வியாழன், 7 பிப்ரவரி, 2019

கடவுள் சுதந்தரம் பெற வேண்டும் !

கடவுள் சுதந்தரம் பெற வேண்டும் !

 மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்காக கடவுள் மூன்று சுதந்தரம் வழங்கி உள்ளார்.

அவை ஜீவ சுதந்தரம்..தேக சுதந்தரம்..போக சுதந்தரம் என்னும் மூவை சுதந்தரமாகும்.

இந்த சுதந்தரம் நம்மிடம் உள்ளவரை நமக்கு இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

இந்த உண்மையை கண்டுபிடித்தவர் வள்ளலார்..

நமக்கு இந்த மூவகை சுதந்தரம் வழங்கிய கடவுள் யார் ? என்ற உண்மையை அறிந்து கொள்கிறார் வள்ளலார்..அவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் இயற்கை உண்மைக் கடவுள் என்பதை கண்டு கொள்கிறார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தவர். ஆன்மா வாழ்வதற்கு.உயிர்.உடம்பு.கொடுத்து போகவாழ்க்கை வாழ்வதற்குசுதந்தரம் கொடுத்தவர்...

ஆன்மாக்கள் வாழ்ந்து திரும்ப இறைவனிடம் செல்ல வழிதெரியாமல் இங்கேயே பிறந்து பிறந்து.இறந்து இறந்து பலப்பல பிறவிகள் எடுத்துக் கொண்டே உள்ளன..

மீண்டும் இறைவனிடம் செல்ல வேண்டுமானால்.இறைவனிடம் தொடர்பு கொண்டு அருள் பெற வேண்டும்..

அருள்பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்புகொண்டு திருவருட் சுதந்தரம் பெற வேண்டும்.

திருவருட் சுதந்தரம் பெறுவதற்கு தடையாக இருப்பது நம்மிடம் உள்ள ஜீவசுதந்தரம்.தேகசுதந்தரம். போகசுதந்தரம் என்னும் சுதந்தரமாகும்.

**இறைவன் கொடுத்த இந்த சுதந்தரத்தை இறைவனிடமே திருப்பி கொடுத்துவிட்டால் ..மறுகணமே திருவருட் சுதந்தரம் நமக்கு கிடைத்துவிடும்**

இந்த உண்மையை வள்ளல்பெருமான் சத்திய விண்ணப்பம் என்னும் உரைநடைப்பகுதியிலும்..பல பாடல்களிலும் தெரியப்படுத்தி உள்ளார்...


சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.!
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற 

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,

 எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. 

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

இந்த மாபெரும் உண்மையை உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார்.வள்ளலார்...

வள்ளலார் பாடல் ! 


**மேலே கண்ட பாடலில்  என் உடம்பு உயிர் போகம் எல்லாம் எனக்கு வேண்டாம்.நீயே எடுத்துக் கொண்டு. உன் உடல் உயிர் போகம் என்னும் சுதந்தரத்தை எனக்குத் தரவேண்டும் என்று முறையிடுகிறார் வள்ளலார்..**.

வள்ளலாரின் மெய் உணர்வை தெரிந்து கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னிடம் உள்ள சுதந்தரத்தை மகிழ்ச்சியுடன் வழங்குகிறார்...

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடல் தெளிவாகத் தெரிவிக்கின்றது...

இறைவன் சுதந்தரத்தை முழுமையாக பெற்று மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் போல் நாமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சுதந்தரம் பெற்றால் தான் மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழமுடியும்..

தவறானவர்கள் காட்டிய சாதி.சமய.மதம்  போன்ற வழியில் சென்று தவறிவிழாமல் வள்ளலார் காட்டிய உண்மையான சுத்த சன்மார்க்க நன்நெறியைப் பின்பற்றி . நலமுடன் வாழ்வோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939895.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு