சனி, 24 ஜூலை, 2021

ஆன்மா உயிர் உடம்பு வந்த வழி !

*ஆன்மா  உயிர் உடம்பு வந்த வழி !* 

*வள்ளலார் பாடல்!

*உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்*

*உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்*

*மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர்*  *மனத்தை*

*வசப்படுத்தீர்* *வசப்படுத்தும் வழிதுறை கற் றறியீர்*

*இடம்பெறு பொய் வாழ்க்கையிலே* *இன்பம் துன்பம் அடுத்தே*

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 

*ஆன்மாவிற்கு *உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரிந்து கொண்டால்தான்  உடம்பையும் உயிரையும் பாதுகாத்து ஆன்மா அருள் பெற்று புண்ணியம் என்னும் பேரின்பத்தை அடையமுடியும் என்கிறார் வள்ளலார்*.  

அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் தினமும் மூன்று வேலையும் உண்ணுதற்கும் உறங்குதற்கும் மட்டுமே தெரிந்து கொண்டு *பேய்பிடித்த மனம்* போல் கண்டபடி தாவி தாவி அலைந்து கொண்டு உள்ளீர் என்று சொல்கிறார். 

*நாம் முதலில் ஆன்மாவைப் படைத்தவர் யார்?*என்பதையும்* *இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து உடம்பு உயிர் எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ?  அருளைப்பெற வேண்டிய அவசியம் ஏன்? யாரிடம் அருளைப் பெற வேண்டும் ? அருளைப்பெறுவதால் ஆன்மா அடையும் லாபம் என்ன ? என்பதை தெரிந்து கொண்டால்தான் நாமும் அருளைப் பெறுவதற்குண்டான ஆசை வரும்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகம்!*

சுருக்கமாக சொல்கிறேன் ! .

*அருட்பெருவெளி என்ற ஓர் மாபெரும் இடம் உண்டு.அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாம்ராஜ்ஜியம் ( ஆட்சிபுரியும் இடம்)* *அந்த எல்லைக்குள் ஆன்ம ஆகாயம் என்ற ஓர் இடம்உண்டு*. *அங்கு அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.*

*அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்* 

*அவ் ஆன்ம அணுக்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே யார்? என்பதும் தெரியாது வெளி  உலகம் எதுவும். தெரியாது* 

*பஞ்ச பூத உலகம்!*

*ஆன்மாக்கள்  உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே  பஞ்சபூத உலகம் படைக்கப்பட்டது*.

பஞ்சபூத உலகத்தை நிர்வாகம் பண்ணும் உரிமையை *மாயை   மாமாயை பெருமாயை* என்னும் மாயாசத்தியிடம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. *ஆண்டவர் கட்டளைப்படி மாயாசக்திகள்தான் ஆன்மாவிற்கு பஞ்சபூத அணுக்களைக் கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக்கொடுத்து உயிர் இயக்கத்தினை ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி ஆன்மாவை குடியிருக்க வைக்கிறது* *அதற்கு ஜீவதேகம் என்றுபெயர்* 

*அந்தவீடு ஆன்மாவிற்கு வாடகை வீடாகும். வீட்டின் வாடகைதான் தினமும் கொடுக்கும் உணவாகும்*.

*ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஜீவதேகம் என்னும் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்*.

*அதற்கு அருள்தேகம் ஒளிதேகம் ஆன்மதேகம் என்று பெயர்.*

*பஞ்சபூத அணுக்களால் பிண்ணப்பட்ட ஊன் உடம்பை (ஒளிஉடம்பாக) அருள் உடம்பாக மாற்றும் முறையைக் கற்றுத் தருவதுதான் *சுத்த சன்மார்க்கம்*

சுத்தசன்மார்க்கத்தில் கற்கும் கல்விக்கு சாகாக்கல்வி என்பதாகும்.*

*வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம்*. 

அறிவு என்பது ஒர் சிறிதும் தோன்றாத *அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் *சிற்றணுப்பசுவாகி* அருகிக்கிடந்த அடியேனுக்குள் *உள்ளொகியாகி இருந்து* அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து *எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய  உயர்ந்த அறிவுள்ள இம்மனித தேகத்தில்* என்னை விடுத்துச் சிறிது *அறிவு* விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன்! என்னவென்று சொல்வேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருமையைப் போற்றுகிறார். 

மேலும் *இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில்? *நான் ஆன்மா! சிற்றணு வடிவின்ன்* . *மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது* *இருப்பிடம் லலாடஸ்தானம் அதாவது *உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேல் புருவமத்தி (சிற்சபாஅங்கம்) என்னும் இடத்தில் பாதுகாப்பாய் இயங்கிக் கொண்டு உள்ளது*

அதன் வண்ணம் *கால்பங்கு பொன்மை.*

*முக்கால் பங்கு வெண்மை* கலந்த வண்ணமாக உள்ளன.

*இப்படிப்பட்ட ஆன்ம்பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழுதிரைகளால் மறைக்கப்பட்டுள்ளது.*

*இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்*

*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்?*  

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது* *அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;* 

*இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்*.

*மஞ்சள் வர்ணம் என்பது பொன் வர்ணம் அருளைக் குறிப்பதாகும்*

*வெள்ளை வர்ணம் என்பது பிரகாசத்தைக் குறிப்பதாகும்*

*ஆதலால் அருட்பிரகாசவள்ளலார் என்பதாகும்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படுகிறது*.

*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உடம்பைஇயக்கும் உயிரையும் அழிக்காமல் பின்னம் செய்யாமல் பாதுகாத்து மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆன்மா ஆன்ம இன்ப லாபம் அடையவேண்டும்.*( உடம்பு அழிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு)

*ஆன்ம இன்ப தேகமான சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் மாற்றத்தினால் முத்தேக சித்திப்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக சேர்ந்து பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே.ஆன்மாக்களை இந்த பஞ்சபூத உலகத்திற்கு வருவிக்க உற்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*. 

வள்ளலார் சொல்லியவாறு ஆன்மாக்கள் இவ்வுலகில் உடம்பு உயிர் எடுத்து வாழ்ந்து இன்பம் துன்பம் அனுபவித்தால் மட்டுமே நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என்கிறார் வள்ளலார்

*கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி* *கூத்தாடுகின்றோம் என்று சின்னம்பிடி*

*அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம்பிடி*

*அருளமுதம் உண்டோம் என்று சின்னம்பிடி !*

என்றும் மேலும்

*அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு*

*மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு* 

என்று ஆனந்தக் கூத்தாடுகின்றார் வள்ளலார். *ஒவ்வொரு ஆன்மாவும் வள்ளலார் பெற்ற பேரின்ப நிலையை அடையவேண்டும் என்பதாலே என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்று நமக்காக  ஆண்டவர் இடத்திலே விண்ணப்பம் செய்து வேண்டுகிறார்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு