வெள்ளி, 23 டிசம்பர், 2022

கடவுளைக் கண்டேன் ! தொடர்ச்சி...11

 *கடவுளைக் கண்டேன்!* 


*தொடர்ச்சி பாகம்--11*


*எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!*


*பல பணிகள் காரணமாக தொடர்ச்சி எழுத காலதாமதமாயிற்று...*


*வள்ளலார் பாடல்!*


தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து

வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்

சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்

ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.! 


*நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்து பழகினால் கடவுள் என்றும் நம்மைக் கை விடமாட்டார் என்பது எனது வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது.*


*ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த லைன் வீட்டின்  வெளியே என்னைத் தாக்குவதற்காக நான்கு ரவுடிகளை வரவைத்து காத்துக் கொண்டு இருந்தார், என்மேல் வருமானத்துறையில் பொய் புகார் அளித்தவர், ஈரோடு தாலுக்கா பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் என்பவர்*


கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பு SP அவர்களைத் தொடர்பு கொள்ளுதல்!


*இரவு சுமார் பத்து மணி இருக்கும் கோவை மாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு, பஞ்சாபிகேசன் அவர்களுக்கு ஈரோட்டில் இருந்து அவசரகால லைட்டினிங்கால் புக்கிங் செய்து தொடர்பு கொண்டோம்,*

*அவர் உதவியாளர் போனை எடுத்து என்ன விபரம் சொல்லுங்கள் என்று கேட்டார்.நான் ஈரோட்டில் இருந்து பேசுகிறேன், SP ஐயாவிடம் நேரிடையாக அவசரமான முக்கியமான ஒரு விபரம் சொல்ல வேண்டும் ஆதலால் தயவு செய்து அவரிடம்  போனில் தொடர்பு கொடுங்கள் என்றேன்* 


*நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நிறைய பேர் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.!*


*எஸ்,பி ஐயா வீட்டிற்கு சென்று விட்டார்,அவர் வீட்டு தொலை பேசிக்கு தொடர்பு கொடுக்கிறேன் பேசுங்கள் என்றார்,சரிங்க கொடுங்கள் என்றேன் அவ்வாறே எஸ்,பி அவர்கள் தொடர்பு கொண்டார், எனக்கு நடந்த  விபரங்கள் யாவும் தெளிவாக சொன்னேன்,விபரம் அறிந்த எஸ்,பி அவர்கள், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம், உங்கள் கடையிலேயே இருங்கள், இன்னும் 10 பத்து நிமிடத்தில் ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் காவலர்களை அழைத்துக் கொண்டு காவல்துறை வேனுடன் உங்கள் கடைக்கு வருவார்கள் அவர்களுடன் வீட்டிற்கு செல்லுங்கள் மற்றவை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்*


*அவ்வாறே பத்து நிமிடத்தில் காவல்துறை ஆய்வாளர் துணை ஆய்வாளர்,நான்கு போலீஸ்காரர்கள் வேனுடன் எங்கள் கடைக்கு வந்து விட்டார்கள் அவர்கள் வேனில் என்னையும் ஏற்றிக்கொண்டு நாங்கள். குடியிருக்கும் வீட்டிற்கு முன் சென்று வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கினார்கள்* 


*ரவுடிகள் ஓட்டம்!*


*போஸீஸ் வேனைப் பார்த்ததும் என்னைத் தாக்க காத்திருந்த ரவுடிகள் அங்கிருந்து  ஓட்டம் பிடித்தார்கள்.அவர்களைத் துரத்தி பிடித்து இழுத்துவந்து தட்டியால் அடித்து விசாரித்தார்கள்,பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சொல்லித்தான் வந்தோம் என்று ஒத்துக் கொண்டார்கள்* எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு ஈரோடு மரப்பாளம் ஏரியா என்றார்கள்.


*மணிவண்ணனிடம் விசாரத்தார்கள் அவரும் நான்தான் பணம் கொடுத்து ரவுடிகளை வரச் சொன்னேன் என்று ஒப்புக்கொண்டார்.*நாங்கள் குடியிருந்த லைன் வீட்டில் சப்இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது அவர்களையும் விசாரித்தார். அவரும் அவருக்கு துணையாக இருந்ததை ஒத்துக் கொண்டார்.*


*அப்போது இன்ஸ்பெக்டர் மிகவும் கடுமையான கோபத்துடன், நீங்கள் அரசு அதிகாரிகளாக இருக்கிறீர்கள்  நீங்கள் இப்படி செய்யலாமா ? உங்கள் அதிகாரத்தை இப்படித்தான் தவறான முறையில் பயன் படுத்துவதா ? உங்கள்  மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் கேஸ் பைல்   செய்தால் உங்கள் வேலையே பரிபோயிடும் என்று உங்களுக்குத் தெரியாதா ?* *கோவையில் இருந்து SP அவர்கள் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து விசாரித்து, உடனே  அதன் உண்மை நிலவரத்தை  அனுப்பச் சொல்லி உள்ளார் என்ற விபரத்தை தெளிவாக சொன்னார்.* 


*இருவரும் ஆடிபோய் விட்டார்கள்.*


*மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் இருவரும் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து.லைன் வீட்டில் எங்கும்  குடியிருக்காமல் தனிமையான வீட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.*


*அவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்,எங்கள் வேலை போய்விட்டால் மானம் மரியாதை எல்லாம் போய்விடும். வாழ்க்கையே கேள்விக்குறியாகி ஒழிந்துவிடும்,எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கை கூப்பி வணங்கி கெஞ்சி மன்றாடி வேண்டிக் கொண்டார்கள்*


*அதற்கு இன்ஸ்பெக்டர் என்னால் ஒன்றும் செய்யமுடியாது ஸ்பென்ஸர் டெய்லர்  கதிர்வேல் அவர்கள் கேஸ் வாபஸ் பெற்றால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும்,ஆகவே அவரிடம் நீங்கள் செய்த தவற்றை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டு அவர் கேஸ் வாபஸ் பெற்றால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்*


*அவ்வாறே இருவரும் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி வணங்கி, நீங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் சரண் அடைந்தார்கள்.அவர்களின் குடும்பம் குழந்தைகள் தொழில்,வாழ்க்கை போன்றவற்றைக் கருதி புகாரை   ரத்துசெய்து கை எழுத்து போட்டு வாபஸ் பெற்றுக் கொண்டேன்* 


*ஈரோட்டில் என் கடைப்பற்றியும் தொழில் பற்றியும், குணத்தைப் பற்றியும்,துணிவைப் பற்றியும் அறிந்த இன்ஸ்பெக்டர் அவர்கள் மிகவும் பாராட்டி மகிழ்ந்தார்.மேலும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரிடையாக தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.என் மனம் மகிழ்ந்தது குளிர்ந்தது.* 


*மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் இயற்கையாக  எப்போதும் என்னிடம் உண்டு !*


*இன்ஸ்பெக்டர் சொல்லியவாறு ஒரே வாரத்தில் அவர்கள் இருவரும் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்கள்*. 


*இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத கட்டமாகும்*


*நன்மை செய்பவர்களுக்கு ஆண்டவர் எப்போதும் துணையாக இருப்பார் என்பது இதுவே சான்றாகும்.*


*வள்ளலார் பாடல்!*


*புண்படா உடம்பும்* *புரைபடா மனமும்*

*பொய்படா ஒழுக்கமும்* பொருந்திக்


கண்படா திரவும் பகலும்நின் தனையே

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்


உண்பனே எனினும் உடுப்பனே எனினும்

உலகரை நம்பிலேன் எனது


நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.! 


*என்ற வள்ளலார்  பாடல் என் நினைவிற்கு வருகிறது.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இன்றுவரை எங்களை கைவிட்டதாக வரலாறு இல்லை.*


*கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது முற்றிலும் உண்மையாகும் தவறு செய்ய நினைத்தாலும் தவறு செய்ய விடமாட்டார்*


மேலும் தொடரும்.....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு