வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை !

 *ஆன்மநேய ஒருமைப்பாடு!* 


ஒவ்வொரு உயிரையும் இயக்குவது *ஆன்மா* என்பதை அறிந்தவர் வள்ளலார். 

ஆன்மாவிற்குள் இருந்து *ஆன்மாவை இயக்குபவர்தான் கடவுள்* என்பதைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.  


உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுக என்று  உரைத்தமெய்ச் சிவமே! (அகவல்)


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே! (அகவல்)


*கடவுளைப் புறத்தில் தேடிக்கொண்டே உள்ளார்கள்*


*கடவுளைக் கண்டகண்ட இடங்களில் புறத்திலே தேட வைத்து விட்டார்கள் சாதி சமய மதவாதிகள்*.


ஆகவேதான் நாம் கடவுளை நேரிடையாக தொடர்பு கொள்ளமுடியாமல்அருள்பெற முடியாமல்  *மூடமாக கண்மூடித்தனமாக குருடர்கள் யானையைக் கண்டதுபோல்* பல பல தெய்வவழிபாடுகளைச் செய்து.நரை.திரை.பிணி.மூப்பும்.

பயமும் இறுதியில் மரணமும் வந்து விடுகிறது. மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்.


*வள்ளலார் பாடல்*! 


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொது என அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

*பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!*


*ஒவ்வொரு உயிரிலும் பொதுவாகத் திருநடம் புரியும் ஒரு திருப்பொதுவானவர் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொண்டேன். *அந்த மெய்ப்பொருள்தான் அருள் வழங்கும் ஆற்றலும் தயவும் தனிப்பெருங்கருணையும் உள்ளதாகும். அந்த தனிப்பெருங்கருணைக் கடவுளை (கடலை) தொடர்புகொள்ளும் வழியைக் (சாலையை) கண்டுகொள்ளவே தோற்றுவிக்கப்பட்டதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய தர்மச்சாலை.சத்திய ஞானசபையாகும்* 


*கடவுளைத் தொடர்புகொள்ளும் வழி*


சாதி சமயம் மதம் இனம் மொழி நாடு உயிர்கள் என்கின்ற  பேதம்இல்லாமல் *எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிக்கும் பொது உரிமையே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்* 


சன்மார்க்கத்தை பின்பற்றும் ஆன்மநேயமுள்ள அன்பர்கள் மனிதநேயமே முழுமையாக பெற இயலாமல் சாதி சமயம் மதத்தில் பற்று வைத்துக்கொண்டு ஏதோ அவர்களால் முடிந்தளவு  அன்னதானம் மட்டும் செய்து வருகிறார்கள். *உயிர்நேயம் இல்லாமல் வேற்றுமை உணர்வோடும் கருத்துவேறுபாட்டுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்*.

*இவர்கள் எப்போது ஆன்மநேயத்தை கடைபிடித்து. ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப்  போகிறார்களோ  தெரியவில்லை*.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும்*.


*ஆன்மநேயம் இல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எக்காலத்திலும் தொடர்பு கொள்ளவே முடியாது*


*வள்ளலார் பாடல்!* 


எத்துணையும் பேதமுறாது *எவ்வுயிரும்*

*தம்உயிர்போல் எண்ணி* உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் *அவர் உளந்தான் சுத்த*


*சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்*

*இடம்எனநான் தெரிந்தேன்* அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!


*ஒழுக்கம் நான்கு*


*இந்திரிய ஒழுக்கம்.*

*கரண ஒழுக்கம்* *.ஜீவ ஒழுக்கத்தை கடைபிடித்த ஞானிகள் நிறையபேர் வாழ்ந்துள்ளார்கள் வாழ்ந்துகொண்டும் உள்ளார்கள்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒழுக்கத்தை கடைபிடித்தவர்கள் ஒருவரும் இல்லை*.


*ஆன்ம ஒழுக்கம்*


யானை முதல் எறும்பு வரை தோன்றிய *சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்* *யாதும் நீக்கமறக்கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்* 


இவ்வண்ணம் நின்றால் 

*1.சாகாக்கல்வி* *2.தத்துவ நிக்கிரகம் செய்தல்*

*3.ஏமசித்தி.*

*4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்*

போன்ற  நாம் பெறும் அரும் புருஷார்த்தங்கள் நான்கும் கைகூடும்.


*வள்ளலார் சொல்லுவதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.*


நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய *ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்* *குறிப்பிக்கின்றேன்* *குறிப்பிப்பேன்* 


என்னை *ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில். *தயவு* தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்தத் தயவுக்கு *ஒருமை* வரவேண்டும் *அந்த ஒருமை இருந்தால்தான் தயவுவரும்*. தயவு வந்தால்தான் பெரியநிலைமேல்  ஏறலாம்.


*இப்போது என்னுடைய அறிவு அண்ட அண்டங்களுக்கும்அப்பாலும் கடந்திருக்கிறது*.

*அது அந்த ஒருமையினால் தான் வந்தது என்று மிகத் தெளிவாகப் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்* 


மண் உயிரெலாம் களித்திட (மகிழ்ச்சிஅடைய) நினைத்திட்ட ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே ! 


*வள்ளலார் பாடல்!* 


*வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்* *பசியினால் இளைத்தே*

*வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்*


*நீடிய பிணியால் வருந்துகின்றோர்* *என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்*

*ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்*!


*கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றி துன்பத்தைப் போக்கி அருட்ஜோதியாம் ஆட்சியில் அமர்ந்து ஐந்தொழில்  வல்லபத்தை பெற்று ஆட்சிபரிபாலனம் செய்துகொண்டு இருப்பவர் வள்ளலார்* 


*வள்ளலார் பாடல்!*


துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்

சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே

*சுத்தசன் மார்க்கநிலை* *அனுபவம்* *நினக்கே*

*சுதந்தரமதானது* உலகில்


வன்பெலாம் நீக்கி நல்வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்று  *மிகவும்*

*மன்னுயிர்* *எலாம்களித் திடநினைத்தனை* உன்றன்

மனநினைப் பின்படிக்கே

அன்பநீ பெறுக உலவாது 

நீடூழி விளை

யாடுக *அருட்சோதியாம்* *ஆட்சிதந்தோம்* உனைக் கைவிடோம் கைவிடோம்

*ஆணைநம் ஆணைஎன்றே*


இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்

திசைவுடன் இருந்தகுருவே*

எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்

இலங்குநட ராஜபதியே.! 


*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் மட்டுமே அருளைப் பெறமுடியும்.* 


மேலே கண்ட பாடலும் அதில் உள்ள கருத்துக்களும் மிகவும் முக்கியமானது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு