சனி, 3 அக்டோபர், 2015

பாசம் என்றால் என்ன ? அன்பு என்றால் என்ன ?

பாசம் என்றால் என்ன ? அன்பு என்றால்  என்ன ?

பாசம் என்பதும் உறவு என்பதும் ஒன்றுடன் ஒன்று . தொடர்பு உடையது .

அன்பு என்பது தொடர்பு இல்லாத ஒன்றை தேடிக் கண்டுபிடித்து அதன்மேல் அளவில்லாத பற்று வைப்பது அன்பு என்பதாகும்..

உதாரணத்திற்கு ;--நம்முடைய உடல் ரீதியாக தாய் மீது பாசம் வைத்துள்ளோம் அன்பு வைப்பதில்லை.

அதே நேரத்தில் ஆணோ பெண்ணோ திருமணம் செய்யும் வரையில் தாய் தந்தை மீது பாசம் வைத்துள்ளோம் அதற்கு இரத்தபாச உறவு என்று பெயர்

திருமணம் முடிந்தவுடன் ஆணும் பெண்ணும் உடல் இன்பத்தை அனுபவித்தபின் கணவன் மனைவி அதிக பாசம் கொள்கின்றனர் .தாய் தந்தைப் பாசத்தை தள்ளி வைத்து விடுகின்றார்கள் .அங்கே அன்பு என்பது இல்லை.

மனைவி ஒன்றை விரும்புகின்றார் .கணவன் ஒன்றை விரும்புகின்றார் .இரண்டு பேருக்கும் வேறு வேறு எண்ணங்கள் உருவாகின்றன.

மனைவி காரில் போகவேண்டும் என்று விரும்புகின்றார்.கணவன் நமக்கு அவ்வளவு வசதி இல்லை அப்படியும் வாங்கினால் பின்னால் நமக்குத்தான் பணக்கஷ்டம் வரும் வேண்டாம் என்கின்றார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருகின்றது.உடல் ரீதியான இன்பத்தில் பாசம் இருந்தாலும்.மன ரீதியான வெறுப்பு உண்டாகின்றது.

வெறுப்பு என்பது வரும்போது பாசம் சோகமாக மாறுகின்றது.சோகம் பிரிவினையான எண்ணங்களை உண்டாக்குகின்றது.அதனால் இருவருடைய மனமும் வேதனை அடைகின்றது.இதனால் வாழ்க்கையில் வேறுபாடும் துன்பமும் நிம்மதி இல்லா சூழலும் உருவாகின்றது.

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும்..இதுபோன்ற பல பிரச்சனைகள் எண்ணங்களுக்கு நேர்மாறாக வரும்போது தீர்வு என்ற முறையில்
மூளைக்கு அதிக வேலைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்திலே ஆழ்ந்து விடுகின்றோம்.

இவைதான் பாசம் என்பதும் உறவு என்பதும் ஆகும் .
இதனால் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து அழிந்து விடுகின்றோம்.

அன்பு.என்பது !

சுய நலம் இல்லாமல் தன்னை உணரும் உணர்வும்.நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நம்மை இயக்கும் ஒன்றின் மேல் பற்று  வைப்பதற்கு பெயர் அன்பு என்பதாகும்.

எதையும் எப்போதும் எதிர்பார்க்காமல் விரும்புவதற்குப் பெயர் அன்பு என்பதாகும்.

நம்முடைய உடம்பில் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொண்டு வாழ்வதுதான் உண்மையான அன்பு என்பதாகும்.

பாசம் என்பதும் உறவு என்பதும் நிலையானது அல்ல !
அன்பு என்பது என்றும் நிலையானதாகும் அதுதான் இறைவன் என்பதாகும்.

தன்னை உணர்ந்து இறைவன் மீது பற்று வைப்பது நிலையான இன்பத்தைத் தரும் பேர் அன்பு என்பதாகும்.

இதைத்தான் வள்ளலார் ;--

அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள்அமைந்த பேரொளியே
அன்பு உருவாம் பரசிவமே !

மேலும்  

தன்னை உணர்ந்து இன்பம் உற வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே .என்று இறைவனை வேண்டுகின்றார்.

மேலும்.;--

உற்றவரும் பெற்றவரும்,மற்றவரும்,பிறரும் ,உடமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே
மேய்ப்பயனே கைப்பொருளே விலை அறியா மணியே !

என்றும் அன்பிற்கு வள்ளல்பெருமான் விளக்கம் தருகின்றார்.

நாம் அழிந்துபோகும் பாசத்தை உறவை விரும்பாமல் என்றும் அழியாத அன்பை இறைவன் மேல் வைத்து நெருக்கம் கொண்டால் நம்முடைய வாழ்க்கை ஒளிமயமாய் விளங்கும்.

இறைவன் மேல் அன்பு வைத்தால் ,பாசம் உறவுகள் எல்லாம்  நம்முடைய சொல்வழி கேட்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு