திங்கள், 18 ஏப்ரல், 2022

அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின் தனிப்பெருங்கருணை !

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை !*


*எங்களது குடும்பம் சுத்த சன்மார்க்க பாதையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முழு நம்பிக்கையுடன் பயணித்து வருகிறோம்.*


*எனது மனைவி அமுதா அவர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் பரோபகாரம் சத்விசாரத்திலும் என்னைவிட தீவிரமான ஈடுபாடு கொண்டவர் என்பது சன்மார்க்க உலகம் அறிந்ததே.வயது 73 ஆகிறது.*


*உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே!*


முன்பிறவியின் ஏதோ வினைப்பயனால் என் மனைவி அமுதாவிற்கு *உடம்பிற்கும் உயிருக்கும்* பலமுறை ஆபத்துவந்தது.


*அனைத்து துன்பங்களையும்  அருள் ஆற்றலால் நீக்கி காப்பாற்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை போற்றி புகழ்ந்திட வார்த்தைகளே இல்லை.*


*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்கின்றார் வள்ளலார்.*


*உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதை மக்கள் அறிந்து தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.*


*வடலூர் வந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில் ஜீவகாருண்ய பணியும* *எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கும் இடமான சத்திய ஞானசபையில் உண்மை அன்புடன் வழிபடுங்கள் உங்களது தீராத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தெரியாமலே நீங்கிவிடும் (அதிசயம் அற்புதம்) என்பது சத்தியம்*


*எங்களது உயிர்பிணியும் உடற்புணியும் நீக்கி மகிழ்ச்சியுடன் நல்வழியில் வாழவைத்து கொண்டு இருக்கும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு மனைவி மகன் மருமகளுடன் காணவந்த காட்சிகள்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு