சனி, 16 பிப்ரவரி, 2019

சண்டை இல்லாத போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம் !

சண்டை இல்லாமல் போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம் !

மரணம் அடையாமல் வாழும்  வழி !

இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் போரில்  வீர மரணம்...

ஒரு நாட்டின் பாதகாப்பிற்காக பணிபுரியும் ராணுவ வீரர்கள் எதிரிகளால் துப்பாக்கி சூட்டிலும் அணு ஆயுதங்களாலும் பலியாவது
இன்று நேற்று அல்ல  பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது...

நம்நாட்டின்  பாதுகாவலர்கள் பலியானால் நாம் வருந்துகிறோம்..
அயல்நாட்டு பாதுகாவலர்கள் பலியானால் அவர்கள் வருந்துகிறார்கள்...

அனுதாபம் தெரிவித்து விட்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.

கொஞ்சநாள் கழித்து மறந்து விடுகிறோம்...மீண்டும் போர் துவங்கி விடுகிறது.. சண்டை வருகின்றது .மரணம் நடந்து கொண்டே உள்ளது..

இவற்றை தடுக்க தீர்வுதான் என்ன ?

போர் போராட்டம் இல்லாத நாடுகளையோ. மக்களையோ. பார்க்க முடிகிறதா என்றால் மிகக் கடினம்...

ஒரு மனிதனுடைய உயிர் விலை மதிப்பு அற்றது என்பதை யாராவது உணர்ந்தார்களா ? என்றால் இன்றுவரை யாரும் உணர்ந்து கொள்ளவில்லை..

இந்த விலை மதிப்பற்ற உயிர்க் கொலைக்கு யார் காரணம்.?

நாட்டை நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள்..

ஆட்சியாளர்கள் யார் ?  ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர்கள்...

மதம் எப்படி வந்த்து ? கடவுள் கொள்கையினால் வந்தது...

கடவுள் கொள்கை எப்படி வந்தது ..

பல அருளாளர்களால் வந்தது...

ஒரே கடவுள் என்ற உண்மை அறியாமல் ..ஒவ்வொரு ஞானிகளும்.ஒவ்வொரு அருளாளர்களும்..பல நாடுகளில் பலப்பல கடவுள்களை தோற்றுவித்து உள்ளார்கள்..

பல கடவுள்களுக்கு பல மதங்கள்..பல மதங்களுக்கு பல கொள்கைகள்.
பல நாடுகள் எனப் பிரிக்கப்பட்டது...

பலநாடுகளின் மதங்கள் பல நாடுகளை ஆட்சி செய்ய ஆசைப்படுகின்றன..
தங்களின் மதத்தின் கொள்களை மற்ற நாட்டு மக்கள் மீது திணிக்கப்பார்க்கின்றன.

எனவே தங்களின் ஆதிக்க  அதிகாரங்களை பயன் படுத்துகின்றன.அதனால் நாடுகடந்து செல்ல போர் செய்கின்றன.
போருக்கு வேண்டிய அணு ஆயுதங்களை நூதனமுறையில் தயார் செய்கின்றன..

போரினால் எல்லையில் பாதுகாக்கும் அப்பாவி மக்களின் உயிர்கள் பரிக்கப்படுகின்றது..

பல நாடுகளில் பல மதங்கள்
.பல கொள்கைகள் .பல  மனிதர்கள் என்ற வேற்றுமை மாற வேண்டும்..

எனவேதான் கடவுளின் பெயரால் .மதத்தின் பெயரால்.சமயத்தின் பெயரால் சாதியின் பெயரால்  நாடுகள் பிரிந்துள்ளன.சண்டையிட்டு போரிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்.

ஒற்றுமையாக வாழ வேண்டிய மனிதர்கள். நாட்டிற்குநாடு  ஒற்றுமை இல்லாமல்.மனிதநேயம் இல்லாமல்.
ஆன்மநேயம் இல்லாமல் போரிட்டு அழிந்து கொண்டே உள்ளார்கள்.

இதைத்தான் வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

என்ற பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்

உலகம் முழுவதும் சமய மதம் போன்ற பொய்யான கொள்கை  நெறிகளால் கடவுளை வேறுபடுத்தி ..ஒரே கடவுள் என்ற உண்மை அறியாமல் பல கடவுள்களை படைத்து .பேய்பிடித்த குரங்குகள் போல் பைத்தியக்காரத் தனமான கொள்கைகளை உருவாக்கி போரிட்டு மனிதனை மனிதனை அழித்துக் கொண்டுள்ளார்கள்.. என்கிறார்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.

பொது நெறி !

உலகம் முழுவதும் வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே....

சாதி.சமயம் மதம் அற்ற எல்லோருக்கும் பொதுவான ஒரே  கொள்கையை பின்பற்றி  வாழமுடியும்.

உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும்...

நாம் எல்லோரும் ஒரே கடவுளால் படைக்கப்பட்ட குழந்தைகள் என்பதை உணர்ந்து அறிந்து கொண்டால் சண்டைவருமா ? போர் வருமா ? உயிர் போகுமா ?

உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்...

இறைவன் படைத்த உலகத்தில் எல்லை எதற்கு .எல்லைத் தகராறு எதற்கு....எல்லையை பிடித்து. எல்லையை பிரித்து எத்தனை ஆண்டுகாலம் வாழப்போகிறீர்கள்...

கடவுளால் படைத்த உலகமும் உலகத்தில் உள்ள பொருள்களும் அப்படியே தான் இருக்கும்..

உயிர் இனங்கள் மட்டும் பிறந்து பிறந்து. இறந்து இறந்து.உருமாறிக் கொண்டே இருக்கும்...

*இந்த அசுத்த குணமான உலகத்தை மாற்றி புதிய புனித உலகமாக மாற்றுவதற்காகவே இறைவன் வள்ளலாரை  இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்...*

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்கிறார் வள்ளலார்.

*வள்ளலார் அனுப்பி வைத்த  ஒரே கடவுள் ! உண்மையான கடவுள் ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே*

இனி உலகம் முழுவதும் சாதி.சமய.மதங்கள் அழிந்து ஒழிந்து சுத்த சன்மார்க்கம் தழைத்து ஓங்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது..

உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள உலகத்தை காப்பாற்ற. உயிர்களை காப்பாற்ற ஒவ்வொருவரும்  வள்ளலார் காட்டிய உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை* பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்வோம்....

*சண்டை இல்லாத. போர் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு