சனி, 31 ஜூலை, 2021

குரு என்பவர் யார் ?

 *குரு என்பவர் யார்* ? 


*மனிததேகம் எடுத்துள்ளவர்கள் எல்லவரும் உயர்ந்த அறிவுள்ளவர்கள் என்பது கடவுளின் படைப்பாகும்*.


*உயர்ந்த அறிவுள்ளவர்கள்  தாழ்ந்த அறிவுள்ளவர்கள் என மனிதர்களை பிரித்தது யார் ?*


*குரு என்பவர்கள் யார். ?*


*உயர்ந்த அறிவுள்ளவர்கள்*  *குறைந்த அறிவுள்ளவர்களின்  அறியாமையைப் போக்குகின்றவர்களையும் மேலும் உலகியல் கல்வி போதிப்பவர்களையும் குரு என்றும் சொல்லப்படுகின்றனர்*


*மாதா பிதா குரு தெய்வம் என்று மூன்றாவது இடத்தில் குருவை சொல்வதுண்டு*.( *மாதாவையும் பிதாவையும் குருவையும் காப்பாற்றுபவரே தெய்வம் என்பவராகும்*)


அறியாமை என்னும் குருட்டுத்தனமான இருளைப் போக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்.


*தெரியாத தொழிலை கற்றுக் கொடுப்பவர்களையும் குரு என்பார்கள்*.


*ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணவம் மாயை  மாயாயை பெருமாயை கன்மம் போன்ற  மலத்தை நீக்குகின்றவர்களையும் குரு என்பார்கள்*.


*மலத்தை நீக்குவதற்கு மந்திரங்களைச் சொல்லி தீட்சை வழங்குபவர்களையும் குரு என்பார்கள்*.


ஆலயங்களில் உள்ள சிற்பக்கலைகளான  தத்துவ உருவங்களான தெய்வங்களுக்கு அருகில் இருந்து அபிஷேகம் ஆராதனை பிரார்த்தனை செய்து பிரசாதம் கொடுப்பவர்களும் குரு என்பார்கள்


*ஒவ்வொருவர் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும்  முன்னிருந்து நடத்தி வைப்பவர்களையும் குரு என்கின்றார்கள்*. 


மேலும் *சமயம் மதம் சார்ந்த ஆதினங்கள் போதகர்கள் மற்றும் ஆன்மீக வேடம் தரித்த ஆடம்பரமான வாழ்க்கை நடத்துபவர்களையும் குரு என்கிறார்கள்*.


*மனிதன் பிறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது இறக்கும் போதும் குரு தேவைப்படுகிறது*


*இவ்வாறு அறியாமையில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும்  நிறைய  குருமார்கள் தேவைப் படுகிறார்கள்*.


*எல்லா குருமார்களுக்கும் குரு காணிக்கை செலுத்த வேண்டும்*


*உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் படைத்தவர்களுக்கு புற குரு தேவையில்லை*.


*உயர்ந்த குலம் தாழ்ந்த குலம்!*


*குருவாக இருப்பவர்களை உயர்ந்தகுலம் என்றும் கற்றுக்கொள்பவர்களைத் தாழ்ந்த குலம் என்று வகுத்து வைத்துள்ளார்கள்*.


*குருவாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.

*சீடர்களாக இருந்தவர்களும் இறுதியில் மாண்டு போகிறார்கள்*.  


*இரு தரப்பினர்களும் மாண்டுபோனால் பூமியில்  புதைக்கிறோம்.*

*மூன்று மாதம் கழித்து தோண்டி பார்த்தால் இருகுலமும் புழுத்து புழுக்குலமாக இருக்கின்றது*.


*புழுக்குலத்தில் உயர்ந்தவன். தாழ்ந்தவன்.குரு சீடன் என்ற பேதம் தெரியாது எல்லாம் புழுக்குலமாகவேகாட்சித்தருகிறது*. 


வள்ளலார் பாடல்! 


*நரை மரண மூப்பறியா நல்ல உடம் பினரே*

*நற்குலத்தார் என அறியீர்* *நானிலத்தீர்* நீவிர்


*வரையில் உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்*

*வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்* ! 


*புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேன்*

*புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே*


*உரைபெறும் என் தனித்தந்தை* *வருகின்ற தருணம்*

*உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே*.!  


*இங்கே குரு என்பவர்! அருளைப்பெற்று அழியாமல் வாழும் வழியைக் காட்டுகின்றவர் எவரோ அவரே குரு என்பவராகும்*. 


மேலும் வள்ளலார் அகவலில் குரு யார்? என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.


*மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குரு வாகிய அருட்பெருஞ்ஜோதி!*(அகவல்) 


*வள்ளலார் ஆரம்பகாலத்தில் நிறைய அருளாளர்களை மற்றும் தெய்வங்களை குரு குரு என பாடிக்கொண்டும் வணங்கிக் கொண்டும் வந்தவர் இறுதியில் இவர்கள் எல்லோரும் குருவுக்குண்டான தகுதி இல்லாதவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்.. *இவர்களுக்கும் மேலான குரு ஒருவர் உண்டு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்கிறார்.*  


*குருவிற்கு உண்டான தகுதி!*


*குரு என்பவர் மரணம். அடையாமல் வாழ்ந்துகொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்* 


*பொருளும் அருளும் வழங்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும்*.


*இடைவிடாது எப்போதும் நம்மை இயக்குபவராக இருக்க வேண்டும்*.


*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும்  தெய்வம் அவரே எல்லோருக்கும் ஞானம் வழங்கும் குருவான தெய்வம்.*


*வள்ளலார்  காட்டிய உண்மையான குரு!*


*அருளரசை அருட்குருவை* *அருட்பெருஞ் சோதியைஎன்*

*அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்*


தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


*மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த*

*வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்*


*கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்*

*கண்டுகொண்டேன்* *கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!*


*தான் குருவாகக் கொண்டு வணங்கி அவர் கருணையினாலே பூரண அருளைப்பெற்று  கனிந்து அழியும் உடம்பை அழியாத உடம்பாக மாற்றிய கருணை நடம் புரிகின்ற கனகசபாபதியைக் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்துகொண்டேன் களித்தேன் என்கிறார்*


*சுத்த சன்மார்க்கிகளுக்கு அருட்குருவானவர்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்*.


( *சன்மார்க்கத்திலும் பணத்திற்காக நிறைய குருமார்கள் தோன்றி உள்ளனர்* *சன்மார்க்கிகள் எதிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது*)


*மேலும் அகவலில் தகவல் சொல்லுகிறார்*.


சிவ ரகசியமெலாந் தெரிவித் தெனக்கே

நவநிலை காட்டிய *ஞானசற் குருவே* !


*சத்தியல்*

*அனைத்துஞ்* *சித்தியல் முழுதும்*

*அத்தகை தெரித்த வருட்சிவ குருவே*!


*அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே*

*பிறிவற விளங்கும் *பெரியசற் குருவே!*


*கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே*

*வேட்கையின் விளங்கும் *விமலசற் குருவே!*


*காண்பவை யெல்லாங்*

*காட்டுவித் தெனக்கே*

*மாண்பத மளித்து* *வயங்குசற் குருவே!*


*அருள் வழங்கும் அருட்குருவின் தன்மையை தெளிவாக விளக்கிச் சொல்லுகின்றார்.*


*எனவே சாகும் சாதாரண மனிதர்களை குருவாக ஏற்றுக் கொள்ளாமல் நம்மை படைத்து வாழவைக்கும் நிரந்தரமான  அருட்குருவான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்*. *அவரே நமக்கு நல்வழியைக் காட்டி மேலே ஏற்றுவார்.*


*எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு