சனி, 25 டிசம்பர், 2021

கரு உண்டாகும் விதம் !

 *கரு உண்டாகும் விதம் !* 


சுக்கிலம்( விந்து) உண்டாவதற்கு காரணம் !


*நாம் தினம் ஆகாரம் கொள்கிறோம் அந்த ஆகாரம்   மார்பினிடத்தில் ஒருதட்டில் தங்கும் அந்த தட்டின்மேல் கடவுள் கடவுளி என்ற இரண்டு நரம்புகள் இருக்கும் ஒருநரம்பு சக்தியை கொடுத்து கொண்டேஇருக்கும் ஒருநரம்பு யானை துதிக்கைபோல் அசைந்துகொண்டே இருக்கும் அந்த நரம்புகளுக்கு சமயத்தில் விநாயகர் முருகன் என்று பெயர் வைத்துள்ளார்கள்* *அந்த இரண்டு நரம்புகளும் மிகவும் முக்கியமானதாகும். சகோதர உரிமை உடையதுபோல் இடைவிடாது ஓய்வில்லாமல் இயங்கி கொண்டே இருக்கும்..உண்ணும் உணவை அரைத்துக்கொண்டே இருக்கும்*


*உண்ட அன்னத்தை ஒருமணிநேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவங்களுக்கு ஊட்டுகின்றது*. *மறுபடியும் இரண்டுமணி நேரத்தில் மேற்படி அன்னத்தினது  மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி இரண்டரை வராகன் எடையில் கோசநுனியில் ஒன்றும். நாபியில் ஒன்றும். பிரமந்திரத்தில் அரையும் சேர்த்து விடுகின்றது* *மீதமுள்ள மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை. குரும்பை. நகத்தூசு. தொப்புள் அழுக்கு. கண்பீளை முதலிய அழுக்கை வெளிப்படுத்துகின்றது*


*மேற்படி மீதமுள்ள  அன்னத்தை 3 மூன்று மணிநேரத்திற்குள்  அதிலுள்ள  திரவாம்சத்தைப் பிரித்து உதிரமாக்கி (இரத்தம்) உடம்பு எங்கும் ஊட்டுகின்றது* *மூன்று மணி நேரத்திற்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது* *இதுபோல் நாம் உன்னும் எந்த உணவுப்பொருள்களையும் பிரிக்கின்றது. ஆதலால் ஆகாரம் கொண்ட மூன்று மணி நேரத்திற்குமேல் ஆகாரம் கொள்ள வேண்டும்* இது *ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்* 


*சுக்கிலம் சுரோணிதம்!*


*ஆணிடம்  விந்து தங்குவதற்கு (லிங்கத்தடி) சுக்கிலம் என்றும் பெண்ணிடம் விந்து தங்குவதற்கு சுரோணிதம் என்று பெயர். இதைத்தான் சமயக் கோயில்களில் மூலஸ்தானத்தில் (சக்தி சிவம் என்று பெயர் வைத்து) ஆண் உறுப்பையும் பெண் உறுப்பையும் சிவலிங்கமாக வடிவமைத்து வைத்துள்ளார்கள்*


கரு உற்பத்தியாகும் விதம்! 


*சுக்கிலம் இரண்டரை வராகன் எடை அளவா இருக்கும் அதில் விஷபாகமாகிய சத்தி 1 ஒருபாகம்.. சாதாரணம் என்னும் பூதபாகமாகிய அறிவு 1 பாகம். அசாதாரண அமுதபாகமாகிய விந்து அரை பாகம்*  *ஆக இரண்டரை அளவு உள்ளன இதுபோல் பெண்பால் இடத்தும் சுரோணிதம் உள்ளது*


*மேற்கண்ட சுக்கில சுரோணிதம் இரண்டிலும் கடவுள் ஆவி உள்ளது*


*ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளும்போது கோசத்தின் முன்வருவது விஷம். அதை அடுத்து பூதம். அதற்கு மேல் அமுதம் உண்டு* *இவ்வாறு பெண்பாலிடத்தும் உண்டு*


*முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சி காலத்தில் வெளிப்பட்டால் தேகநட்டம். பூதம் வெளிப்பட்டால் வியாதி. அமுதம் வெளிப்பட்டால் சந்த்தி விருத்தி (குழந்தை) கரு உண்டாகும்*


*கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி விஷபாகத்தை பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார்* இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குச் கர்ப்பமில்லை.

மேலும் விந்துவளம்.இடவளம்.வன்னி.கிருமி.மோகம்.விசேடம் இவற்றாலும் கர்ப்பமில்லை.


*சுக்கில சுரோணிதம்*


*பெண்ணின் சுரோணிதப் பையிடத்தில்  3.  மூன்றுமணி சேர்ந்த  கொத்து ஒன்று வலது புறத்திலும். நான்கு மணிசேர்ந்த கொத்து 1ஒன்று  இடது புறத்திலும் இருக்கின்றன*.

*சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பம் தரிக்கின்ற காலத்தில் மூன்று மணி சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் ஆண் குழந்தையும் நான்குமணி சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும்*.


*மேலும் புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும் இடதுபுறம் சாய்வாக் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.*


*மேலே கண்டவாறு  இல்லறத்தில் (குடும்பவாழ்க்கையில்) ஈடுபடுபவர்களுக்கும் கரு உண்டாகும் விபரத்தையும். கடவுளின் கருணையும் எவ்வாறு ஒழுக்கமாக உடல்உறவை கடைபிடிக்க வேண்டும்  என்ற தெளிவையும்* *அமுதபாகம் எவ்வளவு முக்கியமானது என்பதையும்*

*வள்ளலார் விளக்கமாக விளக்கி சொல்லி உள்ளார்*  இதற்காக சோதிடர்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.


மேலும் கரு உண்டாவதற்கு ஒரு புதிய வழியையும் சொல்லியுள்ளார்.


*பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளது  பசியை ஆற்றுவிப்பதே  விரதமாக அனுசரித்தார்களானால் அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை (குழந்தையை) உண்டுபண்ணும் என்பது உண்மை என்றும் சொல்லி உள்ளார்*.


*புரியாதவர்கள் புரிந்து கொள்ளுங்கள் அறியாதவர்கள் அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடியுங்கள்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு