புதன், 11 ஏப்ரல், 2018

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !

வள்ளலார் பாடல்.!

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்

கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே

வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்

சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

உலகில் பயிர்கள் மழை  இல்லாமல் வாடிக்கொண்டு கொண்டு உள்ளது.நினைத்துப் பார்க்க முடியாத அளவு மழையோ கொட்டோ கொட்டு என்று மழை கொட்டுகின்றது.ஒருவாரத்தில் மழையினால் வந்த தண்ணீர் எல்லாம் கடலில் சென்று கலந்து விடுகின்றது.மறுபடியும் மழை இல்லாமல் பயிர்கள் வாடி விடுகின்றது...

உயர்ந்த அறிவை இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து இருந்தும். அறிவுள்ள மனிதர்கள்  மழை வருவதற்கு முன் மழை நீரை தேக்கி வைக்க அணைக் கட்டி இருந்தால்.அடுத்த மழை வரும் வரைக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு பயிர்களைப் பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்து.பன்படுத்தி எல்லா உயிர்களுக்கும் உணவு கொடுத்து பாதுகாத்து இருக்கலாம்.நாமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்

எனவே மழையின் குற்றமா ? மனிதனின் குற்றமா ? பயிர்களின் குற்றமா  ? சிந்திக்க வேண்டும்.

மழையானது  உயிர்களுக்குத் தேவையான அளவிற்கு.இறைவனின் தனிப்பெரும் கருணையால் காலம் கருதிக் கொடுக்கப் படுகின்றது.

அவற்றை சேமித்து வைக்காத்து
அறிவுள்ள மனிதனின் குற்றம் என்பது நன்றாக தெளிவாகத் தெரிகிறது. இதைத்தான் அற்று வெள்ளம் வருவதுமுன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்து ஆடுதற்கே அறிந்தீர் என்று வள்ளலார் மக்களை அன்புடன் எச்சரிக்கை செய்கிறார்.

அறிவுள்ள மனிதர்கள்.ஆட்சியாளர்கள்.அதிகாரிகள் அறிவைப் பயன்படுத்தி செயல் பட்டு  இருந்தால் இன்று தண்ணீருக்காக.மக்கள் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

அதேபோல் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை செய்கிறார் வள்ளலார்.!

உயர்ந்த தெளிவான அறிவை மனிதனுக்கு மட்டும்  ஏன்?  இறைவன் கொடுத்துப் படைக்க வேண்டும் என்பதை மனிதன் அறிந்து.தெரிந்து. புரிந்து கொள்ள வேண்டும்..

எழுவகைப் பிறப்புகளிலே இறுதி பிறப்பு மனிதப் பிறப்பு..  இந்த பிறப்பானது கீழ்நோக்கிச் செல்லாமல் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் இறைச்சட்டம்.

இறைச் சட்டம் என்பது!

மனிதன் மரணம் அடைந்து கீழே மண்ணுக்குச் செல்லாமல் .இறைவன் திருஅருளைப் பெற்று மரணத்தை வென்று.மேல்நோக்கிச் சென்று இறைவனுடன் கலந்து கொள்ள வேண்டும்.என்பதுதான் இயற்கையின் சட்டம்.

இறைவன் அருளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வதால் எமன் என்னும் கூற்றுவன் வந்து உங்கள் உயிரைப் பறித்துக் கொண்டு போக வரப்போகிறானே அவனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் வள்ளலார்.

எமன் என்னும் கூற்றுவன்  வந்து அழைத்துப் போகாமல்  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்று வாயே பறையாய் அறைகின்றேன். நீங்கள் கேட்காமல் மரணத்தை நோக்கியே வாழ்கின்றீர் என்கின்றார்.

நான் சொல்வதை கேட்காமல் உங்கள் விருப்பம் போல் கண்டதை எல்லாம் பேசி வினைகளைப் பெருக்கிக் கொண்டு வீண் காலம் கழித்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

இந்த வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்மீன். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள் உங்கள் நன்மைக்காக சொல்லுகிறேன்.

இறைவன் அருளைப் பெருவதற்காக.
இறைவனே அருளை வழங்குவதற்காக.இறைவனே இங்கு வந்துள்ளார்.எனக்கு பூரண அருளை வழங்கியதால் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

உங்களுக்கும் அருள் நிச்சயம் வழங்குவார் இது நல்ல சமயம் இது நல்ல சமயம்.இவற்றை தவரவிட்டால் வேறு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதை சத்தியம் வைத்து தெரியப் படுத்துகின்றார்...

ஆற்று வெள்ளம் வருவதற்கு முன் அணை போடுவது போல் .எமன் என்னும் கூற்றுவன் வருவதற்கு முன் நீங்கள் அருளைப் பெற்றுக் கொண்டால் எமன் உங்களை நெருங்க மாட்டான் என்பதை மேலே கண்ட பாடல் வாயிலாக தெளிவாக தெரியப் படுத்துகின்றார் வள்ளலார்.

நாம் என்ன செய்து கொண்டுள்ளோம். தேவை இல்லாத வீண் வாதங்களைப் பேசி காலத்தை வீணே கழிக்கின்றோம்..
இனியும் வீண் காலம் கழிக்காமல் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து இறைவன் அருளை பூரணமாகப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு