செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ் மொழியின் சிறப்பு !


வள்ளலாரின் தமிழ் பற்று !

வள்ளல் பெருமானார் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 அருட்பெருஞ்ஜோதி  அகவல் எழுதும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் தமிழிலேயே எண்களை குறித்துள்ளார்.இதன் மூலம் நமது வள்ளல் பெருமானாரின் தமிழ்ப் பற்றை உணர்ந்துகொள்ளமுடியும். மேலும் அகவலில் அ முதல் ஔ வரை அகவல் வரி வருமிடத்தில் ' இ' க்கு அடுத்து 'ஈ' என்பதற்கு பதிலாக இ யில் உள்ள மேல் கோட்டை மேல் பக்கமாக சுழித்து விட்டிருப்பார்.கி,கீ போல. இது அந்த காலத்தில் யாரும் எண்ணிப்பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.

செந்நெறி பா.தண்டபாணி : தமிழ் என்ற சொல் 5 திருமுறைகளில் மாத்திரமே வள்ளல் பெருமானால் கையாளப்பட்டுள்ளது. உரைநடைப்பகுதியில் தமிழ் என்ற பதமும் விளக்கமும் விரிவாக வள்ளல் பெருமான் விளக்கியுள்ளார். 6ம் திருமுறை பாசுரங்களில் தமிழ் என்ற பதத்திற்கு பதிலாக தென்மொழி என்றே வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் தமிழை  தென்மொழி என்று  குறிப்பிடுவார். இங்கே தென் என்பதற்கு தெற்கு என்ற பொருள் கிடையாது.  இங்கே தென் என்பதற்கு அழகு, இனிமை என்றே பொருள் கொள்ளவேண்டும்.இப்பொருள் தமிழ் அகராதியிலும் உள்ளது.

செந்நெறி பா.தண்டபாணி: தென்மொழி என்று தமிழை சொன்னதற்கு காரணத்தை வள்ளல் பெருமான் உரைநடைப்பகுதியில்,
ஆரிய பாஷையும் மற்ற பாஷைகளும் டம்பமும் ஆரவாரமும் உடையது என்றும் வெளிப்படக்காட்டாமல் பெருமறைப்பை உடையது என்றும்,கற்பதற்கு மிகவும் பிரயாசை தேவைப்படும் எனவும் பொழுது போக்கிற்கே இம்மொழி பயன்படுகிறது என்றும் சொல்லிவிட்டு தென்மொழியான நமது தமிழ் மொழி பயிலுதற்கு மிகவும் இலேசாக உள்ளது என்றும்,மிகவும் இனிமை உடையது என்றும் ,சாகாக்கல்வியை அறிவிப்பதற்கு திருவருளால் கிடைத்த     தென்  மொழி என்றும் அதாவது தமிழ்தான் தேவ பாஷை என்று  "திருவருளால் " என்ற சொல்லின் மூலம் நமக்கு வள்ளல் பெருமான் குறிப்பிட்டுள்ளதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மேலும் நமது தமிழை தந்தை மொழி  என்று குறிப்பிட்டது எல்லா மொழிகளுக்கும் வித்து போன்றது நமது மொழி,அதாவது நம்மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றியுள்ளதை குறிப்பிடவே நமது மொழியை தந்தை மொழி என மொழிந்துள்ளார் வள்ளல் பெருமான்.

 செந்நெறி பா.தண்டபாணி: வள்ளல் பெருமான் அகவல் எழுதும்போது  தமிழின் இனிமையில் மயங்கி, தமிழ் அமிழ்தை உண்ட காரணத்தினால் அகவலை ஆசிரியப்பா வகையில் எழுதுவதையும் மறந்து, தொல் காப்பியம் ஆசிரியப்பாவிற்கு இலக்கணமாக குறைந்த அளவு 3 அடிகள் அதிகபட்ச அளவு 1000 அடிகள் என குறிப்பிட்டதையும் தமிழின் இனிமை காரணமாக இலக்கணத்தை மீறி 1596 அடிகள் கொண்ட அகவலை நமக்கு தந்ததே வள்ளல் பெருமானுக்கு  தமிழ் மீதிருந்த அளவில்லாத பற்றின் காரணமாகவே என நாம் நன்றாக உணர முடிகிறது.

மேலும் வேறு மொழிகளில் பிறப்பிக்காமல் தென்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றார்.

இறைவன் உள்ளவரை இறைவனால் படைத்த உலகம் உள்ளவரை தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஏன் என்றால்.தமிழ் இறை மொழி...மற்றைய மொழிகள்.தேவர் மொழி மனிதர் மொழி.இறை மொழி என்பது இறைவனால் படைக்கப்பட்ட மொழியாகும்.

இறவா மொழி என்றே தமிழுக்கு பெயராகும்.

எனவேதான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பல மொழிகளைக் கற்ற சான்றோர்கள் சொல்லுகின்றார்கள்.

தமிழில் தான் தன்மை.முன்னிலை.படர்க்கை என்ற இலக்கணம் உள்ளன.

தன்னைப் பற்றி அறிந்து கொள்வது தன்மை என்பதாகும்

கண்களுக்கு தெரிந்தவைகள் எல்லாம் அறிந்து கொள்வது முன்னிலை என்பதாகும்.

தன்னையும்.கண்களுக்குத் தெரிந்த அனைத்தும்.கண்களுக்குத் தெரியாத உலகங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டுவதே படர்க்கை என்பதாகும்.

இவை யாவும் தமிழில் தான் உள்ளன.

தொடரும்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு