வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன்!


*யோக மாந்தர்க்கு காலம் உண்டாக உரைத்தேன்!*

*வள்ளலார் பாடல்!*

ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.!

*மேலே கண்ட பாடலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*

*என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்பார் வள்ளல்பெருமான் அவர்கள்* 

*சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு மார்க்கம் இருக்கின்றது நான்கிலும் நான்கு என16 பதினாறு படிகள் உள்ளன* 

*சரியை கிரியை எனும் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் எட்டு படிகளையும் கடந்து ஒன்பதாவது படியான யோக மார்க்கத்தில் வந்தால் தான் சுத்த சன்மார்க்கத்தைப்பற்றி தெரிந்து மேலே ஏற முடியும் என்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்* 

*என் மார்க்கம் உலகியலிலே வாழ்ந்து கொண்டு இருக்கும் போக மாந்தர்க்கு உரைத்திலேன்* 

*இது சகம் உன்னும் யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் என்கின்றார்* 

*ஞான யோகம்!*

*அந்த யோக மாந்தர்களும் இதுவரையில் கண்ணை மூடிக் கொண்டு தவம் யோகம் தியானம் செய்து கொண்டு இருந்தாலும் மேலே செல்ல வாய்ப்பு இல்லை* 

*ஞானத்தில் சரியை என்னும்  ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் ஞான கிரியை என்னும் சத்விசாரத்தையும் பூரணமாக கடைபிடித்தால் ஞானயோகம் என்னும் 15 படிக்கு உயர்ந்து  உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியும் இதுவே யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் என்கின்றார்*

*அதுவே நல்யோகம் ஞானம் என்கின்றார் அவற்றையும் தாண்டி 16 ஆம் படியான ஞானத்தில் ஞானத்திற்கு உயர வேண்டும்* 

*16 ஆம் படிக்கு வருபவர்களுக்காகவே சுத்த சன்மார்க்கம் வழிகாட்டும் சாகாக்கலை கைகூடும்* 

*இவற்றை எல்லாம் கடைபிடிக்காமல் விடுத்து வடலூருக்கு லட்சக்கணக்கான ஜீவர்கள் வந்து வந்து  கூடினாலும், எள்ளு போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கோடானகோடி மக்கள் கூட்டம் வந்தாலும், மேலும் சர்வதேச மையம் அமைத்தாலும்  அது பக்தி மார்க்கமாக இருக்குமே தவிர ஞானமார்க்கம் ஆகாது. அதனால் மக்களுக்கு எந்த அருள் சார்ந்த பயனும்  ஆனமலாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.*

*இதுவரை வடலூருக்கு வந்தவர்களும் செத்துதான் போனார்கள்.வருபவர்களும் சாகத்தான் போகிறார்கள்*

*எனவே வள்ளலார் பதிவு செய்துள்ள ஞானசரியை யில் உள்ள 28 பாடல்களில் சொல்லியவாறு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார்* 

*வள்ளலார் பாடல்!*

சரியைநிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்

உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்

அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்

பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 

*மேலே கண்ட பாடலில் தான் கடைபிடித்து வாழ்ந்து வந்து மேலே ஏறிச்சென்ற பாதைகளை எல்லாம் தெளிவாக விளக்கி யோக மாந்தர்களுக்காக காலம் உண்டாகவே சுத்த சன்மார்க்கத்தை உரைத்தேன் என்கின்றார்*

*வடலூர் சத்திய ஞானசபையில் எல்லாம் வல்ல  அருட்செங்கோல் நடத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் வழங்கும் இடமாகும்*

*நாம் யாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் சரியை கிரியை தாண்டி யோகநிலையைக் கடைபிடித்து ஞானநிலைக்கு சென்று விட்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து ஆட்கொள்வார் இது சத்தியம் சத்தியம் சத்தியமே.*  

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர்  *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு