வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அருட்பெருஞ்ஜோதியும் ! மாயையும் !

   .நாம் வாழும் இவவுலகம் பஞ்ச பூதங்களான செயற்கை
         உலகமாகும் .இவைகளைப் படைத்தவர்
                 அருட்பெருஞ்ஜோதியராகும்.


   இந்த பஞ்ச பூத உலகை இயக்கும் அதிகாரத்தை
மாயை என்னும் ஒளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
மாயைக்கு கட்டுப்பட்டது ,நிலம், நீர்,அக்கினி[நெருப்பு ]
காற்று,ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களாகும். இந்த 
பஞ்ச பூத உலகத்தில் ஆன்மா என்கிற உயிர்களை, 
அதாவது அருட்பெருஞ்ஜோதியின் குழந்தைகளை
அனுப்பிவைக்கபடுகிறது .மாயைக்கும் அருட்பெருஞ்ஜோதிக்கும்,
உடன்படிக்கை ஒப்பந்தம், சட்ட திட்டங்கள் தயாரிக்கப் படுகிறது .      


       சட்டதிட்டங்கள் ஒப்பந்தம் எவை ?


     சட்டம் ;--1 ,
      அருட்பெருஞ்சோதிக்கும் ,மாயைக்கும் ஒரு
உடன்படிக்கை ஒப்பந்தம் பதிவு செய்யப்படுகிறது .
அவையென்னவென்றால் ,என்னுடைய குழந்தைகளான
ஆன்மாக்களை அதாவது உயிர்களை,காப்பாற்றுவது ,
பாதுகாப்பது,அதற்க்கு வேண்டிய வீடு கட்டிக்கொடுப்பது ,
உணவு வழங்குவது,அதன் விருப்பத்திற்கு தகுந்த
அனைத்தும் செய்து கொடுக்கவேண்டியது ,மாயையினுடைய
கடமையாகும்.அதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.


     அடுத்து உயிர்கள் வாழ்வதற்கு ஒரு அறிவுள்ள
தாவரங்கள்முதல்  ,ஊர்வன,பறப்பன ,நடப்பன ,
தேவர்கள்,மனிதர்கள் மதலிய ஆறுவித மான
பிறப்புகள் தரவேண்டும்.ஒவ்வொரு பிறப்புக்கும்
ஏழு முறை பிறப்பு தரவேண்டும் .அதற்குமேல்
உயிர்கள் அதே பிறப்பில் இருக்க விரும்பினாலும்
தரக்கூடாது .பிறப்பை மாற்றி கொடுத்துக் கொண்டே
இருக்க வேண்டும் .        


              சட்டம் ;--2 ,


      அடுத்து ஆறாவது பிறப்பாகிய மனித பிறப்பு
கொடுக்கும் போது அதற்க்கு சில உரிமைகள்
கொடுக்க வேண்டும் .என்ன வென்றால் உயிர்கள்
பல பிறவிகள் எடுத்து சலிப்படைந்து ,உயிர்கள்
எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டும் எனறு
விரும்பினால் அதற்க்கு மாயையாகிய நீங்கள்
தடையாக இருக்கக் கூடாது           


சட்டம்;-- 3 ,


அடுத்து ஆன்மாவாகிய உயிரானது அருட்பெரும்ஜோதியாகிய 
என்னைதொடர்பு கொண்டால் அதற்கு தடையாக இருக்க்கூடாது.
பஞ்ச பூதங்கள் உடம்போடு என்னைத்  தொடர்பு கொள்ளக்கூடாது. 
அப்படி தொடர்பு கொண்டால் அதற்கு வேண்டிய உதவிகளை 
செய்து செய்து தரவேண்டும் .உதவி என்ன வென்றால்உயிர்கள்  பஞ்ச பூத
உணவுகளை விரும்பவில்லை என்றால்,  கொடுக்ககூடாது,அவைகள் அமுதம் என்ற 
உணவை கண்டுபிடித்து அதைபுசிக்க துணை புரியவேண்டும் .அந்த வேலையில் உயிர்கள் 
பூத உணவுகளை விரும்பினாலும்  தரக்கூடாது,


           சட்டம்;-- 4 ,      


அடுத்து ;--இவ்வுலகிலுள்ள எந்த பொருளையும் தனக்கு சொந்தம் 
எனறு உயிர்கள் நினைக்க கூடாது .நினைத்தால் விட்டுவிடவேண்டும்.
உலகிலுள்ள பொய்யான தெய்வங்களை வழிபட்டால் தடுக்க கூடாது.
உண்மையான என்னை தொடர்பு கொண்டால் தடை செய்யாமல் அதன் போக்கிற்கு விட்டுவிட வேண்டும் அந்த நேரத்தில் அதற்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் .எந்த தீமைகளும் அவற்றை நெருங்க க்கூடாது.ஆன்மாக்களான உயிர்களை அதன் அதன் 
விருப்பத்திற்கு தகுந்தாற்ப்போல் வாழ்வதற்கு 
விட்டுவிட வேண்டும் .ஆனால் அதன் செயல்களுக்கு தகுந்தாற்ப்போல்,உடம்பை 
மாற்றி ,மாற்றிக்கொடுக்கவேண்டும் .
எதனால்உடம்பு மாற்றப்படுகிறது என்பதுஉயிர்களுக்கு உம்மால் தெரியக்கூடாது. 


    சட்டம் ;---5 ,


  இந்தபஞ்சபூதங்களின் செயல்முறைகளை, 
உயிர்களுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக் 
கொள்ளும் உரிமை அதிகாரம்  உமக்கு 
சட்டப்படி வழங்கப்படுகிறது.
     இந்தஉலகத்திலுள்ள பொருகள் யாவும் 
உலக எல்லையை விட்டு வெளியேறக்கூடாது .
உயிர்களும் எந்தபொருளையும்,எடுத்து செல்ல 
அனுமதிக்ககூடாது. 
    உயிர்கள் உலகைவிட்டு வெளியேற 
விரும்பினால்,மனித தேகத்திற்கு மட்டும் 
அனுமதி வழங்க வேண்டும் ,மனிததேகம் 
கிடைத்த உயிர்கள் ,எங்கிருந்து வந்ததோ 
அங்கு செல்ல வேண்டுமானால் ,அதனுடைய 
முயற்ச்சியால்தான் செல்லவேண்டும் .
      அப்படிசெல்ல விரும்பினால்,பூலோகத்தில்
எந்த பாக்கியும்[கடன் ]இருக்கக் கூடாது.
இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ,உயிர்கள் 
என்ன என்ன விரும்பி அனுபவித்ததோ,
அவைகளை எல்லாம் திரும்ப தந்துவிட்டுத்தான் 
வெளியேறவேண்டும் .அதுவரையில் அவைகள் 
வெளியேற அனுமதிவழங்கக் கூடாது.
   உயிர்கள் உழைக்காமல் திரும்ப 
விரும்பினால் அவைகள் அனுபவித்த சுக போகங்களை திரும்பித்  தராமல் போவதற்கு அனுமதிக்க கூடாது. 


  உயிர்கள் பாக்கியை [கடனை ] 
தராமல் ,உண்ணாமல்,உறங்காமல்,
தனித்து  யோகம் ,தியானம் ,தவம் முதலான காரியங்களில் 
செய்ய துணிந்தால் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் . 
கொடுத்தாலும்,வெளியேறக் கூடாது .
அவைகள் எவ்வளவு காலம் இருந்து 
முக்தி பெற்றாலும்,அவைகளின்காலம் 
முடிந்து, மறுபடியும் மனிதபிறப்பு கொடுக்கவேண்டும் . 


      மறுபடியும் மனித பிறப்பு எடுத்து 
உண்மையை உணர்ந்து அருட்பெரும்ஜோதிதான்உண்மைக் 
கடவுள் என்பதை உணரும்போது ,
அவைகளுக்கு,எல்லா உதவிகளையும் 
செய்துதரவேண்டும் ,அவைகள் ஊன 
உடம்பை ஒளி உடம்பாக மாற்றி
இரவாநிலைப் பெற்ற பிறகுதான் 
அருட்பெருஞ்ஜோதியிடத்திற்கு,
அனுப்பவேண்டும். 


      மேலே கண்ட சட்டப்படி மாயைக்கும் அருட்பெரும்ஜோதிக்கும் 
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ,அந்த 
ஒப்பந்தப்படி இந்த உலகம் செயல்ப் 
பட்டுக்கொண்டு இருக்கிறது .இந்த 
ஒப்பந்தம் தெரியாமல் ,மனித உயிர்கள் 
மாயையின் கட்டுபாட்டில் வாழ்ந்து 
கொண்டு இருகின்றன.


    இந்த ஒப்பந்தத்தை கண்டு பிடித்தவர் 
வள்ளலார் .அந்த ஒப்பந்தத்தை மீறாமல்.மாயையின் பிடியில் இருந்து 
மாயையின் உதவியுடன்,அருட்பெருஞ்ஜோதியுடன் 
தொடர்பு தொடர்புகொண்டு,அருளைப் 
பெற்று தன்உடம்பை ஒளி உடம்பாக 
மாற்றிக் கொண்டு,தான் பெற்றதைப் 
போல் எல்லாஉயிர்களும்பெறவேணும்
எனறு ,அருட்பெருஞ்ஜோதியிடம்,
அனுமதிப்பெருகிறார் வள்ளலார் அனுமதிபெற்ற 
பின்தான் திருஅருட்பா ஆறாம் திருமுறையை எழுதுகிறார், 


    ஆறாம் திருமுறையில் அனைத்து 
உண்மைகளும் தெளிவாக எழுதி 
வைத்துள்ளார் வள்ளலார் .


    இதற்குமேல் படித்து தெரிந்து 
கொள்வது அவரவர் அறிவை 
சார்ந்ததாகும்,


    ஆணவம் என்பதுஅருட்பெருஞ்ஜோதியால்
ஆன்மாவில் பதிவு செய்து அனுப்பி 
வைத்ததாகும் .

  கன்மம் என்பது ,உயிர்கள் செய்யும் 
செயல்களால் ஆன்மாவில் 
பதிவதாகும் .


  மாயைஎன்பது ;-உயிர்களுக்கு 
அதன்விருபத்திற்கு தகுந்தாற்ப்போல் 
உடம்பு என்னும் வீடு கட்டிக் கொடுப்பதாகும்.


   கன்மம் என்னும் செயல்களும் .
மாயையால் கட்டிக் கொடுக்கப் 
பட்ட வீடு என்னும் உடம்பையும் 
எப்படி மாற்ற வேண்டும் என்பதை 
தெரிந்து கொள்வதுதான் வள்ளலார் 
காட்டிய சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்க கொள்கைகளாகும் .


    உலகம் தோன்றிய காலத்திலிருந்து 
வள்ளலார் காலம் வரை, உண்மைகளை யாரும் கூறவில்லை

    வள்ளலார் உலக உண்மைகளை 
தெளிவாக தெரியப் படுத்தியுள்ளார் .
அனைவரும் தெரிந்து,அறிந்து 
அருட்பெரும்ஜோதியின் அருளைப் 
பெற்று மரணமில்லா பெருவாழ்வு 
வாழ்வோம் .


அன்புடன் ;--கதிர்வேலு ,


    மீண்டும் பூக்கும் ;-      
      
       
  
         

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு