சனி, 18 ஆகஸ்ட், 2018

ஆண்டவரின் முதல் பிள்ளை !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெருங்கருணை 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥

💥அருட்பெருஞ்ஜோதி பதியை அடைந்த இப்பிரபஞ்சத்தின் முதல் பிள்ளை 💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 ஆன்ம நேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏

      இப்பிரபஞ்சத்தை
தோற்றுவித்த இறைவன் ,
இப்பிரபஞ்சத்தில் வாழக்கூடிய உயிர்களையும் ,
அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான வாழ்வியலுக்கு உற்ற பொருள்களையும் அவைகளுக்கு அண்மையிலேயே தோற்றுவித்து அவற்றை அவர்கள் அறிந்து பெற்றுக் கொள்வதற்குரிய அறிவு சுதந்திரத்தையும் வழங்கியே பெருங்கருணையுடன் சிருட்டித்து அருளினார்கள்🏵

     ஆன்மாக்களுக்கு தேகம் கொடுத்து பிறப்பித்ததன் காரணம் ,
கடவுள் விளக்கத்தைப் பெற்று
தனது "சச்சிதானந்த" உண்மையை  அவைகளுக்கு உணர்த்தி,
" மெய் அறிவு ஆனந்த "
அனுபவத்தைப் பெற்று
பக்குவத்தில் அவைகளை
" சச்சிதானந்த மயமாகவே "மாற்றி தன்னிலையில் பொருத்தி ,
தன்மயமாக்கிக்கொள்வதற்கு என்றே இறைவன் அறிவு சிறிதும் விளக்கமில்லாமல் இருக்கும் சிற்றணுப் பசுவாகிய ஆன்மாக்களுக்கு ஓரறிவு தாவரப் பிறவி தொடங்கி ஆறறிவு மானுடப்பிறவி
வரையும் கொடுத்து ,
இந்த மானுடப்பிறவியின் மூலம்தான் இறைவனை முழுவதுமாக உணர்ந்து அனுபவித்து அடைந்திடும்படி அருள்நியதி வழங்கப்பட்டுள்ளது🌺

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை
 அடைவது என்பது ,
அருள் அனுபவ பக்குவ ஆன்மாக்கள்
தாங்கள் கண்டு அனுபவித்த  அருளொளி அனுபவத்தைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் முத்தி மோட்சம் வீடுபேறு
 என்ற பெயர்களில் தனது பிறவி வேரை அறுத்துக்கொண்டு இறைவனது திருவடியைச் சென்று அடைந்து
விடுகின்றார்கள் 🌷

அருட்பெருவெளியில்
அருட்திருநடம்புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய ,
பூரணமான அருளை ,
அதாவது ஆண்டவரது பூரண அருள்சக்தியை குறைவின்றி பெற்றுக்கொண்ட ஒருவரால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மைச் சொரூபத்தை முழுமையாக நேருறக் கண்டிடவும்,
களித்திடவும்,
அவரை உற்றுக் கலந்திடவும் ,
அவரது முழு அருள்வல்லபத்துடன் திகழந்திடவும் முடியும் என்பது அருள் நியதியாகும் 🌸

அவர்களால் மட்டுமே முத்தியைப்
பெற்றுக் கொள்வது மட்டுமல்ல ,
அதற்கும் மேலான எல்லாமும்  செய்ய ஞானசித்தியைம் பெற்றுக்கொள்ளவும் இயலும்,
அவர்களே செத்தாரை எழுப்பும் வல்லபம் பெற்றவர்கள் ,
அவர்களே அழியா அருட்ஜோதி வடிவம் பெற்றவர்கள்,
அவர்களே சுத்த பிரணவ ஞானம் என்னும் முத்தேக சித்தி அனுபவம் பெற்றவர்கள்,
அவர்களே தேகாதி உலகம் முழுவதும் செய்யும் வல்லமை உடையவர்கள்,
அவர்களே எப்பொருளும் விளைய விளைவிக்கும் சித்திப் பெற்றவர்கள்,
அவர்களே அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருட்தேகத்துடன் மரணமிலாப் பெருவாழ்வில் இவ்வுலகில் அருளொளித் தேகத்துடன் உலாவும் அருள்வாழ்வுப் பெற்றவர்கள் ஆகும்🌻

இதுவரை இவ்வுலகில் வள்ளல் பெருமானிற்கு முன்பு வந்த அருளாளர்கள் ஒவ்வொருவரும் அவரவரவர்கள் பெற்ற அருள் அனுபவத்திற்கும் பெற்ற அருள் ஞானத்திற்கும் தக்கவாறு
சித்தி முத்திகளைப் பெற்று அருட்பெருஞ்ஜோதியில் கலந்து பிறவிப் பேற்றை அடைந்தார்கள்.
அந்த வழியில் சமய மத மார்க்கங்களின் அதீததத்தால் பெற்ற
அருள் அனுபவத்தின் வாயிலாக முத்திப்பெற்றவர்கள்
அப்பர் சம்பந்தர் சுந்தரர் மற்றும்பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் இருக்கின்றார்கள் இவற்றில் ,
மாணிக்கவாசகர் திருமூலர் போன்றோர்கள் சன்மார்க்க வழியில் முத்திப்பெற்றவர்களாக இருக்கின்றார்கள் .
அவர்களும் இவ்வுலக வாழ்வையும் ,தனது உடம்பையும் வெறுத்து இறைவனது திருவடியில் தஞ்சம் புகுந்தார்கள்🌺

ஆனால் ஒரு ஆன்மாவிற்கு தேகம் கொடுத்து இவ்வுலகிற்கு வருவிக்கவுற்றதன் நோக்கம் வெறும் முக்திநிலை பெறுவதற்கு மட்டுமே அல்ல ,

இறைவனது முழு ஆற்றலையும் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே என்றும் இளமையுடன் நரை திரை மூப்பற்று சுத்த ஒளியுடம்புடன் வாழக்கூடிய வாழ்வு பெற்று மரணத்தை தவிர்த்து வாழ்தல் வேண்டும் என்பதேயாகும் ,
அதுவே ஒவ்வொரு ஆன்மாவின் லட்சியமாகும் என்று பெருமான் கூறுகின்றார்கள் .
அப்படிப்பட்டபெருவாழ்வை தரக்கூடியது சமய மத சன்மார்க்கத்தினால்  கூடாது என்றும் ,
சமய மதம் கடந்த சமரச சுத்தசன்மார்க்கப் பெருநிலைக்கு சென்று அந்த நிலையில் ,
பூரணமான அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு ,
அதன்மூலம் கிடைக்கப் பெறுகின்ற பெருவாழ்வே சுத்தசன்மார்க்கப் பெருவாழ்வாகும் என்று பெருமான் கூறுகின்றார்கள்🌸

அதுபோன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டதனால்தான், இப்பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்து தனது பூரணஅருளை எஞ்சலின்றி பெற்றுக்கொண்ட முதல் ஆன்மா நீ என்பதால் நீயே எனது குலத்தின் முதல் மகன் என்று ,
"பிள்ளைப் பட்டத்தை "
ஆண்டவரால் சூட்டப்பெற்றார்கள் நமதுப் பெருமான்🌻

அப்படி பிள்ளைப் பட்டம் சூட்டப்பட்ட பெருமான்,
தான் ஆண்டவருக்கு எப்படிப்பட்ட பிள்ளை என்று அவர்களே கூறுகின்றார்கள் பாருங்கள்🌷🙏🔥

மனம் முதலாகிய தத்துவங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திய பெருமான்,
இதுவரை என்னை அலைக்கழித்ததுபோல் இனிமேலும் என்னை அலைக்கழிக்க நினையாதீர் நான் யார்என்று தெரியாதோ உங்களுக்கு என்று பெருமான் கூறமுற்படுகின்றார்கள்

1: ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே 🌻
2:சிற்சபையில் நடிக்கும் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே 🌻
3:சிற்சபைவாழ் பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே 🌻
4:எல்லாம் பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே 🌻
5:எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே 🌻
6:சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை நானே 🌻
7:நான்தான் ஆண்டவன்தன் தாண்டவம் கண்டமர்ந்தப் பிள்ளை நானே 🌻
8:எல்லாம் செய்வல்லார் அருளமுதம் உண்டு பூரண அருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே🌻
9:ஞானசபைத் தலைவன் தருதலைத் தனிப்பிள்ளை நானே 🌻
10:சிற்சபை என் அப்பனுக்கு சிறந்தபிள்ளை நானே 🌻
11:எல்லாம் வல்ல சித்தருக்கே நல்லபிள்ளை நானே 🌻
12:அம்பலத்து என்அப்பன் நம்புபிள்ளை நானே 🌻
13:சிற்சபையில் கடவுள் மகிழ்ந்தளித்த தனிக் கதிர்பிள்ளை நானே 🌻
14:நான்தான் அருட்பெருஞ்ஜோதியை அடைந்த முதல்பிள்ளை காணே 🌻
என்று கூறுவது மட்டும் அல்லாமல்,

🌺நான் ஒருவன் தானே அவன்பிள்ளை🌺
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
"திருவளர் பேர் அருளுடையான் சிற்சபையான் எல்லாம் ,
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன் எல்லாம் உடையான்,

உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்தான்

பெருமையினால் என்னையீன்றான்
"நான் ஒருவன் தானே பிள்ளை அவன் பிள்ளை எனப் பெரியர் எலாம் அறிவார்"
என்று,
தான் ஒருவர் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி பதியை அடைந்த "முதல்பிள்ளை" என்பதையும் பெருமான் இதன்மூலம் பதிவு செய்கின்றார்கள் 🌻
ஆகலில் அருள் அனுபவத்தின் வாயிலாக அடைகின்ற பக்குவங்களும் பதங்களும் நிலைகளும் மாறுபடுகின்றன என்றும்,
பூரணமான அருளைப் பெற்றுக்கொள்வதே ஆன்மாக்களின் முடிபான  முடிபு என்றும் அறிவோம் !
உணர்வோம் !
அடைய முயல்வோம் !
.....நன்றி🙏🌻
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🙏
....பெருமான் துணையில் 🙏
....வள்ளல் அடிமை 🙏
...வடலூர் இரமேஷ் ;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு