செவ்வாய், 13 அக்டோபர், 2015

இதயத்தைக் கொடுத்த இறைவன் !

இதயத்தைக் கொடுத்த இறைவன் !

இதயத்தைக் கொடுத்த இறைவனுக்கு உன் இதயத்தை திறந்து வை .

இதயத்தைக் கொடுத்த இறைவனுக்கே உன் இதயத்தைக் கொடு.

இதயம் வெற்று இடமாக இருந்தால் மட்டுமே இறைவன் வந்து அமர்ந்து கொள்வார்.

உன் இதயத்தில் இறைவன் வந்து அமர்ந்தால் அவர்  உமக்கு அருளை வாரி வாரி வழங்குவார்.

அருளைப் பெற்றால் நீ இறைவனாக மாறிவிடுவாய்.

உலகம் எங்கும் அண்டங்கள் எங்கும் எந்தக் கருவிகளின் துணை இல்லாமல் .எந்த தடைகளும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றல் என்னும் சக்திக்  கிடைக்கும்.

நீங்கள் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லலாம்.

இறைவன் யார் என்பது அப்போதுதான் தெரியும்.

மனிதனின் இதயத்தில் மட்டுமே இறைவன் வந்து அமர்வார்.

உயர்ந்த அறிவுள்ள மனிதன் இதயத்தை திறந்து வைத்தால் மட்டுமே இறைவன் வருவார்,வந்து அமர்ந்து கொள்வார். என்பதை அறிந்து கொண்டு வாழுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

இதயத்தின் வழியாகத்தான் எண்ணங்கள் உதயமாகின்றன.எண்ணங்கள் வழியாகத்தான் இறைவனைத் தேட வேண்டும்.

இதயம் உண்மையான இறைவனைத் தேட வேண்டும் .

வள்ளலார் உண்மையான இறைவனை அறிமுகப் படுத்தி உள்ளார்.

அவர்தான் நமக்கு இதயம் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்.

உண்மை அன்பால் தேடுங்கள் உடனே இதயத்தில் வந்து அமர்ந்து கொள்வார்.,

அப்புறம் பாருங்கள் உங்களின் வாழ்க்கை எப்படி மாற்றம் அடைகின்றது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்..

உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள்.

இதயத்தை திறந்து வையுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு