திங்கள், 12 மே, 2014

வள்ளலார் அழைக்கிறார் !

அருட்பெருஞ்ஜோதி                                       அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங் கருணை                                   அருட்பெருஞ்சோதி  
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே 
எல்லாம் வல்லான் தனையே ஏத்து. 
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம் 
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார் 
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து .
வள்ளலார் அழைக்கின்றார் .7,ஆம் ஆண்டு உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாடு ! மலேசியா !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்-- திருஅருட்பிரகாச வள்ளலாரும் !  

அகம் கருத்து புறம் வெளுத்து இருக்கின்ற உலக மாந்தர்கள் அனைவரையும் திருத்துவதற்க்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைத்தவர்தான்  வள்ளல்பெருமான் என்னும் அருளாளர் ஆவார் .அவர் வந்த நோக்கத்தைப் பற்றி அவர் திருகரத்தால் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்பதை திருஅருட்பாவின் வாயிலாக மெய்ப்பிக்கப் படுகிறது.

இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.அந்த சங்கத்தை வள்ளலார் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு வருகிறார் .

சங்கத்தின் வாயிலாக தனிமனித ஒழுக்கங்களான ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பவைகளாகும்..இவை மரணத்தை வெல்லும் ஒழுக்கங்களாகும்.,அன்பு,தயவு,கருணை உயிர் இரக்கம்,ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் ஒருமையை கடைபிடித்தால்,இறைவனிடம் அருளைப் பெற்று ..மனித குலம் மரணத்தை வெல்ல முடியும் என்று பறை சாற்றி உள்ளார் .அதன்படி வாழ்ந்தும் வழிகாட்டி வாழ்ந்து கொண்டே உள்ளார் 

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்யும் ஐந்தொழில் வல்லபத்தையும் வள்ளல்பெருமானிடம் ஒப்படைத்து உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட ..உயர்ந்த அருள் நெறியை பின்பற்றிட .மலேசியாவில் நடைபெறும் 7-ஏழாவது சுத்த சன்மார்க்க மாநாட்டில்--சன்மார்க்க அன்பர்களும் மற்றும் உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்களும் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

சன்மார்க்கத்தில் தோய்ந்த அருள் அனுபவம் பெற்ற சன்மார்க்க சான்றோர்கள் ,தமிழ் நாட்டில் இருந்தும் மலேசிய நாட்டில் இருந்தும் வந்து அருள் உரை நிகழ்த்த உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சுத்த சன்மார்க்க சுகநிலை பெருக .உத்தமன் ஆகுக ஓங்குக ! என்று மாநாட்டுக் குழுவினர் அனைவரையும் மனதார உளமார வாழ்த்தி பாராட்டுகின்றேன்.அனைவரும் வருக ! அருள் நெறி பெருக !  

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக ! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை உலகம் எல்லாம் ஓங்குக ! வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க !

நிகழ்ச்சிகள் ;--
இடம் ;--கலா மண்டபம் ,பிரிக்பீல்ட்ஸ் / Kala Mandapam,Brickfields 
தேதி ;---4---10---2014,( சனிக்கிழமை ) காலை மணி 7-00,முதல் இரவு 10-00 மணி வரை .
 5---10---2014,( ஞாயிற்றுக்கிழமை) காலை 6-00. மணிமுதல் இரவு 7-00 மணி  வரை 
              
சனிக்கிழமை அன்று இரவு 7-00 மணி முதல் 10-00,மணி வரை திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெறும் தமிழ்நாடு,திருஅருட்பா இசைமணி திருக்கோவிலூர் ஜீவா சீனிவாசன் அவர்கள் குழுவினர் மிக சிறப்பான முறையில் மக்களை மகிழ்விக்க உள்ளார்கள்.நமது மலேசியத் திருநாட்டு அறிஞர்களும்,தமிழ்நாடு,இலங்கை,சிங்கப்பூர் ,மியன்மார் ,பிரான்ஸ் ,நாட்டு சான்றோர்களும் அளிக்கும் கேள்வி,பதில் விருந்தை சுவைத்து அனுபவிக்க அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.    
சுத்த சன்மார்க்கம் மேலேறும் வீதி,.. சுற்றம் நண்பர்கள் அனைவரும் வாரீர்,வாரீர் வாரீர் !
அன்பெனும் பிடியுள் 
Pusat Jagaan Vallalar
No,14,Lengkok Cumarasami 
4th mile,Jalan Ipoh,51200 Kuala Lumpur.
Contact;--Dr,Lalita Veeriah;--0060123160470.
Dr,Dinakaren;---012-639 1511. 
மகத்தான அரிய வாய்ப்பு ! திரளாக வாருங்கள் ! குறைந்த கட்டணம் ரி.ம,100.00. இருக்கைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.! நன்றி.வருங்காலம் பொற்காலம்,அது சன்மார்க்கிகள் கையில் உள்ளது .சிந்திப்பீர்.. செயல்படுவீர் . வந்தனம் .
அருட்பெருஞ்ஜோதி .தனிப்பெருங்கருணை !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு