வெள்ளி, 18 அக்டோபர், 2019

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை !

(விழா மலருக்கு கட்டுரை)

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை!*

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!

*ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம்*.

உயர்ந்த அறிவுடைய மனித தேகத்தைப் பெற்ற அனைவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு இராதீர்கள்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமை* உலகம் எங்கும் பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.காலம் உள்ளபோதே அறிந்து தெரிந்து உணர்ந்து அனுபவித்து அருளைப்பெற்று. ஆன்ம இன்ப லாபமான பேரின்ப சித்திப்
பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு இதுவே நல்ல தருணமாக இருக்கின்றது.

*மலேசியா நாட்டின் மக்கள் நலன் கருதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார்.*

இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மலேசியா நாட்டின் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அங்கத்தினர்களின் நலன் கருதி* வருகை புரிகின்றார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *இயற்கை விளக்கம்* என்னும் அருள் வழங்கவும். *இயற்கை இன்பம்*  என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்க்கை வழங்குவதற்காக...

*அருட்பேரொளி அருட்பெரும் ஜோதி சபை* தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அந்த சபையின் *ஞானசிங்காதன மேடையின் பீடத்தில்* அமர்ந்து மலேசியா நாட்டு மக்களுக்கு அருள் வழங்கும் தருணமாக அமைந்திருக்கின்றது.

*இது நல்ல தருணம்*.... அருள் செய்ய இது நல்ல தருணம் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்லவரமே! என்று.
*அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவரை அழைத்து சத்திய ஞானசபையில்  அமரவைத்தார் வள்ளல்பெருமான். அவர் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்ந்து  மக்களுக்கு அருள் வழங்கிக் கொண்டே உள்ளார்.

அதேப்போல *வருவார் அழைத்துவாடி* மலேசியா நாட்டிற்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்ற ஏக்கத்தோடு *சன்மார்க்க சங்கங்களின் அன்பர்கள்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வள்ளலாரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் வள்ளலார் கலந்து கொண்டார்.வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு அல்ல. *இருவரும் ஒன்றாகி விட்டார்கள்* *வள்ளலார் நிச்சயம் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் மலேசியா நாட்டிற்கு வருவார்*.
அனைவருக்கும் அருள் வழங்குவார். சந்தேகம் வேண்டாம் *இது சத்தியம்* *இது சத்தியம்*.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அங்கும் இருப்பார்.இங்கும் இருப்பார்.எங்கும் நீக்கமற  நிறைந்தும் இருப்பார்.

வள்ளலார் பாடல் !

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
மாளாத ஆக்கைப் பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவு கின்றேன்

பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி

நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்
எண்ணம் எலாம் நிரம்பி னேனே !

என்னும் பாடல் வரிகளிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மகிமையைப் பற்றி வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார்.

சன்மார்க்கப் பெரும்பதி வருகை .
பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 4.1871 .
*வள்ளல்பெருமான் வெளியிட்டவை* !

சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் . இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும் .

பலவகைப்பட்ட
சமய பேதங்களும் , சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . அது கடவுள் சம்மதம் .
இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற

பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல !  .

இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத்தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம் .  இதுவே *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிமையாகும்*

மேலும்

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872 ஆம் ஆண்டு வெளியிட்டது.

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற  நண்பர்களே!
அறிவு வந்த காலம் முதல்

அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,

அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,

கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,

செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,       

கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்.
அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,

இத்தருணந் தொடங்கிக் கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்பு உடையேனாகி  இருக்கின்றேன்.

நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது *சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.*

இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும்,

இயற்கையிற்றானே யுள்ளவராய்  விளங்குகின்றவர் என்றும்,

இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா 
அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லாப் பதங்களையும்,
எல்லாச்சத்திகளையும்,
எல்லாச்  சத்தர்களையும்,
எல்லாக் கலைகளையும்,
எல்லாப் பொருள்களையும்,
எல்லாத் தத்துவங்களையும்,
எல்லாத் தத்துவி களையும்,
எல்லா உயிர்களையும்,
எல்லாச் செயல்களையும்.
எல்லா இச்சைகளையும்,
எல்லா ஞானங்களையும்,
எல்லாப் பயன்களையும்,

எல்லா
அனுபவங்களையும்
மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்

*தோற்றுவித்தல்*,
*வாழ்வித்தல்*,
*குற்றம் நீக்குவித்தல்*,
*பக்குவம் வருவித்தல்,*
*விளக்கஞ்*
*செய்வித்தல்*,

முதலிய
பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,

எல்லாம் ஆனவரென்றும்,

ஒன்றும் அல்லாதவரென்றும்,

சர்வகாருணிய ரென்றும்,

சர்வவல்லபரென்றும்,
எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும்
ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை *அருட்பெருஞ்ஜோதியர்* என்றும்
சத்திய அறிவால்அறியப்படுகின்ற *உண்மைக் கடவுள் ஒருவரே* அகம் அகப்புறம். புறம் புறப்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில்* அறிவார் அறியும் வண்ணங்க  எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு    விளங்குகின்ற *ஒருவரேயாகிய கடவுளை* இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்
பலவேறு  சமயங்களிலும்.   
பல்வேறு மதங்களிலும்.
பலவேறு மார்க்கங்களிலும்.
பல வேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி  விரைந்து விரைந்து பல் வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்.

*இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்*,

*உண்மையறிவு,*
*உண்மையன்பு,*
*உண்மையிரக்கம்* முதலிய
சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் . உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் *சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று*, பெருஞ் சுகத்தைதயும். பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற *ஓர் ஞானசபையை* இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர் பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும்  அடைவீர்கள்..

மேலே கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மலேசியா நாட்டு மக்களுக்காக *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபைக்குள்* வந்து அமர்ந்து அருள் வழங்குவார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.

*இது சத்தியம். சத்தியம்.சத்தியம்*

இது ஆண்டவர் கட்டளை. *இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அற்புத மகிமையாகும்*.

எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ.அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்
*இது ஆண்டவர் கட்டளை*.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலாஉலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறுயே உலகம் எல்லாம் ஓங்குக !

*அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவர் அருள் மகிமை உலகம் எல்லாம் ஓங்குக !*

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
D.Block.Flat No 109.
S&P living Spaces.
காமராஜர் ரோடு. அயனம்பாக்கம்.
சென்னை- 600095 தமிழ்நாடு
கைபேசி..986593996

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு