வியாழன், 21 நவம்பர், 2019

மாலைகள் போடுவது ஏன் ?

*மாலைகள் போடுவது ஏன் !*

சுத்த சன்மார்க்கம் என்பது பேச்சு அளவில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும்.

தத்துவ உருவ தெய்வங்களுக்கு மாலை போடுவார்கள்.

இறந்தவர்களுக்கு மாலை போடுவார்கள்.

இறந்தபோன தலைவர்கள்.மற்றும் சிறப்புடன் மக்களுக்கு நன்மைசெயது மாண்டு போனவர்களுக்கு சிலைகள் வைத்து மாலைபோடுவார்கள்

குறிப்பாக மாண்டு போனவர்களுக்குத் தான் மாலை போடுவது வழக்கமாக தொன்று தொட்டு வழக்கமாக நடைமுறையில் உள்ளன.

*வள்ளலார் அந்த வகையை சார்ந்தவர் அல்ல*.

*மரணத்தை வென்ற மகான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொண்டவர்*.

ஐந்தொழில் வல்லபம் பெற்றவர்

அருட்பெருஞ்ஜோதி யாக தன்னை மாற்றிக் கொண்டவர்.என்றும் நிரந்தரமாக உள்ளவர்.

தன் உடம்பை வெளிக்காட்டாமல் போட்டோவில் கூட விழச்செய்யாதவர்.

அப்படிப்பட்ட ஞான தேகம் பெற்றவரை ஒளியாக வழிபடவேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

*படம் வேண்டாம் என்பவற்கே படம் வைத்தும்*சிலை வைத்தும்* *மாலைப்போட்டும்* வணங்குவதும்.
வழிபாடு செய்வதும் சரியா தவறா என்று சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒளியாக வைத்துதான் வழிபடவேண்டும் என்று *வடலூரில் சத்திய ஞானசபையை தோற்றுவித்தவர்*

*ஜோதிக்கும் மாலை போடுகிறார்கள்*

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை.
ஒழுக்கங்களை உண்மையாக கடைப்பிடிப்பவர்கள் இதுபோன்ற தவறான செயல்களை செய்ய மாட்டார்கள்.உண்மை அறியாமலே பழக்கத்தின் வாயிலாக செய்து கொண்டு வருகிறார்கள்

சமய மதங்களைப் பின்பற்றும் சன்மார்க்கிகள்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு செயல்படுகிறார்கள்.

அவர்கள் அறியாமையில் செய்யும் செயல்கள் வருங்கால இளைய சமுதாயத்தையும் அறியாமையில் தள்ளிவிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சுத்த சன்மார்க்கம் என்பது சாதி.சமய.மதங்களின் சடங்குகளை கடந்தது

தினமும் ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களிலும் வழிபாடு முடிந்து இறுதியில் விண்ணப்பம் சொல்கிறார்கள் அதில் உள்ள உண்மையான வார்த்தைகள் என்னவென்று அறிந்து தெரிந்து.புரிந்து கொள்ளாமல் *அதையும் சடங்குகளாகவே படித்துக்கொண்டு வருகிறார்கள்.*

*வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க விண்ணப்பம்.*

பொருமையாக படியுங்கள் உண்மை விளங்கும்.

வள்ளலார் சொல்லியது !

அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே !  அற்புத திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியா்களாக்கி உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச்

சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே !

இது தொடங்கி சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய *சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள்.*
என்பவற்றின் *ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.*
*வருணம்.ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்*

எங்கள் மனதில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய
 *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய
தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் ! வந்தனம் !

மேலே கண்ட விண்ணப்பத்தை நாம் படித்து என்ன தெரிந்து கொண்டோம் என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோளாகும்.

மாலைகள் போட்டு விரையம் செய்யும் அந்த பணத்தில்  ஏழைகளுக்கு அன்னதானம்.மற்றும் ஜீவகாருண்யம் செய்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு