புதன், 16 அக்டோபர், 2024

ஆன்மா அடைய வேண்டிய வாழ்க்கை!

*அருட்பெருஞ்ஜோதி!*       *அருட்பெருஞ்ஜோதி!* *தனிப்பெருங்கருணை!*  *அருட்பெருஞ்ஜோதி!* 

    *🌻ஆன்மா🌻* 
      *****************                 
       *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.🙏* 

 *தயவுடன் ஒரு ஐந்து நிமிடத்தை ஒதுக்கிட வேண்டுகிறேன் ..*  
 **************************

*இந்தப் பதிவை தயவுசெய்து ஐந்து நிமிடம் பொறுமையுடன் படித்து ஆன்மாக்களாகிய நாம் நமது ஆன்ம லட்சியத்தை புரிந்து தெரிந்துகொள்ள வேண்டுமாய்... இவ்வெளியேன் சார்ந்துள்ள சுத்தசன்மார்க்கப் பெருநெறி சார்பாய் நின்று தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.* 

 *ஆகாசப் பெருவெளியில் பலகோடி அண்டத்தையும்  படைத்து, அதில் வாழ்வதற்கு உயிர்களையும், அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான  வாழ்வாதார பொருள்களையும் படைத்து...* *அனைத்தையும் தனது இயற்கை விளக்கமாகிய அருள் சக்தியால் ,* 
 *ஆக்கல்* 
 *காத்தல்* 
 *அழித்தல்* 
 *மறைத்தல்* 
 *அருளல்  என்னும்* *ஐம்பெருங்கருணைத் தொழில்களால் தடையின்றி இடையறாது அசைவித்து அருள்பாளிக்கின்ற உண்மைக்கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,* 

 *ஓரறிவு தாவரங்கள் முதல் ஆறறிவுக்குரிய மனிதர்கள் வரை உள்ள உயிர்களை, அவ்வவற்றின் அறிவு விளக்கத்திற்கும் பக்குவத்திற்கும் தக்கவாறு அடுத்தடுத்து தனு கரண புவன போகத்தைக்  கொடுத்து படைத்தருளுகின்றார்கள் .* 

 *ஆறறிவு ஜீவர்களுக்கு ..* *தற்போதமாகிய யான் எனது என்னும் உயிர்பற்று மற்றும் உலகப்பற்றின்வழி...* 

 *மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்னும் மூவாசைகளை அசைவித்து அவற்றின் வழி...* 
 *ஆசை,* 
 *கோபம்,* 
 *லோபம்,* 
 *மோகம்,* 
 *மதம்,* 
 *மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களால் பிறவிக்கு காரணமாகிய விருப்பு வெறுப்பை உண்டாக்கியும் ,* 

 *உலகியல் வாழ்வில் பொருளியல் அருளியல் என்ற இருவாழ்விற்கும் தேவையான நியதிகளையும் வகுத்து...* 

 *அந்த நியதியின்படி பிற உயிர்களுக்கு உபகாரம் செய்து வாழ்பவர்களுக்கு நல்வினை என்னும் புண்ணியத்தையும்,* 
 *அந்த நியதியை தமது ஆசைவயப்பட்ட அறியாமையினாலும், அலட்சியத்தினாலும் அந்நியதிக்கு மாறாக பிற உயிர்களுக்கு உபகாரம் இல்லாமல் தீமைசெய்து வாழ்பவர்களுக்கு தீவினை என்னும் பாவத்தையும் சேர்க்கச்செய்து ,* 

 *நல்வினை ,* 
 *தீவினை என்ற இரண்டு வினைகளால் மீண்டும் மீண்டும் உயிர்களை பிறக்கச்செய்து.. மறைத்தல் அருளல் என்னும் இருக் கருணைத் தொழில்களால் அவைகளுக்கு அறிவில் மறைப்பைக் கொடுத்தும்,* 
 *விசாரத்தைக் கொடுத்தும் பிறகு அறிவின் பக்குவத்திற்கு ஏற்ப அனுபவத்தையும், அனுபவத்தின் முடிவில் அதற்குரிய பதத்தையும்,* *அப்பதத்திற்குரிய பதவியாகிய நிலைகளையும் கொடுத்து,* 
 *முடிவில் தன்மயமாக்கிக் கொள்வதே அதாவது சத்து சித்து ஆனந்தத்தை வழங்கி சச்சிதானந்த மயமாக்கிக் கொள்வதே.. நமது கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்பெருஞ் செயலாக இருக்கின்றது🌻* 
      

 *ஆகலில், ஆன்மாக்களாகிய நமக்கு பிறவி கொடுக்கப்பட்டதன் காரணத்தை நாம் நன்றாக அறிந்து உணர்ந்தால்தான், நாம் நமது ஆன்மலட்சியமாகிய ஆன்மலாபத்தை  தடையின்றி திருவருள் துணையுடன் விரைந்து எய்திட முடியும்🌻* 

 *அதற்கு,* 
 *உயர்வுடைய ஆறறிவிற்குரிய மனிததேகத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் நமக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய மிகமுக்கியமான கேள்விகளும் பதிலுமாக....* 

 *இக்கடையவனின் எண்ணத்தில் திருவருளால் அறிவுறுத்திய வண்ணம்...* 
 *நமது பழைய ஆன்ம உரிமையுள்ள சகோதரர்களின் வாழ்வும் உய்யும்பொருட்டு அனைவருக்கும் ஒருவாறு தெரிவிக்க மேற்கொள்கின்றேன்🔥🙏* 
***********************
 *1:நான் யார் ? 💥* 
      *அனாதியாகிய பரந்து விரிந்த பரம ஆகாசத்தில் ,* *அனாதியாகிய இயற்கை உண்மைக் கடவுளாகிய பரம ஆகாச சொரூபராகிய கடவுள் சமுகத்தில் சந்தானமயமாய் (வழிவழியாக) நிரம்பி இருந்த, இருக்கின்ற அணுக்கூட்டத்தில் நெடுங்காலம் அறிவு ஒரு சிறிதும் விளக்கம் இல்லாமல் ,பாசாந்தகாரம் எனும் பேரிருளால்(ஆணவ மலத்தினால்)முடக்கப்பட்டிருந்த ஓர் சிற்றனு வடிவினன்தான் நான் . இந்த சிற்றனுவிற்கு ஆன்மா என்றே பெயர். ஆம் "நான் ஒரு ஆன்மா";* 🌺
🔥🔥🔥🔥🔥
 *2:எனக்கு ஆறறிவுக்குரிய இந்த உயர்ந்த மானுடப் பிறவியை கொடுத்தருளியது யார் ?💥* 

 *அண்டகோடிகள் அணைத்தையும் படைத்து அவற்றை தனது அருட்சக்தியால் திருநடம் என்ற பெயரில் ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அனுகிரகித்தல் என்னும் ஐந்து பெருங் கருணைத் தொழில்களால் எக்காலத்திலும் தடையேதும் இல்லாமல் இயக்கிகொண்டிருக்கும் அந்த பரமஆகாச சொரூபராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே...* 

 *எனக்கு முதன் முதலில் ஓரறிவு என்னும் தொடுஉணர்விற்குரிய தாவர பிறவியைக் கொடுத்து ஓரறிவுக்குரிய விளக்கம் பூர்த்தி ஆகும்வரையில்* *அத்தாவரப் பிறவிகளில் பலபலப் பிறவிகளில் என்னைப் பிறக்கவைத்தும்,* *அதன்பிறகு ஈறறிவு மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு என்று தற்சுதந்திரமில்லாமல் திருவருள் சுதந்திரத்தால் வாழக்கூடிய ஐயறிவுக்குட்பட்ட  பலப்பலப் பிறவிகளில்  பிறந்து பிறந்து இறந்து இறந்து முடிவில்...* 

 *தற்சுதந்திரத்தால் நன்மை தீமைகளை  ஆராய்ந்து அறியக்கூடிய பகுத்தறிவு என்னும் ஆறறிவுக்குரிய உயர்வுடைய இந்த மனிதப் பிறப்பை ஆண்டவர் பெருந்தயவுடன் கொடுத்தருளியுள்ளார்கள்;* 
 
 *ஆம் ,* 
 *எனக்கு இந்த  மனிதப்பிறவியை பெருந்தயவுடன் கொடுத்தருளியது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரேயாகும்🌺* 
🔥🔥🔥🔥🔥
 *3: இந்த மானுடப் பிறவி கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன ? 💥* 

 *இந்த மனிதப் பிறவி மற்றைய பிறவிகள்போன்று எளிதில் கிடைக்கக்கூடிய பிறவி அல்ல,* 
 *இந்தப் பிறவியினால்தான் நான் யார் என்ற கேள்வியை எனக்குள் கேட்டு விசாரிக்கக்கூடிய ஆன்ம அறிவு விளக்கம் எனக்கு கடவுளால் வழங்கப்பட்டு விளங்குகின்றது.* 

 *ஆகலி்ல் இந்த அறிவைக்கொண்டுதான் நான் யார் என்றும் ,எனது உயிருக்குள் உயிராய் இருந்தும் , அனாதிதொட்டு எனக்கு அம்மை அப்பனுமாய் இருந்தும் என்னை ஆளும் எனது ஆன்மத்தலைவர் யார் என்றும்* 

 *நான் இத்தனைப் பிறவிகள் கடந்து இப்போது இந்த மானிடப் பிறவி எடுத்ததன் காரணம் என்னவென்றும்,* 

 *எனது ஆன்மா இத்தனைப் பிறவிகள் கடந்து வந்ததன் காரணத்தை அறிந்தும்...* 

 *இனி பிறாவாநிலை அடைதற்குரிய இறவாமை என்னும் ஆன்மலாபத்தை அடைவதற்கான ஆன்மலட்சியத்தை எவ்வாறு* *அடைவதென்றும் விசாரித்து அறியக்கூடிய ஆன்ம அறிவு விளக்கம் இந்த மானுடத் தேகத்தில் மட்டுமே நிறைந்து விளங்குகின்றது .* 
   
 *ஆகலில் ஆன்ம அறிவு மிகுந்து விளங்கும் இந்த மனிதப் பிறவியைக்கொண்டுதான் நான் எனது பிறவி பயனத்தின் லட்சியமாகிய ஆன்மலாபத்தை*  *அடைந்திடல் வேண்டும் என்பதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் எனக்கு இந்த மானிடப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது🌺* 
🔥🔥🔥🔥🔥
 *4: ஆன்மாவாகிய எனக்குள் கடவுள் எப்படி விளங்குகின்றார் ? எனது ஆன்ம லட்சியம்தான் என்ன ?💥* 

 *எனக்குள் கடவுள்,"மெய் அறிவு ஆனந்த சொரூபராக" விளங்குகின்றார்.* 
*அதாவது "சச்சிதானந்த சொரூபராக" விளங்குகின்றார்.* *அப்படியென்றால், சத்து சித்து ஆனந்த வடிவினராய் விளங்குகின்றார்,* 

 *சத்து என்பது இயற்கை உண்மை,* 
 *சித்து என்பது இயற்கை விளக்கம்,* 
 *ஆனந்தம் என்பது இயற்கை இன்பம் என்பதாகும்* .

*சத்து* : 
*என்றும் ஓர்நிலையாய், என்றும் ஓர் இயலாய் , என்றும் உள்ளதுவாய் இருக்கின்றுது.* 

*சித்து* : 
*என்றும் உள்ளதுவாய், எங்கும் நிறைந்து விளங்குவதாய்,என்றும் விளங்கிடுவதாய் உள்ளது.* 

*இன்பம்* : 
*எல்லா நிலைகளிலும் எல்லா உயிர்களிலும்  எல்லா இன்பமுமாய் விளங்குவதாய் உள்ளது;* 

 *அதனால் இந்த "மெய் அறிவு ஆனந்த" சொரூபராய் இருக்கின்ற கடவுள்.. தனது உண்மையை ஆன்மாக்கள் எல்லாம் அறிந்துகொள்ளச் செய்தும், அந்த "மெய்யறிவு ஆனந்த" சொரூபமயமாகவே அனைத்து ஆன்மாக்களையும் தன்மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையில்தான் எனக்கும் இந்த மானுடப் பிறவி கொடுக்கப்பட்டு எனக்குள்ளேயே ஆண்டவர் " சச்சிதானந்த சொரூபராய்" இருந்து விளங்குகின்றார்கள்.* 
 *ஆகலில் ,* 
 *எனக்கு பிறவி கொடுக்கப்பட்டதன் காரணம்.. நானும் "சச்சிதானந்த சொரூபமாய்" கடவுள் நிலையறிந்து அக்கடவுள்  மயமாய் விளங்கவேண்டும் என்பதற்கே ஆகும்🌺* 
🔥🔥🔥🔥🔥
 *5: நான் எனது ஆன்மா லட்சியத்தை நிறைவேற்றி கடவுள் மயமாகுவதற்கு என்ன செய்யவேண்டும் ?💥* 

 *முதலில் இவ்வுலகம் கடவுளது மாயையால் படைக்கப்பட்டது என்பதும், அந்த மாயை என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல என்ற அறிவையும், ஆன்மாக்களை பக்குவப் படுத்துவதற்காக கடவுளது அருட்சக்தியின் ஒருதன்மையாக உள்ள பரிக்கிரக சக்திதான் இந்த மாயாசக்தி என்பதையும்,* 
 
 *இவ்வுலகப் பொருள்கள் எல்லாம் நிலையற்றது என்றும், என்றோ ஓர்நாள் இவைஎல்லாம் அழியக்கூடியது என்பதும், அப்படி அழியக்கூடிய பொருளால் கிடைக்கும் இன்பம் நிலையற்றது என்பதும் ,* 

 *இப்படி நிலையற்ற அழியக்கூடிய பொருட்களால் நமக்கு இருளே சூழும் என்பதையும் நமது அறிவால் அறிந்து ,* 
 
 *என்றும் அழிவில்லாமலும் எக்காலத்திலும் நிலையானதுவாயும் எல்லா உயிர்களும் பொருள்களுமாய், எல்லாம் தான்ஆனதுவாய் விளங்கி,எல்லாம் விளங்க விளக்கம் செய்விக்கின்ற கடவுளது அருள் சக்தியால் பெறப்பட்டு அனுபவிக்கின்ற இன்பமே ... என்றும் நிலையான இன்பம் என்பதையும் அறிந்து ,* 

 *அந்த இன்பத்தை பெறுவதற்குரிய பக்குவத்தை ,* *ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள தற்சுதந்திரமாகிய ஜீவ சுதந்திரம், தேக சுதந்திரம், போக சுதந்திரம் என்னும் மூவகை சுதந்திரத்தையும் கடவுளிடத்தில் ஒப்படைத்து சரணாகதி யாகி..கடவுளது திருவருட் சுதந்திரத்தைப் பெறுவதற்கு...* *நிலையற்ற இவ்வுலகப் பொருள்களின்மீது நிராசைக்கொண்டு விருப்பு வெறுப்பற்றவர்களாய்,* 

 *நாம் பொருளாசை மிகுந்த இவ்வுலக வாழ்வில் வாழ்ந்தாலும் ...* 
 
*புளியம்பழத்தின் ஓடுபோன்று சதையோடு தோல் ஒட்டாமலும்...* 
 *சேற்றிலே வாழும் பிள்ளைப்பூச்சியைப் போன்று உடம்போடு சேறு ஒட்டாமலும்...* ,
 *தண்ணீரிலேயே வாழும் தாமரை இலைப்போன்று தண்ணீர் தாமரையில் ஒட்டாமலும்... இருப்பது போன்று..* 
 
*நாமும் பொருள்சார்ந்த இவ்வுலகில் வாழ்ந்தாலும் ...* *உண்மையை உணர்ந்து நிலையற்று அழிந்து போகக் கூடிய பொருளாசைகள் இல்லாமல் வாழ்ந்து...* 

 *என்றும் நிலையான கடவுளது அருளைப் பெறுவதற்கு ஆசைக்கொண்டு ஜீவர்களிடத்தில் பக்தியும் ஆண்டவர்மீது என்றும் மாறாத அன்பும் வைத்து வாழ்ந்து..* 

 *நமது மேலான பக்குவத்தில் ஆன்ம அறிவு விளக்கத்தால்...* *அருள்நிலை அடைந்து அருளறிவைப் பெற்று அருள்மயமாகிடவேண்டும் (கடவுள்மயமாதல்);* 
🔥🔥🔥🔥🔥
 *6: நான் கடவுள்நிலை அறிந்து அக்கடவுள் மயமாகிட வேண்டும் என்றால் மாயையாலும் வினையாலும் அறிவு விளக்கமில்லாமல் வருந்துகின்ற நான் யாரைத் துணைக்கொண்டு எந்த நெறியைப் பின்பற்றி வாழ்ந்து இப்பிறவிக்கடலை கடந்து அக்கடவுள் நிலை அடைந்திட வேண்டும் ?💥* 
 
 *இந்த உலகம்தோன்றிய காலத்திலிருந்து ..* *கடவுள் நிலை அடைய விரும்பிய ஆன்மாக்களில் பல  பல்வேறு சாதனங்களை கடைபிடித்து தமது அறிவால் கடவுளை அறிந்து , அவரது அருளை பூரணமாக பெறாவிட்டாலும் ஒரு சிறு அருளொளி கிடைக்கப்பெற்று அந்த அருள்ஒளியிலேயே திளைத்து , உடம்பையும் உலகத்தையும் வெறுத்து தாம்கண்டு இன்புற்று மகிழ்ந்த உள்ளொளியாம் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து மறைந்து போனார்கள்;* 

 *அவர்களால் இவ்வுலகில் என்றும் ஓர் நிலையாய், என்றும் ஓர் இயலாய்,* *என்றும் உள்ளதுவாய்,எங்கும் பூரணமாய் நிறைந்து விளங்கிடும் கடவுளது பூரணமான அருளை பெற இயலாததால் அவர்கள் தனது தேகத்துடனேயே இவ்வுலகில் நிலைத்து கடவுளைப்போன்று என்றும் அழியாமல் நிலைத்து வாழ இயலாமல் ...* *மரணமில்லாத பெருவாழ்வென்னும் ஆன்மலாபத்தை அடைவதற்கு முன்பு உள்ள சாதனமாகிய முத்தி என்னும் நிலையை மட்டும் அடைந்துவிட்டு...* *சுத்தசன்மார்க்க நிலையில் பூரண அருள் வல்லபத்தால் அடையக்கூடிய  சர்வசித்தி என்னும் எல்லாம் செய்ய வல்ல சிவசித்தியை பெறுவதற்கு இயலாமல் முத்திநிலையை மட்டும் அடைந்து மறைந்தார்கள்.* 

     *ஆனால் முதன் முதலில் இவ்வுலகம் தோன்றிய காலத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மாக்களில் முதல் ஆன்மாவாக.. ,* 
 *நமது வள்ளல் பெருமானாரது ஆன்மாதான் கடவுளது பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டு ,* *அருள் வடிவாய் நின்று அக்கடவுளை நேரில் கண்டு களித்து,* 
 *ஒரு ஆன்மா அடையவேண்டிய முடிவான லட்சியத்தை அதாவது ஆன்மலாபத்தை* 
 *எக்காலத்தும்,* 
 *எவ்விடத்தும்,* 
 *எவ்விதத்தும்,* 
 *எவ்வளவும் தடைபடாமல்,* 
 *மரணத்தை தவிர்த்து இவ்வுலகத்திலேயே என்றும் இளமையுடன் பூரணமான கடவுள்தன்மையுடன் ,* 
 *சுத்தம் ,* 
 *பிரணவம்,* 
 *ஞானம் என்னும் சர்வசித்தி வல்லபத்துடன் கூடிய முத்தேக சித்திகளையும் பெற்றுக்கொண்டு ,* 
 *இறந்தாரையெல்லாம் எழுப்பும் கடவுள் வல்லபத்தையும் பெற்று* *"அருட்ஜோதி இயற்கை" என்னும் அருட்தேகத்துடன் ,* *திருவருட் சுதந்திரத்துடன் வாழுகின்ற முதல் ஆன்மா நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்களது ஆன்மாவேயாகும்.* 

 *ஆகலில்,* 
 *நமது பெருமானைத்தான், அவர்களுடைய அருள் அனுபவத்தைதான் நாம் துணையாகக் கொள்ளல் வேண்டும்* 🌻

 *மற்றும் ,* 
 *பெருமான் அவர்கள் தன்னைப்போன்றே மற்ற ஆன்மாக்களும் அருள் நிலையைப் பெற்று அருட்பெருவாழ்வு வாழவேண்டும் என்ற பெருங்கருணையில் ,* *தான் பெருவாழ்வு அடைவதற்கு காரணமாக இருந்த,* 
 *சுத்தசன்மார்க்க  பெருநிலையை அடைவதற்கென்று சுத்தசன்மார்க்க பெருநெறியை இவ்வுலகவருக்கு வழங்குவித்து,* 
 *அந்த நெறியை நடத்துகின்ற பக்குவ ஆன்மாக்கள் வேறுயாரும் இல்லாததால் தானே அதை முன்னிருந்து* *இவ்வுலகமெல்லாம் சுத்தசன்மார்க்க அருளாட்சியை கருணையால் நடத்தி வருகின்றார்கள்.* 
       
 *ஆகலில் ,* 
 *நாம் நமது ஆன்மா முடிவான லட்சியத்தை அடையவேண்டும் என்றால் ,* 
 *ஏற்கனவே அந்த ஆன்மலட்சியத்தை அடைந்த ஒருவரைப் பின்பற்றி அவர் நெறிப்பட நடந்து வாழ்ந்தால்தான் நாமும் அடைந்திட முடியும் என்பதால் ,* 
 *வள்ளல் பெருமானையே நமக்கு உற்ற துணையாகவும்,* *அவர்களது சுத்தசன்மார்க்க நெறியே நமக்கு அருள்நிலையை அடையச் செய்விக்கும் அருள்நெறியாகவும் கொண்டு பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும் ,* 
 *பின்பற்றி வாழ்வோம்,* 
 *பெரு வாழ்வடைவோம்;🌺🙏* 
 *தயவான நன்றிகள்🙏* 
 *வள்ளல் மலரடிப் போற்றி போற்றி* 
 *பெருமான் துணையில்* 
 *வள்ளல் அடிமை* 
 *வடலூர் இரமேஷ்;* 
 *(7708490336)*

ஒன்று முதல் ஆறு திருமுறை விளக்கம்!

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் 

ஒருவேலை வடலூரில் திருவருட்பா பாடசாலை அமையப் பெற்றால் 

முதல் 5 திருமுறைகளை பாடம் சொல்லித் தருவதா வேண்டாமா என்ற ஒரு மிகப் பெரிய சர்ச்சையுண்டாகும் என அறிய முடிகின்றது. 

இப்போது விஷயத்திற்கு வருவோம்.
ஏன் 
சுத்த சன்மார்க்கத்தில் 
இரு பெரும் பிரிவினராக பிளவுபட்டு நிற்கின்றனர் .என ஆராய்ந்தோமேயானால் .

காரணம் .ஒருவகையில் வள்ளல் பெருமான்தான் என்றாலும் நம்மவர்கள் புரிதலில் கருத்து வேறுபாடே முக்கிய காரணமாகும்.
ஆம் 

 *1-5 திருமுறை மறுத்து 6-ம் திருமுறை மட்டும் ஏற்பவர்கள்* 
திருவருட்பா -6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு 
முதல் 5திருமுறைகள் வரை சமயம் சார்ந்தது எனவும் 
6-மதிருமுறை சமயம் கடந்தது எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது .
ஆம் பெருமானாரும் அவ்வாறே பேருபதேசத்தில் கூறுவதாவது :- அப்போது சைவ சமயத்தில் நான் வைத்திருந்த பற்று இவ்வளவு என்று அளவிட முடியாது அதற்கு எனது தோத்திரப்பாடல்களே சாட்சி அதனை சபைக்கு கொண்டு வந்து மற்ற அடியார்களின் பாடல்களையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நான் எவ்வளவு தீவிரமாக சைவ சமய பற்றுடையவனாக இருந்துள்ளேன் என்பது தெரிய வரும் .

எனவும் ஏன் எனக்கு அப்போது அவ்வளவு அழுத்தமா பற்றிருந்ததென்றால் அப்போது எனக்கு சிறிது அறிவு விளஙகாத காலம் எனவும் குறிப்பிடுகின்றார் .
இப்போது எனது அறிவு அண்டாண்டங்களுக்கும் மேல் செல்கிறது இதற்கு அந்த சமய மதப் பற்று காரணமில்லை தயவுதான் என்னை தூக்கிவிட்டது .

மேற்கண்ட இந்த இரண்டு ஆதாரங்களே நம்மவர்கள் 1-5 திருமறைகளை நிராகரிப்பதற்குக் காரணமாகும் .

 *1-5 திருமுறைகளையும் ஏற்று 6-ம் திருமுறைகளையும் ஏற்பவர்கள்* 
இவர்களின் புரிதல் 
பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அத்துணைப் பாக்களும் அருளால் பாடப் பெற்றவை இதில் 5,6 என வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது .
நாம் படியேறி கடைத்தேற வேண்டிய படிநிலைதான் இந் 1-5,6 ஆகும் என கூறுகின்றனர் .
மேலும் எந்ப் பேருபதேசத்தில் எல்லா மந்திரங்களையும் சமய மதங்களையும் விட்டுவிட்டு 
மகாமந்தித்தை கொடுத்து தயவினை பின்பற்றக் கூறியுள்ளாரோ 

அதே பேருபதேசத்தில் பாருங்கள் மகாமந்திரத்தின உண்மைப் பொருளாகிய அன்பு தயவு கருணை இவற்றினை எவ்வாறு சாதனமாக பயிலுவது என்பதைக் கூறாமல் அதனை மத சன்மார்க்கியான தாயுமாண சுவாமிகளின் சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் என துவங்கி  கருணாகரக்கடவுள் என்று முடியும பாடலின் பிரமாணத்தால் கண்டு உணர்க என கூறியுள்ளார் .
இதுதான் கேள்வி சமய மதத்தை கைவிட்டவர்தானே ஏன் மத சன்மார்க்கப்பாடலில் பிரமாணம் காட்ட வேண்டும்.

மாகாமந்திரம் உண்மைப் பொருள் வைக்கப்பட்ட பூட்டு என்றால் அதன் சாவி தாயுமாணவரின் கருணாகரக்கடவுள் பாடலில் உள்ளது என கூறியதன் காரணம் .சமய மதங்களின் உண்மைப் பொருளை ஏற்கிறார் என்றுதானே அர்த்தம் 
இது இவர்களின் வாதம் .



இதில் வேடிக்கை என்னவெனில் 

இருபிரிவினர்க்கும் 
வள்லார்தான் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்கடவுள் 
திருவருட்பாதான் வழிபடுநூல்
மகாமந்திரம் தான் தாராக மந்திரம் 
ஜீவகாருணியம்தான் கடவுள் வழிபாடு 
இப்படியிருக்க எப்படி இந்த பிளவு வேற்றுமை வந்தது என்று நாம் உற்று நோக்க வேண்டும .

முதலில் நம் பெருமானார் ஆண்டவரால் திட்டமிடப்பட்டே வருவிக்கவுற்ற ஓர் ஆன்மா 

எதற்கக வருவிக்க உற்றார் 
ஆண்டவர் வள்ளலாருக்கு இட்ட கட்டளை என்ன ❓
உலகில் மனித குலம் 
சாதி
சமயம்
மதம்
இனம்
மொழி
தேசம்
நிறம்
பண்பாடு
கலாச்சாரம்
அந்தம்
சாதனம் என பல்வேறு கருத்துடையவர்களாக அதனதன் ஆசாரக் கட்டுப்பாட்டினால் பிரிவினை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் போரிட்டு வீணாக மாண்டு போகின்றனர்.
எனவே மகனே நீ இந்த பூலோகத்திற்குச் சென்று அவர்களையெல்லாம் எல்லா சமய மதங்களையும் முதலில் சமரசம் செய்வாயாக அதாவது ஓர் புள்ளியில் இணைப்பாயாக 
இணைத்து உலகில் மனித குலம் போரிட்டு வீணே மாண்டுபோவதைத் தடுப்பாயாக என்று கூறி கட்டளையி்ட்டு திட்டமிட்டே ஆண்டவர் வள்ளலாரஎனுமஆன்மாவை இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்கின்றார்.
 *இதுதான் முதல் கட்டளை* 

அடுத்து இரண்டாவது கட்டளையாதெனில் 
இதுவரை தோன்றிய சமய மத மார்க்கங்களை தோற்றுவித்த அருளாளர்களும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமதங்களை பின்பற்றுபவர்களுக்கும் வழிகாட்டும்படிாக மரணமில்ராப் பெருவாழ்வை அடையும் பொருட்டு அனைவருக்கும் மெய்ப்பொருளினை நன்கு உணர்த்தி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை அடையச் செய்வாயாக என இரண்டாவது கட்டளையை பிறப்பிக்கின்றார் ஆண்டவர் .

ஆக முதல் கட்டளை- *சமரசம்* 
2-ம் கட்டளை- *சுத்தம்*

இதி் ல் சமரசம் வந்தால் உலகில் மனித குலம் போர் பகையின்றி ஒற்றுமையாய் 
புலைகொலை தவிர்த்த புனிதர்களாய்  வாழ்வர் .

சுத்தம் வந்தால் மனித தேகம் பெற்ற ஆன்மாககள் மரணமில்லாப் பெருவாழ்வு அடைவர்.

இவ்வுலகில் இப்போது தேவை சமரச சன்மார்க்கமே 
அதாவது சமய சன்மார்க்கம் 
மத சன்மார்க்கம் இவையெல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானதல்ல நட்புடையவையே 
அந்நியமல்ல அநந்நியமே என்கிறார் நம் பெருமானார்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் 
விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா 🤣
வந்துவிடுவோம்.
1-5 ஏற்பதா மறுப்பதா  என்பதுதானே .

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்வோம் 
வள்ளலார் குரு 
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கடவுள்
திருவருட்ப வழிபடு நூல் என்று முடிவாகிவிட்டால் 

நமக்கு சாதனம் 2 தான் 
1.ஜீவகாருணியம்
2.சத்விசாரம்

அவ்வளவுதான் இதில 
ஜீவர்களுக்கு 
பசி
 பிணி
கொலை
தாகம்
இச்சை
எளிமை
பயம் என்ற அவஸ்தைகளையெல்லாமநீக்கி ஜீவர்களின் முகத்தில் தத்துவமலர்ச்சியை கடவுள் வழிபாடாக செய்வதே ஜீவகாருணியம்.

அடுத்து சத்விசாரம்
இது 
உலகம்
உடல்
உயிர் 
இறைவன் முதலியவற்றின் தோற்றமென்ன விரிவென்ற ஒடுக்கமென்ன 
மரணம் ஏன் வருகிறது என்றெல்லாம் ஊன்றி விசாரித்து வருகையில் திருவருள் காரியப்பட்டு முதலில் கண்டமாக (பகுதியாக)பின்பு  பிரம்ம இரகசியம் 
சிவ இரகசியம் என அகண்டமாக (முழுவதையும்) தெரிவிக்கும் .

இதுதான் சாதனம்.

இதில் இந்த இரண்டு சாதனத்தை மட்டுமே சுத்த சன்மார்க்க சாதனமாக ஏற்றுக்கொண்டு பயிலுபவர்களுக்க 1-5 படிக்கலாமா வேண்டாமா என்ற வினாவே எழாது ஏனெனில் இவர்கள் எது படித்தாலும் அவற்றினை அறிவுக்கண் கொண்டு  விசாரமாகத்தான் பார்ப்பார்களேயன்றி அச்சமய மத ஆசாரங்களை சாதனமாக அனுஷ்டிக்கமாட்டார்கள் .இவர்கள் 1-6 வரை படித்தாலும சுத்தசன்மார்க்கத் தெளிவுடனே பயணிப்பார்கள் .

ஆனால் மேற்கண்ட சுத்த சன்மார்க்க சாதனமாகிய 1.ஜீவகாருணியம் 2.சத்விசாரம் இவ்விரு சாதனகளன்றி வேறு வேறு சமய மத ஆசார அனுஷ்டானங்களை சாதனமாக கடைபிடிப்பவராயின் இவர்கள் 1-5 திருமுறை படித்தால் இங்குதான் சிக்கல் உண்டாகின்றது இவர்கள ஆண்டவரிடத்தில் இலட்சியம் போய் 
அற்ப சித்திகளுக்குண்டான சாதனங்களை மேறகொள்ள முற்படுகின்றனர் .

உதாரணத்திற்க 
சைவ சமயச் சின்னங்கள் 
விபூதி
ருத்ராட்சம்
காவி
லிங்க வழிபாடு இன்னும் பற்றபல இவற்றை சாதனமாக பின்பற்றினால் சுத்த சன்மர்க்க லட்சியம் தடைபடும் .

இதனை அதன் தத்துவ தாத்பர்யம் என்ன என்று அறிவால் ஊடுறுவி பார்த்து அதனதன் உண்மையை அவ்வச் சமய மத ஆசார அனுட்டானங்களில் சத்திய உணர்ச்சி கொள்ளாது  சுத்த சன்மார்க்க 
ஞானசாதனமாகிய 
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிஷ்டை கூடல் என்று படியேறினர்களேயானால் அது தானாக சுத்த சன்மார்க்கமெனும் இலக்கை அடையச் செய்யும்.

           அடியேனுக்கு திருவருள் உணர்த்தியவாறு குறிப்பிட்டுள்ளேன் .
            -சாதுஹரி.

ஞாயிறு, 2 ஜூன், 2024

யோகம் சிறந்ததா தோத்திரம் சிறந்ததா ?

"யோகம்" சிறந்ததா ?" தோத்திரம்" சிறந்ததா ?
================= ========================
ஒருநாள் வள்ளல் பெருமானை அன்பர்கள் ''யோகம் முதலியன செய்ய எங்களால் இயலாதனவா இருக்கின்றன ; ஆதலால் நாங்கள் ஈடேறுதற்கு உரிய ஒரு இலகுவான மார்க்கத்தைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருளால் வேண்டும் ''என்று விண்ணப்பித்தார்கள்
வள்ளலாரும் அதற்கு விளக்கம் சொன்னார் '' இது இக்காலம் கடையுகமாகிய கலியுகத்தில்'' உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற முடியாது,ஆதலால் நீங்கள் தொத்திரத்தையே ஈடேறும் மார்க்கம் எனக் கொள்ளுங்கள் என்று இசைத்தனர்.
================================================
ஞான தீப விளக்கம் !
====================
இதையே சித்தி விளாகத்தில் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திரு மாளிகைப் புறத்தில் வைத்து ' தடைபடாது ஆராதியுங்கள் '' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்,இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் இந்த பாடலில் உள்ளபடி தோத்திரம் செய்யுங்கள்

 என்று ;--
================================================
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான 
நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !
=================================================
என்னும் 28, பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் ,இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்,;--
மேலும் ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருகாப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை யாகும்.
=================================================
நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள் .ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டி கொடார் ,
சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்.
என்று மண்ணுலகை விட்டு அருள் ஜோதி மயமானார்.இப்போது ஒளி உடம்பாக அருட்பெருஞ்ஜோதியாக இவ்வுலகை ஆண்டு கொண்டு உள்ளார் .
====================================================
ஞான சித்தர் காலம் !
=====================
வள்ளலாருக்கு முன்னாடி இருந்த காலம் ;--
==========================================
இதுவரையில் கர்ம சித்தர்கள் உடைய காலம் அதனால் சமயங்களும் மதங்களும் மதங்களும்,பரவி இருந்தன ,
இப்போது வரப்போகிறது (இப்போது நடைபெறுகின்றது ) ஞான சித்தருடைய காலம்,இனிமேல் ஜாதி ,சமயம்,மதம் முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆசாரம் ஒன்றே விளங்கும்.
சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள்,மூர்த்திகள்,ஈசுரன்,பிரம்மா,சிவம்,முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருக்குமே ஒழிய அதற்கு மேல் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.

========================================
சமய மதங்களில் சொல்லிக்கிற கர்த்தாக்கள் உடைய சித்திகள் யாவும் ,சர்வ சித்திகள் உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சித்தியின் லேசங்கள்.
அந்த சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பு ஆகமாட்டார்கள் ,கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் வேதம், ஆகமம்,புராணங்களிலும் சமய ,மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள்.அப்படியும் வைத்தால் சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது.வராவிட்டால் நீங்கள் அடையப் போகிறது ஒன்றுமே இல்லை.
ஆதலால் அதுகள் எல்லாம் பற்று அற விட்டுவிட்டு ,சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒருவரே என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்...என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.
====================================================
வழிபாடு செய்வது எப்படி ?
==========================
அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை ;;ஒன்று பர உபகாரம் ..ஒன்று சத்விசாரம் ,,
====================================================
பர உபகாரம் என்பது ;-- 
====================

தேகத்தாலும்,வாக்காலும்,திரவியத்தாலும் உயிர்களுக்கு உபகாரம் செய்வதாகும்.
சத் விசாரம் என்பது ;--
===================
நேரிட்ட பஷத்தில் --ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தொடு இருப்பது..கடவுளது புகழை விசாரித்தல்,ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,தன்னுடைய சிறுமையைக் கடவுள் இடத்தில் விண்ணப்பம் செய்தல்.இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும்.
என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் ..
எனவே நாம் யோகம் முதலிய சாதனங்கள் எதுவும் செய்ய வேண்டாம் .ஒவ்வொரு வீட்டிலும் அருள் ஞான தீபம் ஏற்றி தோத்திரம் செய்யுங்கள் .கடவுள் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தீபத்தின் முன் அமர்ந்து உங்களின் குறைகளை சொல்லி வழிபடுங்கள் .உங்களால் முடிந்தால் ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரம் செய்யுங்கள் இந்த இரண்டு வழியைத் தவிர வேறு வழிகளில் சென்று காலத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் .
================================================
எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நம்புங்கள் எல்லாம நல்லதே நடக்கும் .
============================================
.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..
======================================
அன்புடன் ஆனம்நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 21 மே, 2024

158 ஆவது சத்திய தருமச்சாலை தொடக்க விழா !

*158 ஆம் ஆண்டு தொடக்க விழா !*

அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி! 

பசித்த ஏழைகளின் பசிப்பிணியை தவிர்க்க 25-5-1867 ஆண்டு (வைகாசி 11 ஆம் நாள்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் *வள்ளல் பெருமான் அவர்களின் திருக்கரங்களால் தீ மூட்டி துவங்கி வைக்கபட்டதுதான் வடலூரில் இயங்கிவரும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்பதாகும்.*"

*உலக அதிசயம் !*

*உலக வரலாற்றில் ஆதரவு அற்ற ஏழை எளிய  மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" என்பது உலக அதியங்களில் ஒன்றாகும்*

*வழிப்பாட்டு முறையை மாற்றிய புரட்சியாளர்!*

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும், உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் புதிய ஆன்மீக வழிப்பாட்டு புதிய புரட்சி கருத்தாழம் உள்ள முறையை, அதன் உண்மையை வெளிப்படுத்திவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*மேலே கண்ட உண்மையை கருத்தில் கொண்டு வழிப்பாட்டு விசயத்தில் சன்மார்க்கிகள் ஒத்த கருத்தோடு ஒத்துரிமையோடு கவனமாக செயல்பட வேண்டும்*

*வடலூரில் சத்திய தருமச்சாலை விழா !*

*வருகின்ற 24-5-2024 ஆம் தேதி வைகாசி மாதம் 11 ஆம்நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யானது 157 ஆம் ஆண்டுகள் நிறைவு அடைந்து 158 ஆம் ஆண்டு துவக்கவிழா சிறப்பாக கொண்டாடப் படஉள்ளது*

அனைவரும் தருமச்சாலை விழாவில் கலந்து கொண்டு அவரவர்களால் இயன்றஅளவு உதவி செய்தி  அதனால் கிடைக்கும் ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்டு ஆன்ம லாபம் அடைந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அன்புடன் அழைக்கிறோம் 

அன்புடன் ஆன்மநேயன் *"முனைவர் சுத்தசன்மார்க்க சுடர்" ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
வடலூர்
*9865939896*

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வழிப்பாட்டு விஷயத்தில் ஒத்து இருப்பது அவசியம்!

*வழிபாடு விஷயத்தில் ஒத்து இருத்தல் அவசியம்!*

*வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைப்பதற்கு முன் வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்*

25-11-1872 ஆம் ஆண்டு ( ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம்தேதி) சித்தி வளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு *எச்சரிப்புப் பத்திரிகை* என்னும் பத்திரிகையில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்

சன்மார்க்க அன்பர்கள் அவரவர்கள் விருப்பம் போல் வழிபாடு செய்யாமல் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்னும் அழுத்தமான கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார்.*
மேலும் *புறத்தில்  தீபஒளி வழிபாடு மட்டுமே வைத்து தோத்திரம் மற்றும்  பிரார்த்தனை செய்தல் வேண்டும்* என்பதை எச்சரிப்புப் பத்திரிகையாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதன் விபரம் !

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை!

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள்,

*ஆண்டவர் ஒருவர் உள்ளார்* என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார் என்றும்,

அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.*

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.

அப்படி யிருத்தல் மேல்விளைவையுண்டுபண்ணா திருக்கும்.

அப்படி இனிமேல் ஒருவரை யொருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

*அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது.*

அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்.

*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.*
 அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி *ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

*சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)* 

மேலே கண்ட செய்திகளை எச்சரிப்புப் பத்திரிகையாக வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார்.

வள்ளல்பெருமான் மேற்கண்டவாறு எச்சரிப்பு பத்திரிகையில் தெரிவித்தும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களான *மருதூர், வடலூர் தருமச்சாலை, சத்திய ஞானசபை, கருங்குழி, மேட்டுகுப்பம் சித்திவளாகம்* போன்ற புனித இடங்களில் வள்ளலார் சொல்லியவாறு இந்து சமய அறநிலைய துறை வழிப்பாட்டு முறைகளை செயல் படுத்த வேண்டும். 
 
 *மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ள எல்லாப்  புனித  இடங்களிலும் மது மாமிசம் இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய புனித பூமியாக, புனித இடமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அழுத்தமான முக்கிய கோரிக்கையாகும்*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்  வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை மாற்றினால் மட்டுமே எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒத்த கருத்தோடு ஒரே வழிபாட்டு முறையை பின் பற்றுவார்கள் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் "சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை விளம்பர பத்திரிகை!

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு வரப்போகிறார் அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் ஞானசபையில் அமர்ந்து  அளவு குறிக்கப்படாத அற்புத சித்தியெல்லாம்  வழங்கப்போகிறார் என்பதை முன் கூட்டியே விளம்பரப் படுத்தியுள்ளார் வள்ளல்பெருமான்!* 

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !*

*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !*

*அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்*

*நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்*

*இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,*

*எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்*

*தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,*

*எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.*

*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகப்பூரணப்  பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,*

*நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.*

*இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,*

*எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.*

*ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில்  கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.*

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம்.

*எல்லா ஜீவர்களும் அருள் பெற வேண்டும் இன்புற்று வாழவேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற பெருந்தயவு பெருங்கருணையோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைத்து வருகின்றார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் எல்லாம் கலங்குகிறது,ஆச்சரியம் அலைமோதுகிறது,அளவில்லா மகிழ்ச்சி ஆனந்தம் கொள்கிறது,வள்ளல்பெருமான் அவர்களை நினைந்து நினைந்து, உணர்ந்து உணரந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்றெழும் ஆனந்த கண்ணீரால் அழுது அழுது போற்றி போற்றி  வணங்கி வணங்கி வாழ்த்தி மகிழ்வதைத் தவிர வேறு வார்த்தைகளே இல்லை*

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

சனி, 2 மார்ச், 2024

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ! பாகம் 3.

*முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது!* 

பாகம்- 3...

*சுத்த சன்மார்க்கக் கொள்கையை தெரிந்து கொள்ள வருபவர்கள், வள்ளலார் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ள உண்மை ஒழுக்க நெறிகளை முதலில் ஊன்றி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்*

*முன் தேகம், பின் தேகம் உண்டு என்பது எவ்வாறு என்பதை வள்ளலார் சொல்லுவதை கவனித்து ஜாக்கிரதையாக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*

*வள்ளல்பெருமான் கேள்வி பதில்!* 

12,*முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:-?*

*ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்;* 

*இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும்.*

*ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும்.*

13,*சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:-?* 

*ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள்.*

*அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.*

கீழே உள்ள நீண்ட  கேள்வி பதிலை ஊன்றி கவனிக்கவும் !

14,*முன் பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் பயம் முதலிய வற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதியென்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் காருணியம் வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்னில்:-?* 

*ஆகாது. அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்து, கால்களுக்கு விலங்கிடப் பட்டுச் சிறைச்சாலையில் இருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவகர்களைக் கொண்டு ஆகாரங்கொடுப்பிக்கின்றான்.* 

*அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தஞ் செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக் கின்றார்.*

*அரசன் தன் கட்டளைப் படி நடவாமல் வேறுபட்ட சாதாரண குற்றமுடையவர்களைத் தன்னாலவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட் டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி அவர்களுக்கு நல்லறிவு வருவிக்கின்ற நிமித்தம் அவ்விடத்தைவிட்டு வேறிடங்களில் வெளிப்படுத்துகின்றான்.*

*அவர்கள் உத்தியோக மிழந்தபடியால், சுகபோஜன முதலிய போகங்களை இழந்து ஊர்ப்புறங்களிற் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்ற போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகார முதலியவை கொடுக்கின்றார்கள்.* 

*அதை அரசன் கேட்ட காலத்திலும் கண்ட காலத்திலும் கொடுத்தவர்களை இரக்கமுள்ள நல்ல சமுசாரிகளென்று சந்தோஷ’த்து உபசரிக்கின்றானே யல்லது கோபிக்கின்றானில்லை. அதுபோல், கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவனபோகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார்.*

*அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜன முதலியவற்றை இழந்து வேறு வேறிடங்களில் ஆகார முதலியவை இல்லாமல் வருந்தும்போது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகார முதலியவை கொடுத்தால் அப்படிக் கொடுத்தவர்களை நல்ல இரக்கமுள்ளவர்கள் மேன்மேலுஞ் சுகத்தையடையக் கடவார்களென்று சந்தோஷ’த்து உபசரிப்பாரல்லது கோபிக்கமாட்டார்.* 

*ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.*

*அறிவும் அன்பும் தோன்றுவது எவ்வாறு என்பதை கீழே விளக்குகின்றார்!*

15,*இந்தச் சீவகாருணியத்தால் இகலோக ஒழுக்கம் வழங்குகின்றது. சீவகாருணிய மில்லையாகில், இகலோக ஒழுக்க மெவ்வளவும் வழங்கமாட்டாதென்று அறியவேண்டும். எப்படியென்னில்:-?*

*சீவகாருணிய மில்லாதபோது அறிவும் அன்புந் தோன்றா;*

*அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா;*

*அவை விளங்காதபோது வலியசீவர்களால் எளிய சீவர்களொழுக்கம் பொறாமை முதலானவைகளால் தடைப்பட்டழிந்து போம். பின்பு வலியசீவர்கள் ஒழுக்கங்களும் தாமச ஒழுக்கங்களாகி ஒருவ ரொழுக்கத்தால் மற்றொருவரொழுக்கம் மதத்தினால் சோர்ந்தவிடதில் மாறுபட்டழிந்து போம்.*

*சீவகாருணிய ஒழுக்கஞ் சிறிது மில்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவேயில்லை அது போல் சீவகாருணிய மில்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*

16,*பரலோக ஒழுக்கமுஞ் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது எப்படியென்னில்;-?*

*சீவகாருணியமில்லாத போது அருள்விளக்கந் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையமாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்*

17,*சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துன்மார்க்கப் பிறவியே பெருகி, எங்கும் புல்லொழுக்கங்களே வழங்குகின்றன. எப்படியென்னில்:-?*

*சீவகாருணிய மில்லாத கடின சித்தர்க ளெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரணியவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷசெந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும் சிலர் காக்கை கழுகு முதலிய பக்ஷி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள்.*

*ஆதலால், புல்லொழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்றறிய வேண்டும்.*

*சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும்.*

*சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது* 

தொடரும்....

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று உலக வழிபாட்டையே மாற்றியவர் நமது வள்ளல்பெருமான்*

*அடுத்து ஜீவகாருண்யத்திற்கு முக்கியமான லட்சியம் எது என்று தெரிந்து கொள்வோம்!*

அன்புடன் ஆன்மநேயன் சுத்தசன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*