புதன், 13 மார்ச், 2019

உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யம் வடலூர் !

உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யம்!

 கடலூர் மாவட்டத்தில் உள்ள உத்தர ஞான சிதம்பரம் என்னும் பெயருடன் விளங்கும் வடலூர் தான் உலக உயிர்களின் பாதுகாப்பு மய்யமாக இயங்கிக் கொண்டுள்ளது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.!
படைக்கும் தொழிலை செய்வது..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
காக்கும் தொழிலை செய்வது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !
அருளும் தொழிலை செய்வது..

இவைகள் மூன்றும் அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி வள்ளலார் வடலூரில் தோற்றுவித்துள்ளார்..

உலக உயிர்களின் பசி.பிணி.தாகம் .இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற துன்பங்களில் இருந்து காப்பாற்றும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமை பீடம் தான் வடலூர்..

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்கிறார் வள்ளலார்..
.
வள்ளலார் பாடல் !

உலகமெலாந் தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்
கலக மிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகமெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.!

அடுத்து ஒருபாடல் !

உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்

கலகநிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி

இலகு சிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி

அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே.!

என்னும் பாடல் வரிகளின் மூலம்.உலக உயிர்களை காப்பாற்றும் தலைமை மய்யமாக வடலூர் விளங்கிக் கொண்டு உள்ளதை. அறிந்து கொள்ளலாம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு