புதன், 21 ஜூன், 2017

ஒருவன் நல்லவனா ? கெட்டவனா ? எப்படி அறிவது ?

ஒருவன் நல்லவனா ? கெட்டவனா ? எப்படி அறிவது ?

அவன் உடம்பைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பட்டம்.பதவி.புகழ்.செயல்களால் நல்லவன் என்று சொல்ல முடியாது.

நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.துன்பம்.மரணம் வருபவர்கள் அனைவரும் கெட்டவர்களே.என்கிறார் வள்ளலார்.

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே !

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரேநற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேபுத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவேஉரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடல்களின் வாயிலாக தெரிவிக்கின்றார்.

எனவே உலகில் மரணம்  வராமல் வாழ்கின்றவர் எவரோ அவரே நல்லவர்.மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்களே.

ஆதலால் நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையைக் கடைபிடித்து வள்ளலார் போல் வாழ்ந்து .நரை.திரை.பிணி.மூப்பு.பயம் மரணம் இல்லாமல் வாழ்ந்தால் மட்டுமே நல்லவரகள் ஆக முடியும்.

நாம் நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம்.பொருப்பு.தீர்ப்பு அனைத்தும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் தான் உள்ளது.

என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே நாம் மேலே செல்ல முடியும். நாம் மேலே செல்வதற்கு கல்வி கற்க வேண்டும்.

அந்த கல்விக்குப் பெயர் சாகாக்கல்வி.சிற்றம்பலக்கல்வி என்று பெயர்.அந்த கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.

வள்ளலாரும் அவர் இடத்தில் சென்றுதான் சாகாக்கல்வியைக் கற்று நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கி தேர்ச்சிப் பெற்றார்.

நல்ல பிள்ளை.செல்லப்பிள்ளை.கதிர்பிள்ளை.என்றும் ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை என்னும்
பட்டம் பெற்றார்.

சாகும் மனிதர்களிடம் இடம் இருந்து வாங்கும் பட்டங்கள் எல்லாம் அழிந்துவிடும்.

சாகாமல் என்றும் அழியாமல் உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் வாங்கும் பட்டம் பதவி என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்சாவையும் நோவையும் தவிர்ந்தேன்சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்பண்ணிய தவம்பலித் ததுவே.!

என்ற பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உலகில் நல்லவர் ஒருவர்உண்டு என்றால் அவர் வள்ளலார் மட்டுமே.

அவர் கற்றக்கலவி.அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் நமக்கு பாடமாக எழுதி வைத்து உள்ளார்.

அந்த பாடத்தைப் படித்து அவர்போல் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கினால் மட்டுமே நல்லவன் என்ற பெயர் உள்ள
 பட்டத்தை பெற முடியும்.

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக்  கருணைநெறிஉற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

வள்ளலாரைப்போல் சாகாக்கல்வி கற்க வேண்டும்

கற்காமல் இருக்கும் வரை நாம் அனைவரும் கெட்டவர்களே !

மரணம் அடைந்தவர்கள் அனைவரும் கெட்டவர்களே.

சிந்திப்போம் செயல்படுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு