வெள்ளி, 21 ஜூன், 2019

தமிழ் அறிஞர்கள் பொய் பேசிக் கொண்டு உள்ளார்கள் !

தமிழ் அறிஞர்கள் பணத்திற்காக பொய் பேசிக் கொண்டு உள்ளார்கள்!

தமிழ் நாட்டில் தமிழ் படித்த தமிழ்  அறிஞர்கள்.தமிழ் ஆசிரியர்கள்.தமிழ் பேராசிரியர்கள்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள். அமைச்சர் பெருமக்கள்  வள்ளலாரைப் பற்றியும் அவர்கள் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்.
இருப்பது வேதனைக்கு உரிய  விஷயமாகும்.மிகவும் வருந்ததக்க விஷயமாகும்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் வள்ளலாரைப் பற்றியும் அவர் உலகிற்கு கொடுத்த அருள் உண்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வடலூர் வந்த வண்ணம் உள்ளார்கள்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி உலகிற்கே சொன்னவர் வழிகாட்டியவர்.வள்ளலார்

பள்ளிக்கு செல்லாமலே.ஆசிரியர் இன்றியே எல்லா மொழிகளையும் இறை அருளால் கற்றவர்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றவர். வாடியப்பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த மண் தமிழ்நாடு.

இலக்கண இலக்கிய குற்றம் இல்லாமல் எளிய தமிழிலே.பாமர மக்களும் படித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு. ஆராயிரத்திற்கும் மேலான அருட்பாக்களையும்.உரை நடைப்பகுதி தமிழிலும் மக்களின் நல்வாழ்விற்காக எழுதி வைத்துள்ளவர் வள்ளலார்

சாதி.சமய.மதங்கள் மனிதனை அழித்துக் கொண்டுள்ளன...ஆதலால் முதன் முதலில் சாதி.சமய.மதங்களை அழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் வள்ளலார் அழித்துக் கொண்டும் வருகின்றார்.

*சாதி.சமய.மதம் அற்ற..இறை  பொது வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தவர் வள்ளலார்*

அதற்காகவே வடலூரில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* நிறுவியவர் வள்ளலார்*.

ஏழைகளின் பசிப்பிணியைப்போக்க 1867 ஆண்டில் சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்தவர் வள்ளலார்.

பகுத்தறிவு சிந்தனையை முதன் முதலில் கொண்டு வந்தவர் வள்ளலார்.

மூடநம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்தவர் வள்ளலார்.

தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிவித்து.மக்களுக்கு வாழும் வழிகாட்டியவர் வள்ளலார்.

*சமுதாய ஆன்மீகப் புரட்சி.அருள் புரட்சி.அறிவியல் புரட்சி  செய்து காட்டியவர் வள்ளலார்*

இன்னும் அளவில் அடங்காத முற்போக்கு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர் வள்ளலார்.

மரணத்தை வென்ற மகான் பிறந்த மண் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள். பொய்யான கற்பனைக் கதைகளான மகாபாரதம்.ராமாயணம் போன்றவற்றை படித்துவிட்டு பட்டிமன்றம் நடத்தி பணம் சம்பாதித்து வயிற்றை வளர்த்திக் கொண்டு உள்ளார்கள்.

வள்ளலாரைப்பற்றி தெரிந்து கொள்ளாத இவர்களை இயற்கை உண்மைக்  கடவுள் மன்னிக்கவே மாட்டார்.

இவர்களை தமிழர்கள் என்று எப்படி சொல்லுவது. பாராட்டுவது...

தயவு செய்து தமிழன் என்று தங்களைச் சொல்லாதீர்கள். சொல்லிக் கொள்ளாதீர்கள்.

மிகவும் வருத்தத்துடன் எழுதுகிறேன்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு