சனி, 18 ஆகஸ்ட், 2018

மனிதன் மாற வேண்டும் !

மனிதன் மாற வேண்டும் !

பொய்யான சாதி சமய மதங்களில் இருந்து மனிதன் மாற வேண்டும்.
மாறாதவரை
கடவுள் உண்மை தெரியாது.

வள்ளலார் பாடல் !

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்

ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்

நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ

ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.!

என்னும் பாடல் வரிகளில் எளிய தமிழில் பதிவு செய்கிறார்

மேலும் சாதி சமய மத்த்தை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்.

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.!

உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய
நாம் சாதி சமய மதக் குப்பையிலே உருண்டு கிடக்கிறோம்..வெளியே வரமுடியாத அளவிற்கு...நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது..

அதைத்தான் அறியாமை என்னும் மாயா திரைகள் என்கிறார்....

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் நீங்க வேண்டுமானால்.சாதி சமய மதங்களில் இருந்து விலகி பொது நோக்கம் வரவைத்துக் கொள்ள வேண்டும்...

இவைதான் வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

வள்ளலார் வழியைப் பின் பற்றுவோம்.வளமோடு வாழ்வோம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு