வெள்ளி, 21 ஜூன், 2019

சுத்த சன்மார்க்கிகளுக்கு வாழ்த்துக்கள் !

*சுத்த சன்மார்க்கிகளுக்கு வந்தனம் வாழ்த்துக்கள் *!

சுத்த சன்மார்க்கம் மிகவும் வேகமாக மக்களின் மனதை ஈர்த்துக் கொண்டு வருகின்றது.

அந்த அளவிற்கு சுத்த சன்மார்க்க மெய் அன்பர்கள் அயராது ஜீவகாருண்ய பணியிலும் சத்விசாரத்திலும்  ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள்.

தாய் போல் உரைப்பர் சன்மார்க்கத்தவர் என்ற வள்ளலாரின் வாக்கிற்கு இணங்க
அன்பெனும் பிடியுள் மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் சன்மார்க்க தயவுள்ளவர்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்ற அளவிற்கு  அயராது உழைத்து வருகிறார்கள்.

வள்ளலார் பெயரைச் சொல்லிக் கொண்டு சமய மத வாதிகள். சன்மார்க்கத்தை பின் பற்றுவதுபோல் உள்ளே நுழைந்து கொண்டு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டு உள்ளார்கள்.

அதிலே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அவர்களையும் நம்மவர்களாக்கி கொள்ள வேண்டும்..

நம் தந்தை நமக்கு சொல்லிக் கொடுத்தது.ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் இந்திரிய.கரணங்களையும் தனக்காக பயன் படுத்தி வாழ்வதற்காக . இயங்கிக் கொண்டு இருப்பதுதான் உள் ஒளியான ஆன்மாவாகும்...

தன் குழந்தைகளாகிய எல்லா ஆன்மாக்களையும் இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்.

உடல் வேறு உயிர்வேறாக இருந்தாலும் உள்ளே இயங்கும் உள் ஒளியான ஆன்மா ஒரேத் தன்மை உடையதாகும்.

எனவேதான் சுத்த சன்மார்த்தின் முக்கிய லட்சியமாகிய  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள் .எக்காலத்தும் .
எவ்விடத்தும் .எவ்வித்த்தும்.எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்து அருளல் வேண்டும் என்ற விண்ணப்பத்தை கட்டாயமாக்கி போதித்து உள்ளார் நம் அருள்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான்.

நாம் அவற்றை இடைவிடாது பின்பற்ற வேண்டும்..

மேலும் கண்டிப்பாக கவனிக்க வேண்டியது !

மக்களின் மனநிலையானது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை.சாதி.சமய.மதங்களிலே பற்று வைத்துள்ளார்கள்.. அவர்களை சுத்த சன்மார்க்கத்திற்கு மாற்ற வேண்டும்.

அவர்களும் நம் சகோதர உரிமை உடையவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது..

வள்ளலார் நமக்கு சொல்லித் தருவதை கவனிக்கவும் !

எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளே !  உங்கள் அற்புதத் திருவருள் விளக்கத்தால்.!

எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும்.உண்மை அடியர்களாக்கி உண்மை அறிவை விளக்கி.உண்மை இன்பத்தை அளித்துச் *சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும் என்கின்றார்.*

சமய மதவாதிகளையும் நம்மவர்கள் ஆக்கிக் கொள்வதே நம் குறிக்கோலாகும்...

அதே நேரத்தில் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோத மான செயல்களில் ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றார்...

வள்ளலார் சொல்லுவதை கவனமாக கவனித்து பின்பற்றி வாழவேண்டும் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்த்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள்.என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்..

நாம் முன் உள்ள சமய மதங்களில் பழக்க வழக்க தோஷத்தினால் பற்று வைத்தால்.நமக்கு கிடைக்க வேண்டிய அருள் கிடைக்காமல் போய்விடும்.

நாம் பெற வேண்டியது ஆன்ம லாபம்.ஆன்மலாபம் பெற்றால்தான் அருள் லாபம்பெற முடியும் அருள் லாபம் பெற்றால்தான் மரணத்தை வெல்ல முடியும்.

மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபம் பெறமுடியும்.பேரின்ப லாபம் பெற்றால்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும்.என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்துள்ளார்...

எனவே நாம் அடையப்போகிறது எல்லாமே லாபம் என்ற இன்பமாகும்.

அதுதான் என்றும் அழியாத பேரின்ப லாபமாகும்..

மனிதன் உயர்ந்த அறிவுள்ளவன். எனவே நன்கு உணர்ந்து சிந்தித்து ஆன்ம அறிவைக் கொண்டு செயல்படுவோம்..

*இங்குள்ள மனிதர்களுக்கு மட்டும் அல்ல.உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நெறியே வள்ளலார் காட்டிய.சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க புனித நெறியாகும்*

*அதேபோல் உலக மக்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்பதை ஆன்மாவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்*

*அவர்தான் தனிப்பெரும் கருணையே வடிவமானவர் *!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு