புதன், 28 ஜூலை, 2010

உயிர்க் கொலை செய்யக்கூடாது ! புலால் உண்ணக்க் கூடாது !

    
      ''வள்ளலார்'' உணவை இரண்டாக பிரிக்கிறார் .ஒன்று ''பொருள் உணவு ,''
      மற்றொன்று ''அருள் உணவு '' இவை இரண்டும் மனிதர்களுக்கு மிகவும்
      முக்கிய மானதாகும் .

      பொருள் உணவு என்றால் என்ன ?
       இவ்வுலகில் உ யிர் இல்லாத அனைத்துப் பொருள்களும்  .
உலகில் உள்ள,அனைத்து  உயிருள்ள ஜீவ ராசிகளும்,
வாழ்வதற்காக படைக்கப் பட்டவைகளாகும்.
       இந்த உண்மை தெரியாத மனித சமுதாயம் உயிர் உள்ள ,
ஜீவராசிகளை கொன்று அதன் இறைச்சியை உண்ணுகிறார்கள் ,
இவை எந்த விதத்தில் நியாயம் ,எனறு கேட்கிறார் வள்ளலார் 
அவர்கள் .   அவர் உயிர் கொலை செய்வதை நினைத்து 
வேதனையுடன் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளபாடல் ,
பாடல் ;---
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொள்ளத் 
தொடங்கிய போதெலாம் பயந்தேன் 
கண்ணினா ஐயோ பிறவுயிர் பதைக்கக் 
கண்ட காலத்திலும் பதைத்தேன் 
மண்ணினில் வளையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என்னுள்ளே நடுங்கிய நடுக்கம் 
எந்தை நின் திருவுலமறியும்.
   எனறு வேதனைப்படுகிறார் வள்ளலார் .
மனிதன் மனிதனாக வாழாமல் ,வாயில்லாத 
ஆடு ,மாடு ,கோழி ,பன்றி, மீன்கள் போன்ற உயிர்லுள்ள 
ஜீவன்களை கொன்று ,உண்பதற்கு எப்படி மனம் ,
துணிந்தது ,இவைகளைப் படைத்த ,இறைவன் 
இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார் ,இவர்களுக்கு 
எப்படி கருணைக் காட்டுவார் ,இவர்களுக்கு அறிவு 
எப்போது தெளிவடையும் ,எனறு நினைத்து ,
உள்ளம் நடுங்கி வேதனைப் படுகிறார் வள்ளலார் . 
பொருள் உணவு இருக்க ,அருளுணவு இருக்க ,
இப்படி வாயில்லாத ,உயிர்களைக் கொன்று ,
உண்பது ,இயற்கையின் சட்டவிரோதமான ,
செய்கையாகும் ,இதை உலகிலுள்ள அனைவரும் 
தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.
கடவுள் பெயரால் உயிர்கொலை செய்வது ;----
       கடவுள் பேரால் உயிர் பலிக்கொடுப்பது
கொடுமையிலும் கொடுமையாகும்.என்கிறார் வள்ளலார் .
உயிரைக் கொடுத்த இறைவனுக்கு ,உயிரை பலிக் 
கொடுக்கலாமா ? இவைகள் எவ்வளவு அறியாமை 
செயல்களாகும் .இந்த வழிமுறைகளை ,உலக 
மக்களுக்கு ,அறிமுகப் படுத்தியவன் யார் ?
அவன் மனிதனா ?மனிதனாக இருந்தால் இப்படிப்பட்ட 
வழிமுறைகளை ,உலகிற்கு அறிமுகப் படுத்தி 
இருக்கமாட்டான் .இவைகள் யாவும் மாயையின் 
சேட்டைகள் .மாயையில் சிக்குண்டவன் ,
இந்தக்காரியத்தை செய்திருக்கிறான் .அதை 
உண்மை எனறு நம்பி மக்கள் ஏமாந்து ,அப்படியே 
கடைப்பிடித்து வருகிறார்கள்.
      மக்களை அழிவு பாதையில் இருந்து மீட்டு 
நல்வழிப் படுத்தவே வள்ளலாரை ,இந்த உலகத்திற்கு 
அனுப்பியுள்ளார் ''அருட்பெரும்ஜோதி''ஆண்டவர் .
கடவுள் பெயரால் உயிர்பலி இடுவதை ப்பற்றி 
ஒருபாடல் ;---
நலிதரு சிறிய தெய்வம் எனறு ஐய்யோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப் 
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் 
பலிக்கடா முதலிய உயிரைப் 
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே 
புத்தி நொந்து உளம் நடுக்கம் உற்றேன் 
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் . 
     எனறு வேதனைப்படுகிறார் வள்ளலார் .
உயிர்களை பழிவாங்கும் ,தெய்வங்களை ,
கொடுமையான சிறிய தெய்வங்கள் என்கிறார் .
அந்த தெய்வங்களைப் பார்த்த போதெல்லாம் ,
என் உள்ளம் நடுங்கி பயந்தேன் என்கிறார் .
இன்னும் எத்தனை உயிகளை பலி வாங்கப் 
போகிறதோ என்பதை நினைத்து வேதனைப் 
படுகிறார் .
    இந்த கோயில்கள் இந்த உலகத்தில் இருக்கலாமா? 
அவைகளை அகற்றி விடுவது ,எவ்வளவு பெரிய 
புண்ணியம் தெரியுமா !அந்த புண்ணியத்தை 
செய்பவர் யார்?அப்படி அந்த புண்ணியத்தை 
செய்பவரை கடவுளாகவே,கருதவேண்டும் 
       கற்பனைக் கதைகளையும் ,மூட நம்பிக்கைகளையும் ,
ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் மத்தியில் ,பரப்பி 
விட்ட அந்த மாமனிதர் யார் ?அவர்விதைத்த விதை ,
உலகமெலாம் பரவி,வளர்ந்து பெரிய மரமாகி விட்டது ,
     இதை வள்ளலார் தெளிவுப்படுத்துகிறார் ,
ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் 
மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை 
அவன் பூட்டிய பூட்டை,ஒருவரும் திறக்கவில்லை ,
இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை ,
உடைக்கஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார் .
      அவர் சொல்லியதன் அர்த்தம் அந்த பூட்டை திறந்து 
விட்டேன்,அந்த பூட்டைஉடைத்துவிட்டேன் ,இனிமேல் 
எந்த கவலையும் பயமும் வேண்டாம் என்கிறார் .
    அவர் பதிவு செதுள்ள பாடல் ,
கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் 
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக !
வேத நெறி யாகமத்தின் நெறி புராணங்கள் 
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் 
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
உள்ளதனை யுள்ளபடி யுணர யுணர்த்தினையே
ஏதமற வுனர்ந்தணன் வீண் போது கழிப்ப பதற்கோர் 
எள்ளளவு எண்ணம் இல்லேன் என்னோடு நீ புணர்ந்து 
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் 
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே .
என்றும் ;--
கூருகின்ற சமய மெலாம் மதங்கள் எல்லாம் பிடித்துக் 
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே 
நீறுகின்றார் மண்ணாகி நாருகின்றார் அவர் போல் 
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் 
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் யாங்கே 
இலங்கு திருக் கதவும் திறந்து இன்னமுதம் மளித்தே 
தேறுகின்ற மெய்ஞ் ஞான சித்தியுறப்புரிவாய் 
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே .
     எனறு பலபாடல்களில் தெரியப் படுத்தியுள்ளார் .
இப்படி நம் முண்ணோர்கள் வகுத்த வழிமுறைகள் 
யாவையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளலார் .
      உணவு பழக்கத்தில் இருந்து ,வாழ்க்கை முறை ,
வழிப்பாட்டு முறை,ஆட்சிமுறை ,அதிகாரமுறை ,
அனைத்தையும் ,பொய்யானது எனறு வெளிச்சம் 
போட்டு காட்டிவிட்டார் ,வள்ளலார் 
      1874 ,ம்ஆண்டுக்கு பிறகு பகுத்தறிவு கொள்கைகள் 
உலகமெங்கும் பரவியுள்ளது ,அதற்க்கு அடித்தளம்
போட்டவர் வள்ளலார் என்பது அனைவருக்கும் 
தெரியும் ,
      ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உலகமெங்கும் 
பரவிக்கொண்டு வருகிறது ,ஆன்மாவை அதாவது 
அனைத்து உயிரையும் தம் உயிர்போல் பார்க்கும்
நிலை ஏற்பட்டால் ,எந்த உயிரையும் கொன்று ,
திண்ணும் பழக்கம் இருக்கும் இடம் தெரியாமல்,
அழிந்துவிடும்.
    இதை உலக ஆட்சி யாளர்களும் ,அறிவியல் 
வல்லுனர்களும் ,அணு ஆராட்சியாளர்களும்,
ஆன்மீக சிந்தனையாளர்களும் ,சிந்தித்து செயல்ப் 
பட்டால் ,உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ,
துன்பமும் துயரமும் இல்லாமல் ,அமைதியான 
உலகத்தை காணலாம் .
''கொல்லாநெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ''
 அன்புடன் ;--கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .





ஞாயிறு, 25 ஜூலை, 2010

''புலால் உண்ணக் கூடாது .உயிர்க்கொலை செய்யக்கூடாது !''



        
இவ்வுலகில் உண்டாகும் துன்பங்களுக்கு


அடிப்படைகாரண்ம்,உயிர்க்கொலைசெய்வதும்,


 மாமிசம் [புலால்]உண்பதும்.


       இவ்வுலகில் உணவு, இரண்டு வகையாகப் 


பழக்கத்தில் உள்ளது ,சைவஉணவு ,அசைவ உணவு ,


என்பதாகும். 


பலபேர் சைவஉணவு விரும்புகிறார்கள் ,பலபேர் அசைவஉணவு ,


விரும்புகிறார்கள்,இந்த மாற்றத்திற்கு என்னக்காரணம் ,?


யார்காரணம் ? என்பதை கவனித்தால் நன்குவிலங்கும் ,


ஆதியிலே மனிதன் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் 


வேட்டையாடி விளங்க்க்குகளை புசித்துவந்தான் ,அதன் பிறகு 


மனிதனை மேம்படுத்த வந்த சமயங்களும் ,மதங்களும் ,


சாஸ்திரங்களும் ,உணவு வகைகளை முறைபடுத்த ,


தவறிவிட்டது,


    கடவுளைப் பற்றி போதிக்கவந்த சமயங்களும் ,மதங்களும்,


அவர்கள் எழுதிய , 


கதைகளில்,வேட்டையாடுவதும்,கொலைகள் செய்வதும் 


போன்ற, கற்பனை கதைகளில்,கொலைகள் செவது குற்றமில்லை ,


புலால் உண்பது குற்றமில்லை ,அதற்கு உண்டான பரிகாரம் ,


செய்தால் ,யாவும் தீர்ந்து விடும் ,எனறு பொய்யான செய்திகளை 


மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் .


அவைகளை உண்மை எனறு நம்பி,இன்றுவரை மக்கள்,


அறியாமையால் அப்படியே கடைப்பிடித்து வருகிறார்கள் ,


    '' திருவள்ளுவர் '


   திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ,133 ,அதிகாரங்களில் ,


1330 ,குறள்களில், இரண்டு அதிகாரங்களில், இருபது 


குறள்கள், கொல்லாமை பற்றியும் ,புலால் உண்ணாமைப்


பற்றியும் ,மிகத் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .


தமிழ்ப் படித்த,சான்றோர்கள் ,தமிழ் அறிஞ்ஞர்கள்,


தமிழ் ஆராய்ச்சியாளர்கள்,தமிழ்க்  காவலர்கள்,


தமிழை வளர்ப்பவர்கள்,தமிழ் பல்கலைக் கழகங்கள்


தமிழ் பேராசிரியர்கள் ,தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் ,


அனைத்தும்,என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ,


     மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உணவு ,


உணவு வகைகளில்,தாவர உணவு உடலுக்கு நல்லது ,


புலால் உணவு உடலுக்கு கெடுதல் ,என்பதை வலியுறுத்தி 


சொல்லாததின் காரணம் என்ன ?


     உயிர்க்கொலை செய்வது படுபாதகச செயல் என்பதை 


வலியுறுத்தி சொல்லாததின் காரணம் என்ன ?


திருவள்ளுவர் எழுதி வைத்த ,கொல்லாமை ,


புலால் உண்ணாமை,போன்ற அதிகாரங்களில் 


உள்ள குறள்கள் தேவையா ?தேவையில்லையா ?


     மேடைகளில் திருக்குறளைப் பற்றி பேசும் ,


தமிழ் சான்றோர்கள்,கொல்லாமை ,புலால் உண்ணாமைப் 


பற்றி பேசுவதே இல்லை,ஏன்? அவர்களால் புலால் 


உண்ணாமல் இருக்க முடியாது என்பதால் ,அவர்கள் 


பேசுவதற்கு,தயங்கு கிறார்கள் போலும் .


    தயவு செய்து திருவள்ளுவர் வலியுறுத்திய 


கொல்லாமை,புலால் உண்ணாமையைப் பற்றி ,


உலக மக்களுக்கு தெரியப் படுத்துங்கள் .


உலக பொதுமறை திருக்குறள் எனறு 


சொன்னால் போதாது ,திருக்குறளில் உள்ள 


மிக முக்கியமான குறள்கள் ,கொல்லாமை ,


புலால் உண்ணாமை ,என்ற அதிகாரத்தில்உள்ள 


குறட்பாக்களாகும்,சமுதாயம் மேம்பட வேண்டுமானால் ,


'' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 


  செய்தொழில் வேற்றுமை யான்''


என்ற குறளின் கருத்தை பார்த்தால் நன்கு விளங்கும் ,


எல்லா உயிர்களும் ஒன்று எனறு நினைக்கவேண்டும் ,


எல்லா உயிகளும் ஒன்று எனறு நினைத்தால் ,


வாயில்லா ஜீவன்களை ,கொன்று திண்ணலாம்


என்ற எண்ணம் வருமா !


திருவள்ளுவர் எழுதிவைத்த திருக்குறள் ;---


கொல்லாமை ;--


  1 ,அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் 


       பிறவினை எல்லாந தரும் .


  2 ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்


    தொகுத்த வற்றுள் எல்லாந தலை .


 3 ,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் 


     பின்சாரப் பொய்யாமை நன்று .


 4 ,நல்லாறு எனப்படுவது யாதெனின் 
     யாதொன்றும் 


    கொல்லாமை  சூழும் நெறி . 


 5 ,நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை                    அஞ்சிக் 
     கொல்லாமை சூழ்வான் தலை .

 6 ,கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் 
     வாழ்நாள் மேல் 
    செல்லாது உயிருண்ணுங் கூற்று .


7 ,தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை .


8 ,நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்   சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கம் கடை .


9 ,கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
     புன்மை தெரிவா ரகத்து .


10 ,உயிர்உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின் 
     செல்லாத்தீ வாழ்க்கை யவர்.


      அடுத்து ;-- ''புலால் மறுத்தல் ''


1  தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது உணுன்பான்
    எங்கனம் ஆளும் அருள்.


2 ,பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை 
    அருளாட்சி 
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு .


3 ,படை கொண்டார் நெஞ்சம் போல் நனரூக்காது
    ஒன்றன் 
    உடல் சுவை உண்டார் மனம்.


4 ,அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் 
    பொருளல்லது அவ்வூன் தினல்.


5 ,உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
    அண்ணாத்தல் செய்யாது அன்று .


6 ,தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
    யாரும் 
    விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல் .


7 ,உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன் 
    புண்ணது உணர்வார்ப் பெறின்.


8 ,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன் .


9 ,அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
    உயிர்செகுத் துண்ணாமை நன்று .


10 ,கொல்லான் புலாலை மறுத்தானைக் 
      கைகூப்பி 
      எல்லா உயிரும் தொழும் .


       மேலே கண்ட குறள்கள் ,கொல்லாமை பற்றியும் ,


புலால் உண்ணாமைப் பற்றியும் மிகத்தெளிவாக 


தெரிவித்துள்ளார் ,
     
      பிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பம் போல் 


எண்ணிக் காப்பாற்றாவிட்டால் அறிவு பெற்று ,எவ்வளவுதான் 


படித்து இருந்தாலும் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர் .


     நல்ல வழி எனறு சொல்லப்படுவது ,எது என்றால் எந்த 


உயிரையும் கொல்லாமை என்பதாகும் ,அதுவே எல்லா 


அறத்தை விட உயர்ந்த அறமாகும் ,


    உண்மை பேசுவதைவிட ஒருஉயிரைக் கொல்லாதிருப்பது ,


உயர்ந்த கொள்கையாகும் என்கிறார் .கொலை செய்பவர்கள் 


எந்த காலத்திலும் உயர்ந்த நிலையை அடையமுடியாது ,


என்கிறார் ,கொலைசெய்பவர்களுக்கு,ஆண்டவரிடத்தில் ,


மன்னிப்பு என்பதே கிடையாது என்கிறார் .


    திருக்குறளை படித்தால் ''கொலை செய்வது '' என்பது ,எவ்வளவு 


கொடுமையான செயல் என்பதை தெரிந்து கொள்ளலாம் .


   அடுத்து ;--'புலால் மறுத்தல்'--  


   திருவள்ளுவர் புலால் மறுத்தல் பற்றி மிகவும் 


தெளிவாக விளக்கியுள்ளார் ,


தன்னுடைய உடம்பை வளர்ப்பதிற்க்காக இன்னோர் உயிரை 


கொன்று அதன் இறைச்சியை தின்பவன் எப்படிக் கருணை 


உள்ளவனாக இருக்கமுடியும் ,


     ஓர் உயிர் வாழ்ந்த உடம்பை சுவையாகப் பக்குவப்படுத்திச 


சாப்பிட்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் 


வைத்திருப்பவரின் நெஞ்சம் போன்றது ,அங்கே கருணை 


எப்படி இருக்கும் ,கருணை எப்படிவரும் ,   


    அருளைப் பற்றி பேசுகிறார்கள், ஓர் உயிரை கொன்று 


தின்பவர்களுக்கு ,அருள் எப்படி வரும், எப்படி கிடைக்கும்,


உங்கள் தவறை தீர்த்துக் கொள்ள, ஆயிரம் யாகங்கள்  


செய்வதை விட ,ஓர் உயிரை கொன்று அதன் உடம்பை  


உண்ணாதிருத்தல் பல கோடி புண்ணியம் தரும் .   


     ஓர் உயிரையும் கொள்ளாமல், மாமிசம் சாப்பிடாமல்


இருப்பவரை உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,


கைக்கூப்பி வணங்கும் என்கிறார் திருவள்ளுவர் .


அவர்களே கடவுளாகக் கருதப் படுவார்கள் . 


    மனிதன் உணவு உண்டு வாழ்வதற்காக ,இயற்கை நமக்கு 


அளவு கடந்த தாவர உணவுகளை வழங்கி இருக்கிறது ,

அவைகளை உண்டு வாழ்ந்தாலே போதுமானதாகும் .


அவைகளை உண்பது  உயிக்கொலையாகாது ,


அவைகளை உண்பதால் அறிவு வளர்ச்சி பெருகும் ,


கருணையும்,அன்பும் ,தயவும் மேன்மேல் பெருகும் .


    அதனால் மனித நேயம் ,ஆன்மநேயம் உண்டாகும் ,


உலகில் அமைதி ஏற்ப்படும் ,உலகில் உள்ள அனைவரும் ,


நலமுடன் வாழலாம்.
   
     இதனை உலக நாடுகள் கவனிக்கவேண்டும் .உலக 


அறிவியல் ஆராச்சியாளர்கள் ,ஆன்மீக சிந்தனையாளர்கள்,


அரசியல் மேதைகள் ,பொதுஅறிவுக் கொளகையுடையவர்கள்.


அணு ஆராச்சியாளர்கள் ,மத போதகர்கள்,மற்றும் ,


விஞ்ஞானிகள்,மற்றும் 


உலகில் உள்ளஅனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .


    மேலும் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ,


உயிர்க்கொலைப் பற்றியும் ,புலால் உண்ணாமைப்


பற்றியும் ,என்ன சொல்கிறார் என்பதை அடுத்த 


வலைப்பூவைப் பாருங்கள் .


நன்றி ;--அன்புடன் கதிர்வேலு .


மீண்டும் பூக்கும்.             
           

வியாழன், 22 ஜூலை, 2010

'' தைப் பூசம ,மாதப்பூசம தேவையா ? ''

    
சத்திய ஞான சபை
 ''  வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் 
மாதப்பூசம்,தைப்பூசம வழிபாடு செய்வது முறையானது அல்ல ''
   
      உத்தர ஞான சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பரம் என்றும் ,


பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும் குறிக்கப் பட்ட 


குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் 


பதியினிடத்தே,இயற்க்கை விளக்க நிறைவாகி யுள்ள 


ஓர்'' ஞான சபையை'' வள்ளலார் தோற்றி வைத்துள்ளார் .


       இவ்வுலகில் ஆறறிவுள்ள உயர்வு உடைய மனித 


தேகத்தைப் பெற்ற, மானிடர்கள் அனைவரும் ,கடவுளின் 


உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ,அவசியமும் 


அவரசமும் ,என்ற காரிய காரணத்தால் ,இயற்க்கை உண்மைக்  


கடவுள் ஒருவர் உள்ளார் .அவர்அருட்பெரும் ஒளியாக 


உள்ளார் ,அவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்தவேண்டும் ,


என்ற உயரிய நோக்கத்துடன் ,வடலூரில் சத்தியஞான சபையை 


அமைத்துள்ளார் வள்ளலார் அவர்கள் .


ஞான சபையைப்பற்றி

பதிவுசெய்துள்ள பாடல் ;--


உலக மெலாம் தொழவுற்றது எனக்கு உண்மை யொண்மைதந்தே


இலக வெலாம் படைத் தாருயிர் காத்து அருள் என்றது என்றும் 


கலகமிலாச சுத்த சன்மார்க்க சங்கங்கள் கலந்தது பார்த் 


திலக மெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே .


அடுத்தபாடல் ;---

ஒத்தாரையும் மிழிந்தாரையும் நேர்கண்டு உவக்க வொரு


மித்தாரை வாழவிப்ப தேற்றார்க் அமுதம் விளம்பியிடு 


வித்தாரைக் காப்பது சித்தாடுகின்றது மேதினி மேற் 


செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே .


      என்பவை போன்ற, ஞான சபையைப்பற்றி நிறைய 
   
பாடல்கள் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் .


      சத்திய ஞானசபை யானது  சாதி ,சமயம் ,மதம் இனம், நாடு,


அனைத்தையும் கடந்தது ,உலகிலுள்ள அனைவருக்கும் ,


உரிமையுள்ளது ,உண்மையானது ,அனைவரும் தெரிந்து 


கொள்ளவேண்டியதாகும். 


வழிபாட்டு முறை




         இன்று ஞான சபையின் நிலை 


என்ன ?


          இன்று ஞான சபை சமயவாதிகளின் கையில் 


சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறது ,


இதைநினைக்கும் போது பெருத்த வேதனையாக 


இருக்கிறது .இதை சன்மார்க்கிகளோ ! ஆன்மீக 


சிந்தனையாளர்களோ ! தமிழ் சான்றோர்களோ !


ஆராட்சியாளர்களோ! ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களோ!


இந்து சமய அறநிலையத்துறையோ! பகுத்தறிவு 


சிந்தனையாளர்களோ ! புதைப்பொருள் ஆராட்சியாளர்களோ!


அறிவியல் வல்லுநர்களோ! வள்ளலார் எழுதிய 


 திருஅருட்பாவையும் ,அவர் தோற்றுவித்த ஞான சபையும் ,


கவனிக்காதது ஏன் ? ஏன் ? ஏன்?


வள்ளலார் கொல்லாமையும் ,புலால் உண்ணாமையும் ,


அதிகம் வலியுறித்தியுள்ளார் ,அதனால் யாரும் 


கவனிக்கவில்லையா! புலால் மறுத்தவர்கள் ,


அகவினத்தார் ,புலால் உண்பவர்கள் புறவினத்தார்


என்றார் அதனால் கவனிக்கவில்லையா ! 


இன்றுவரை விடை கிடைக்கவில்லை ,


       திருவள்ளுவரைப் போற்றும் தமிழகஅரசு வள்ளலாரைக் 


கைவிட்டது ஏன்?, என்ன என்பது புரியவில்லை ,ஒருவேலை


திருஅருட்பாவை தமிழ் சான்றோர்கள் யாரும், 


 முழுமையாக படிக்கவில்லையா! ஒருவேலை திருஅருட்பா 


சமய, மதம் சார்ந்த நூல் என்று நினைத்து ,கவனம் 


செலுத்தாமல் விட்டுவிட்டாகளா! என்பதும் புரியவில்லை .


          இந்த உலகத்தில் உள்ள அறிவு நுல்களில் மிகவும்   


முக்கியமான நூல்கள் இரண்டு ஒன்று திருக்குறள் ,


மற்றொன்று திருஅருட்பா ,திருக்குறள் வாழ்வது எப்படி 


என்பதற்குவழிகாட்டிய நூலாகும் ,திருஅருட்பா 


வாழ்ந்து வழி காட்டிய நூலாகும் .வள்ளலார் திருக்குறள்படி 


வாழ்ந்து வழி காட்டினார், என்பது வள்ளலார் கொள்கைகளில் ,


நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததாகும் 
.     
       வடலூரின் வழிப்பாட்டு முறை ,  


       வடலூரில் ;--சமய ,மத கோவில்களில் நடைபெறும் 


விழாக்கள் போல் நடந்துவருகிறது ,அவை முற்றிலும் 


தவறானதாகும் ,வள்ளலார் கொள்கைக்கு விரோதமானதாகும் ,


தமிழகஅரசும் ,இந்து சமய  அறநிலையத்துறையும்,


கவனிக்கவேண்டியதாகும் ,வழிப்பாட்டு முறையை ,


மாற்றியாக வேண்டும்


      தற்போது நடைமுறையில் உள்ளது ;--


சத்திய ஞானசபையில் ஒவ்வொரு மாதப்பூச தினங்களிலும் 


இரவு 8 ,மணிக்கு ஆறு திரைகள் நீக்கி மூன்றுமுறை 


அருட்பெரும்ஜோதி தரிசனமும் ,தைப்பூச தினத்தில் 


காலை மணி  ஆறு ,பத்து ,பிற்பகல் ஒருமணி ,


இரவு மணி ஏழு ,பத்து ,மறுநாள் காலை ஆறு மணி 


ஆக ஆறு காலங்களில் ஏழுதிரைகள் நீக்கி ஒவ்வொரு 


காலமும் மூன்று முறை அருட்பெரும்ஜோதிதரிசனம் 


நடைபெறுகிறது .


      தைபூசத்தன்று விசேஷச  திருவிழாவாக,பத்திரிக்கை 


அடித்து ,பெரிய அளவில் பந்தல் போட்டு ,வேடிக்கை 


வினோதங்கள்,திருவிழாக்கடைகள்,வியாபாரக்கடைகள் ,


போன்ற,ஆடம்பரகாட்சிகள் அமைத்து விழா எடுக்கிறார்கள் .


       இவைகள் யாவும் சமயமதக்கோவில்களில் நடைப் பெறுவதுபோல்,


நடைப்பெற்று கொண்டுவருகிறது ,


      வள்ளலார்;--ஞானசபை கட்டியத்தின் நோக்கம் என்ன ?


எதற்காக கட்டினார் என்பது தெரியாத ,சமய, மத,வாதிகள் 


அன்று தொட்டு இன்றுவரை ,தொடர்ந்து தவறை 


செய்து கொண்டு வருகிறார்கள் .


       வள்ளலார் மாதப் பூசம,தைப்பூசம அன்று ஜோதிதரிசனம் 


காட்ட சொன்னாரா என்றால்! இல்லவேயில்லை .


அருட்பாவில் ,எந்தபாடல் களிலும் ,வசனபாகத்தில் எங்கும் 


குறிப்பிடப்படவில்லை .அப்படி இருக்க ஏன் இப்படிச 


செய்கிறார்கள் .இதற்க்கு உடந்தையாக ,


இந்து அறநிலையத்துறையும் ,


தமிழக ஆட்சியாளர்களும் ,


அதிகாரிகளும் ,துணைபுரிந்து வருகிறார்கள் .


       இவைகளை தடுத்து நிறுத்துவது எப்படி ,?


வள்ளலார் ஞான வழியைக்காண்பிக்க வந்தவர் 


பல்லாயிரம் ஆண்டுகளாக கடைபிடித்து வந்த 


சமய மத கொள்கைகளையும்,மூட பழக்க வழக்கங்களையும் ,


கலையுரைத்த கற்பனையை ,நிலையெனக்கொண்டாடும் ,


கண்மூடிப் பழக்கங்கள் யாவையும் ,மண்ணைப் போட்டு


மூடுவதற்கு வந்தவர் வள்ளலார் .


        அவர் அமைத்த ஞான சபையில் இப்படி நடந்தால் எப்படி 


பொருத்துக் கொள்ளமுடியும்!,


       மனிதன் மனிதனாக வாழ்ந்து, மெய்ப்பொருளை


உணர்ந்து ,அதனை அடைந்து வாழ வேண்டும் என்பதற்காக


ஞானசபையைக் கட்டினார் வள்ளலார் ,


       ஞானசபை அமைதி நிலவும் இடமாக இருக்கவேண்டும் .


அருள் நிறைந்த இடமாக இருக்கவேண்டும் .மெல்லென 


துதிசெய்யும் இடமாக இருக்கவேண்டும் .


''வடலூர் ஞான சபை'' தமிழ் நாட்டுக்கு கிடைத்த 


மாபெரும் பொக்கிஷமாகும்,உலகில் எங்கும் 


இல்லாத அதிசியமாகும் .


தமிழகஅரசு வடலூர் ''ஞானசபையை'' உலக 


சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் .   


நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து 


நெகிழ்ந்து ,அன்பே நிறைந்து நிறைந்து ,ஊற்றுஎழும் 


கண்ணீர் அதனால் ,உடம்பு நனைந்து நனைந்து,


அருள் பெருகும் இடமாக இருக்கவேண்டும் .


      ஞானசபையில் ,ஜோதியோ ,திரைகளோ வள்ளலார் 


வைக்கவில்லை, .ஞானசபை என்பது ஞான சிங்காதனமேடை ,


அதாவது வெற்றிடம் ,இறைவன் வந்து அமருமிடமாகும் . 


அதனால்தான் ,அதற்கு 


''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''எனறு,


 பெயர்வைத்தார் வள்ளலார் .


 உலகமக்கள் அனைவரும் வந்து தரிசிக்கும்


 படியானஇடம் ஞானசபையாகும் .


       ஞான சபையில் ;--சமய சடங்குகளோ,திருவிழாக்களோ,


மேளதாளங்களோ,தீபாரதனைகளோ, ,பிரசாதங்களோ ,


சமய மத சம்பந்தமான எந்த காரியங்களும் ,


,நடைமுறைப் படுத்தக்கூடாது,


அப்படியும் மீறி செய்தால்,


அவை வள்ளலார் கருத்துக்கு விரோதமானதாகும் .


       இனிமேலாவது;-- வள்ளலார் திருஅருட்பாவில்என்ன பதிவு செய்துள்ளாரோ அதன்படி செயல்படவேண்டுமாய் ,


அனைவரையும் பணிவுடன் கேட்டுககொள்கிறேன்.


       இவைகளை முழுமையாக ஒழுங்கு படுத்தி, சரியான 


வழி காட்ட வேண்டியது ,தமிழக அரசும் ,இந்துசமய 


அறநிலையத் துறையுமாகும் ,தமிழகமுதல்வரும் ,


அறநிலையத்துறை அமைச்சரும் ,அறநிலையத் துறை ஆணையரும்,


அருள் கூர்ந்து கவனிக்க வேணுமாய் 


மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .


        ஆன்மநேய அன்புடைய சுத்த சன்மார்க்க 


அன்பர்கள் ,உண்மையான அன்பும் ,உண்மையான 


பற்றும் ,வள்ளலார் மீது இருந்தால் ,


தமிழக அரசிடம் ,வள்ளலாரின் கொள்கைகளை 


எடுத்து கூறி ,சட்டபடி நடவடிக்கை எடுத்து 


ஞானசபையை காப்பாற்றுவோம் .ஒன்று கூடுவோம் 


வள்ளலார் வழியில் நிற்போம்.


அருட்பெரும்ஜோதி ஆண்டவர் துணையாய் 


இருப்பார். .அருளைப்பெருவோம் ,அமைதியுடன் 


போராடுவோம் .


பாடல் ஒன்று ;--


உத்தரஞான சித்தி புரத்தின் 


ஓங்கிய ஒருபெரும் பதியை 


உத்தர ஞான சிதமர ஒளியை 


உண்மையை ஒருதனி உணர்வை 


உத்தர ஞான நடம்புரி கின்ற 


ஒருவனே உலகெலாம் வழுத்தும் 


உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் 


ஓதியை கண்டு கொண்டேனே .  


வாழ்க வள்ளலார் புகழ் 
வளர்க சுத்த சன்மார்க்கம்.  


அன்புடன் ;---கதிர்வேலு .




மீண்டும் பூக்கும் ;--