வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்களின் நிலைமை !

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தின் நிலைமை!

வள்ளலார் முடிந்த முடிவான  ஞான மார்க்கத்தை போதிக்க வந்தவர்.

அதனால்தான் மக்கள் பக்தி மார்க்கத்தை கடந்து ஞான மார்க்கத்தை பின்பற்றுவதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்.சிலை வழிப்பாட்டை தவிர்த்து ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். 

வடலூர் ஞானசபை எண்கோண வடிவமாக அமைத்து எட்டுக் கதவுகள் ( எட்டு அம்பலம்) வைத்து அமைத்துள்ளார். சபையைச் சுற்றி இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட சங்கிலியை இடைவிடாமல் வைத்துள்ளார்.இப்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தூக்கி போட்டுள்ளார்கள்.

ஞான சபையில் உள்ள எண்கோணத்தில் வைக்கப்பட்டுள்ள எட்டுக். கதவுகளும் திறந்து இருக்க வேண்டும்.எட்டு திக்கு மக்களும் வடலூர் வந்து எங்கிருந்து பார்த்தாலும் சிரமம் இல்லாமல் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதே வள்ளலாரின் முக்கிய நோக்கமாகும்.

இப்போது வடலூர் நிலைமை ஏழு கதவுகளை அடைத்து விட்டு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்து சமய வழிப்பாட்டு முறைபோல் செய்து வருகிறார்கள்.

*இது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு நேர் விரோதமானது !*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் யாவும் வள்ளலார் சொல்லியவாறு எதுவும் நடைபெற வில்லை.சமய வழிபாடுகள்தான் நடைப்பெற்று வருகிறது. சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு யார் காரணம் *அரசு மட்டும் காரணம் அல்ல* அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள், சமயம் சார்ந்த சன்மார்க்கிகள், வடலூர் மக்கள் அனைவருமே காரணமாகும். 

மற்றும் எவருக்கும் வள்ளலார் கொள்கைகள் முழுமையாகத் தெரியாது, வடலூர் தெய்வ நிலையங்களை தவறான பாதையில் கொண்டு சென்றவர்கள்***வள்ளலார்  உடன் இருந்த *வேலாயுதமுதலியார், மற்றும் ஆடூர்சபாபதி குருக்கள்* அவர்களுக்கு துணையாக இருந்த வேட்டவலம் ஜமீன்தார், போன்ற சமய மதவாதிகளே காரணமாகும். அவர்களை பின் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தந்தவர்கள், தந்து கொண்டு இருப்பவர்கள் இருந்தவர்கள்,இருந்து கொண்டுஇருப்பவர்கள், *ஞானசபையை திருப்பணி செய்த கிருபானந்தவாரியர் அவர்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், மற்றும் ஊரன் அடிகள் அவர்கள்* மற்றும்
வடலூர் மக்களும் வடலூர் அரசியல்வாதிகளுமே முக்கிய காரணமாகும்.

*வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்க கொள்கையை யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை, பின்பற்றவும் இல்லை, *தெரிந்து கொண்டவர்களை தொடர்பு கொள்வதும் இல்லை.* ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் துணைக்கொண்டு, ஆட்சி அதிகாரத்தின் துணைக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.

ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் சுமார் 45 ஆண்டுகளாக வடலூர் தெய்வ நிலையங்கள் வள்ளலார் எண்ணியவாறு தூய்மைபடுத்த பல அமைதி போராட்டங்கள் செய்துள்ளேன், அதனால் நிறைய எதிர்ப்புக்களை சந்தித்துள்ளேன். மேலும் மேலும் பல பல போராட்டங்கள் செய்து வந்துள்ளேன். சத்திய *ஞானசபை பூசகர் சபேசன் அவர்களிடம் இருந்து சாவியைப் பரித்து தெய்வ நிலையத்திடம் ஒப்படைத்து உள்ளேன்* உண்ணாநோம்பு இருந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளேன்.ஒத்துழைப்பு கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. காரணம் எல்லோரும் சமயம் சார்ந்த சன்மார்க்கிகளே ஆவார்கள்.

சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.மற்றும் அரசியல் வாதிகள் உள்ளே நுழைந்துகொண்டு மக்களுக்கு தவறான சாதி சமய மத வழிபாட்டு முறையை காட்டிக் கொண்டு வருகிறார்கள். சுத்த சன்மார்க்க வழிபாடு மறைக்கப் பட்டுள்ளன. நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

வள்ளலார் எண்ணியபடி உலகம் முழுவதும் உள்ள மக்கள் சுத்த சன்மார்த்தைப் பின்பற்றி  வடலூர் வருவதற்கும் வடலூர்  முழுமையாக தூய்மை பெறுவதற்கும் இன்னும் சுமார் 500 ஐந்து நூறு ஆண்டுகள் கடக்க வேண்டும்.

*சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர் யார்?*

ஈரோடு கதிர்வேல் சுத்த தேகத்தோடு சீக்கிரம்  இறந்து மீண்டும் மறு பிறப்பு எடுத்து பிரணவ தேகம்.ஞானதேகம் பெற்று. வந்துதான் வடலூர் தெய்வ நிலையங்களை தூய்மை படுத்த முடியும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பமாக உள்ளது.

இப்போது பொருப்பில் இருப்பவர்கள்அனைவரும் மறைந்து விடுவார்கள். புதிய சுத்த சன்மார்க்க அன்பர்கள் விரைந்து வருவார்கள் அதுவரை இப்படியே குழப்பமாகத்தான் இருக்கும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.பக்குவம் உள்ள ஆன்மாவை ஆண்டவர் தேர்ந்து எடுத்து அருள் வழங்கி துரிதமாகவும் தூய்மையுடனும் உண்மையுடனும், சத்தியவான் துணைக் கொண்டு புனிதமுறு சுத்த சன்மார்க்க கொள்கைகளை செயல்படுத்தி வைப்பார். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எண்ணியவாறு எல்லாம் நல்லதே நடக்கும்,எவ்விதப்பட்ட தடைகளும் அகற்றப்படும். எல்லாம் இறை அருள் சம்மதம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் 
சுத்த சன்மார்க்க சுடர்.முனைவர் ஈரோடு கதிர்வேல் 
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939896

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

வள்ளலார் தனித் தன்மை உடையவர்!

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாசனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

*ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.*

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.*

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர். 

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

*உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.*

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார், தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

*நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..*

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

*ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.*

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

*மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.*

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

*மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன் *சிதம்பரம் இராமலிங்கம்* என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது......

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர்
முனைவர் ஈரோடு கதிர்வேல்
9865939896

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

தைப்பூசம் மலர் கட்டுரை !

வடலூர் தைப்பூசத் திருவிழா !

 கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதுவே வள்ளல்பெருமானாரின் முடிந்த முடிவாகும். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெறுவதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய  ஒழுக்கநெறிகளைத் தெரிவித்துள்ளார்.

*மெய்மொழி ஒழுக்க நெறிகள்!*

*மனிதகுலம் பெற வேண்டிய நான்கு வகையான புருஷார்த்தங்கள்!*

*அவையாவன:?*

1,சாகாத கல்வி கற்றல்,
2,தத்துவங்களை நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்திபெறுதல், 
4,கடவுளின் நிலையறிந்து அம்மயமாகுதல்  
 *இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.*

*நான்கு வகை ஒழுக்கம்!*

 1. இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடித்தலே  சாகாக்கல்வி கற்பதாகும் 
2. கரண ஒழுக்கத்தை கடைபிடித்தலே தத்துவங்களை நிக்கிரகம் செய்வதாகும், 
3. ஜீவ ஒழுக்கத்தை கடைப்பிடித்தலே ஏமசித்தி பெறுவதாகும், 4. ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்தலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்

1. இந்திரிய ஒழுக்கம் என்பது யாதெனில்?

*இந்திரிய ஒழுக்கம் என்பது!
நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் *ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும்
 கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

*கரண ஒழுக்கம் என்பது !*

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துதல்,( ஆன்மா இருக்கும் இடம்)
*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

*ஜீவ ஒழுக்கம் என்பது!*

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*ஆன்ம ஒழுக்கம் என்பது !*

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்* 

*ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.*

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.* அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, *இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும்.* 

அன்றியும்-

*சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்* *அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம்*

*தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.* 

*ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி*, *அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும்,*
*அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.* 

அன்றியும்-

*உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று,*
 *உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்;*

*உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,* 

*எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்;* 

*ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:*

*நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் -*

*வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.*

*இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி* யென்னும் *கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !*

*சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவரகளாவார்கள்,அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் 
கே,சுமதி 
தலைமை ஆசிரியர்,
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
SKC ரோடு,
ஈரோடு 
Sell
9942362100