செவ்வாய், 28 ஜூலை, 2020

ஞான மூலிகை !

*ஞான மூலிகை* !

மனிதன் உடம்பை பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும்.ஜீவ சக்தியைப் பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளும்.இயற்கை மூலிகைகளும் சித்த மருத்துவம் மற்றும் யோமியோபதி.யுனானி.அலோபதி போன்ற மருத்துவ உலகம் பலவகையான மருத்துவ முறைகளை சொல்லியும் மருந்துகள் கொடுத்தும் வருகிறார்கள்.

*வள்ளலார் சொல்லும் இரண்டு  மூலிகைகள் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று ஆணித்தரமாக சொல்லி உள்ளார்*.

மேலும் வள்ளலார் சொல்லுவதை  கவனிக்கவும்.

வள்ளலார் சொல்லுகின்றார். *மகான்களிடத்தில் அனந்தகாலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் உண்மையும்.பிரயோஜனத்தையும்.அனுபவத்தையும் வெளியிடமாட்டார்கள் என்பதை சொல்லி உள்ளார்*.

வள்ளலார் சொல்லி யுள்ளதை கீழே படித்து பார்க்கவும்.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்.

கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும்.

மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், *தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும்*.

*முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள்*

 பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. *அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும்*. மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - *பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும்*.

நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம்.

அது போலவே, *அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை*.

அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். *கரிசாலை தூதுவளை உலகிலே சிறந்த ஞான மூலிகைகளாகும். தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும் உண்மை*.

*கரிசலாங்கண்ணியும்* *தூதுவளையும்*
 *பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும்*. தேகம் திடமுள்ளதாகி நெடு நாளைக்கிருக்கும். தூதுளையையும்் அப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், கபத்தை நீக்கும் .சுரத்தை தடுக்கும் புத்தியை விசாலப்படுத்தும்.

இப்போது உலகம் முழுவதும் பரவிவரும் *கொரோனோ வைரஸ் தொற்றுக்கு மிகவும் முக்கியமான மூலிகை கரிசலாங்கண்ணியும் தூதுவளையும்* மிகவும் முக்கியமானது. அத்தியாவசியமானது என்பதை அறிந்து பயன் படுத்தினால் மனித உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியும் பிராண சக்தியும் அதிகம் கூடும். அதிகம் கொடுக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் தேவை இல்லை.

*கொரோனோ வைரஸ் தொற்று மனித உடம்பில் நுழைந்து.உயிரையும் உடம்பையும் தாக்காமல்.காப்பாற்றிக் கொள்ளவும் ஆபத்து இல்லாமல் பாதுகாக்கவும்.பயம் இல்லாமல் வாழவும். *பணம் அதிகம் செலவு இல்லாமல்* பாதுகாத்துக் கொள்ளவும் மேலே கண்ட மூலிகைகளை பயன் படுத்திக் கொள்ளவும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு