செவ்வாய், 30 ஜூன், 2020

பசுவதை செய்வது தவறு !

****  சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது  .*****

முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள்…

பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை:
மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (கட்டணம் 22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (கட்டணம் 35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக்கேட்க அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது.
பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன:

1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும்.

2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது.
3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும்.

4. நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும்.

5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும்.

இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது.

ராஜு பாயின் பதில் வாதம்:-

நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும்.  இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/-.

ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின்பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/-என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் (33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை.

திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான்.  ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்:-

ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது.

ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்பமறுத்தார். உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். மேலும் டீசல் போல இதில் புகையோ , இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார்.

ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/-கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை.

இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதிசெய்தது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன் படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.

 அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது:
நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும்,  ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள்.

அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஹாவ்ரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார்.

அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார்.

 இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் இஸ்லாம் மன்னர்களான  இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹோமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வியெழுப்பினார்.

 இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர்.

 மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். திரு.முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார்.

பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.

மொழி பெயர்ப்பு
வினோபா.

மிகவ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு