செவ்வாய், 13 அக்டோபர், 2015

சுத்த சன்மார்க்கிகள் யார் ?

சுத்த சன்மார்க்கிகள் யார் ?

வள்ளலார் காட்டிய  சுத்த சன்மார்க்கக் கொள்கையை முழுமையாக பின்பற்றி கடைபிடிப்பவர்கள் அனைவரும்  ஒரே கடவுள் என்ற உண்மையை ஆழமாக,.முழுமையாக  உணர்ந்து அறிந்து இருக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மைக் கடவுளைத் தவிர வேறு பொய்யான தத்துவக் கடவுள்களை வழிபடக் கூடாது.

சாதி சமய மதப் பற்றுகளை முழுதும் பற்று அற கை விட்டவர்களும் காமக் குரோதம் முதலிய வைகளை ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் என்பவர்களாகும்.

அதைவிடுத்து எல்லாத் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வணங்கிக் கொண்டு இருப்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்ல,

அவர்கள் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு உள்ளவர்களாகும்.

அப்படி உள்ளவர்களை சன்மார்க்கிகள் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்து சன்மார்க்கிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.காலம் இல்லை.

கற்பனைக் கடவுகளை தூக்கி அப்புறப் படுத்திவிட்டு உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்யுங்கள்.

மற்றவர்களுக்கும் நல்ல வழியைக் காட்டுங்கள் .

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலைப் பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு