வெள்ளி, 9 அக்டோபர், 2015

அருளாளர்களின் பொதுக் கூட்டம் !


அருளாளர்களின் பொதுக் கூட்டம்.!

30-1-1874,அன்று உலகில் உள்ள அருளாளர்கள் அனைவரையும் .உலகத்தை ஆட்சி செய்யும் அருளாளர்கள் அனைவரையும்  (ஆட்சியாளர்கள் ) அழைத்து அவசரப் பொதுக் கூட்டம் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பரவெளியில் கூட்டப்பட்டது.

அதில் கலந்து கொண்டவர்கள் ;--

உருத்திரர்கள் ஒரு கோடி,பேர்கள்.
நாரணர்கள் பல கோடி பேர்கள்  ,
பிரம்மாக்கள் பல கோடி பேர்கள் ,
இந்திரர்கள் பல கோடி.பேர்கள்

மற்றும் தேவர்கள் ,முனிவர்கள் அளவில்லாத அருளாளர்கள் பலர் கோடிக்கணக்கில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும் உலக அதிபர்கள்...அண்ட அதிபர்கள்...பகிரண்ட அதிபர்கள்...வியோமா  அதிபர்கள்,...பலகோடி பேர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் கரும சித்தர்கள் ,யோக சித்தர்கள்,ஞான சித்தர்கள்,கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

அவர்களை அடுக்கு அடுக்காக,முன்று அடுக்கு வரிசையில்  அமரவைத்தார்கள்

அருளாளர்களின் கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள்.!

இதுவரையில்;;எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள் களையும்,மற்றை எல்லா வற்றையும் ஆட்சி  செய்யும் அதிகாரங்களான ..தோற்றுவித்தல்,...விளக்கம் செய்வித்தல் ...துரிசு நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல் ...பலன் தருவித்தல் என்னும் தலைமைப்பொறுப்பில் இருந்த ஐந்தொழில் கர்த்தாக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் ;--

இன்று முதல் உங்கள் பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொள்ளப் படுகின்றது .நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்களுக்கு வேண்டிய ஒய்வு ஊதியம் வழங்கப்படும் .. எனவே உங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுங்கள் என்ற தீர்மானம் நிறை வெற்றப் பட்டது,

உங்கள் பதவிகளை ஏன் எதற்க்காக திரும்பப் பெறப்படுகின்றன என்றால்?  .நீங்கள் இதுவரைக்கும் உங்களுக்குக் கொடுத்த பதவிகளை முழுமையாக செயல் படுத்தவில்லை.உயிர்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்யவில்லை,ஒரு உயிர்கள் கூட அருளைப் பெற்று மரணத்தை வெல்லவில்லை,

கதைகளாகவும் கற்பனைகளாகவும் .பொய்யான செய்திகளை போதித்து ஜாதி,சமயம்,மதம்,என்ற பிரிவினைகளை உருவாக்கி உயிர்களை அழித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் .

சாகாக் கல்வியைப் பற்றியும் அருளைப் பெரும் வழியைப் பற்றியும் ,நீங்கள் ஒருவரும் உயிர்களுக்கு போதிக்க வில்லை.எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளன்.ஆதலால் உங்கள் பதவிகள் இன்று பறிக்கப் பட்டன,என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் தெரிவித்தார்.

அந்த ஐந்தொழில் வல்லபத்தை இன்று உங்களின் முன்பாக ஒருவருக்கு வழங்கப் போகிறேன்.அவர் யார் ? என்பதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .என்பதை தெரிவித்து ''அருள் ஆட்சி'' என்னும்  சட்டத் திருத்தம் செய்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளியிட்டார் .

சட்டத் திருத்தம் செய்த நகல் அனைத்து அருளாளர்களுக்கும்.ஆட்சி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

சட்டத் திருத்தம் செய்து ஐந்தொழில் செய்யும் வல்லப்பத்தின் நகலின் விபரம்.;--

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் .
களித்திடுக இனி உனை நான் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லோரும் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

என்று பதிவு செய்துள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒருவர் கூட உண்மையை உயிர்களுக்கு பொறுப்புடன் சொல்லவில்லை.பொய்யே உண்மை என்று சொல்லி உயிர்களை அழித்துக் கொண்டு வந்தனர் .

வள்ளல்பெருமான் ஆகிய நீ ஒருவர்தான் உயிர்களுக்கு உண்மையைப் போதித்து.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்என்றும்...கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும் என்றும் ,அதற்கு உண்டான  வழிமுறைகளையும் தந்து உள்ளாய் , அதன் கொள்கைகளை ( உயிர்களுக்கு) மக்களுக்கு புரியும்படி போதித்து உள்ளாய்.

எனவே இன்றில் இருந்து ஐந்தொழில் வல்லபத்தையும்  உனக்கே வழங்குகின்றேன்.ஐந்து தொழிலையும் நீயேதான் நிர்வாகம் செய்ய வேண்டும். என்றும் ,உன்னைவிட்டுப் பிரியாமல் உன்னுடன் இருந்தே உமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் செய்வேன் என்று சொல்லி  ஆட்சி பீடத்தில் வள்ளல்பெருமானை ''அருட்பெருஞ்ஜோதியான உண்மைக் கடவுள்'' அமர்த்தி உள்ளார்.

அதற்கு வள்ளல்பெருமான் அளித்துள்ள முதல் அறிவிப்பு செய்தி.;--

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உருவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பமுறும் தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லு கின்ற தாமே .

என்பதை உலக உயிர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளல்பெருமானின் ஐந்தொழில் ஆட்சி 30-1-1874,தேதியில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது.

வள்ளல்பெருமானின் கொள்கைகளை உலக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் தலைப்பில் ,தலைமைச் சங்கத்தை வடலூரில் தோற்றுவித்து உள்ளார்.

மனிதர்களாகிய நாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து,அதன்படி வாழ்ந்து,உலக மக்களுக்கு கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும்.

ஒவ்வொரு கிராமங்கள் ,நகரங்கள் தோறும்,பெயர் மாற்றம் செய்யாமல்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற அமைப்பை உருவாக்கி  மக்களுக்கு சுத்த சன்மார்க்கக் கொளகைகளை பறை சாற்ற வேண்டும்.

பட்டம் பதவிகளுக்கு பற்று வைக்காமல் ஒழுக்கம் நிறைந்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்ற உயிர்களுக்கும் போதிக்க முடியும்.என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அறிவித்து உள்ளார்கள்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை  பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு