ஞாயிறு, 25 ஜூலை, 2010

''புலால் உண்ணக் கூடாது .உயிர்க்கொலை செய்யக்கூடாது !''



        
இவ்வுலகில் உண்டாகும் துன்பங்களுக்கு


அடிப்படைகாரண்ம்,உயிர்க்கொலைசெய்வதும்,


 மாமிசம் [புலால்]உண்பதும்.


       இவ்வுலகில் உணவு, இரண்டு வகையாகப் 


பழக்கத்தில் உள்ளது ,சைவஉணவு ,அசைவ உணவு ,


என்பதாகும். 


பலபேர் சைவஉணவு விரும்புகிறார்கள் ,பலபேர் அசைவஉணவு ,


விரும்புகிறார்கள்,இந்த மாற்றத்திற்கு என்னக்காரணம் ,?


யார்காரணம் ? என்பதை கவனித்தால் நன்குவிலங்கும் ,


ஆதியிலே மனிதன் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்தில் 


வேட்டையாடி விளங்க்க்குகளை புசித்துவந்தான் ,அதன் பிறகு 


மனிதனை மேம்படுத்த வந்த சமயங்களும் ,மதங்களும் ,


சாஸ்திரங்களும் ,உணவு வகைகளை முறைபடுத்த ,


தவறிவிட்டது,


    கடவுளைப் பற்றி போதிக்கவந்த சமயங்களும் ,மதங்களும்,


அவர்கள் எழுதிய , 


கதைகளில்,வேட்டையாடுவதும்,கொலைகள் செய்வதும் 


போன்ற, கற்பனை கதைகளில்,கொலைகள் செவது குற்றமில்லை ,


புலால் உண்பது குற்றமில்லை ,அதற்கு உண்டான பரிகாரம் ,


செய்தால் ,யாவும் தீர்ந்து விடும் ,எனறு பொய்யான செய்திகளை 


மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் .


அவைகளை உண்மை எனறு நம்பி,இன்றுவரை மக்கள்,


அறியாமையால் அப்படியே கடைப்பிடித்து வருகிறார்கள் ,


    '' திருவள்ளுவர் '


   திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ,133 ,அதிகாரங்களில் ,


1330 ,குறள்களில், இரண்டு அதிகாரங்களில், இருபது 


குறள்கள், கொல்லாமை பற்றியும் ,புலால் உண்ணாமைப்


பற்றியும் ,மிகத் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .


தமிழ்ப் படித்த,சான்றோர்கள் ,தமிழ் அறிஞ்ஞர்கள்,


தமிழ் ஆராய்ச்சியாளர்கள்,தமிழ்க்  காவலர்கள்,


தமிழை வளர்ப்பவர்கள்,தமிழ் பல்கலைக் கழகங்கள்


தமிழ் பேராசிரியர்கள் ,தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் ,


அனைத்தும்,என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ,


     மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உணவு ,


உணவு வகைகளில்,தாவர உணவு உடலுக்கு நல்லது ,


புலால் உணவு உடலுக்கு கெடுதல் ,என்பதை வலியுறுத்தி 


சொல்லாததின் காரணம் என்ன ?


     உயிர்க்கொலை செய்வது படுபாதகச செயல் என்பதை 


வலியுறுத்தி சொல்லாததின் காரணம் என்ன ?


திருவள்ளுவர் எழுதி வைத்த ,கொல்லாமை ,


புலால் உண்ணாமை,போன்ற அதிகாரங்களில் 


உள்ள குறள்கள் தேவையா ?தேவையில்லையா ?


     மேடைகளில் திருக்குறளைப் பற்றி பேசும் ,


தமிழ் சான்றோர்கள்,கொல்லாமை ,புலால் உண்ணாமைப் 


பற்றி பேசுவதே இல்லை,ஏன்? அவர்களால் புலால் 


உண்ணாமல் இருக்க முடியாது என்பதால் ,அவர்கள் 


பேசுவதற்கு,தயங்கு கிறார்கள் போலும் .


    தயவு செய்து திருவள்ளுவர் வலியுறுத்திய 


கொல்லாமை,புலால் உண்ணாமையைப் பற்றி ,


உலக மக்களுக்கு தெரியப் படுத்துங்கள் .


உலக பொதுமறை திருக்குறள் எனறு 


சொன்னால் போதாது ,திருக்குறளில் உள்ள 


மிக முக்கியமான குறள்கள் ,கொல்லாமை ,


புலால் உண்ணாமை ,என்ற அதிகாரத்தில்உள்ள 


குறட்பாக்களாகும்,சமுதாயம் மேம்பட வேண்டுமானால் ,


'' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 


  செய்தொழில் வேற்றுமை யான்''


என்ற குறளின் கருத்தை பார்த்தால் நன்கு விளங்கும் ,


எல்லா உயிர்களும் ஒன்று எனறு நினைக்கவேண்டும் ,


எல்லா உயிகளும் ஒன்று எனறு நினைத்தால் ,


வாயில்லா ஜீவன்களை ,கொன்று திண்ணலாம்


என்ற எண்ணம் வருமா !


திருவள்ளுவர் எழுதிவைத்த திருக்குறள் ;---


கொல்லாமை ;--


  1 ,அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் 


       பிறவினை எல்லாந தரும் .


  2 ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்


    தொகுத்த வற்றுள் எல்லாந தலை .


 3 ,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் 


     பின்சாரப் பொய்யாமை நன்று .


 4 ,நல்லாறு எனப்படுவது யாதெனின் 
     யாதொன்றும் 


    கொல்லாமை  சூழும் நெறி . 


 5 ,நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை                    அஞ்சிக் 
     கொல்லாமை சூழ்வான் தலை .

 6 ,கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் 
     வாழ்நாள் மேல் 
    செல்லாது உயிருண்ணுங் கூற்று .


7 ,தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை .


8 ,நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்   சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கம் கடை .


9 ,கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
     புன்மை தெரிவா ரகத்து .


10 ,உயிர்உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின் 
     செல்லாத்தீ வாழ்க்கை யவர்.


      அடுத்து ;-- ''புலால் மறுத்தல் ''


1  தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது உணுன்பான்
    எங்கனம் ஆளும் அருள்.


2 ,பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை 
    அருளாட்சி 
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு .


3 ,படை கொண்டார் நெஞ்சம் போல் நனரூக்காது
    ஒன்றன் 
    உடல் சுவை உண்டார் மனம்.


4 ,அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் 
    பொருளல்லது அவ்வூன் தினல்.


5 ,உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
    அண்ணாத்தல் செய்யாது அன்று .


6 ,தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
    யாரும் 
    விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல் .


7 ,உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன் 
    புண்ணது உணர்வார்ப் பெறின்.


8 ,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன் .


9 ,அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
    உயிர்செகுத் துண்ணாமை நன்று .


10 ,கொல்லான் புலாலை மறுத்தானைக் 
      கைகூப்பி 
      எல்லா உயிரும் தொழும் .


       மேலே கண்ட குறள்கள் ,கொல்லாமை பற்றியும் ,


புலால் உண்ணாமைப் பற்றியும் மிகத்தெளிவாக 


தெரிவித்துள்ளார் ,
     
      பிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பம் போல் 


எண்ணிக் காப்பாற்றாவிட்டால் அறிவு பெற்று ,எவ்வளவுதான் 


படித்து இருந்தாலும் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர் .


     நல்ல வழி எனறு சொல்லப்படுவது ,எது என்றால் எந்த 


உயிரையும் கொல்லாமை என்பதாகும் ,அதுவே எல்லா 


அறத்தை விட உயர்ந்த அறமாகும் ,


    உண்மை பேசுவதைவிட ஒருஉயிரைக் கொல்லாதிருப்பது ,


உயர்ந்த கொள்கையாகும் என்கிறார் .கொலை செய்பவர்கள் 


எந்த காலத்திலும் உயர்ந்த நிலையை அடையமுடியாது ,


என்கிறார் ,கொலைசெய்பவர்களுக்கு,ஆண்டவரிடத்தில் ,


மன்னிப்பு என்பதே கிடையாது என்கிறார் .


    திருக்குறளை படித்தால் ''கொலை செய்வது '' என்பது ,எவ்வளவு 


கொடுமையான செயல் என்பதை தெரிந்து கொள்ளலாம் .


   அடுத்து ;--'புலால் மறுத்தல்'--  


   திருவள்ளுவர் புலால் மறுத்தல் பற்றி மிகவும் 


தெளிவாக விளக்கியுள்ளார் ,


தன்னுடைய உடம்பை வளர்ப்பதிற்க்காக இன்னோர் உயிரை 


கொன்று அதன் இறைச்சியை தின்பவன் எப்படிக் கருணை 


உள்ளவனாக இருக்கமுடியும் ,


     ஓர் உயிர் வாழ்ந்த உடம்பை சுவையாகப் பக்குவப்படுத்திச 


சாப்பிட்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் 


வைத்திருப்பவரின் நெஞ்சம் போன்றது ,அங்கே கருணை 


எப்படி இருக்கும் ,கருணை எப்படிவரும் ,   


    அருளைப் பற்றி பேசுகிறார்கள், ஓர் உயிரை கொன்று 


தின்பவர்களுக்கு ,அருள் எப்படி வரும், எப்படி கிடைக்கும்,


உங்கள் தவறை தீர்த்துக் கொள்ள, ஆயிரம் யாகங்கள்  


செய்வதை விட ,ஓர் உயிரை கொன்று அதன் உடம்பை  


உண்ணாதிருத்தல் பல கோடி புண்ணியம் தரும் .   


     ஓர் உயிரையும் கொள்ளாமல், மாமிசம் சாப்பிடாமல்


இருப்பவரை உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,


கைக்கூப்பி வணங்கும் என்கிறார் திருவள்ளுவர் .


அவர்களே கடவுளாகக் கருதப் படுவார்கள் . 


    மனிதன் உணவு உண்டு வாழ்வதற்காக ,இயற்கை நமக்கு 


அளவு கடந்த தாவர உணவுகளை வழங்கி இருக்கிறது ,

அவைகளை உண்டு வாழ்ந்தாலே போதுமானதாகும் .


அவைகளை உண்பது  உயிக்கொலையாகாது ,


அவைகளை உண்பதால் அறிவு வளர்ச்சி பெருகும் ,


கருணையும்,அன்பும் ,தயவும் மேன்மேல் பெருகும் .


    அதனால் மனித நேயம் ,ஆன்மநேயம் உண்டாகும் ,


உலகில் அமைதி ஏற்ப்படும் ,உலகில் உள்ள அனைவரும் ,


நலமுடன் வாழலாம்.
   
     இதனை உலக நாடுகள் கவனிக்கவேண்டும் .உலக 


அறிவியல் ஆராச்சியாளர்கள் ,ஆன்மீக சிந்தனையாளர்கள்,


அரசியல் மேதைகள் ,பொதுஅறிவுக் கொளகையுடையவர்கள்.


அணு ஆராச்சியாளர்கள் ,மத போதகர்கள்,மற்றும் ,


விஞ்ஞானிகள்,மற்றும் 


உலகில் உள்ளஅனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .


    மேலும் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ,


உயிர்க்கொலைப் பற்றியும் ,புலால் உண்ணாமைப்


பற்றியும் ,என்ன சொல்கிறார் என்பதை அடுத்த 


வலைப்பூவைப் பாருங்கள் .


நன்றி ;--அன்புடன் கதிர்வேலு .


மீண்டும் பூக்கும்.             
           

2 கருத்துகள்:

15 நவம்பர், 2020 அன்று AM 6:23 க்கு, Blogger Unknown கூறியது…

அருமை 👌
நன்றிகள் பல

 
13 செப்டம்பர், 2023 அன்று PM 3:29 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

மிகவும் சரியான கருத்து.. இந்த தகவலை படித்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு