வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அகவல் நாள் உண்மைதான் ?.

ஆன்ம நேய அன்புள்ள நம்மவர்களுக்கு வந்தனம்.!

சித்திரை மாதம் 8 ஆம் தேதி.21-04-2018.ஆம் நாள் தான் ஒரே இரவில்  அருட்பெருஞ் ஜோதி அகவல் எழுதிய நாள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

யார் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை.
யூகத்தின் அடிப்படையில் சொல்லி உள்ளார்கள்....

ஆறாம் திருமறை  முழுவதும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதுகின்றார்...
அதனால்தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கின்றார்...

ஆறாம் திருமுறை எழுதியது முழுவதும்.வள்ளலார் உடன் இருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும். வெளியில் உள்ள எவருக்கும் தெரியாது ..

வள்ளலார் சித்திபெற்ற பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்புதான் சன்மார்க்க சான்றோர்களால்.
திருஅருட்பா
ஆறாம் திருமுறை  வெளியிடப்பட்டது..

எனவே வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது தான் சன்மார்க்கிகளின் சத்திய ஒழுக்கம் நிறைந்த செயல்களாக இருக்க வேண்டும்..

சமய மத வாதிகள் போல் உண்மைத் தெரியாமல்.பொய் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போல் செயல் படுவது அறியாமையாகும்...

சுத்த சன்மார்க்கத்திற்கு தடையாக உள்ள எந்த காரியங்களையும் செய்தாலும் தவறான வழிகாட்டுதல் களாக மாறிவிடும்.

அகவல் படியுங்கள் நல்லது தான்..ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம் என்பது ஆண்டவரின் ஆணையாகும்...

அதனால்தான் ஆடாதீர் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்.பொய் உலகை நம்பாதீர் என்கின்றார் வள்ளலார்...

சரியான விளக்கம் அடுத்த கட்டுரையில் வெளியிடுகிறேன்.

தொடரும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு