செவ்வாய், 3 மே, 2022

57 ஆம் ஆண்டு திருமணநாள்!

 *57ஆம் ஆண்டு திருமணநாள்* ! 


*வாழ்த்துங்கள் வணங்குகிறோம்*


*02-05-2022 ஆம் நாள் ஈரோடு கதிர்வேல் ஆகிய எனக்கும்.*

*அமுதாகதிர்வேல் ஆகிய என்மனைவிக்கும்* *திருவருளால் திருமணம் நடைபெற்று 56 ஆண்டு நிறைவுபெற்று 57 ஆவது ஆண்டை தொடங்குகிறோம்.*


*இல்லறத்தை நல்லறமாக ஏற்று வள்ளலார் காட்டிய  சுத்த சன்மார்க்க  கொள்கையில் அதிதீவிரமாக பின்பற்றி  கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம்.*


*வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளை கடந்து சாதனைகளை கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.*


*எங்களுக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை. நான்கு பேரன்கள் இரண்டு பேத்திகள்.அனைவரும் வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள்.*


*அனைவரும் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற உண்மை உணர்வோடு கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்*..


*இந்த பிறவியில் எங்கள் வாழ்க்கையில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கையில் அதி தீவிரமான ஈடுபாடு கொண்டு வாழ்ந்துவருவது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய அருள் புண்ணிய பயனாகக் கருதி வாழ்ந்து வருகிறோம்.*


*இன்று வரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்த குறைபாடும் இல்லாமல்.ஆன்ம லாபத்தோடும் ஆன்ம நிறைவோடும் எங்களை இயக்கிக் கொண்டும் வழிக்காட்டிக் கொண்டும் வருகிறார்.*


*எங்களைப் போன்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்*


*எங்கள் மீது அன்பும்.அக்கறையும் பாசமும் பற்றும் கொண்ட அன்பு உள்ளங்கள் அன்பர்கள்*

*நண்பர்கள். சன்மார்க்கிகள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள்.*

*உற்றார் உறவினர்.அயலார்  மற்றும் ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும்  அன்பான மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


*அன்புடன் உங்கள் ஆன்மநேய உறவினர்கள்*

*ஈரோடு கதிர்வேல்*

*அமுதா கதிர்வேல்.*

*9865939896*.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு