வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

முன்னுரை !

முன்னுரை !

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் !

வள்ளலார் பாடல் !


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தும்.மனிதனுக்கு  அறிவு வளர்ச்சி உண்டான காலத்தில் இருந்தும். பரந்து விரிந்து சுருங்கும் தன்மையுடைய இவ்
உலகத்தைப் படைத்த மெய்ப் பொருளான கடவுள் யார் என்பது தெரியாமல் பொய்யான புன்னெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

உலகில் தோன்றிய பல ஞானிகள்.பல அருளாளர்கள்  அவரவர்களுக்கு கிடைத்த ஏகதேச அருள் ஆற்றலினால் கடவுளைத் தேடினார்கள்.உண்மையான  மெய்பொருள் எது.? அது எங்கே இருக்கின்றது. எங்கே இருந்து செயல்படுகின்றது.அது உருவமா ? அருவமா ? உருஅருவமா ? ஒளியா ? வெளியா? பஞ்ச பூதமா ? மாயையா ? அதற்கும் மேலே எந்த உருவத்தில் ஆண்டவர் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்கள். அவரவர் அறிவுக்கும் ஏகதேச அருளுக்கும் கிடைத்த. தோன்றிய தத்துவக் கலைகளை கற்று கண்டு தெரிந்து.தெளிந்து அதில் தேர்ச்சிப் பெற்று இவைதான் நிலையானது  என்பதை உணர்ந்து தெரிந்து கொள்ள முடியாமல். கலையுரைத்த கறபனைகளைக் கதைகளாகவும் கதைகளில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை கடவுள்களாகவும் உலகுக்கு காட்டினார்கள்.

அந்த தத்துவங்களை வழிபடுவதற்கு வானுயர ஆலயங்களையும்.சர்ச்சுகளையும் .மசூதிகளையும்.மிரமிடுகளையும்.
மற்றும் சிறியதெய்வம்.பெரியதெய்வம் போன்ற தெய்வங்களையும் அவரவர்கள் எண்ணத்திற்குத் தகுந்தவாறு தோற்றுவித்தார்கள்.மக்கள் அவற்றை உண்மை என நம்பி வழிப்பட்டுக் கொண்டு வந்தார்கள்.வருகின்றார்கள்.அதனால் மக்களுக்கு எந்தவிதமான ஆன்மலாபமும். அருள் லாபமும்  சித்தி வல்லப பயனும் கிடைக்காமல் துன்பத்தில் அழுந்தி மாண்டு(மரணம் ) கொண்டே இருந்தார்கள் இருக்கின்றார்கள்.

இதனால் கடவுளின் பெயரால் சாதி.சமய.மதம் போன்ற வேறுபாடுகளை உண்டாக்கி விட்டார்கள்.அதனால் மனித இனம் ஒற்றுமை இல்லாமல்.மனித நேயம் இல்லாமல்.அன்பு.தயவு.கருணை இல்லாமல் உயிர் இரக்கம் இல்லாமல். மக்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன்.தீண்டத் தகுந்தவன் தீண்டத்தகாதவன் என்று பலகோணங்களில் மக்களை வேறுபடுத்தி பிரித்து விட்டார்கள்.

ஆதலால் மனிதகுலம் உயிர்க்குலம் கடவுளின் உண்மை அறியாமல்.எம் கடவுள் பெரியது உம்கடவுள் சிறியது என்னும் போட்டி பொறாமை.வஞ்சகம்.சூது. வாது வலுத்துவிட்டது. ஆகையினால்  சாதி.சமய.மதக் கலவரங்கள் சண்டைகள் உண்டாகி பிளவு ஏற்பட்டு மனிதர்களை மனிதர்களே எதிர்த்து போரிட்டு  அழிந்து மாண்டுபோகும் சூழ்நிலை உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது இருக்கின்றது.

அந்த காலகட்ட சூழ்நிலையை உணர்ந்த .கருணையே வடிவமான மெய்ப் பொருளான கடவுளானவர் .அகம் கருத்து. புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டுள்ள இந்த உலக மக்களைத் திருத்தவும்.சாதி.சமய.மதங்களை ஒழித்து.மனித நேயத்தையும்.ஆன்மநேயத்தையும் உயிர் இரக்கத்தையும் புரிய வைக்கவும் தெரிய வைக்கவும்.தெளிவு அடைய செய்யவும்.. மக்களை ஒன்றுபடுத்தி ஒற்றுமையை நிலைநாட்டவும்.ஒரு மாபெரும் பக்குவம் உள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

அந்த ஆன்மா மனித தேகம் எடுத்து  இவ்வுலகிற்கு வருகை புரிகின்றது   அந்த ஆன்மாவிற்கு பெற்றோரால் இராமலிங்கம் என்ற பெயர் சூட்டப்படுகிறது.பின்னாளில் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று எல்லோராலும் போற்றப்படுபவராக.மரணத்தை வென்ற மகானாக. சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் முத்தேகசித்தி பெற்று அருட்பெருஞ்ஜோதி யாக வாழ்ந்து கொண்டு உள்ளவர் வள்ளலார்

அவருடைய வாழ்க்கை வரலாறுகளையும்.அவர் கடைபிடித்து வாழ்ந்து மக்களுக்கு போதித்த சுத்த சன்மார்க்க நன்னெறிக் கொள்கைகளையும். மக்கள் தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற பேராசையினால் இந்த சிறிய நூல் *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வள்ளலார் கண்ட மெய்ப்பொருளான எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வல்லபத்தாலும்.வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

 என் அறிவிற்கு உணர்த்திய வண்ணம்  உண்மைக் கருத்துக்களை.சன்மார்க்க சங்க மேடைகளிலும்.வாட்ஸ்அப்.பேஸ்புக்.மற்றும் யூடியூப்.வலைத்தளங்களில் மக்களின் பேராதரவுடன்  வெளியிட்டுள்ளேன்.. இந்நூலும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க. வெளியிடுகிறேன்.இந்நூலைப் படிக்கும் அன்புசார்ந்த.அருள்சார்ந்த சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இறைஅருள் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக.*வள்ளலாரின் அருள் மொழிகள்* என்ற தலைப்பிலும்.*வள்ளலார் காட்டிய வழிப்பாட்டு முறையும் ஒழுக்க நெறியும் *என்ற தலைப்பிலும். மலேசிய நாட்டில் நடைபெற்ற *வள்ளலார் அழைக்கின்றார்* என்ற மாநாட்டில் அருள் திருமதி டாக்டர் லலிதா அவர்களின் தலைமையில்
4-10-2014.ஆம் நாள் 5-10-2015 ஆம் நாள் வெளியிடப்பட்டது.அடுத்து  *சமாதி வற்புறுத்தல்* என்ற தலைப்பில் மூன்றாவது நூல் அருட்பெருஞ்ஜோதி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.

இப்போது *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* என்ற தலைப்பில் பிரான்ஸ் நாட்டு சன்மார்க்க அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் உதவியாலும் மற்றும்  மலேசிய நாட்டின். *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பேரவையின் நிர்வாகி அருள்திரு. இந்து பாபா அவர்களின் தலைமையில்*.
13-10- 2019 நடைபெறுகின்ற வள்ளலார் அவதார தினவிழா மாநாட்டில்  *வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்* நூல் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

தங்கள் கரங்களில் இந்நூல் கிடைத்து படித்து புரிந்து அறிந்து தெரிந்து கொண்டு. நிறைவு இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் .குறைபாடு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையில் .தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டும் கடைபிடித்துக்கொண்டும்.என்னை ஊக்கப்படுத்தியும்.வழிநடத்தியும் .  இந்நூல் வெளியிடுவதற்கு உற்ற துணையாக இருந்த எனது துணைவியார் *அருள்திருமதி அமுதா கதிர்வேல்* அவர்களுக்கும்.மற்றும் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூல் கணினி தட்டச்சு செய்து கொடுத்த திருமதி ரேவதி அவர்களுக்கும்.பிழை திருத்தம் செய்து கொடுத்த தினத்தந்தி நிருபர் திரு செல்வீன் அவர்களுக்கும்.இந்நூலை சிறந்த முறையில் அழகாக அச்சிட்டுத்தந்த ஈரோடு சகூராகிராபிக்ஸ் உரிமையாளர் திரு C.S ரமேஷ்குமார் அவர்களுக்கும்.அன்பான பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி அருட்பெருஞ்ஜோதி

இங்கனம் அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு