சனி, 19 அக்டோபர், 2019

வாழ்த்து மடல் !

*வாழ்த்து மடல் !*

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

மலேசியா நாட்டின் பெக்கான் கர்ணி(சிம்பாங் தீகா ) சத்தியவான் பேராக் என்னும் இடத்தில்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்த ஆணைப்படி *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை*  அழகிய அருள் தோற்றத்துடன் தோற்றுவிக்கப்படுகின்றது.

அதன் நன்னீராட்டு விழா 14-12-2019 ..15-12-2019 ஆகிய இரண்டு நாட்கள் அருள் சார்ந்த சான்றோர்கள் முன்னிலையில் விழா நடைபெற உள்ளது.

அத்திரு அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை தோற்றுவிக்க  பெருமளவு உடலாலும் உள்ளத்தாலும் அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கும் *அருள் திரு இந்துபாபா* அவர்களுக்கு நீண்ட ஆயுளும்.நிறைந்த செல்வமும்.அழியாப் புகழும் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபையை தோற்றுவிக்க ஆண்டவரின் அருள் ஆசியோடு தலைமை ஏற்று அளவில்லா பொருள் உதவி வாரி வழங்கி. அத்திரு அலங்காரப்பணியை மகிழ்ச்சியுடன் செய்துவரும் *திரு. திருமதி. வனிதா திருமலை* அவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்.அயலார் அனைவருக்கும் எல்லாம் வல்ல *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்குறு தீமையும் தொடராமல்* இரவும் பகலும் பாதுகாத்து அருள் வழங்க வேணுமாய் தாழ்வணங்கி சாற்றுகின்றோம்.

மேலும்.

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை என்று குறிக்கப்படுகின்ற ஞானசபையை அடையாளமாக திருவருள் குறிப்பால்  இங்கே தோற்றுவிக்கப்படுகின்றோம்.அதிலே அமர்ந்து அளவு கடந்த நெடுங்காலம் *சித்தி எல்லாம் விளங்கத் திருவருள் திருநடம்* செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

அத்திருவருள் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையைக் கருதும் தோறும் பெங்களிப்பு அடைகின்றோம்.

இனி அத்திரு *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபையை* அலங்கரிக்கத் தொடங்குகின்றோம்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே* !

தேவரீர் அருள் உருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்வித்த்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தல் வேண்டும்.

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே !

அத்திரு அலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி *அற்புதத் திருவருள் விளக்கத்தால்* எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி. உண்மை அறிவை விளக்கி. உண்மை இன்பத்தை அளித்து. *சமரச சுத்த சன்மார்க்க நிலையில்* வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*

இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின்* முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய *ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
சென்னை.வடலூர்
தமிழ்நாடு
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு