புதன், 16 அக்டோபர், 2024

ஆன்மா அடைய வேண்டிய வாழ்க்கை!

*அருட்பெருஞ்ஜோதி!*       *அருட்பெருஞ்ஜோதி!* *தனிப்பெருங்கருணை!*  *அருட்பெருஞ்ஜோதி!* 

    *🌻ஆன்மா🌻* 
      *****************                 
       *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.🙏* 

 *தயவுடன் ஒரு ஐந்து நிமிடத்தை ஒதுக்கிட வேண்டுகிறேன் ..*  
 **************************

*இந்தப் பதிவை தயவுசெய்து ஐந்து நிமிடம் பொறுமையுடன் படித்து ஆன்மாக்களாகிய நாம் நமது ஆன்ம லட்சியத்தை புரிந்து தெரிந்துகொள்ள வேண்டுமாய்... இவ்வெளியேன் சார்ந்துள்ள சுத்தசன்மார்க்கப் பெருநெறி சார்பாய் நின்று தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.* 

 *ஆகாசப் பெருவெளியில் பலகோடி அண்டத்தையும்  படைத்து, அதில் வாழ்வதற்கு உயிர்களையும், அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான  வாழ்வாதார பொருள்களையும் படைத்து...* *அனைத்தையும் தனது இயற்கை விளக்கமாகிய அருள் சக்தியால் ,* 
 *ஆக்கல்* 
 *காத்தல்* 
 *அழித்தல்* 
 *மறைத்தல்* 
 *அருளல்  என்னும்* *ஐம்பெருங்கருணைத் தொழில்களால் தடையின்றி இடையறாது அசைவித்து அருள்பாளிக்கின்ற உண்மைக்கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,* 

 *ஓரறிவு தாவரங்கள் முதல் ஆறறிவுக்குரிய மனிதர்கள் வரை உள்ள உயிர்களை, அவ்வவற்றின் அறிவு விளக்கத்திற்கும் பக்குவத்திற்கும் தக்கவாறு அடுத்தடுத்து தனு கரண புவன போகத்தைக்  கொடுத்து படைத்தருளுகின்றார்கள் .* 

 *ஆறறிவு ஜீவர்களுக்கு ..* *தற்போதமாகிய யான் எனது என்னும் உயிர்பற்று மற்றும் உலகப்பற்றின்வழி...* 

 *மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்னும் மூவாசைகளை அசைவித்து அவற்றின் வழி...* 
 *ஆசை,* 
 *கோபம்,* 
 *லோபம்,* 
 *மோகம்,* 
 *மதம்,* 
 *மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களால் பிறவிக்கு காரணமாகிய விருப்பு வெறுப்பை உண்டாக்கியும் ,* 

 *உலகியல் வாழ்வில் பொருளியல் அருளியல் என்ற இருவாழ்விற்கும் தேவையான நியதிகளையும் வகுத்து...* 

 *அந்த நியதியின்படி பிற உயிர்களுக்கு உபகாரம் செய்து வாழ்பவர்களுக்கு நல்வினை என்னும் புண்ணியத்தையும்,* 
 *அந்த நியதியை தமது ஆசைவயப்பட்ட அறியாமையினாலும், அலட்சியத்தினாலும் அந்நியதிக்கு மாறாக பிற உயிர்களுக்கு உபகாரம் இல்லாமல் தீமைசெய்து வாழ்பவர்களுக்கு தீவினை என்னும் பாவத்தையும் சேர்க்கச்செய்து ,* 

 *நல்வினை ,* 
 *தீவினை என்ற இரண்டு வினைகளால் மீண்டும் மீண்டும் உயிர்களை பிறக்கச்செய்து.. மறைத்தல் அருளல் என்னும் இருக் கருணைத் தொழில்களால் அவைகளுக்கு அறிவில் மறைப்பைக் கொடுத்தும்,* 
 *விசாரத்தைக் கொடுத்தும் பிறகு அறிவின் பக்குவத்திற்கு ஏற்ப அனுபவத்தையும், அனுபவத்தின் முடிவில் அதற்குரிய பதத்தையும்,* *அப்பதத்திற்குரிய பதவியாகிய நிலைகளையும் கொடுத்து,* 
 *முடிவில் தன்மயமாக்கிக் கொள்வதே அதாவது சத்து சித்து ஆனந்தத்தை வழங்கி சச்சிதானந்த மயமாக்கிக் கொள்வதே.. நமது கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்பெருஞ் செயலாக இருக்கின்றது🌻* 
      

 *ஆகலில், ஆன்மாக்களாகிய நமக்கு பிறவி கொடுக்கப்பட்டதன் காரணத்தை நாம் நன்றாக அறிந்து உணர்ந்தால்தான், நாம் நமது ஆன்மலட்சியமாகிய ஆன்மலாபத்தை  தடையின்றி திருவருள் துணையுடன் விரைந்து எய்திட முடியும்🌻* 

 *அதற்கு,* 
 *உயர்வுடைய ஆறறிவிற்குரிய மனிததேகத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் நமக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய மிகமுக்கியமான கேள்விகளும் பதிலுமாக....* 

 *இக்கடையவனின் எண்ணத்தில் திருவருளால் அறிவுறுத்திய வண்ணம்...* 
 *நமது பழைய ஆன்ம உரிமையுள்ள சகோதரர்களின் வாழ்வும் உய்யும்பொருட்டு அனைவருக்கும் ஒருவாறு தெரிவிக்க மேற்கொள்கின்றேன்🔥🙏* 
***********************
 *1:நான் யார் ? 💥* 
      *அனாதியாகிய பரந்து விரிந்த பரம ஆகாசத்தில் ,* *அனாதியாகிய இயற்கை உண்மைக் கடவுளாகிய பரம ஆகாச சொரூபராகிய கடவுள் சமுகத்தில் சந்தானமயமாய் (வழிவழியாக) நிரம்பி இருந்த, இருக்கின்ற அணுக்கூட்டத்தில் நெடுங்காலம் அறிவு ஒரு சிறிதும் விளக்கம் இல்லாமல் ,பாசாந்தகாரம் எனும் பேரிருளால்(ஆணவ மலத்தினால்)முடக்கப்பட்டிருந்த ஓர் சிற்றனு வடிவினன்தான் நான் . இந்த சிற்றனுவிற்கு ஆன்மா என்றே பெயர். ஆம் "நான் ஒரு ஆன்மா";* 🌺
🔥🔥🔥🔥🔥
 *2:எனக்கு ஆறறிவுக்குரிய இந்த உயர்ந்த மானுடப் பிறவியை கொடுத்தருளியது யார் ?💥* 

 *அண்டகோடிகள் அணைத்தையும் படைத்து அவற்றை தனது அருட்சக்தியால் திருநடம் என்ற பெயரில் ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அனுகிரகித்தல் என்னும் ஐந்து பெருங் கருணைத் தொழில்களால் எக்காலத்திலும் தடையேதும் இல்லாமல் இயக்கிகொண்டிருக்கும் அந்த பரமஆகாச சொரூபராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே...* 

 *எனக்கு முதன் முதலில் ஓரறிவு என்னும் தொடுஉணர்விற்குரிய தாவர பிறவியைக் கொடுத்து ஓரறிவுக்குரிய விளக்கம் பூர்த்தி ஆகும்வரையில்* *அத்தாவரப் பிறவிகளில் பலபலப் பிறவிகளில் என்னைப் பிறக்கவைத்தும்,* *அதன்பிறகு ஈறறிவு மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு என்று தற்சுதந்திரமில்லாமல் திருவருள் சுதந்திரத்தால் வாழக்கூடிய ஐயறிவுக்குட்பட்ட  பலப்பலப் பிறவிகளில்  பிறந்து பிறந்து இறந்து இறந்து முடிவில்...* 

 *தற்சுதந்திரத்தால் நன்மை தீமைகளை  ஆராய்ந்து அறியக்கூடிய பகுத்தறிவு என்னும் ஆறறிவுக்குரிய உயர்வுடைய இந்த மனிதப் பிறப்பை ஆண்டவர் பெருந்தயவுடன் கொடுத்தருளியுள்ளார்கள்;* 
 
 *ஆம் ,* 
 *எனக்கு இந்த  மனிதப்பிறவியை பெருந்தயவுடன் கொடுத்தருளியது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரேயாகும்🌺* 
🔥🔥🔥🔥🔥
 *3: இந்த மானுடப் பிறவி கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன ? 💥* 

 *இந்த மனிதப் பிறவி மற்றைய பிறவிகள்போன்று எளிதில் கிடைக்கக்கூடிய பிறவி அல்ல,* 
 *இந்தப் பிறவியினால்தான் நான் யார் என்ற கேள்வியை எனக்குள் கேட்டு விசாரிக்கக்கூடிய ஆன்ம அறிவு விளக்கம் எனக்கு கடவுளால் வழங்கப்பட்டு விளங்குகின்றது.* 

 *ஆகலி்ல் இந்த அறிவைக்கொண்டுதான் நான் யார் என்றும் ,எனது உயிருக்குள் உயிராய் இருந்தும் , அனாதிதொட்டு எனக்கு அம்மை அப்பனுமாய் இருந்தும் என்னை ஆளும் எனது ஆன்மத்தலைவர் யார் என்றும்* 

 *நான் இத்தனைப் பிறவிகள் கடந்து இப்போது இந்த மானிடப் பிறவி எடுத்ததன் காரணம் என்னவென்றும்,* 

 *எனது ஆன்மா இத்தனைப் பிறவிகள் கடந்து வந்ததன் காரணத்தை அறிந்தும்...* 

 *இனி பிறாவாநிலை அடைதற்குரிய இறவாமை என்னும் ஆன்மலாபத்தை அடைவதற்கான ஆன்மலட்சியத்தை எவ்வாறு* *அடைவதென்றும் விசாரித்து அறியக்கூடிய ஆன்ம அறிவு விளக்கம் இந்த மானுடத் தேகத்தில் மட்டுமே நிறைந்து விளங்குகின்றது .* 
   
 *ஆகலில் ஆன்ம அறிவு மிகுந்து விளங்கும் இந்த மனிதப் பிறவியைக்கொண்டுதான் நான் எனது பிறவி பயனத்தின் லட்சியமாகிய ஆன்மலாபத்தை*  *அடைந்திடல் வேண்டும் என்பதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் எனக்கு இந்த மானிடப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது🌺* 
🔥🔥🔥🔥🔥
 *4: ஆன்மாவாகிய எனக்குள் கடவுள் எப்படி விளங்குகின்றார் ? எனது ஆன்ம லட்சியம்தான் என்ன ?💥* 

 *எனக்குள் கடவுள்,"மெய் அறிவு ஆனந்த சொரூபராக" விளங்குகின்றார்.* 
*அதாவது "சச்சிதானந்த சொரூபராக" விளங்குகின்றார்.* *அப்படியென்றால், சத்து சித்து ஆனந்த வடிவினராய் விளங்குகின்றார்,* 

 *சத்து என்பது இயற்கை உண்மை,* 
 *சித்து என்பது இயற்கை விளக்கம்,* 
 *ஆனந்தம் என்பது இயற்கை இன்பம் என்பதாகும்* .

*சத்து* : 
*என்றும் ஓர்நிலையாய், என்றும் ஓர் இயலாய் , என்றும் உள்ளதுவாய் இருக்கின்றுது.* 

*சித்து* : 
*என்றும் உள்ளதுவாய், எங்கும் நிறைந்து விளங்குவதாய்,என்றும் விளங்கிடுவதாய் உள்ளது.* 

*இன்பம்* : 
*எல்லா நிலைகளிலும் எல்லா உயிர்களிலும்  எல்லா இன்பமுமாய் விளங்குவதாய் உள்ளது;* 

 *அதனால் இந்த "மெய் அறிவு ஆனந்த" சொரூபராய் இருக்கின்ற கடவுள்.. தனது உண்மையை ஆன்மாக்கள் எல்லாம் அறிந்துகொள்ளச் செய்தும், அந்த "மெய்யறிவு ஆனந்த" சொரூபமயமாகவே அனைத்து ஆன்மாக்களையும் தன்மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையில்தான் எனக்கும் இந்த மானுடப் பிறவி கொடுக்கப்பட்டு எனக்குள்ளேயே ஆண்டவர் " சச்சிதானந்த சொரூபராய்" இருந்து விளங்குகின்றார்கள்.* 
 *ஆகலில் ,* 
 *எனக்கு பிறவி கொடுக்கப்பட்டதன் காரணம்.. நானும் "சச்சிதானந்த சொரூபமாய்" கடவுள் நிலையறிந்து அக்கடவுள்  மயமாய் விளங்கவேண்டும் என்பதற்கே ஆகும்🌺* 
🔥🔥🔥🔥🔥
 *5: நான் எனது ஆன்மா லட்சியத்தை நிறைவேற்றி கடவுள் மயமாகுவதற்கு என்ன செய்யவேண்டும் ?💥* 

 *முதலில் இவ்வுலகம் கடவுளது மாயையால் படைக்கப்பட்டது என்பதும், அந்த மாயை என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல என்ற அறிவையும், ஆன்மாக்களை பக்குவப் படுத்துவதற்காக கடவுளது அருட்சக்தியின் ஒருதன்மையாக உள்ள பரிக்கிரக சக்திதான் இந்த மாயாசக்தி என்பதையும்,* 
 
 *இவ்வுலகப் பொருள்கள் எல்லாம் நிலையற்றது என்றும், என்றோ ஓர்நாள் இவைஎல்லாம் அழியக்கூடியது என்பதும், அப்படி அழியக்கூடிய பொருளால் கிடைக்கும் இன்பம் நிலையற்றது என்பதும் ,* 

 *இப்படி நிலையற்ற அழியக்கூடிய பொருட்களால் நமக்கு இருளே சூழும் என்பதையும் நமது அறிவால் அறிந்து ,* 
 
 *என்றும் அழிவில்லாமலும் எக்காலத்திலும் நிலையானதுவாயும் எல்லா உயிர்களும் பொருள்களுமாய், எல்லாம் தான்ஆனதுவாய் விளங்கி,எல்லாம் விளங்க விளக்கம் செய்விக்கின்ற கடவுளது அருள் சக்தியால் பெறப்பட்டு அனுபவிக்கின்ற இன்பமே ... என்றும் நிலையான இன்பம் என்பதையும் அறிந்து ,* 

 *அந்த இன்பத்தை பெறுவதற்குரிய பக்குவத்தை ,* *ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள தற்சுதந்திரமாகிய ஜீவ சுதந்திரம், தேக சுதந்திரம், போக சுதந்திரம் என்னும் மூவகை சுதந்திரத்தையும் கடவுளிடத்தில் ஒப்படைத்து சரணாகதி யாகி..கடவுளது திருவருட் சுதந்திரத்தைப் பெறுவதற்கு...* *நிலையற்ற இவ்வுலகப் பொருள்களின்மீது நிராசைக்கொண்டு விருப்பு வெறுப்பற்றவர்களாய்,* 

 *நாம் பொருளாசை மிகுந்த இவ்வுலக வாழ்வில் வாழ்ந்தாலும் ...* 
 
*புளியம்பழத்தின் ஓடுபோன்று சதையோடு தோல் ஒட்டாமலும்...* 
 *சேற்றிலே வாழும் பிள்ளைப்பூச்சியைப் போன்று உடம்போடு சேறு ஒட்டாமலும்...* ,
 *தண்ணீரிலேயே வாழும் தாமரை இலைப்போன்று தண்ணீர் தாமரையில் ஒட்டாமலும்... இருப்பது போன்று..* 
 
*நாமும் பொருள்சார்ந்த இவ்வுலகில் வாழ்ந்தாலும் ...* *உண்மையை உணர்ந்து நிலையற்று அழிந்து போகக் கூடிய பொருளாசைகள் இல்லாமல் வாழ்ந்து...* 

 *என்றும் நிலையான கடவுளது அருளைப் பெறுவதற்கு ஆசைக்கொண்டு ஜீவர்களிடத்தில் பக்தியும் ஆண்டவர்மீது என்றும் மாறாத அன்பும் வைத்து வாழ்ந்து..* 

 *நமது மேலான பக்குவத்தில் ஆன்ம அறிவு விளக்கத்தால்...* *அருள்நிலை அடைந்து அருளறிவைப் பெற்று அருள்மயமாகிடவேண்டும் (கடவுள்மயமாதல்);* 
🔥🔥🔥🔥🔥
 *6: நான் கடவுள்நிலை அறிந்து அக்கடவுள் மயமாகிட வேண்டும் என்றால் மாயையாலும் வினையாலும் அறிவு விளக்கமில்லாமல் வருந்துகின்ற நான் யாரைத் துணைக்கொண்டு எந்த நெறியைப் பின்பற்றி வாழ்ந்து இப்பிறவிக்கடலை கடந்து அக்கடவுள் நிலை அடைந்திட வேண்டும் ?💥* 
 
 *இந்த உலகம்தோன்றிய காலத்திலிருந்து ..* *கடவுள் நிலை அடைய விரும்பிய ஆன்மாக்களில் பல  பல்வேறு சாதனங்களை கடைபிடித்து தமது அறிவால் கடவுளை அறிந்து , அவரது அருளை பூரணமாக பெறாவிட்டாலும் ஒரு சிறு அருளொளி கிடைக்கப்பெற்று அந்த அருள்ஒளியிலேயே திளைத்து , உடம்பையும் உலகத்தையும் வெறுத்து தாம்கண்டு இன்புற்று மகிழ்ந்த உள்ளொளியாம் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து மறைந்து போனார்கள்;* 

 *அவர்களால் இவ்வுலகில் என்றும் ஓர் நிலையாய், என்றும் ஓர் இயலாய்,* *என்றும் உள்ளதுவாய்,எங்கும் பூரணமாய் நிறைந்து விளங்கிடும் கடவுளது பூரணமான அருளை பெற இயலாததால் அவர்கள் தனது தேகத்துடனேயே இவ்வுலகில் நிலைத்து கடவுளைப்போன்று என்றும் அழியாமல் நிலைத்து வாழ இயலாமல் ...* *மரணமில்லாத பெருவாழ்வென்னும் ஆன்மலாபத்தை அடைவதற்கு முன்பு உள்ள சாதனமாகிய முத்தி என்னும் நிலையை மட்டும் அடைந்துவிட்டு...* *சுத்தசன்மார்க்க நிலையில் பூரண அருள் வல்லபத்தால் அடையக்கூடிய  சர்வசித்தி என்னும் எல்லாம் செய்ய வல்ல சிவசித்தியை பெறுவதற்கு இயலாமல் முத்திநிலையை மட்டும் அடைந்து மறைந்தார்கள்.* 

     *ஆனால் முதன் முதலில் இவ்வுலகம் தோன்றிய காலத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மாக்களில் முதல் ஆன்மாவாக.. ,* 
 *நமது வள்ளல் பெருமானாரது ஆன்மாதான் கடவுளது பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டு ,* *அருள் வடிவாய் நின்று அக்கடவுளை நேரில் கண்டு களித்து,* 
 *ஒரு ஆன்மா அடையவேண்டிய முடிவான லட்சியத்தை அதாவது ஆன்மலாபத்தை* 
 *எக்காலத்தும்,* 
 *எவ்விடத்தும்,* 
 *எவ்விதத்தும்,* 
 *எவ்வளவும் தடைபடாமல்,* 
 *மரணத்தை தவிர்த்து இவ்வுலகத்திலேயே என்றும் இளமையுடன் பூரணமான கடவுள்தன்மையுடன் ,* 
 *சுத்தம் ,* 
 *பிரணவம்,* 
 *ஞானம் என்னும் சர்வசித்தி வல்லபத்துடன் கூடிய முத்தேக சித்திகளையும் பெற்றுக்கொண்டு ,* 
 *இறந்தாரையெல்லாம் எழுப்பும் கடவுள் வல்லபத்தையும் பெற்று* *"அருட்ஜோதி இயற்கை" என்னும் அருட்தேகத்துடன் ,* *திருவருட் சுதந்திரத்துடன் வாழுகின்ற முதல் ஆன்மா நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்களது ஆன்மாவேயாகும்.* 

 *ஆகலில்,* 
 *நமது பெருமானைத்தான், அவர்களுடைய அருள் அனுபவத்தைதான் நாம் துணையாகக் கொள்ளல் வேண்டும்* 🌻

 *மற்றும் ,* 
 *பெருமான் அவர்கள் தன்னைப்போன்றே மற்ற ஆன்மாக்களும் அருள் நிலையைப் பெற்று அருட்பெருவாழ்வு வாழவேண்டும் என்ற பெருங்கருணையில் ,* *தான் பெருவாழ்வு அடைவதற்கு காரணமாக இருந்த,* 
 *சுத்தசன்மார்க்க  பெருநிலையை அடைவதற்கென்று சுத்தசன்மார்க்க பெருநெறியை இவ்வுலகவருக்கு வழங்குவித்து,* 
 *அந்த நெறியை நடத்துகின்ற பக்குவ ஆன்மாக்கள் வேறுயாரும் இல்லாததால் தானே அதை முன்னிருந்து* *இவ்வுலகமெல்லாம் சுத்தசன்மார்க்க அருளாட்சியை கருணையால் நடத்தி வருகின்றார்கள்.* 
       
 *ஆகலில் ,* 
 *நாம் நமது ஆன்மா முடிவான லட்சியத்தை அடையவேண்டும் என்றால் ,* 
 *ஏற்கனவே அந்த ஆன்மலட்சியத்தை அடைந்த ஒருவரைப் பின்பற்றி அவர் நெறிப்பட நடந்து வாழ்ந்தால்தான் நாமும் அடைந்திட முடியும் என்பதால் ,* 
 *வள்ளல் பெருமானையே நமக்கு உற்ற துணையாகவும்,* *அவர்களது சுத்தசன்மார்க்க நெறியே நமக்கு அருள்நிலையை அடையச் செய்விக்கும் அருள்நெறியாகவும் கொண்டு பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும் ,* 
 *பின்பற்றி வாழ்வோம்,* 
 *பெரு வாழ்வடைவோம்;🌺🙏* 
 *தயவான நன்றிகள்🙏* 
 *வள்ளல் மலரடிப் போற்றி போற்றி* 
 *பெருமான் துணையில்* 
 *வள்ளல் அடிமை* 
 *வடலூர் இரமேஷ்;* 
 *(7708490336)*

ஒன்று முதல் ஆறு திருமுறை விளக்கம்!

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் 

ஒருவேலை வடலூரில் திருவருட்பா பாடசாலை அமையப் பெற்றால் 

முதல் 5 திருமுறைகளை பாடம் சொல்லித் தருவதா வேண்டாமா என்ற ஒரு மிகப் பெரிய சர்ச்சையுண்டாகும் என அறிய முடிகின்றது. 

இப்போது விஷயத்திற்கு வருவோம்.
ஏன் 
சுத்த சன்மார்க்கத்தில் 
இரு பெரும் பிரிவினராக பிளவுபட்டு நிற்கின்றனர் .என ஆராய்ந்தோமேயானால் .

காரணம் .ஒருவகையில் வள்ளல் பெருமான்தான் என்றாலும் நம்மவர்கள் புரிதலில் கருத்து வேறுபாடே முக்கிய காரணமாகும்.
ஆம் 

 *1-5 திருமுறை மறுத்து 6-ம் திருமுறை மட்டும் ஏற்பவர்கள்* 
திருவருட்பா -6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு 
முதல் 5திருமுறைகள் வரை சமயம் சார்ந்தது எனவும் 
6-மதிருமுறை சமயம் கடந்தது எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது .
ஆம் பெருமானாரும் அவ்வாறே பேருபதேசத்தில் கூறுவதாவது :- அப்போது சைவ சமயத்தில் நான் வைத்திருந்த பற்று இவ்வளவு என்று அளவிட முடியாது அதற்கு எனது தோத்திரப்பாடல்களே சாட்சி அதனை சபைக்கு கொண்டு வந்து மற்ற அடியார்களின் பாடல்களையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நான் எவ்வளவு தீவிரமாக சைவ சமய பற்றுடையவனாக இருந்துள்ளேன் என்பது தெரிய வரும் .

எனவும் ஏன் எனக்கு அப்போது அவ்வளவு அழுத்தமா பற்றிருந்ததென்றால் அப்போது எனக்கு சிறிது அறிவு விளஙகாத காலம் எனவும் குறிப்பிடுகின்றார் .
இப்போது எனது அறிவு அண்டாண்டங்களுக்கும் மேல் செல்கிறது இதற்கு அந்த சமய மதப் பற்று காரணமில்லை தயவுதான் என்னை தூக்கிவிட்டது .

மேற்கண்ட இந்த இரண்டு ஆதாரங்களே நம்மவர்கள் 1-5 திருமறைகளை நிராகரிப்பதற்குக் காரணமாகும் .

 *1-5 திருமுறைகளையும் ஏற்று 6-ம் திருமுறைகளையும் ஏற்பவர்கள்* 
இவர்களின் புரிதல் 
பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அத்துணைப் பாக்களும் அருளால் பாடப் பெற்றவை இதில் 5,6 என வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது .
நாம் படியேறி கடைத்தேற வேண்டிய படிநிலைதான் இந் 1-5,6 ஆகும் என கூறுகின்றனர் .
மேலும் எந்ப் பேருபதேசத்தில் எல்லா மந்திரங்களையும் சமய மதங்களையும் விட்டுவிட்டு 
மகாமந்தித்தை கொடுத்து தயவினை பின்பற்றக் கூறியுள்ளாரோ 

அதே பேருபதேசத்தில் பாருங்கள் மகாமந்திரத்தின உண்மைப் பொருளாகிய அன்பு தயவு கருணை இவற்றினை எவ்வாறு சாதனமாக பயிலுவது என்பதைக் கூறாமல் அதனை மத சன்மார்க்கியான தாயுமாண சுவாமிகளின் சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் என துவங்கி  கருணாகரக்கடவுள் என்று முடியும பாடலின் பிரமாணத்தால் கண்டு உணர்க என கூறியுள்ளார் .
இதுதான் கேள்வி சமய மதத்தை கைவிட்டவர்தானே ஏன் மத சன்மார்க்கப்பாடலில் பிரமாணம் காட்ட வேண்டும்.

மாகாமந்திரம் உண்மைப் பொருள் வைக்கப்பட்ட பூட்டு என்றால் அதன் சாவி தாயுமாணவரின் கருணாகரக்கடவுள் பாடலில் உள்ளது என கூறியதன் காரணம் .சமய மதங்களின் உண்மைப் பொருளை ஏற்கிறார் என்றுதானே அர்த்தம் 
இது இவர்களின் வாதம் .



இதில் வேடிக்கை என்னவெனில் 

இருபிரிவினர்க்கும் 
வள்லார்தான் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்கடவுள் 
திருவருட்பாதான் வழிபடுநூல்
மகாமந்திரம் தான் தாராக மந்திரம் 
ஜீவகாருணியம்தான் கடவுள் வழிபாடு 
இப்படியிருக்க எப்படி இந்த பிளவு வேற்றுமை வந்தது என்று நாம் உற்று நோக்க வேண்டும .

முதலில் நம் பெருமானார் ஆண்டவரால் திட்டமிடப்பட்டே வருவிக்கவுற்ற ஓர் ஆன்மா 

எதற்கக வருவிக்க உற்றார் 
ஆண்டவர் வள்ளலாருக்கு இட்ட கட்டளை என்ன ❓
உலகில் மனித குலம் 
சாதி
சமயம்
மதம்
இனம்
மொழி
தேசம்
நிறம்
பண்பாடு
கலாச்சாரம்
அந்தம்
சாதனம் என பல்வேறு கருத்துடையவர்களாக அதனதன் ஆசாரக் கட்டுப்பாட்டினால் பிரிவினை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் போரிட்டு வீணாக மாண்டு போகின்றனர்.
எனவே மகனே நீ இந்த பூலோகத்திற்குச் சென்று அவர்களையெல்லாம் எல்லா சமய மதங்களையும் முதலில் சமரசம் செய்வாயாக அதாவது ஓர் புள்ளியில் இணைப்பாயாக 
இணைத்து உலகில் மனித குலம் போரிட்டு வீணே மாண்டுபோவதைத் தடுப்பாயாக என்று கூறி கட்டளையி்ட்டு திட்டமிட்டே ஆண்டவர் வள்ளலாரஎனுமஆன்மாவை இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்கின்றார்.
 *இதுதான் முதல் கட்டளை* 

அடுத்து இரண்டாவது கட்டளையாதெனில் 
இதுவரை தோன்றிய சமய மத மார்க்கங்களை தோற்றுவித்த அருளாளர்களும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமதங்களை பின்பற்றுபவர்களுக்கும் வழிகாட்டும்படிாக மரணமில்ராப் பெருவாழ்வை அடையும் பொருட்டு அனைவருக்கும் மெய்ப்பொருளினை நன்கு உணர்த்தி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை அடையச் செய்வாயாக என இரண்டாவது கட்டளையை பிறப்பிக்கின்றார் ஆண்டவர் .

ஆக முதல் கட்டளை- *சமரசம்* 
2-ம் கட்டளை- *சுத்தம்*

இதி் ல் சமரசம் வந்தால் உலகில் மனித குலம் போர் பகையின்றி ஒற்றுமையாய் 
புலைகொலை தவிர்த்த புனிதர்களாய்  வாழ்வர் .

சுத்தம் வந்தால் மனித தேகம் பெற்ற ஆன்மாககள் மரணமில்லாப் பெருவாழ்வு அடைவர்.

இவ்வுலகில் இப்போது தேவை சமரச சன்மார்க்கமே 
அதாவது சமய சன்மார்க்கம் 
மத சன்மார்க்கம் இவையெல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானதல்ல நட்புடையவையே 
அந்நியமல்ல அநந்நியமே என்கிறார் நம் பெருமானார்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் 
விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா 🤣
வந்துவிடுவோம்.
1-5 ஏற்பதா மறுப்பதா  என்பதுதானே .

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்வோம் 
வள்ளலார் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கடவுள்
திருவருட்ப வழிபடு நூல் என்று முடிவாகிவிட்டால் 

நமக்கு சாதனம் 2 தான் 
1.ஜீவகாருணியம்
2.சத்விசாரம்

அவ்வளவுதான் இதில 
ஜீவர்களுக்கு 
பசி
 பிணி
கொலை
தாகம்
இச்சை
எளிமை
பயம் என்ற அவஸ்தைகளையெல்லாமநீக்கி ஜீவர்களின் முகத்தில் தத்துவமலர்ச்சியை கடவுள் வழிபாடாக செய்வதே ஜீவகாருணியம்.

அடுத்து சத்விசாரம்
இது 
உலகம்
உடல்
உயிர் 
இறைவன் முதலியவற்றின் தோற்றமென்ன விரிவென்ற ஒடுக்கமென்ன 
மரணம் ஏன் வருகிறது என்றெல்லாம் ஊன்றி விசாரித்து வருகையில் திருவருள் காரியப்பட்டு முதலில் கண்டமாக (பகுதியாக)பின்பு  பிரம்ம இரகசியம் 
சிவ இரகசியம் என அகண்டமாக (முழுவதையும்) தெரிவிக்கும் .

இதுதான் சாதனம்.

இதில் இந்த இரண்டு சாதனத்தை மட்டுமே சுத்த சன்மார்க்க சாதனமாக ஏற்றுக்கொண்டு பயிலுபவர்களுக்க 1-5 படிக்கலாமா வேண்டாமா என்ற வினாவே எழாது ஏனெனில் இவர்கள் எது படித்தாலும் அவற்றினை அறிவுக்கண் கொண்டு  விசாரமாகத்தான் பார்ப்பார்களேயன்றி அச்சமய மத ஆசாரங்களை சாதனமாக அனுஷ்டிக்கமாட்டார்கள் .இவர்கள் 1-6 வரை படித்தாலும சுத்தசன்மார்க்கத் தெளிவுடனே பயணிப்பார்கள் .

ஆனால் மேற்கண்ட சுத்த சன்மார்க்க சாதனமாகிய 1.ஜீவகாருணியம் 2.சத்விசாரம் இவ்விரு சாதனகளன்றி வேறு வேறு சமய மத ஆசார அனுஷ்டானங்களை சாதனமாக கடைபிடிப்பவராயின் இவர்கள் 1-5 திருமுறை படித்தால் இங்குதான் சிக்கல் உண்டாகின்றது இவர்கள ஆண்டவரிடத்தில் இலட்சியம் போய் 
அற்ப சித்திகளுக்குண்டான சாதனங்களை மேறகொள்ள முற்படுகின்றனர் .

உதாரணத்திற்க 
சைவ சமயச் சின்னங்கள் 
விபூதி
ருத்ராட்சம்
காவி
லிங்க வழிபாடு இன்னும் பற்றபல இவற்றை சாதனமாக பின்பற்றினால் சுத்த சன்மர்க்க லட்சியம் தடைபடும் .

இதனை அதன் தத்துவ தாத்பர்யம் என்ன என்று அறிவால் ஊடுறுவி பார்த்து அதனதன் உண்மையை அவ்வச் சமய மத ஆசார அனுட்டானங்களில் சத்திய உணர்ச்சி கொள்ளாது  சுத்த சன்மார்க்க 
ஞானசாதனமாகிய 
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிஷ்டை கூடல் என்று படியேறினர்களேயானால் அது தானாக சுத்த சன்மார்க்கமெனும் இலக்கை அடையச் செய்யும்.

           அடியேனுக்கு திருவருள் உணர்த்தியவாறு குறிப்பிட்டுள்ளேன் .
            -சாதுஹரி.