புதன், 16 அக்டோபர், 2019

அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும் !

அருட் பெரும் ஜோதி பாகம் ;-1

         உலகத்தினிடத்தே பெருதற்க்கு மிகவும் அருமையாகிய மனித

தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் 

ஒழுகவேண்டுவதும் யாதெனில்;--

         இயற்கைத்தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும், இயற்கையில்த் 

தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பமானவர்

என்றும் எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்

எல்லா சத்திகளையும் ,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும் ,எல்லா

பொருள்களையும் ,எல்லா தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும் ,எல்லா

செயல்களையும் ,எல்லா இச்சைகளையும் ,எல்லா ஞானம்களையும்,எல்லா

பயன்களையும் ,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லாவற்றையும்
      தமது திருவருட் சக்தியால்

     1 ;---தோற்றுவித்தல்
     2 ,;--வாழ்வித்தல்
     3 ;---குற்றம் நீக்குவித்தல்
     4,;---பக்குவம் வருவித்தல்
     5 ;---விளக்கம் செய்வித்தல்

என்னும் ஐந்தொழில்கள் முதலிய் பெருங்கருணைத் தொழ்ல்களை
இயற்றுவிக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும், ஒன்றும் அல்லாதவர்
என்றும் ,சர்வகாருன்யர் என்றும் ,எல்லாம் உடையராய் தமக்கு ஒருவார்றானும்

ஒப்பு ,உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை
அருட்பெரும் ஜோதியர் ,என்றும் ;---சத்திய அறிவால்
அறியப்படுகின்ற ,உண்மைக்கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் 

நீக்கமின்றி நிறைந்து சுத்தமெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில்
அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகினறார்

 என்று வள்ளலார் விளக்கமாக அருட்பாவில் பதிவு செய்துள்ளார்
ஆதலால் நாம் உண்மை கடவுலான் அருட்பெரும்ஜோதி கடவுளை

வழிபட்டு வாழ்ந்து வழிகாட்டுவோம்

அருட்பெரும்ஜோதி யாகிய ஒருவரே உண்மைக்கடவுள் என்பதை
உணர்ந்து ,நாம் அனைவரும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து
அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வை ப்பெற்று வாழாமல்
 ,
பல்வேறு கற்பனைகளால்

பல்வேறு சமயங்களிலும் ,பல்வேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங் 
களிலும் ,பல்வேறு ல்ஷ்சயங்களிலும்,நெடுங்காலம் பிறந்து பிறந்து
அவத்தை வசத்தர்களாகி,சிறிய அறிவும்  இன்றி,விரைந்து விரைந்து
பல்வேறு ஆபத்து களினால்,துன்பத்தில் அழிந்து இறந்து, இறந்து,
 வீண் போய்விட்டோம் ,வீண் போகின்றோம்,


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் வீண்போகாமல்,உண்மை
அன்பு, உண்மைஇரக்கம்,முதலிய் சுபகுணங்களைப்பெற்று
நற்செய்கை
உடையவர்களாய்,எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மைப் பொது நெறியாகி விளங்கும்

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெரு வாழ்வில்
 பெரும்
சுகத்தையும் பெருங்களிப்பையும்,அடைந்து வாழும
பொறுட்டு,மேற்குறித்த

உண்மைக்கடவுள் தாமே திருஉளங்கொண்டு ,சுத்தசன்மார்க்கதின் முக்கிய
லட்சியயமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை
சித்தி விளாகம் என்னும் சன்னிதானத்திற்கு அடுத்த ,உத்தரஞான 

சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற,வடலூர் என்னும் பார்வதிபுரத்தில்

தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ,இக்காலம் தொடங்கி

அளவு குறிக்கப்டாதநெடுங்காலம் ,அற்புத சித்திகள எல்லாம் விளங்க

யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருளுகின்றோம்

என்னும் திருக்குறிப்பைஇவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும்

 தயவுஉடைய
நமது கருணையாம் கடலாராகிய அருமைத் தந்தையார்

திரு அருட்பிரகாசவள்ளலார் முன்னிலையில் ,அருட்பெரும்ஜோதி

ஆண்டவர் தெரியப் படுத்தியுள்ளார் ஆதலால் நாம் அனைவரும்

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் சென்று உண்மைக்கடவுள்

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்பதை உணர்ந்து ,சமய ,மதக்கொள்கைகளைத் தவிர்த்து உண்மைக் கடவுளை அறிந்து கொண்டு 
நலமுடன் வாழ்ந்து வழிகாட்டுவோம்


அருட் பெரும்ஜோதி என்னும் மாபெரும் அருள்ஒளி அணுவானது ,இயற்கை
உண்மை நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ அருள் வெளியில் ,இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய  அருட்பெரும்ஜோதிசொருபராய்  ,இயற்கை 
இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச செய்கையை ,
எல்லாஉயிர்கலும் இன்பம் அடைதல் பொருட்டுத் திறுவுளக்கருனையால்
செய்தருளுகின்ற ,
சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் தான் அருட்பெரும்ஜோதி என்பதாகும்,
அருட்பெரும் ஜோதிக்கு பலபெயர் வழங்கப்பட்டு உள்ளது ,
அவைகள் ;-----இயற்கை உண்மையர் என்றும் ---,இயற்கை அறிவினர் என்றும் -----,இயற்க்கை அன்பினர் என்றும்---- ,நிற்குனர் என்றும் ,
சிற்குனர் என்றும் ,----சித்தியர் என்றும் ,-----சத்தியர் என்றும் ,----
ஏகர் என்றும் ,-----அநேகர் என்றும் ,-----ஆதியர் என்றும் ,---
அனாதியர் என்றும் ,----அற்புதர் என்றும் ,--நிர்அதிசியர் என்றும் ,---
எல்லாம் ஆனவர் என்றும் ,----எல்லாமுடையவர் என்றும் ,------
எல்லாம் வல்லவர் என்றும் ,-----அருட்பெரும்ஜோதியர் என்றும் ,
குறிக்கப்படுதல் முதலிய் அளவுகடந்த திருகுறிப்புப்  திருவார்தைகளால்,சுத்த சன்மார்க்க அருள் ஞானியாகிய வள்ளலாரால்,
துதித்தும்,நினைந்தும் ,உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவித்தும் ,வெளியிடப்பட்டதாகும் ,
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை, இவ்வுலகில்
உள்ள ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து ,அருளை அடைந்து ,
அழிவில்லாத் சத்திய பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,
பல்வேறு சமய,மத மார்கக்ங்களிலும்,பல்வேறு லட்சயங்க்களைக்
கொண்டு ,நெடுங்காலம் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து ,அவத்தை 
வசத்தர்களாகிச சிறியஅறிவுமின்றி ,விரைந்து விரைந்து ,பல்வேறு 
ஆபத்துகளினால் துன்பத்தில் அழிந்து வீண் போகின்றோம் ,
இனியும் அப்படி வீண் போகாமல் ,வள்ளலார் காட்டிய ,
சமரச சுத்தசன்மார்க்க நெறியை கடைப் பிடித்து வாழ்வதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்.
அருட்பெரும்ஜோதி ,என்பது மாபெரும் அருள் நிறைந்த அணுவாகும் ,
இதற்க்கு இயற்கை உண்மை என்று பெயர் ,இதை யாராலும் ,
உருவாக்க முடியாது ,அழிக்கவும் முடியாது. .
என்றும் உள்ளதாய் 
விளங்கபட்டது ,
பலகோடி அண்டங்களும் ,அண்டங்களில் உள்ள பஞ்ச பூதங்க்களும்,
பூதங்களை இயக்கம் மாயை ,மாமாயை ,பெருமாயை என்னும் மாயா சக்தி
அணுக்களும், ஆன்மாக்களுக்கு உயிர்.உடம்பு தோன்ற காரண காரியமாய் இருக்கின்றது.
ஆன்மாக்களுக்கும் [ஆண்மாஅணு ] மற்றும் உள்ள எல்லாவற்றுககும் ,
முழு முதற்க்காரணமாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அணுவாகும் ,அந்த அணு அனகமாக எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது.
அதற்கு,பெயர்,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்பதாகும்.
இதற்கு அருள்வெளி என்றும் பெயர் ,
இந்த அருள்வெளியில் அருள் சக்தி அனாதியாய் நீக்கமற நிறைந்தது ,
இருக்கிறது .அதேபோல் ஆகாயம் அனாதியாய் நீக்கமற நிறைந்தது இருக்கிறது .
அதுபோல் ,அதற்க்குக காரணமான பரமாகாச சொருபராகிய
அருட்பெரும் அணு அனாதியாய் நீக்கமற் நிறைந்தது இருக்கிறது .
இந்த அருட் பெரு வெளியில் தான் ,ஆன்மா என்னும் அணுக்களும் 
நீக்கமற நிறைந்து நிரம்பி இருக்கின்றன் 
அருட்பெரு வெளியில் ;--
1 ,அருள்வெளி ,
2 ,அருள் காற்று 
3 ,அருள் அமுதம் 
4 ,அருள் ஆன்மா 
5 ,அருட்பெரும்ஜோதி என்னும் [மாபெரும் அணு ]
இவை ஐந்தும் அருட்பெரு வெளியில் நீக்கமற நிறைந்தது ,
இருக்கின்றன் .
அருட்பெரும் அருளின்  மூலமாக,பலகோடி அண்டங்களை ,உருவாக்கி,படைத்து அந்த
 அண்டங்களில் வாழ்வதற்காக பலகோடி ஆன்மாக்களையும்   . 
அனுப்பி வைக்கப்படுகிறது ,
அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் பதியாகிய ,அருட்சமூகம்,
உண்மையில் இப்படி இருக்க,
நாம் இது  வரையில் ,பார்த்தும் ,கேட்டும் பற்று வைத்துக் கெண்டு 
இருந்த வேதம்,ஆகமம் ,புராணம் ,இதிகாசம் ,முதலிய கலைகளை,
  கற்பனைக்கதைகளாக புனைந்து உரைத்து ,
இருக்கிறார்கள்,என்பதை 
வள்ளலார் திரு அருட்ப்பாவில் கீழே கண்ட பாடல் மூலம் தெளிவு 
படுத்தி உள்ளார் ,
பாடல் !
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் 
வேதா கமத்தின் விளைவு அறியீர்,----சூதாகச்
சென்னதளால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை 
என்ன பயனோ இவை !

கடவுளின் உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் வேதம் ,ஆகமம்,புராணம் ,இதிகாசம்.சாத்திரம் போன்ற கதைகளை கட்டி வெளியே காட்டி உள்ளார்கள்.இவைகள்
,இருந்து என்ன பயன் ,இவைகளைஅழித்து விடுவதே ,
நல்லது என்கிறார் வள்ளலார் ,
இனிமேலாவது உண்மையை தெரிந்து கொண்டு வள்ளலார் 
காட்டிய வழியில் வாழ்வோம் 


அருட்பெரும் ஜோதி ;--பாகம் 


         எல்லா அண்டங்களையும்,எல்லா புவனங்களையும் ,எல்லாப்

பொருள்களையும்,எல்லா ஜீவர்களையும் ,எல்லா ஒழுக்கங்களையும் 

எல்லாபயன்களையும்,தமது பூரண இயற்க்கை விளக்கமாகிய,

அருள் சக்தியால்,தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற ,

இயற்கைஉண்மை வடிவினராகிய்,ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதி
என்னும் மாபெரும் ,அணுவாகும் ,

        அருட்பெரும்ஜோதி என்னும்,அணுவானது எப்படி செயல் படுகிறது ,
என்பதை வள்ளலார் திருஅருட்பாவில்உள்ள நடராஜபதி மாலையில் ,
பதிவு செய்துள்ளார்.

ஒரு பிரமன்அண்டங்கள் அடி முடி பெருமையே 
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி  மால்அண்டம். அரன் அண்டம்
உற்ற கோடாகோடியே
திருகளறு பல கோடி ஈசன் அண்டம் சதா 
சிவன்அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர் தஞ் 
சீரன்டம் என்புகழுவேன் 
உருவுறு இவண்டங்கள்அத்தனையும் அருள்வெளியில் 
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனம்மிடும் 
ஒரு பெரும் கருணை அரசே 
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா 
வரம் தந்த மெய்த்தந்தையே
மணி மன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எல்லாம் 
வல்ல நடராஜபதியே,

என்றும்,அடுத்து வரும் பதிவிளக்கம்என்னும் பகுதியில் ,
ஒரு பாடல் பதிவு ,

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இல்லார் குணங்கள் 
ஏதும் இல்லார் தத்துவங்கள் ஏதும் இல்லார் மற்றோர் 
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும் 
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார் 
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் 
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபை தனிலே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

அடுத்து ஒரு பாடல் ,

ஒன்றும் மிலார் இரண்டும் இலார் ஒன்றும் இரண்டும் மானார் 
உருவு மளார் அருவுமளார் உ ரு அருவுமானார்
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும்முளார் தமக்குஒர்
ஆதிஇல்லார் அந்தமில்லார் அருட்பெரும்ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் 
யாவும் இல்லார் யாவும்முள்ளார் யாவுமளார் யாவும் 
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

என்று வள்ளலார் அருட்பெரும்ஜோதியைப் பற்றித்தெளிவுப் 
படுத்தியுள்ளார் ,

சமய ,மதங்களில் சொல்லியககடவுள் அல்ல ,
வள்ளலார் காட்டிய ,கண்ட ,,உண்மையான தனிக்கடவுள் ,
அருட்பெரும்ஜோதியாகும்,என்பதை தெளிவாக ,
விளக்கயுள்ளார் ,

இனி வள்ளலார் கட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியை, கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து காட்டுவதே உயர்ந்த மனித தேகம் பெற்றதின் கடைமையாகும்.

உண்மையான கடவுளின் தன்மையை ,புரிந்து கொல்லாத,

சமய ,மத ,வாதிகள் ஒன்று கிடக்க ஒன்று உளறி இருக்கிறார்கள்,
ஒரு உடம்பிற்கு ,இரண்டு ,மூன்று உயிர் இருக்கிறது என்றால் ,
நம்பமுடிமா /,அதுபோல் கடவுள் பலஉண்டு என்றால் எப்படி
நம்பமுடியும், என்று வள்ளலார் கீழே கண்ட பாடலில் தெளிவு
படுத்துகிறார் ,

உருவராகியும் அருவராகியும் உரு அருவினராகியும்
ஒருவரே உள்ளார் கடவுள் கண்டு அறிமினோ  உலகில் 
உணர்வின்றி
இருவராம் என்றும் மூவறேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழலுவது ஏன் உடலுக்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ,

என வள்ளலார் சாதி ,மத ,சமய வாதிகளை பார்த்து கேள்விக் கேட்கின்றார்.உலகில் .
பலசம்யங்களும் ,மதங்களும் தோன்றியதால் உண்மையான கடவுளை
தெரிந்துகொள்ள மக்கள் தவறி விட்டார்கள் ,
மக்களை வழிநடத்த வந்த சமய ,மதங்கள் மக்களை முட்டாள்களாக்கி
அறிவிழ்க்க செய்துவிட்டார்கள் .

வள்ளலார் சமய மதவாதிகளை சாடிய  பாடல்கள.;----

பன் நெறிச சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்
பவ நெறி இதுவரை பரைவியது இதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி என்னும் வான்
புத்தமது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற எனஅரசே
தனி நடராஜ என சற்குரு மணியே ,

நம் இந்திய மதங்கள் மட்டும் அல்ல ,அந்நிய நாட்டு மதங்களும்
உண்மை தெரியாமல் அறிவிழ்ந்து அலைந்து திரிகின்றனர் .
அதலால் உலகில் உள்ள அனைவருக்கும் ,பொது நெறியாகிய
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தனிப்பொது  நெறியை, அனைவரும்
தெரிந்து அறிந்து புரிந்து கொள்ள
  
வேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்,
உலகம் முழுவதும் வள்ளலார் விருப்பம் நிறைவேறிக்கொண்டு
இருக்கிறது ,
அருட்பெரும்ஜோதி, மனித உருவுமோ ;கற்பனை உருவுமோ,
தத்துவங்களோ ,
கிடையாது .மாபெரும் சக்தி வாய்ந்த அருளணுவாகும்.
ஆதலால் கற்பனை கடவுள்களை நம்பி ஏமாந்து வீண் போகாமல்
உண்மைக்கட்வுளான அருட்பெரும்ஜோதியை வணங்கி வழிபட்டு
நளமுடன் வாழ்வோம் .

 உண்மைக்கடவுள் யார் என்பது ,தெரியாமல் இவவுலகமக்கள்,

கண்டதெல்லாம் கடவுள் என்று நம்பி ஏமாநது வீணாக அழிந்துக 
கொண்டு இருக்கிறார்கள்.,என்பதை உணர்ந்த வள்ளலார் ,உண்மைக் 
கடவுளை, இவ்வுலகமக்களுக்குஉணர்த்த வேண்டும் என்பதே ,
வள்ளலாரின் சுத்த  சன்மார்க்க கொள்கையாகும் .
அருட்பெரும்ஜோதி என்னும்உண்மைக்கடவுளைப்  பல கோணங்களில் ,
தெரியபடுத்துகிறார்.
கீழே கண்டபாடலில் எப்படி தெரியப்படுத்தி உள்ளார் என்பதைப்
பார்ப்போம் .

அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்கள் எலாம் பொருகள்கள்
ஆனவெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டு கொண்டு மேலும் 
கொள்வதற்ககே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக 
கண்டமெலாங்கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங் 
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் 
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம்வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டேகண்டீர்,!

 இயற்கை உண்மையான தனிக்கடவுள் அருட்பெரும்ஜோதி 
என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் பின்வரும் பாடலைப்பார்ப்போம் .

அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 
அமைந்த சராசர அளவு எவ்வளவே அவ்வளவும் 
கண்டதுவாய் அங்கு யவைகள் தனித்தனியே யகத்துங்
காண்புறத்தும் மகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க 
விண்டகு பெரருட்ஜோதிப் பெருவெளிக்கு நடுவே 
விளங்கி ஒருபெருங் கருணைக் கொடிநாட்டி அருளாம் 
தண்டகுமோர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் 
தனியரசே என்மாலை தாளில் அணிந்துதருளே ..

என்று யாவரும் புரியும்படி தமிழில் தெளிவாக எழுதியுள்ளார்,
படித்து தெரிந்து கொள்வோம் ,
அடுத்து வரும் பாடலில் ,வேதங்கள் ,ஆகமங்கள், புராணங்கள் 
இதிகாசங்கள். விஞ்சானிகள் .மற்றும் உள்ளஅனைவரும் 
பல  சாதனங்களை கொண்டு அளந்து  அளந்து பார்த்தும் ,கடவுளைக 
கண்டவர் யாரும் இல்லை ,என்பதை வள்ளலார் கீழே காணும் 
பாடலில் தெரியப்படுத்துகிறார் .

கிளைக்கின்ற மறை அளவே யாகமப் பேரளவுகளைக்
கிளந்திடு மெய்சசாதனமா மளவை யரிவு அளவை 
விளக்குமிந்த அளவைகளைக்கொண்டு நெடுங்காலம் 
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே 
அளக்கின்ற கருவிஎல்லாம் தேய்ந்திட கண்டார்றேல் 
அன்றி ஒருவாறேனும் அளவுகண்டாரிலையே 
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு புரிந்து உரைத்தேன் 
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்க்ப்படுமோ.

என்று வள்ளலார் தாம் கண்ட அருள் அனுபவங்களை
தெளிவுப்படுத்தியுள்ளார் .உண்மைகளை உலகிற்கு
சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் தான் என்பதில் 
எந்த சந்தேகத்திற்கும் இடம் இல்லை .வள்ளலார் காட்டிய 
சுத்த சன்மார்க்க நெறியை  உலக மக்கள் அனைவரும்
கடைப்பிடித்து, உண்மை உணர்ந்து உயர்ந்த நிலைக்கு 
செல்வோம் .
நன்றி ;---மீண்டும் பூக்கும், 


அருட் பெரும் ஜோதி;--பாகம் .8


          அன்பு ,அறிவு .ஒழுக்கம் ,இல்லாததால் கடவுள் உண்மை சிறிதும்  
விளங்காமல் ,புலன் உணர்வு ,புலன்அறிவு மட்டும் மேலோங்கி, மன அறிவு
மூலம் தேக போகத்தில் வாழ்ந்து, வீழ்ந்து மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் ,
அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்கள் 
அனைவரையும் திருத்தி,சமரசசுத்த சன்மார்க்க சங்கத்தில் சேர்த்து உண்மையை 
உணர்த்தி,வாழ வைக்க வேண்டும் என்று ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,
என்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் என்று வள்ளலார் 
தெளிவுப்படுத்துகிறார் .
 வள்ளலார் பதிவு செய்துள்ளபாடல் கீழே ;--
அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்திடை அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன்வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் .
அடுத்துஒருபாடல் ;--
பேருற்ற உலகில் உறும் சமய மத நெறிகள் எல்லாம் 
பேய்பிடிப்புர்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென்றுஉணர்ந்திடாது உயிர்கள்பல 
பேதமுர்றுஅங்கும் இங்கும் 
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருலினை உணர்த்தி எல்லாம் 
ஏற்ருர்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேளை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு 
என்னற்க வென்ற குருவே 
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனாநந்த பரநாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜபதியே ,
என்று வள்ளலார் தான் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் 
பற்றி தெளிவுப் படுத்துகிறார்.
கடவுள் என்றும்,பரமான்மா என்றும்,இன்று  நாம்காணுகின்ற 
கடவுள் அல்லஅருட்பெரும்ஜோதி ,
சமய ,மத வாதிகள் பலவாகக் கற்பனை செய்து ,கற்பனைக் 
கடவுள்களை உருவாக்கி படைத்து விட்டு சென்றுவிட்டார்கள் ,
அவர்களைப் பின்பற்றிவந்தவர்களும் ,நாம, ரூப,பேதத் தோற்றங்களில் 
மயங்கி அவற்றை அப்படி அப்படியே தங்கள்உள்ளங்களில் 
பதியச்செய்து கொண்டார்கள்.இதனால் ஒரே கடவுளான ,
அருட்பெரும்ஜோதியை ,தெரிந்துகொள்ளமுடியாமல் 
போயிற்று .
ஆதலால் பலவிதமான் கடவுள்களும் ,மகான்களும் தீர்க்கதரிசிகளும்,
போதகர்களும் நுழைந்து விட்டார்கள். அவர்களால்தோற்றுவிக்கப் 
பட்ட சாதி ,சமயம் ,மதம் ,புராணம் ,இதிகாசம், சாத்திரங்கள்
போன்ற குப்பைகள் உலகம் முழுவதும் படர்ந்து விட்டது .
குப்பைகளைஅகற்றி உலகை தூய்மைப்படுத்தவே வள்ளலார் 
இவ்வுலகிற்கு வந்துள்ளார்.
மேலும் ஒருபாடலில்தெளிவுப்படுத்தியுள்ளார் .
பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே;--சென்மார்க்கத் 
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் 
கொல்லா நெறியருளைக் கொண்டு .

இனிஎல்லா உலகமும் உண்மையை அறிந்துகொண்டு 
நளமுடன் வாழ்வார்கள் வாழ வைப்பேன் என்று 
உறுதியுடன் கூறியுள்ளார் .
இனி நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க
நெறியில் வாழ்ந்து வளம் பெறுவோம் .
நன்றி ;----மீண்டும் பூக்கும். 


அருட் பெரும் ஜோதி ;--பாகம் ,9





       நம்முடைய தலைவராகிய அருட்பெரும் ஜோதிக கடவுளை 

நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் 
சாவியாகிய அருள் வேண்டும்.

இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது ,

இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால்வராது ,

ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு .

இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது,அல்லது துவாரம் 

யாதெனில் ;--

அருட்பெரும்ஜோதியின் பெருமையையும் தரத்தையும்---நம்முடைய 

சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும் .

அனனிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே 

ஜீவகாருண்யமாகும்.இதுதான் அருளை அடைந்து 

முத்தியடைவதற்கு முதல்படியாயிருக்கிறது,ஆதலால் 

இதைபாதுகாத்தல் வேண்டும் .

ஜீவகாருண்யத்தால் சுத்ததேகம்,பிரணவதேகம்,முதலியவைகளை 

பெற்றுக்கொள்ளலாம்,பின்பு ஞான தேகத்தை கடவுள் அருளால்

கொடுக்கப்படும்.

எப்படி என்னில் ;--

அருட்பெரும்ஜோதிக் கடவுள் ,சர்வஜீவ தயாபரன் சர்வவல்லமை 

உடையவன்.ஆகையால் நம்மையும் சர்வஜீவதயவு உடையவர்களாய் 

சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனிததேகத்தில் 

வருவித்தார் .

ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் கேளாத கேள்வி 

முதலிய மகா அற்புதங்களான்;--இறந்தார் எழுதல் முதலிய அற்ப்புத 

வல்லமைப் பெற்றிருப்பார்கள்.எந்த சீவர்களிடத்தில் 

தயாவிருததியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த 

சீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும்.

மற்றவர்களிடத்தில் காரியப்படாது .ஆதலால் மலஜலசங்கல்ப 

காலங்கள் தவிர மற்ற காலங்களில், கடவுள் இடத்தில் 

பக்தியும்,சீவர்களிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் 

கடவுள் தயவும் ஜீவதயவும்;---

தயவென்பது இரண்டு வகைப்படும்;--

யாவையெனில் ;---கடவுள் தயை ---ஜீவ தயை ஆகிய இரண்டு ,

கடவுள் தயை என்பது ;--

  1. இறந்த உயிரை எழுப்புதல் 
  2. தாவரங்களுக்கு மழை பெய்வித்தல் 
  3. மிருக ,பட்சி ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்,ஊட்டி வைத்தல் 
  4. சோம சூரிய அக்கினி பிரகாசங்களை,கால தேச வண்ணம் பிரகாசம் செய்வித்தல் ,
  5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல் ,
  6. அபக்குவிகளைச செய்யவேண்டிய அருள் நியதியின்படி தண்டனைசெய்வித்துப் பக்குவம் வருவித்தல்.
 ஜீவ தயை என்பது ;--
  1. தன் சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகரித்தல் .
  2. எவ்வுயிரையும் தன் உயிர் போல் பாவித்தல் 
  3. ஆன்மநேயத்துடன் தொடர்பு கொள்ளுதல் 
  4. எந்நேரமும் தயவு வடிவமாய் இருத்தல் 
மேலும் இவைகளபடிப்பால் அறியக்கூடாது,அறிவது எப்படி 

என்னில்;--ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாய் நிற்கும் 

விசார சங்கல்ப்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் ,

அததருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் 

ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியில் பழகல

வேண்டும் .

உலகத்தில் உள்ள அன்பர்கள் அனைவரும் உண்மைக்டவுள் 

அருட்பெரும்ஜோதி என்னும் ஆற்றல் மிக்க அணுதான்தான் 
  
என்பதை உணர்ந்து ,தொடர்புகொள்வோம் .

நன்றி ;--மீண்டும் பூக்கும். 



அருட் பெரும் ஜோதி;--பாகம் ,10



      அருட்பெரும்ஜோதி என்னும் அருள் அணு இல்லாத 

இடமே இல்லை ,ஆனால் நாம் நமது கண்ணாலும் 

மனோகருவி கரணங்களாலும்,எங்கும் காண்பது என்ன /

பரமான்மாவா ,கடவுளா/ அப்படிக் காண்கின்ற எதுவும் 

கடவுள் அல்ல என்பது சிறுகுழந்தைகளுக்கும் தெரியும் .

இபபிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களும்,

எல்லாஉயிர்களும் நித்தியமானவை அல்ல என்பதும் ,

தோன்றி சிறிதுகாலம் இருந்து மறைகின்றவையே 

என்றும் எவரும் அறிவர் .

ஆனால் நம் அருட்பெரும்ஜோதியார் நித்தியமானவர்,

அந்த நித்தியமானவர் யாவற்றிலும் அகம் மறைந்து நின்று 

அநித்தியமான வடிவங்களை ஆக்கிக்கொள்வதும் நீக்கிக் 

கொள்வதுமாய் இருக்கிறார் .மண் முதலான் ஐம்பூத

அணுக்களில் இருந்து கொண்டு அது அதுவாகித் தனித்திருந்தும் ,

ஒன்றுபட்டும் எல்லா பிரபஞ்ச வடிவங்களிலும் தன்னுள் 

வைத்துக்கொள்ளுகின்றன,ஆகவே காணும் பொருட்களிலும் 

அவற்றிற்கு ஆதாரமாய் இருக்கின்றது நமது கண்காணாப் 

அருட்பெரும்ஜோதியாகிய கடவுளாகும் .

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி சமூகத்தில் நிறைந்து

விளங்கிக்கொண்டு இருப்பது ஆன்மாஎன்னும் சிறிய அணுக 

கூட்டங்களாகும் .அதற்க்கு ஆன்மா என்று பெயர் 

பொதுவாகக கடவுளைப் பற்றி பலர் பலவாகக் கற்பனை 

செய்து கொண்டு உண்மையை உள்ளவாறு காணாது ,

உளறி இருக்கிறார்கள், 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு