திங்கள், 9 ஏப்ரல், 2018

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !

ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி வந்தனம்.

சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும்.கிராமங்களிலும்.வெளிநாடுகளிலும் .சன்மார்க்க சங்கம் சாலை.சபை என்ற பெயரில்..பலப்பல தலைப்புகளில் பெயர் வைத்து சன்மார்க்க சங்கப் பணிகள் செய்து கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனாலும் வள்ளலார் சொல்லுயுள்ள தலைப்பில் பெயர் வைப்பதுதான் சன்மார்க்கத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.அதுவே வள்ளலாரின் விருப்பமாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்..

வள்ளலார் ஆரம்ப காலத்தில்.வேத சன்மார்க்கம் என்றும்.அடுத்து ஷடாந்த சன்மார்க்க சங்கம் என்றும் பெயர் வைத்து இருந்தார்.அதற்கு அடுத்தபடியாக. வடலூரில் சபையைக் கட்டி முடித்த பின்பு.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கட்டளைப்படி சங்கம்.சாலை.சபைக்கு பெயர் மாற்றங்கள் செய்கின்றார்

18-7-1872 ஆம்  நாள் ஞானசபை விளக்கப் பத்திரிகையில் வெளியிடுகிறார்.

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்.

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் ஆணை இடுகின்றார்.

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் பெயர் வைக்காமல் நம் விருப்பம் போல் வைப்பது வள்ளலார் திருவார்த்தையை மீறிய செயலாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா !

எனவே இனிமேல் வள்ளலார் சொல்லிய வண்ணம் எல்லா சன்மார்க்க சங்கங்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் பனிவாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல ..
வள்ளல்பெருமான் வேண்டுதலாகும்..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். சாலை சபை என்று பெயர் மாற்றம் செய்தாலே போதும்

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் எல்லாச் சங்கம்.சாலை.சபையிலும் மறைமுகமாக இருந்து நல்ல முறையில் முன்னேற்றம் அடையச் செய்விப்பார்.

வள்ளலார் பாடல் !

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்

பாடுகின்றேன் என் தந்தை பிரான் பதப்புகழை அன்பினொடும் பாடிப்பாடி

நீடுகின்றேன் இன்பக் கூத்து ஆடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே !

என்கின்றார் வள்ளலார்.நம் எண்ணம் எல்லாம் அருள் நிரம்ப வேண்டும் என்றால் .வள்ளலார் சொல்லிய வண்ணம் நாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆகையால் சன்மார்க்க ஆன்மநேய சகோதர்கள் அனைவரும். அவரவர்கள் வைத்திருக்கும் சங்கங்களுக்கு .**சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்**என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு