம் பெறுவதற்குண்டான உடல் அமைப்பை இறைவன் கொடுத்துள்ளார். ஆதலால் மனிதர்கள் மட்டும் உயர்ந்த அறிவு பெற்ற பிறப்பு உள்ளவர்களாகும்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை சுட்டிக் காட்ட தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் .கடவுள் ஒருவரே என்பதை சுட்டிக் காட்ட ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் .கடவுளின் அருளைப் பெருவதற்கு இரண்டு வழிகளை வள்ளல்பெருமான் காட்டி உள்ளார்கள் அதாவது --சத் விசாரம் ,பரோபகாரம்,..

சத்விசாரம் என்பது உண்மையான இறைவன் யார் என்பதையும் உயிர்கள் தோன்றும் விதத்தையும் ,அண்டபிண்ட ரகசியங்களையும் அறிந்து கொள்ளும் அறிவைச்சார்ந்த்து,...பரோபகாரம் என்பது உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவது இதுவே கடவுள் வழிபாடாகும் .  

.மனித ஆன்ம உள் ஒளியின் அமைப்பே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாக'' வடலூரில் வள்ளலார் எண்கோண வடிவமாக அமைத்துள்ளார்கள்.

மனிதனின் உடம்பு எண்சான்  அமைப்பைக் கொண்டது என்பதை உணர்த்தும் வகையிலும் உலகம் எட்டுத் திக்குகளைக் கொண்டது என்பதையும் தெளிவுப் படுத்தி  எண்கோண வடிவில் ''சத்திய ஞான சபை'' அமைக்கப் பட்டதாகும்.அதற்கு கடவுள் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான் .

உலகம் எட்டு திக்குகளைக் கொண்டது .எட்டுத் திக்கு மக்களும் வந்து உண்மையானக் கடவுளை வடலூரில் காண வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான நம்பிக்கையாகும்

உண்மையான இறைவன்  ''ஒளி வடிவமாக'' உள்ளார் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொண்டு வடலூர் வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய முதல் கொள்கையாகும் அதுவே அடிப்படை உண்மையாகும் அதுவே மக்கள் அறிந்து கொள்ளும் செய்திகளுமாகும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியர் ! என்பது வள்ளலாரின் முதல் கட்டளையாகும்.

சத்திய ஞான சபை !

சத்திய ஞான சபை செப்புத் (செம்பு )தகடுகளால் மூடப்பட்ட கூரையும், தங்கமுலாம பூசிய உச்சித் தூபியும் வைத்து கட்டப்பட்டதாகும். ஞானசபையின் கட்டிட உருவ அமைப்பு எண்கோண வடிவமானது இதைச்சுற்றி எண்கோண அமைப்பில் வேலிபோல் சிறு சிறு தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தூண்கள் நீளமான இரும்பிச் சங்கிலியால் இணைக்கப்பட்டு உள்ளன அதைத் தாண்டி உள்ளே மக்கள் செல்லக் கூடாது என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.அந்த சங்கிலி வளையம் ஞானசபையை சுற்றி இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கருத்தாகும்.

வழிபாடு செய்கிறவர்கள் சங்கிலி தூண்களுக்கு வெளியே நின்றுதான் வழிபாடு செய்து வணங்க வேண்டும்.யாதொரு காரியம் குறித்தும் மக்கள் உள்ளே செல்லக் கூடாது.

இந்த சங்கிலியை ஒருசிலர்,மனிதனின்  மூச்சுக் காற்றின் கணக்கு என்றும்  அந்த கணக்கை வைத்து சங்கிலியை பின்னப்பட்டது என்று கூறுகின்றனர் .அவை ஏற்றுக் கொள்ள முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்கள் பணிகள் ,செயல்கள்,தொழில்கள்,நடத்தைகள் வழியாக அவரவர் சுவாசிக்கும் காற்று முறையில் கூடுதலும் குறைதலும் மாறுபடுகின்றன.மூச்சுக் காற்றுக்கும் அந்த சங்கிலிக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை.அப்படி இருந்தால் வள்ளலாரே அதன் விளக்கத்தை சொல்லி இருப்பார் .

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான இரும்புச் சங்கிலிப் போன்ற மாயாத்  திரைதான் மாயா சக்தியாகும்.மாயா திரையாகும் .என்பதை சுட்டிக் காட்ட இரும்பு சங்கிலியை ஞாசபையைச் சுற்று அடையாளமாக அமைத்து உள்ளார் .ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறியவர்கள் மட்டுமே உள்ளே போகத் தகுதி உடையவர்கள்.மேலும் புலால் மறுத்தவர்கள் மட்டுமே உள்ளே போக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

புலால் மறுக்காதவர்கள் இரும்பு சங்கிலியின் வெளியில் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது வள்ளல்பெருமான் இட்ட அன்பு கட்டளையாகும்.

தற்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இருக்கிறது .

ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து ஒளி வடிவமாக மக்களுக்கு காட்சித் தருவார் என்பதை உணர்த்தும் வகையில் சத்திய ஞானசபையின் அகம் என்னும் மத்தியில் ''ஞான சிங்காதன பீடம் '' என்னும் ஒரு மேடை உள்ளது, அந்த மேடையின் மேல் கண்ணாடிக் கூண்டுக்குள் அணையா விளக்கை வைத்துள்ளார்கள் .

வள்ளலார் ஞானசபையின் விளக்கப் பத்திரிகையில் ஓர் முக்கிய செய்தியை தெரிவித்து உள்ளார் .

இன்று தொடங்கி ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும்,ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் ,பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம்.

தகரக்கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேகசுத்தி,கரணசுத்தி உடையவர்களாய் '''திருவாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,

''உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும் ''.
என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

இந்த கட்டளைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது..வள்ளலார் சபையை அமைத்து ஜோதி தரிசனம் காட்டவில்லை.என்பது தெளிவாகிறது.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ,நான் சொல்லிய வண்ணம் சபையை கவனித்து செயல்படுங்கள் என்று ஆணையிடுகிறார்.அருட்பெருஞ் சித்தி எப்போது வெளிப்படும் என்பதை வள்ளலார் அப்போது சொல்லவில்லை..

அடுத்து சபையின் மத்தியில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.உட்புற வாயில்களுக்கு சமீபங்களில் வைக்க வேண்டும் என்கிறார் .உட்புற வாயில்கள் சமீபங்கள் என்பது கதவுகளின் உட்புறத்தின் ஓரமாக வைக்கச் சொல்லுகிறார்.

இங்கே சபையின் உட்புற வாயில்கள் என்பதால் எட்டு கதவுகள் உள்ளன என்பது தெளிவாகின்றன.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சித்திவெளிப்படும் வரைக்கும் என்பதால், ஆண்டவர் வருகின்ற வரையில் அந்த இடம் இருள் இல்லாமல் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதாகும்,எரியும் விளக்கில் கண்களுக்கு தெரியாத பூச்சிகள் வந்து உயிர் இழ்ந்துவிடக்கூடாது என்பதால், ஜீவகாருண்ய அடிப்படையில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

சபையின் விளக்கப் பத்திரிகையின் விளக்கத்தைப் உற்று கவனித்தால் வள்ளல் பெருமான் ஜோதி தரிசனம் காட்டவில்லை என்பதும் ,எழுதிரைகளை வள்ளல்பெருமான சபையில் தொங்க விடவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதால் .வள்ளல்பெருமான் .இறைவன் கட்டளைப்படி சித்திவளாகத் திருமாளிகையில் சென்று கதவை தாளிட்டுக் கொள்ளாமல் ''ஞானசபைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு இருக்க வேண்டும்'' அதைத்தான்சித்தி வெளிப்படும் வரைக்கும் என்று பதிவு செய்கிறார் . சபையை வள்ளல்பெருமான் சொல்லியபடி,அன்பர்கள் முறையாக, கவனமாக செயல்படுத்த வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

வள்ளல்பெருமான சொல்லிய வண்ணம் தொண்டர்கள் செயல் படாததால் கோபத்துடன் சபையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .தன்னுடைய சீடர்களுக்கு வள்ளல்பெருமான் சொல்லியது ..இதுநாள் வரையில் என்னுடன் பழகியும் என்னுடன் இருந்தும் சுத்த சன்மார்க்கம் இன்னதென்று புரிந்து கொள்ளவில்லையே என்று சொல்லி வேதனைப்படுகிறார், இதுதான் சபையில் நடந்த செய்திகளாகும்.

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும்,...ஏழு திரைகளை வள்ளல்பெருமான் தொங்கவிட்டார் என்பதும்....திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும் ...ஏற்றுக் கொள்ளமுடியாது, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரை மறைப்பு எல்லாம் கிடையாது.என்பதையும் நாம் உணர வேண்டும்.

மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருப்பதுதான் அஞ்ஞானம் என்கிற  அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.இதை புரிந்து கொள்ளாமல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரைப்போடுவது என்ன நியாயம் ? இவைகள் அனைத்தும் சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும் ,என்பதை.சுத்த சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.மேலும் சபையின் விளக்கத்தை பின்னாடிப் பார்ப்போம் .  

தற்போது ஞானசபைக்குள் சுத்தம் செயவதற்கும்,தீபம் ஏற்றுவதற்கும் 72,வயதுக்கு மேற்பட்டவர்களும்,12,வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும் .

ஞானசபையில், சமய மத கோவில்கள் போல் அபிஷேகம்,ஆராதனை,அர்ச்சனை,மேளதாளம்,பிரசாதம்,அகல் விளக்கு,சூடம்,விபூதி,குங்குமம்,போன்ற எந்த ஆச்சார சங்கற்ப செய்கைகளும் செய்யக்கூடாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கைகளாகும்.

எட்டுக் கதவுகள் !

எண்கோண வடிவமாக கட்டப்பட்டுள்ள ஞான சபையில் எட்டுக் கதவுகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.எட்டுக் கதவுகளுக்கும் எட்டு அம்பலம்.என்று பெயர் வைத்துள்ளார் .எட்டுக் கதவுகளும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

ஆதாரமான பாடல் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

திருவார் பொன்னம்பலத்தே செழிக்குங் குஞ்சித பாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்....வருவார்

சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில் நடம் இடத் துணிந்தீரே அங்கே
இதைவிடப் பெருவெளி இருக்கு என்றால் இங்கே ....வருவார்

இடுக்கு இல்லாமல் இருக்க இடம் உண்டு நடஞ் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டைய
ஒதுக்கில் இருப்பது என்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்
உண்மையிது வஞசமல்ல உன்மேல் ஆணை என்று சொன்னால் ....வருவார்

மெல்லியல் சிவகாம வல்லி யுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை யோடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
இங்கும் அங்கும் மடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

என்னும் பாடல் வாயிலாக, வடலூர் பெருவெளியில்,எண்கோண வடிவமாக தோற்றுவிக்கப் பட்டுள்ள  சத்திய ஞான சபைக்கு வந்து அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் . இதவிட பேருண்மை எதுவேண்டும் .

வள்ளல்பெருமான் அன்பால் அருளால் ஈர்க்கப்பட்ட வடலூர் பார்வதி புரத்து மக்கள் எண்பது காணி இடம் கொடுத்துள்ளார்கள் அதன் மத்தியிலே ஞான சபையை தோற்றுவித்து உள்ளார் ..எதற்காக அவ்வளவு இடம் என்றால் உலகில் உள்ள எட்டு திக்கு மக்களும் வந்து, எந்த திக்கில், எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தெரியவேண்டும் என்பதால், எட்டு அம்பலம் என்னும் எட்டுக் கதவுகள் வைத்து ஞானசபையைக் கட்டி வைத்துள்ளார் .

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் ? ..என்றும்,
அடங்கு நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே தொடங்கு நாள் நல்லது அன்றோ!  என்றும் ...தடையாது இல்லாத தலைவனைக் காணற்கே தடையாது இல்லை கண்டாய் ! ..என்றும், ஆலயக் கதவை அடைத்து வைக்காதே ! என்றும் திருஅருட்பாவில் பல இடங்களில் பதிவு செய்துள்ளார் .

சத்திய ஞான சபையில் ,மாதப்பூசம்  தரிசனமோ,தைப்பூசம்  தரிசனமோ,தினமும் மதியம்,இரவு போன்ற தரிசனமோ காட்டச் சொல்லவில்லை.கடவுளைக் காண்பதற்கு நேரம்,காலம்,நட்சத்திரம்,சாத்திரம்  போன்ற, சடங்கு முறைகள் தேவை இல்லை என்பது வள்ளலார் வகுத்த தந்த வழிமுறை களாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் காண வேண்டுமானால் சத்திய ஞான சபையில் இடைவிடாது தினசரி ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதும்,காட்ட வேண்டும் என்பதும் வள்ளலாரின் விருப்பமாகும்.அதை விடுத்து ,சமய,மதம் சாதிக் கோவில்கள் போல் காலம்,நேரம்,பார்த்து ஜோதி தரிசனம் காண்பிக்க கூடாது.அவை இறைவனுக்கு ஏற்புடையது அன்று என்பதை தெளிவு படுத்தி உள்ளார் .

திருஅருட்பாவின் உண்மை தெரிந்த சன்மார்க்க அன்பர்களின் விருப்பமும் ,பொது நோக்கமுள்ள லட்சகணக்கான மக்களின் விருப்பமும் இதுவேயாகும்  தினசரி இறைவனை எந்நேரமும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் காண வேண்டும்  என்பது தான் அனைவரின் கோரிக்கையாகும்.

எனவே சத்திய ஞான சபையில் தினசரி ஜோதி தரிசன வழிபாடு எந்நேரமும் நடைபெறுவதுதான் உண்மையான வழிப்பாட்டு முறையாகும். உடனே அதற்கு உண்டான வழிமுறைகளை  ஏற்பாடு செய்ய வேண்டும்.

சத்திய ஞான சபையில் ஜோதி அணையாமல் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஞான சபையில் சன்மார்க்க கொடி ஓங்கி உயர்ந்து பறக்க வேண்டும்.

இது தொடர்ந்து நடைபெறும் வரைக்கும் சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

வள்ளல் பெருமானின் விருப்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்கள் தினந்தோறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு வகை செய்து கொடுங்கள் என்று, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக ஆட்சிக்கும்,தமிழக முதல்வருக்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.வள்ளல்பெருமான கட்டளைப்படி சட்டப்படி வழிபாட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் .

வடலூர் உலகின் புண்ணிய தளமாகவும் ,சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இல்லாமல் மக்கள் வந்து வழிபாடு செய்து வணங்கும் ,உண்மைக் கடவுள் விளங்கும் இடமாக, உலகின் அதிசயத்தில் ஒன்றாக, தமிழக அரசு அறிவித்து அதற்குண்டான பணிகளைத் தொடங்க வேண்டும்.மேலும் சுற்றுலா ஆன்மீக அதிசிய ஸ்தலமாக அறிவிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்கள் !

சித்தி புரத்தே தினந்தோறும் சீர் கொள அருள்
சித்திவிழா நீடித்து தழைத்து ஒங்க --எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உருக மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து .

உலகம் எல்லாம் தொழ உற்றது எனக்கு உண்மை யொண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே .

காணாத காட்சிகள் காட்டு விக்கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க்கு எய்தரிதானது வெஞ்சினத்தார்
கோணாத நெஞ்சிற் குலாவி நிற்கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே !

என்று பல பாடல்களில் வள்ளலார் சத்திய ஞானசபையைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

உலகுக்கு ஒரு புதிய ஆன்மீக விழிப்பு உணர்வை தரக்கூடிய உண்மையான ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை வலியுறுத்தும்,சாதி,சமயம்,மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாத ''உலகின் பொது வழிபாட்டுச் சபைதான் '' வடலூரில் உள்ள சத்திய ஞான சபையாகும்.

நம் உடம்பின் தலை பாகத்தின் உள்ளிருக்கும் ஆன்ம ஒளியை ,அருட்பெருஞ் ஜோதியைப் புறத்தில் அருட்பெருஞ்ஜோதியாகக் சுட்டிக் காட்டி இருக்கும் ஆன்ம ஒளி தான் சத்திய ஞான சபையாகும் .அங்கு இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஒளி வடிவாகக் காட்சி தரும் திருவிளக்குத் தான், சத்திய ஞான சபையில் ஒளிர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

எல்லா உலக மக்களும், எந்த நேரத்திலும் வந்து வழிபடக் கூடிய அருள் ஜோதி வழிப்பாட்டுத் தளம் தான் சத்திய ஞான சபையாகும் .

இந்த உண்மையை மறைத்து சத்திய ஞான சபையை,சில நாட்கள் தவிர மற்றைய நாட்களில் ஆண்டுதோறும் பூட்டி வைக்க எண்ணுவது உண்மையான இறை உணர்வை மறைக்கும் நோக்கமாகும் .

இதை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் உணர வேண்டும்.வெளிநாட்டில் இருந்தோ உள் நாட்டில் இருந்தோ ,வடலுருக்கு வருபவர்களை அழைத்துக் கொண்டுபோனால் அங்கு சத்திய ஞான சபையை  அடைத்து வைத்து இருந்தால் அவர்களுக்கு எப்படி அருட்பெருஞ் ஜோதியைக் காண்பிப்பது .

வடலூருக்கு வள்ளலார் வைத்த பெயர்''ஞான சித்திபுரம்'' என்பதாகும்.அதாவது சித்தி என்னும் அருள் நிறைந்த இடமாகும் .அருள் நிறைந்த இடம் அடைக்கப்பட்டு இருக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும்.

சாதி,சமயம்,மதம்,போன்ற பற்று உள்ளவர்கள் வடலூர் வந்து ஜோதி தரிசனத்தை கண்டு களிக்கும் போது,தங்களுக்குள் இருக்கும் சாதி,சமய ,மதப் பற்றுகள் மறைந்து உண்மையான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

இப்படி உலகில் உள்ள ஒவ்வொரு மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு களித்து பின் ....உலக மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் உலகமே தூய்மையாகும்,உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும்  என்பது வள்ளலாரின் எண்ணமும்,கொள்கை களுமாகும்

வடலூரில் சத்திய ஞான சபையில் --25--1--1872,ஆம் ஆண்டு ,திறப்பு விழா செய்து ,ஆண்டவர் அருள் சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சபையைக் காத்து வர வேண்டும் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார் .வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் செயல்படவில்லை என்பது தெளிவாகின்றது .

வள்ளலார் சொல்லியபடி வழிப்பாட்டு முறைகள் நடைபெறாததால் சபையை பூட்டி அதன் சாவியை எடுத்துக் கொண்டு ,சித்திவளாகம்,என்னும் மேட்டுக் குப்பத்திற்கு சென்று விட்டார் .இதுவே உண்மையாகும் .

வள்ளலார் சித்தி பெறுகின்ற வரையில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படவில்லை.

வள்ளலார் சித்தி பெற்ற பின்பு சில மாதங்கள் கழித்து .சபாபதி குருக்களின் சூழ்ச்சியால், சமயவாதிகளின் துணையுடன் சமய,மதம் போன்ற  சடங்குகளுடன் ஏழு திரைகளை வைத்து ,தினமும் மதியம்,இரவும்... மாதப்பூசம்,தைப்பூசம் என்னும் சமய வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்துள்ளார்கள்.. அது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு வந்தது.

வள்ளலார் சித்திப் பெற்றபின் சபாபதி குருக்கள் ஞான சபையைத் திறந்து வழிபாட்டு முறைகளை அவர் விருப்பத்திற்கு செயல்படுத்தி விட்டார் .அவரும் இல்லை என்றால் அதுவும் நடைப்பெற்று இருக்காது.அதுவும் இறைவன் சம்மதமே,அதுவும் காலத்தின் கட்டாயமாகும்.கெட்டதில் ஒரு நல்லதாகும்.

சபாபதியின் குடும்பத்தின் வாரிசுகளை வெளியேற்ற,சுத்த சன்மார்க்க அன்பர்கள் பலர் பல போராட்டங்கள் செய்தும் பலப்பல முயற்சி செய்தும் வெற்றிபெற முடிய வில்லை.சாபாபதி குருக்களின் வாரிசுகள் தொடர்ந்து சத்திய ஞான சபையை கைப்பற்றி சமய,மத  சடங்குகளுடன் வழிபாட்டு முறைகளை செய்து வந்தனர்.

எப்படியோ திருவருள் சம்மதத்தால்,பல சன்மார்க்க அன்பர்கள் முயற்சியால் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளரின் உதவியாலும் தமிழக அரசின் உதவியாலும் ,பழைய குருக்களின் குடும்பத்தை, சட்டப்படி நீக்கி விட்டு சடங்குகள் இல்லாத ஜோதி தரிசனம்,பழையப்படி காட்டப்பட்டு வருகிறது.

இன்னும் வள்ளலார் கட்டளைப்படி ,வடலூர் சத்திய தருமச்சாலையும்,சத்திய ஞான சபையும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும். மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகமும் முழுமையாக நடைபெறவில்லை.

இனிமேலாவது இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளர்களும்,தமிழக அரசும் முன்வந்து,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களை, வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளபடி,உண்மை மாறாமல் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது சுத்த சன்மார்க்கிகளின் வேண்டு கோளாகும்.

இதற்கு தமிழக அரசு கண்டிப்பாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.சுத்த சன்மார்க்கிகள் விடா முயற்சி செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

உலக அரங்கில் தமிழ் நாடு பேசப்படும் நிலை உயர வேண்டுமானால் ,வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளும்,ஜீவ காருண்ய ஒழுக்க  நெறிகளும்,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமைப்பாடும்...உலகப்  பொது நெறியாகக் போற்றப்படும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்'' அதன் வழியாக அவர் காட்டிய கொள்கைகளும் வள்ளலார் விதைத்த விதைகளாகும்.

அவர் விதைத்த பகுத்தறிவு ஆன்மீக விதையை உலகம் முழுவதும் விதைக்க வேண்டும்.இதை உணர்வது  உயர்த்துவது,வளர்த்துவது,உலகம் முழுவதும் பரப்புவது, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க உறுப்பினர்களின் கடமையாகும் .வள்ளலார் காட்டிய உண்மை நெறியை தமிழக அரசின் கவனத்திற்குப் கொண்டு போவதும் சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.மேலும் இவற்றை ஏற்றுக் கொண்டு நிறை வேற்றுவது தமிழக அரசின் முக்கிய கடமையாகும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வளர்ப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை காப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைக் காண்போம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாக ஞான சித்தி புறத்திற்கு செல்வோம்!
ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையை கடைபிடிப்போம் !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகிற்கு காண்பிப்போம்!
உலகம் எல்லாம் சமரசத்தை காண்போம் !.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பாடுபடுவோம்.!

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
வாழ்க உலக உயிர்கள் !
வளர்க சுத்த சன்மார்க்க நெறி

வடலூர் சத்திய ஞானசபை விளக்கம்.2

வெள்ளி, 18 ஜூலை, 2014

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் !...2,..

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம்...2,.

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள் .உலகில் உள்ள மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டும் என்ற பெருங் கருணையால் வடலூரில்
23--5--1867,ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11,ஆம் நாள் தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார்கள் .

அதன் பின்பு ,உலக மக்கள் அனைவரும் உண்மையான இறைவனைக் காண வேண்டுமானால், உண்மையான இறை நிலையை மனிதன்  அடைய வேண்டுமானால் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் '' வாயிலாக அருட் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களை மக்கள் அனைவரும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்னும் திரு குறிப்பை வள்ளல் பெருமானின் ஆன்மாவின் வழியாக, ஆண்டவர் அறிவிக்கிறார்.

அந்த ஆண்டவர் யார் ? என்பதையும் அந்த ஒழுக்க நெறிகள் என்ன ? என்பதையும் ''திருவருண் மெய்மொழி ''என்னும் தலைப்பில் மக்களுக்கு எழுத்து மூலமாக தெளிவு படுத்துகிறார்.

தருமச்சாலையை  ஆரம்பிக்கும் முன்பு ''சமரச வேத சன்மார்க்க சங்கம்'' என்னும் தலைப்பில் சங்கம் அமைக்கிறார் ,தருமச்சாலை ஆரம்பித்த பிறகு ஆண்டவர் அறிவித்த வண்ணம் ''ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம்'' என்று பெயர் மாற்றம் செய்கிறார் .அதன்பின் சத்திய ஞானசபைத் தோற்று வித்தப் பின்பு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் செய்கின்றார் .

ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறித்து ''திருவருண் மெய்மொழி ''  என்னும் உண்மையை, தனித் தலைப்பில் உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .இவை யாவும் சுத்த சன்மார்க்க கொளகைகளை கடைபிடிப்பவர்களும் ,உலக ஆன்மீக சிந்தனை யாளர்களும் ,மற்றும் பகுத்தறிவு உள்ளவர்களும்,அறிவியல் வல்லுனர்களும்,விஞ்ஞானிகளும் ,ஆராய்ச்சியாளர்களும் மற்றும் பொது மக்களும்,ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் அரசியல் வாதிகளும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளாகும்.

திருவருண் மெய்மொழி !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு முகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ?

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும் ,

எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருட்  சத்தியால் ,

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீங்குவித்தல்,....பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' என்றும்

அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் ,(அருள் வெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.என்ற உண்மையை வள்ளல் பெருமான் வெளிப்படுத்துகிறார்.

அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்வது எப்படி ?

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று ( மரணம் அடையாத உடம்பாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வு  ) வாழாமல் பல்வேறு கற்பனைகளால்,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,  பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம் போகின்றோம்,

ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து ,இறந்து இறந்து, வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில்,பெருஞ் சுகத்தையும்,,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருஉள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ''ஞானசபையை'' சித்திவளாகம் என்னும் இச் சன்னிதானத்திற்கு அடுத்த ,

உத்தர ஞான சிதம்பரம், அல்லது, ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கபடாத நெடுங்காலம் அற்புத ''சித்திகள்''
எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருள் திருவிளையாடல் செய்து அருள்கின்றாம்

என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந் தயவுடைய நமது கருணையாங் கடலாராகிய அருமைத் தந்தையார்
''அருட்பிரகாச வள்ளலார் ''முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்திப்பட வெளிப்படுத்தி ,

அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் ( அருள் ஒளி }  அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்து அருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனியுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு ,''அருள் அரசாட்சித் திருமுடி ''பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் ,ஈரேழு பதினான்கு உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,

இஃது என்னே ! இஃது என்னே ! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாய் இருத்தலினால் அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி எதிர் பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற் குறித்த அதிசிய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,

சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின்{ஒழுக்கம் } பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம் ,பிரணவதேகம், ஞான தேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் ,

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி,ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியம் ஆதலில் அவ் வொழுக்கங்களை இவை என உணரவேண்டுவது அவசியமாகும். என்பதை வெளிப்படுத்துகிறார் .

''சத்திய ஞான சபை'' இறைவன் அறிவித்த வண்ணம் அமைத்தல் !

உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு வடலூர் பெருவெளியில்,இறைவன் வள்ளல் பெருமானுக்கு அறிவித்த வண்ணம் உருவாக்கியதே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.

சத்திய ஞான சபையைக் கட்டுவதற்கு இறைவனே வள்ளலாரின் ஆன்மாவின் வழியாக வரைப்படம் (புளுபிரிண்ட்) போட்டுத் தருகிறார் .அந்த வரைப்படத்தில் கண்டபடி எண்கோண வடிவமான ஞான சபையை .பிரஜோற்பத்தி வருடம் ஆனிமாதம் அதாவது 1871 ,ஆம் ஆண்டு தொடங்கி சுமார் ஆறு மாத காலத்தில்  கட்டிட வேலையை முடிக்கத் திட்டமிட்டு முடித்து விடுகிறார் .நம்பெருமானார். இறைவன் அறிவித்த அருள் வார்த்தையை, இறைவன் அருள் செயலால் நிறைவேற்றி வைக்கிறார்.

கட்டிட வேலையை ஆரம்பித்த பின் நடந்த அற்புதங்கள் பலப்பல ,சாரங் கட்டி கட்டிட வேலை செய்த பலர் சாரம் அவிழ்ந்து கீழே விழுந்தனர் .அப்படி விழுந்தும் யாருக்கும் எந்த அடியும் படாமல் இறைவனும் வள்ளல் பெருமானாரும் அவர்களை காப்பாற்றினார்கள் என்றால் அது வியப்பு அன்றோ !

ஞான சபையைக் கட்டி முடிப்பதற்குள் உலகு கட்டி ஆளும் கொடியான சன்மார்க்கக் கொடி கட்டுவதற்கு... கொடிமரம் வாங்குவதற்கு காண்ட்ராக்டர் ஆறுமுகம் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் வள்ளல்பெருமான்.
அவர் சென்னை சென்று சரியான மரம் கிடைக்கவில்லை என்பதை வள்ளல்பெருமானுக்கு தெரிவிக்கிறார் ,உடனே வள்ளல்பெருமான் நான் வருகிறேன் நீர் அங்கேயே இருங்கள் என்று சொல்லிவிடுகிறார் ,

அடுத்த கணத்தில் வள்ளலார் அங்கு ஒரு நீண்ட,திரண்ட  பருத்த மரத்தின் மீது நடந்து கொண்டு உள்ளார் .அதைப் பார்த்த ஆறுமுகம் அதிர்ந்து போய் விட்டார். ஆறுமுகத்தை அழைத்து இந்த மரத்தை வடலூருக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.வடலூருக்கு மரத்தைக் கொண்டு வந்த ஆறுமுகம் வள்ளல்பெருமான வந்து, இந்த மரத்தை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள் என்று வடலூரில் உள்ளவர்களிடம் சொல்ல, அவர்கள் வள்ளல் பெருமான் இங்கேதான் இருந்தார் அங்கே எப்படி வந்தார் ? என்று ஆச்சரியப்பட்டார்கள் .இதுபோல் பல அற்புதங்கள் வடலூரில் நடந்து உள்ளது .ஆனால் வள்ளல்பெருமான எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ,இருந்துள்ளார்கள்.

அதே நேரத்தில் எந்த அற்புதத்தையும் மக்களிடம் வெளியில் சொல்ல வேண்டாம் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்கள்.சித்துக்களையும் அற்புதங்களையும் வெளியில் சொல்லாமலும் ,காட்டாமலும் இருந்த ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே ! அறுபத்து நான்கு கோடி சித்துக்களையும் கைவரப் பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

இறைவன் கொடுத்த அருள் அற்புதத்தை,பெருமைக்காக ,புகழுக்காக,சுய நலத்திற்க்காக, மற்றவர்கள்  தேவைக்காக  வெளியில் தேவை இல்லாமல் விரையம் செய்தால் மரணத்தை வெல்ல முடியாமல் போய்விடும் எனற உண்மையை உணர்ந்தவர் வள்ளல்பெருமான் அதனால் அவருக்கு கிடைத்த அருள் ஆற்றலை,பேராற்றலை, அருள் சித்துக்களை வெளியில் காட்டாமல்  தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டவர் வள்ளல்பெருமான் .

மக்களுக்காக ஆண்டவர்  எந்த எந்த நேரத்தில் என்ன என்ன அறிவிக்க சொன்னாரோ அதைமட்டும் தான் அறிவிப்பார் வள்ளல்பெருமான்.அதே போல்தான் வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார் .

சபையைத் தோற்றுவித்து வள்ளல்பெருமான் சித்திப்பெரும் வரைக்கும் சபையை இப்படித்தான் கவனித்து வரவேண்டும் என்று சத்திய ஞானசபை விளக்கப் பத்திரிக்கையை வெளிட்டார்கள்.அவர் சொல்லியபடி அவருடைய் தொண்டர்கள் செயல்படவில்லை என்பதை அறிந்து கொண்டு சபையை சாத்தி பூட்டுப்போட்டு சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிட்டார்.

அதன்பின் மக்கள் சுத்த சன்மார்க்க தனிநெறி என்ன என்பதை தெரிந்து புரிந்து கொள்ள சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் என்னும் தலைப்பில் ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கின்றார் அதன் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது .

சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம்  !

உண்மை சன்மார்க்கப் பெருநெறியின் ஒழக்கம்  என்ன என்பதை மக்களுக்கு போதித்தார் ,அதற்கு மெய்மொழியும் ஒழுக்கமும் என்று பெயர் வைத்தார் .

இறைவன் சொன்ன மெய்மொழியும் ஒழுக்கமும் .!

ஒழுக்கம் நான்கு வகைப்படும் !

1,இந்திரிய ஒழுக்கம்
2,கரண ஒழுக்கம்
3,ஜீவ ஒழுக்கம்
4,ஆன்ம ஒழுக்கம் .

1,..இந்திரிய ஒழுக்கம்

நம்முடைய ஐம்புலன்களாகிய கண்,காது,மூக்கு,வாய் ,மெய் என்னும் உடம்பு,ஆகியவை இந்திரியங்கள் என்பனவாகும் இதிலே இரண்டு வகை உள்ளன .

ஒன்று உருவமுள்ள உறுப்புகள் இதற்கு கர்மேந்திரங்கள் என்று பெயர்,..இன்னொன்று உருவம் இல்லாதது அதற்கு ஞானேந்திரங்கள் என்று பெயர் .

புறத்திலே உள்ள கருவிகள் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு போன்ற கண்மேந்திரங்கள் என்பவையாகும்.அதை இயக்குவதற்கு கண்களுக்குத் தெரியாமல் உள்ளே இருந்து இயக்கும்  மின் காந்த சக்தி போன்ற கருவி ஞானேந்திரங்கள் என்னும் கருவிகளாகும் .அந்த உருவமற்ற கருவிகள் இயங்கினால்தான் புறத்தில் இருக்கும் கருவிகள் தடையில்லாமல் அதனதன் வேலைகள் முறையாக செயல்படும் .

இந்த புறப் புறக்கருவிகள்,அகத்தே செல்லாமல் புறத்தே  வெளியே செயல்படுவதாகும் .இவைகள் வெளியே செயல்படுவதால் துன்பங்களும் துயரங்களும் அச்சமும் பயமும்,இறுதியில் மரணமும் வந்து விடுகின்றன.இந்த ஐம் புலன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விபரமாக ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற பகுதியில் தெளிவுப் படுத்தி எழுதி வைத்துள்ளார் .இதற்கு இந்திரிய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .

கரண ஒழுக்கம் !

கரண ஒழுக்கம் என்பது கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் ,மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளாகும்.இவைகள் புறம் என்னும் கருவிகளாகும்.இதுவும் புறத்தை நோக்கியே  செயல்படும் கருவிகளாகும்.அந்த உருவம் இல்லாத கருவிகள் தனக்கு சாதகமாக புறப்புறத்தில் உள்ள ஞான இந்திரியங்களையும் ,கர்ம இந்திரியங்களையும் பயன் படுத்தி வேலையை வாங்கிக் கொண்டே இருக்கும். உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கும் கருவிகளாகும்.

இந்த புறக்  கருவிகளில் முதனமையாக இருப்பது மனம் ..மனம் என்ன நினைக்கின்றதோ அதை புத்திக்கு அனுப்பி ,புத்தி வாங்கி சித்தம் என்னும் கருவிக்கு அனுப்பி ,சித்தம் அகங்காரம் என்னும் கருவிக்கு அனுப்பி ,அகங்காரம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திரியங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புற வேலைகளை செய்ய வைக்கும்.

கரணங்களில் உள்ள மனமானது உலகில் உள்ள போகப் பொருள்களையே விரும்பும்.அதுதான் மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்பதாகும்.இந்த மூன்று ஆசைகளில் எல்லாமே அடங்கி விடுகின்றது..ஆதலால் மனதை அடக்க வேண்டும் என்று எல்லா ஞானிகளுமே சொல்லி உள்ளார்கள்.ஆனால் மனதை அடக்க முடியுமா என்றால் எக்காலத்திலும் மனதை அடக்க முடியாது.

மனதை அடக்க வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாட்டு முறைகளும்,தியானம்,தவம்,யோகம் போன்ற பயிற்சிகளும் சொல்லி வைத்துள்ளார்கள் அதனாலும் மனம் அடங்குவதே இல்லை.

மனமானது பொய்யையே விரும்புகிறது அதற்கு உண்மையே தெரியாது.மனம்  மாற்றம் அடைவதற்கு உண்டான உண்மையான வழிமுறைகளை யாரும் சொல்லித் தரவில்லை அதனால் மனம் அடங்குவதில்லை.மாற்றம் அடைவதும் இல்லை.

பேய் குரங்குபோல் அலையும் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கரண ஒழுக்கம் என்ற ஒழுக்க முறையைக் காட்டி யுள்ளார்.மனமானது உண்மையைத் தொடர்பு கொண்டால் உண்மையை அறிந்து உண்மை பக்கம் திரும்பி விடும்.அந்த கலையைத்தான் வள்ளல்பெருமான் கரண ஒழுக்கத்தில் சொல்லி வைத்துள்ளார் .

கரணங்களாகிய மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகளை புறத்தில் செல்ல விடாமல் ,அகத்தில் செல்ல வைப்பதே  கரண ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார்.அதற்கு சத்விசாரம் செய்து உண்மையை உணர்ந்து புறத்தில் செல்லாது அகத்தில் செல்ல வைப்பதையே  கரண ஒழுக்கம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் நமது வள்ளல்பெருமான்.

அதனால்தான் இடைவிடாது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்கின்றார்.சிற்சபை என்பது உடம்பை இயக்கும் மெய்ப்பொருள் இருக்கும் இடமாகும் அதுதான் ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் அதை இடைவிடாது தொடர்பு கொண்டால் மனம் தானே அடங்கும்.அதற்கு கரண ஒழுக்கம் என்று பெயராகும்.

ஜீவ ஒழுக்கம் !

ஜீவ ஒழுக்கம் என்பது அகப்புறம் உள்ள உயிராகும்.உயிர் இயங்குவதற்கும் உயிர் உடம்பில் நிலைப்பதற்கும் ,உணவு என்னும் பொருள் தேவைப் படுகிறது.பொருளை பெறுவதற்கும்,பொருளை உண்பதற்கும் புறம்.புறப்புறம் என்னும் காரணங்களையும் இந்திரியங்களையும் உயிர் என்னும் ஜீவன் பயன்படுத்திக் கொள்கின்றது .இதுவும் ஒரு அகப்புறக் கருவியாகும்

புறத்தில் உள்ள உலக வாழ்க்கை வாழ்வதற்கு இந்திரியங்களையும், காரணங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றது .உலகில் உள்ள சாதி,சமயம்,மதம் போன்ற கொள்கைகளை பார்த்து பார்த்து,படித்து படித்து அவற்றை பின் பற்றி  வாழ்ந்து கொண்டு இருப்பது   ஜீவன் என்னும் உயிராகும்.

சாதி, சமயம்,மதம்,கோத்திரம்,சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம்,உயர்வு,தாழ்வு,முதலிய பேதம் இல்லாமல் தானாக நிற்க வேண்டும்.இந்த ஜீவன் என்னும் உயிரும் புறப் பொருள்களை வேண்டாமல்,விரும்பாமல் ,இருக்க வேண்டும். இந்திரியங்களும், கரணங்களும் புறத்தில் செல்லாமல் நிறுத்திக் கொண்டால் ஜீவன் என்னும் உயிரும் புறத்தில் செல்லாமல் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்.அப்படி தொடர்பு கொண்டால் ஆன்மாவானது இந்திரியங்களையும், கரணங்களையும், ஜீவனையும் தன் வசமாக தக்க வைத்து கொள்ளும்.

அகத்தில் உள்ள ஆன்மா, அருளைப் பெற வேண்டுமானால் அந்த மூன்று கருவிகளையும் புறத்தில் அனுப்பாமல் தக்க வைத்துக் கொண்டால்தான்,ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.  

இறைவனிடம் இருந்து அருளைப் பெற வேண்டுமானால் அகம் என்று சொல்லப்படும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் அகத்தையே  நோக்க வேண்டும்.அப்படி நோக்குவதற்கு, செய்லபடுவற்கு  ஜீவ ஒழுக்கம் என்பதாகும்.அதுவே உயிரைக் காப்பாற்றும் வல்லபம் என்பதாகும்

இந்திரியம்,கரணம்,ஜீவன் என்னும் மூன்று ஒழுக்கங்களையும் முறையாக,முழுமையாக அறிந்து செயல்பட்டால் தான் உயிர் காப்பாற்றப் படும்.அப்படி செயல் படுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவன் என்றால் உயிர், உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் நமது வள்ளல்பெருமான்.அதன்பின்தான் ஆன்ம ஒழுக்கம் கைவரப்படும்..

ஆன்ம ஒழுக்கம் !

ஆன்ம ஒழுக்கம் என்பது ;;எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்கள் இடத்தும் உள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்.

இங்கனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்க, என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுக வேண்டும்.ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அறிய ஒழுக்கங்கள் திருவருட் துணை பெற்ற பின்னர் அன்றி கைகூடாது.

ஆதலால் அவ் ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்சிகளில் பழக வேண்டும்.

அன்றியும் இவ்வண்ணமாக ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று
இடம் தனித்து இருத்தல்,...இச்சை இன்றி  நுகர்தல்,...தெய்வம் பராவல் ,..பிற உயிர்க்கு இரங்கல்...பெருங் குணம் பற்றல்,...பாடிப்பணிதல்....பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிக் பழகி இருத்தல் வேண்டும்.

சைவம்,வைணவம்,சமணம்,பவுத்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் ,தெய்வங்களும்,கத்திகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ் அவ் சமயங்களில் பலப்பட விரிந்த வேதங்கள் .ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், 

வேதாந்தம் ,சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்றும் கேள்விப் பட்டு இருக்கின்றனம்,( அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
சொல்லியது )  .ஆகலில் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு,அவ் அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி அவ் அவ் சமய மதங்களைச் சிறிதும் பற்று வைக்காமல் (அனுட்டியாது) நிற்றலும் ,அவற்றின் மேல் சத்திய உண்ர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும் .

அன்றியும் ;--

உலகியல்  கண்... பொன் விஷய இச்சை,..பெண் விஷய இச்சை,...மண் விஷய இச்சை முதலிய எவ்வித இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல் ,பொதுப்பட நல்ல அறிவு,..கடவுள் பக்தி,....உயிர் இரக்கம்,...பொது நோக்கம்,...திரிகரண அடக்கம், ..முதலிய நற்குண .ஒழுக்கங்களில் நின்று,உண்மை உரைத்தல்,..இன் சொல்லாடல்...,
உயிர்க்கு உபகரித்தால்,முதலிய வாகக் குறித்த நற் செய்கைகளையும் உள்ளபடி பெற்று ,சித்திவளாகம் என்னும் இம் மகா சந்நிதானத்தில் தானே தரிசிக்கப் பெறவும்,உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்,நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய் ,
எல்லா அண்ட சராசரங்களையும் தமது திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்து அருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெரும் தலைவரது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் முதலிய திருப்பணியிடம்

நமது கரணம் இந்திரியங்களை விடுத்துக் குதூ கலத்துடன் விந்து விளக்கம்,..நாத ஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்,
ஆண்டவனாரது அருள் அற்புத ஞான சித்தித் திருமேனியின் மங்கலத் திரு கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங் குளிர ஆனந்தக் கண்ணீர் கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெரும் ,பெரும் புண்ணிய உடையவர்களாய் எதிர்பட வாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்;

நாம் எல்லாவரும் சுத்த சன்மார்க்கதினுக்கு உரிமை உடையவர்களாகி,அறிவு வந்த கால முதல் கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும் கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும் ,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
அடைந்து அறியாத அற்புதக் குணங்களையும்,செய்து, அறியாத அற்பதக் செயலகளையும்,

அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும், வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தின் உள்ளே பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம் ,இது சத்தியம்,இது சத்தியம்,

இங்கனம் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலை இலக்கான பொய்யாப் பெருமொழி என்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த திரு மந்திரத் திருவருள் மெய்மொழியின் சுருக்கமாகும்

என்று வள்ளல்பெருமான் மெய்மொழி என்னும் தலைப்பில்,உலகில் உள்ள மக்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியத்தையும் ,அதன் உண்மைகளையும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட தினம் வெளியிட்ட அற்புதப்பத்திரிகை 

மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்  சித்திப் பெறுவதற்கு முன் வெளியிட்ட அற்புதப் பத்திரிகையில் முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்துகின்றார்.

இனி இச் ஜீவர்கள் விரைந்து விரைந்து  ,இறந்து இறந்து வீண்போகாமல் ,உண்மை அறிவு ,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாக விளங்கும்  சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும்  சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு வுள்ளங் கொண்டு

''சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது சம்மதத்தால் இயற்றுவித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் '' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி வீற்றி இருக்கின்றார் .

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர் களாயிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் இன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள் என்று இறுதியாக வெளிப் படுத்துகின்றார் .

அதன் உண்மை !   

வள்ளல்பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை வடலூரில் தோற்றுவித்து, இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும்  சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சத்திய ஞான சபையை கவனித்து பாது காக்க வேண்டும் என்னும் ஞான சபை விள்க்கப் பத்திரிகையில் தெரியப் படுத்தி உள்ளார் .

கோடி ஏற்று விழாவில் திருவாய் மலர்ந்து அருளிய பேருபதேசம் என்ற தலைப்பில் வள்ளல்பெருமான் வெளியிட்டு உள்ளது !

 இது கடைசி வார்த்தை !

இது முதல் --கொஞ்ச காலம் ---சாலைக்குப் போகின்ற வரைக்கும் ஜாக்கிரதையாக மேற் சொன்ன பிரகாரம் விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று சொல்லுகின்றார் .

சித்தி பெரும் வரை என்பதும்,...சாலைக்குப் போகின்ற வரைக்கும் என்பதும்,...சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதும் நாம் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

முதலில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் ஞான சபையைத்  தோற்றுவித்து வள்ளலார் சொல்லிய வண்ணம் ,சன்மார்க்க அன்பர்கள் சபையை கவனித்து இருந்து இருந்தால் வள்ளல்பெருமான் சித்தி வளாகத் திருவரைக்குள் செல்லாமல் ஞானசபைக்குள் நுழைந்து இருப்பார் ..

வள்ளல்பெருமான எங்கு இருந்தாலும் அங்கு சென்று ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர வல்லபெருமானை  ஆட் கொண்டு தன்வசமாக மாற்றி மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியை அளித்து இருப்பார் இதுதான் உண்மை  இதுதான் சத்தியம்.

வள்ளல்பெருமான் முன் சொல்லிய வண்ணம் ஞானசபைக்கு செல்லாமல் மேட்டுக் குப்பத்தில் இருந்ததால், அருட்பெருஞ்சோதி ஆண்டவர்,அவர் இருக்கும் இடமான  சித்தி வளாகத் திருவறைக்குள் சென்று ஆட்கொண்டார் .

வள்ளல்பெருமான் சித்தி பெற்ற பின் எங்கே சென்றார் ?

தான் இருக்கும் இடமான சித்தி வளாகத் திருமாளிகையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து கொண்டு உள்ளார். அவர் என்னை அழைத்து செல்வதற்காக வந்து இருக்கின்றார் .இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இங்கு இருப்பேன் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் கொஞ்ச  காலத்தில் நான் சென்று விடுவேன் இனிமேல் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருப்பேன் என்று வல்ள்ளபெருமான் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சத்திய ஞான தீப விளக்கம் என்னும் தலைப்பில் மக்களுக்காக எழுதி வைத்து உள்ளார்கள் .

ஞான தீப விளக்கம் !  


ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்  உள்ளிருந்த விளக்கைத்  திருமாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபாடாது ஆராதியுங்கள்'' 
இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம் .இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான 
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்னும் இருபத்தெட்டு பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் .;--

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ,ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டிக் கொடார் .

சுத்த பிரணவ ஞான தேகத்தோடு வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி சொல்லித் திறந்து பார்த்தால் ஆண்டவர் அருள் செய்வார் என்பதைத் தெளிவாக விளக்கி உள்ளார் ..

ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை ;--  

என்னும் விபரத்தை வள்ளல்பெருமான் தெளிவாக எழுதி வைத்துள்ளார்

வள்ளல்பெருமான் சித்திவளாக திருமாளிகையின் உள்ளே சென்று பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறோம் என்றும் ,பார்க்க நேர்ந்து பார்த்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்பதை சற்று நாம் ஊன்றி கவனிக்க வேண்டும் .

நான் உள்ளேதான் இருக்கிறேன், ஒளி தேகமாக (சுத்த பிரணவ ஞான தேகம்) ஆண்டவர் என்னை மாற்றி விட்டதால் பார்ப்பவர் கண்களுக்கு நான் தெரிய மாட்டேன் என்றும் ஆண்டவர என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்றும் வெறு வீடாகத்தான் இருக்கும் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார்

அருட்பெருஞ்ஜோதியின் ஒளி தன்மைக்கே தன்னையும்  மாற்றிக் கொண்டார் .இரு உருவமும் ஒரே உருவமாக மாற்றிக் கொண்டது.சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ஒளிதேகம் மற்றவர் கண்களுக்கு எப்படித் தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பத்து பதினைந்து நாட்களுக்குப்பின் வள்ளல்பெருமான் எங்கே சென்றார் .

இந்த உடம்பில் இருக்கிறேன் இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்கின்றார்

வள்ளல்பெருமான் உலகத்திற்கு காட்டிய அறிமுகப்படுத்திய உண்மைக் கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர். .அவர் என்ன செய்து கொண்டுள்ளார்? .

எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக (ஆன்மாவாக ) இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் ,அதே போல் வள்ளல்பெருமானும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆன்மாவின் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் அருட்பெருஞ் ஆண்டவர் இருக்கும் இடம்;--பல கோடி அண்டங்களையும் இயக்கி இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இடம்  அருட்பெருவெளி என்பதாகும் .,

அதேபோல் வள்ளல்பெருமான் ஒளி தேகம் பெற்று ஐந்தொழில் பணிகளை செய்யும் இடம் ;--வடலூர் பெருவெளியில் உள்ள ''சத்திய ஞான சபையில்'' அமர்ந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் சித்திவளாகத்தில் சித்திப் பெற்றார் ,வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய ஞானசபையில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கொண்டு உள்ளார் என்பதை  அற்புதப் பத்திரிகையில் தெளிவாக தெரியபடுத்தி உள்ளார் .

விளக்கம் ;--

இனி ஜீவர்கள்  விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்முதலிய சுபகுணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளங் கொண்டு

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞான சபையை'' இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து '' '' ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங் காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்"'  என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றுஇருக்கின்றார்

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல்,முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள் ...என்னும் குறிப்பை வள்ளல்பெருமான் தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளார் .

இறுதியில் உண்மை பத்திரிக்கை என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் மக்களுக்கு வெளியிட்டவை ;--

உண்மைப் பத்திரிக்கை !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மென்மேலும் வழங்கும்.

பல வகைப்பட்ட சமய பேதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் போய் ,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.அது கடவுள் சம்மதம்.இது 29...வருடத்திற்கு மேல்
( கலி 5000 ..க்கு மேல்)

இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய,மத  சாத்திர புராணங்களில் வந்தததாகப் சொல்லப்படுகின்ற  ஏற்பாட்டுக் கர்த்தர்கள், ,மூர்த்திகள்,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !

அப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும் ,எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர் பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதியாகும்  .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் !பெறுகின்றேன் !! பெற்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! அஞ்ச வேண்டாம் .

ஆன்மநேய அன்புடைய மனித தேகம் எடுத்துள்ள அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுவது யாதெனில்.

மக்கள் இதுவரை கடவுள் உண்மை அறியாது துன்மார்க்க புலன்
நெறியில்,மூழ்கி அழிந்துப் போய் கொண்டு இருக்கின்றார்கள் அதுபோல் வீண் போகாமல் நம்முடைய அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளை உள்ளபடி உணரவேண்டும் .மெய்ப்பொருள் விளக்கம் என்னும் சத்திய ஞான சபையில் அவரைத் தரிசித்து வழிபடவேண்டும்.

ஆகவே எல்லோருக்கும் பொதுவான அருட்பெருஞ்ஜோதிக கடவுள் கருணையோடு அருட்பிரகாச வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டு கோடி கோடி அருட்ஜோதிக் கதிர் பரப்பிக் கொண்டு வெளியாகி இருக்கின்றார் .

இனி அருட்பெருஞ்சோதி வேறு அருட்பிரகாச வள்ளலார் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதை உணரவேண்டும்.

வடலூர் பெருவெளியில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் திருஅருட் பிரகாச வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் உருவத்தில் அமர்ந்து தனிப்பெருங் கருணையோடு அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்.ஆதலால் அனைவரும்  வந்து வந்து தரிசித்து,வழிபட்டு  அருளைப் பெற்று, மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெருவாழ்வாகிய பேரின்ப லாபத்தைப் பெற்று பெருங் களிப்பை அடைவோம் .  இது சத்தியம் ! இது சத்தியம்!! இது சத்தியம் !!!
 .